Saturday, October 21, 2017

தொடையைத் துளைத்த புழு! - சாந்திபர்வம் பகுதி – 03

Thighs bored by worm! | Shanti-Parva-Section-03 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 03)


பதிவின் சுருக்கம் : கர்ணனின் மடியில் தலை வைத்து உறங்கிய பரசுராமர்; கர்ணனின் தொடையைத் துளைத்த புழு; குருதியில் நனைந்து விழித்தெழுந்த பரசுராமர்; பரசுராமரின் கோபத்தால் அப்புழு உயிரை விட்டது; புழுவிலிருந்து வெளிப்பட்ட ராட்சசன்; கர்ணனைச் சபித்த பரசுராமர்; தன் நகரத்திற்குத் திரும்பிய கர்ணன்...


நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, "கர்ணனின் கரவலிமை, (பரசுராமரிடம்) அவன் கொண்டிருந்த அன்பு, தற்கட்டுப்பாடு, தன ஆசானுக்கு அவன் செய்த தொண்டுகள் ஆகியவற்றில் அந்தப் பிருகு குலத்தின் புலி {பரசுராமர்} நிறைவு கொண்டார்.(1) தவநேன்புகளை நோற்றவரான ராமர் {பரசுராமர்}, தவம் நோற்ற தன் சீடனுக்கு உரிய வடிவிலான பிரம்ம ஆயுதத்தை, அதன் மந்திரங்களுடனும், அதைத் திரும்ப அழைக்கும் மந்திரங்களுடனும் உற்சாகமாகப் போதித்தார்.(2) அவ்வாயுதத்தைக் குறித்த அறிவை அடைந்த கர்ணன், பிருகுவின் {பிருகு முனிவரின் வாரிசான பரசுராமரின்} ஓய்வில்லத்தில் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான். அற்புத ஆற்றலைக் கொண்ட அவன் {கர்ணன்}, பெரும் ஆவலுடன் தன்னை அந்த ஆயுத அறிவியலுக்கு அர்ப்பணித்துக் கொண்டான்.(3)


ஒரு நாள், பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான ராமர், தம் ஓய்வில்லத்தின் அருகிலேயே கர்ணனுடன் உலவிக் கொண்டிருந்தபோது, தாம் நோற்று வந்த நோன்புகளின் விளைவால் மிகவும் பலவீனமாகத் தம்மை உணர்ந்தார்.(4) களைப்படைந்திருந்த அந்த ஜமதக்னியின் மகன் {ராமர்}, நம்பிக்கையின் விளைவால் அடையப்பட்ட அன்பின் காரணமாகக் கர்ணனின் மடியில் தலை வைத்து நன்றாக உறங்கினார்.(5) அவனது ஆசான் இவ்வாறு அவனுடைய மடியில் (தலைவைத்து) உறங்கிக் கொண்டிருந்தபோது, கடித்தால் பெரும் வலியைத் தரக்கூடியதும், சளி, கொழுப்பு, சதை மற்றும் குருதியை உண்டு வாழக்கூடியதுமான ஒரு பயங்கரமான புழுவானது கர்ணனின் அருகில் வந்தது.(6) குருதி குடிக்கும் அந்தப் புழுவானது, கர்ணனின் தொடையை அணுகி, அதைத் துளைக்கத் தொடங்கியது. (விழித்தெழப் போகும்) தன் ஆசானிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகக் கர்ணன் அந்த விலங்கைத் தூக்கி வீசவோ, கொல்லவோ இல்லை.(7) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் புழுவால் தன் அங்கம் துளைக்கப்பட்டாலும், தன் ஆசான் விழித்துவிடப் போகிறார் என்பதால் அது தன் விருப்பப்படிச் செய்யுமாறு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.(8) வலியானது தாங்கிக் கொள்ள முடியாததாக இருப்பினும், வீரக் கர்ணன் அதைப் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு, கொஞ்சமும் நடுங்கிவிடாதவாறும், வலியின் எந்த அடையாளத்தையும வெளிக்காட்டாமலும், பிருகுவின் மகனை {பரசுராமரைத்} தன் மடியில் தொடர்ந்து தாங்கினான்.(9)

