Friday, October 20, 2017

கர்ணன் அடைந்த பிராமணச் சாபம்! - சாந்திபர்வம் பகுதி – 02

The curse of a Brahmana on Karna! | Shanti-Parva-Section-02 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 02)


பதிவின் சுருக்கம் : துரோணரிடம் சீடனாக இருந்த கர்ணன்; துரோணரிடம் பிரம்மாஸ்திரம் வேண்டியது; துரோணர் மறுத்தது; பிரம்மாஸ்திரம் வேண்டி பரசுராமரிடம் தன் பிறப்பில் பொய்யுரைத்த கர்ணன்; கர்ணனுக்கு நேர்ந்த பிராமணச் சாபம்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பேசுபவர்களில் முதன்மையானவரான தவசி நாரதர், இவ்வாறு கேட்கப்பட்டதும், சூதன் மகன் என்று நம்பப்பட்டவன் {கர்ணன்} (முன் நாட்களில்) எவ்வாறு சபிக்கப்பட்டான் என்பது குறித்த அனைத்தையும் சொல்லத் தொடங்கினார்.(1)


நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. போரில் கர்ணனையும், அர்ஜுனனையும் எதனாலும் தடுக்க முடியாது.(2) ஓ! பாவமற்றவனே, நான் உனக்கு என்ன சொல்லப்போகிறேனோ, அதைத் தேவர்களும் அறியார்கள். ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, முன் நாட்களில் என்ன நடந்தது என்பதைக் குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(3) ஆயுதங்களின் மூலம் க்ஷத்திரியர்கள் அனைவரும் துடைத்தழிக்கப்பட்டு அவர்கள் எவ்வாறு அருள் உலகங்களை அடைய வேண்டும் என்பதே {அப்போது} கேள்வியாக இருந்தது. இதற்காகவே குந்தியின் கன்னிப்பருவத்தில், போரைத் தூண்ட வல்ல ஒரு பிள்ளை அவளிடம் கருத்தரிக்கப்பட்டான்.(4) பெரும் சக்தி கொண்ட அந்தப் பிள்ளை, சூத நிலையை அடைய வேண்டியிருந்தது {சாரதியின் பிள்ளை என்ற நிலையை அடைய வேண்டியிருந்தது}. அதற்கடுத்து அவன் {கர்ணன்}, அங்கீரச குலக்கொழுந்துகளில் முதன்மையான உன் ஆசானிடமே (துரோணரிடம்) ஆயுத அறிவியலை அடைந்தான்.(5)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பீமசேனனின் வலிமையையும், ஆயுதப்பயன்பாட்டில் அர்ஜுனனின் வேகத்தையும், உன் நுண்ணறிவையும், இரட்டையர்களின் {நகுல சகாதேவர்களின்} பணிவையும், இளமைக் காலம் முதலே வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் காண்டீவதாரி {அர்ஜுனன்} ஆகியோருக்குள் ஏற்பட்ட நட்பையும், மக்கள் உங்கள் அனைவரிடமும் கொண்டுள்ள அன்பையும் கண்டு அந்த இளைஞன் {கர்ணன்} பொறாமையில் எரிந்தான்.(6,7) இளமைப் பருவத்திலேயே தற்செயலாகவும், அவனது சொந்த இயல்பின் காரணமாகவும், உங்கள் அனைவரிடமும் அவன் கொண்ட வெறுப்பின் காரணமாகவும் அவன் மன்னன் துரியோதனனுடன் நட்பு பூண்டான்.(8)

தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஆயுத அறிவியலில் அனைவருக்கும் மேம்பட்டவனாக இருப்பதைக் கண்ட கர்ணன், ஒரு நாள் துரோணரைத் தனிமையில் அணுகி, அவரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(9) "நான் அர்ஜுனனுடன் போரிட விரும்புவதால், பிரம்ம ஆயுதத்தை, அதன் மந்திரங்கள் அனைத்துடனும், அதைத் திரும்பப் பெறும் சக்தியுடனும் நான் அறிய விரும்புகிறேன்.(10) உமது சீடர்கள் ஒவ்வொருவரிடம் நீர் கொண்டிருக்கும் அன்பும், உமது சொந்த மகனிடம் {அஸ்வத்தாமரிடம்} நீர் கொண்டிருக்கும் அன்பும் இணையானதே என்பதில் ஐயமில்லை. ஆயுத அறிவியலை அறிந்த திறன்மிக்கவர்கள் அனைவரும், உமது அருளின் மூலம் என்னை ஆயுதங்களில் சாதித்தவனாகக் கருத வேண்டும் என நான் வேண்டுகிறேன்" என்று கேட்டான்.(11)

இவ்வாறு சொல்லப்பட்ட துரோணர், பல்குனன் {அர்ஜுனன்} மீது கொண்ட அன்பினாலும், கர்ணனின் தீய குணம் குறித்து தாம் அறிந்திருந்ததாலும், அவனிடம்,(12) "முறையாக நோன்புகள் அனைத்தையும் நோற்ற ஒரு பிராமணனையோ, கடுந்தவங்களை இயற்றிய ஒரு க்ஷத்திரியனையோ தவிரப் பிரம்மாயுதத்தை வேறு எவராலும் அறிய முடியாது" என்றார்.(13)

துரோணர் இவ்வாறு பதிலளித்ததும், கர்ணன் அவரை வழிபட்டு விடைபெற்றுக் கொண்டு, அப்போது மஹேந்திர மலைகளில் வசித்து வந்த ராமரிடம் {பரசுராமரிடம்} தாமதமில்லாமல் சென்றான்.(14) அந்த ராமரை அணுகி, தலைவணங்கி, அவரிடம் {பரசுராமரிடம்}, "நான் பிருகு குலத்தைச் சேர்ந்த ஒரு பிராமணனாவேன்" என்றான். இஃது அவனுக்குக் கௌரவத்தைப் பெற்றுத் தந்தது.(15) அவனது பிறப்பையும் {குலத்தையும்}, குடும்பத்தையும் இவ்வாறு அறிந்த ராமர், அவனை அன்புடன் வரவேற்கும் வகையில், "நீ வரவேற்கப்படுகிறாய் {உனக்கு நல்வரவு}" என்று சொன்னார். இதன் காரணமாகக் கர்ணன் பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.(16) சொர்க்கத்திற்கு ஒப்பான அந்த மகேந்திர மலையில் வசித்துவந்தபோது, கர்ணன், பல கந்தர்வர்களையும், யக்ஷர்களையும், தேவர்களையும் சந்தித்து அவர்களோடு {நட்புடன்} ஒன்றுகலந்தான்.(17) அங்கே {மஹேந்திர மலையில்} வசித்த அவன் {கர்ணன்}, அனைத்து ஆயுதங்களையும் முறையாக அடைந்து, தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் ராட்சசர்களுக்கு மிகவும் பிடித்தமானவனாக ஆனான்.(18)

ஒருநாள், அவன் அந்த ஆசிரமத்திற்கு அருகே இருந்த கடற்கரையில் திரிந்து கொண்டிருந்தான். உண்மையில் அந்தச் சூரியனின் மகன் {கர்ணன்}, கையில் வில்லுடனும், வாளுடனும் தனியொருவனாகவே உலவித் திரிந்தான்.(19) ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, இவ்வாறு அவன் உலவிக் கொண்டிருந்த போது, அக்னிஹோத்திரச் சடங்கை தினமும் செய்பவரும், பிரம்மத்தை ஓதுபவருமான ஒரு குறிப்பிட்ட மனிதரின் ஹோமத்திற்குரிய மாட்டைத் தனது கவனக்குறைவினாலும், விருப்பமில்லாமலும் {அறியாமையால்} கொன்றுவிட்டான்.(20) கவனக்குறைவினால் செய்துவிட்ட அந்தச் செயலை அவன் அந்தப் பிராமணரிடம் தெரிவித்தான். உண்மையில், {அதன்} உரிமையாளரை மனநிறைவு கொள்ளச்செய்யும் நோக்கில் மீண்டும் மீண்டும் கர்ணன்,(21) "ஓ! புனிதமானவரே, விருப்பமில்லாமலே {அறியாமையால்} இந்த உமது மாட்டை நான் கொன்றுவிட்டேன். இந்தச் செயலை மன்னிப்பீராக" என்று சொன்னான்.(22)

கோபத்தில் நிறைந்த அந்தப் பிராமணர், அவனை நிந்திக்கும் வகையில் இந்த வார்த்தைகளைச் சொன்னார், "ஓ! தீய நடத்தை கொண்டவனே, நீ கொல்லப்படத் தகுந்தவனாவாய். ஓ! தீய ஆன்மா {தீய புத்தி} கொண்டவனே, இந்தச் செயலின் கனி உனதாகட்டும்.(23) ஓ! பாவி, எவனை நீ எப்போதும் அறைகூவியழைப்பாயோ எவனுக்காக இந்தநாள் வரை நீ முயற்சி செய்து கொண்டிருக்கிறாயோ, அவனோடு போரிடுகையில் உனது தேர்ச்சக்கரத்தை பூமி விழுங்கட்டும்.(24) அந்தச்சக்கரம் இவ்வாறு பூமியால் விழுங்கப்பட்டதும், திகைப்படைந்திருக்கும் உனது தலையை அந்தப் பகைவன் வெட்டுவான். ஓ! மனிதர்களில் இழிவானவனே, என்னைவிட்டுச் செல்வாயாக.(25) கவனக்குறைவால் என்னுடைய இந்த மாடு உன்னால் எவ்வாறு கொல்லப்பட்டதோ, அவ்வாறே நீ கவனக்குறைவுடன் இருக்கும்போது உன்னுடைய தலையை அவன் கொய்வான்" என்று சபித்தார்.(26)

கர்ணன் இவ்வாறு சபிக்கப்பட்டாலும், அந்தப் பிராமணர்களில் முதன்மையானவருக்குப் பசுக்களையும், செல்வத்தையும், ரத்தினங்களையும் காணிக்கையாக்கி அவரை நிறைவு கொள்ளச் செய்ய முயன்றான். எனினும் அவர், மீண்டும் அவனிடம்,(27) "உலகங்கள் அனைத்தாலும் என்னால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைப் பொய்யாக்க முடியாது. எனவே, நீ செல்வாயாக, அல்லது இருப்பாயாக, அல்லது நீ விரும்பிய எதையும் செய்வாயாக" என்று பதிலளித்தார்.(28) அந்தப் பிராமணரால் இவ்வாறு சொல்லப்பட்ட கர்ணன், உற்சாகம் குறைந்தவனாகத் தன் தலையைத் தொங்கப்போட்டவாறு, மருட்சியுடன் {அச்சத்துடன்} ராமரிடம் {பரசுராமரிடம்} திரும்பி, அக்காரியம் குறித்துச் சிந்திக்கலானான்" என்றார் {நாரதர்}.(29)

சாந்திபர்வம் பகுதி – 02ல் உள்ள சுலோகங்கள் : 29

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்