இறுதியில், குருதியானது பெரும் சக்தி கொண்ட ராமரின் உடலைத் தீண்டிய போது, விழித்தெழுந்த அவர், அச்சத்தால் இவ்வார்த்தைகளைச் சொன்னார்,(9) "ஐயோ, நான் தூய்மையற்றவனாக்கப்பட்டேன். நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அச்சமனைத்தையும் விட்டு, இக்காரியத்தில் உண்மை என்ன என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றார்.(11) அப்போது கர்ணன் புழு கடித்துக் கொண்டிருப்பதை அவருக்குத் தெரிவித்தான். பன்றியின் வடிவத்திற்கு ஒப்பான அந்தப் புழுவை ராமர் கண்டார்.(12) அஃது எட்டு கால்களையும், மிகக்கூரிய பற்களையும் கொண்டிருந்தது. மேலும் அஃது ஊசிகளைப் போன்ற முனை கொண்ட தடித்த மயிரால் மறைக்கப்பட்டிருந்தது. அளர்க்கம் என்ற பெயரால் அழைக்கப்படும் அதன் அங்கங்கள் (அச்சத்தால்) சுருங்கிப் போயிருந்தன.(13) ராமர் {பரசுராமர்} தமது கண்களை அதன் மேல் செலுத்தியதும், அந்தப் புழுவானது தான் உறிஞ்சிய குருதியிலேயே உருகி உயிரைவிட்டது. இவையாவும் ஆச்சரியமானவையாகத் தெரிந்தன.(14) அப்போது, கரிய நிறம் கொண்டவனும், சிவந்த கழுத்தைக் கொண்டவனும், விருப்பப்படி எவ்வடிவையும் ஏற்கவல்லவனும், பயங்கர வடிவத்தைக் கொண்டவனுமான ஒரு ராட்சசன் ஆகாய மேகங்களில் நின்று கொண்டிருந்தான்.(15)

தன் நோக்கம் நிறைவேறிய அந்த ராட்சசன், கூப்பிய கரங்களுடன் ராமரிடம் {பரசுராமரிடம்}, "ஓ! தவசிகளில் சிறந்தவரே, இந்நரகில் இருந்து என்னை நீர் மீட்டீர். எனக்கு நன்மையைச் செய்திருக்கும் உம்மை நான் துதிக்கிறேன், நீர் அருளப்பட்டிருப்பீராக" என்றான்.(17)

பெரும் சக்தியையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்டவரான அந்த ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, அவனிடம் {ராட்சசனிடம்}, "யார் நீ? ஏன் நீ நரகில் வீழ்ந்தாய்? இவையனைத்தையும் எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டார்.(18)

அதற்கு அவன் {ராட்சசன் பரசுராமரிடம்}, "முற்காலத்தில் நான், தம்சன் என்ற பெயரைக் கொண்ட பெரும் அசுரனாக இருந்தேன். ஓ! ஐயா, கிருத யுகத்தில்*, நான் பிருகுவின் வயதைக் கொண்டவனாக இருந்தேன்.(19) அந்தத் தவசியின் {பிருகுவின்} அன்புக்குரிய மனைவியை நான் அபகரித்துச் சென்றேன். அவரது {பிருகுவின்} சாபத்தின் மூலமாக நான் புழுவின் வடிவில் கீழே விழுந்தேன்.(20)

கோபங்கொண்ட உமது அந்த மூதாதை {பிருகு}, "ஓ! இழிந்தவனே, சிறு நீர் மற்றும் சளியை உண்டு, நீ நரக வாழ்வை நோற்பாயாக" என்று சொன்னார். நான் அவரிடம் {பிருகுவிடம்}, "ஓ! பிராமணரே, எப்போது எனது சாபத்திற்கு ஒரு முடிவு ஏற்படும்?" என்று கேட்டான். அதற்கு அவர் {பிருகு} என்னிடம், "என் குலத்தின் ராமன் {பரசுராமன்} மூலமாக இந்தச் சாபத்திற்கு முடிவேற்படும்" என்றார்.(22) இதன் காரணமாகவே நான், தூய்மையற்ற ஆன்மா கொண்டவனைப் போல இத்தகு வாழ்வின் போக்கை அடைந்தேன். ஓ! அறவோரே, எனினும் அந்தப் பாவகரமான வாழ்வில் இருந்து நான் உம்மால் மீட்கப்பட்டு விட்டேன்" என்றான்.(23) இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பேரசுரன், ராமருக்குத் தலைவணங்கிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டான்.

பிறகு கோபம் நிறைந்தவரான ராமர், அந்தக் கர்ணனிடம்,(24) "ஓ! மூடா, இத்தகு வலியை ஒரு பிராமணனால் தாங்கிக் கொள்ள முடியாது. உன் பொறுமையானது ஒரு க்ஷத்திரியனைப் போல இருக்கிறது. அச்சமில்லாமல் எனக்கு உண்மையைச் சொல்வாயாக" என்று கேட்டார்.(25) இவ்வாறு கேட்கப்பட்ட கர்ணன், சாபத்திற்கு அஞ்சியும், அவரை நிறைவு செய்ய வேண்டியும், இந்த வார்த்தைகளைச் சொன்னான், "ஓ! பிருகு குலத்தவரே, பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களின் கலப்பில் உண்டான குலத்தில் பிறந்த ஒரு சூதனாக என்னை அறிந்து கொள்வீராக.(26) மக்கள் என்னை ராதையின் மகனான கர்ணன் என்றழைக்கிறார்கள். ஓ! பிருகு குலத்தவரே, ஆயுதங்களை அடையும் விருப்பத்துடன் இவ்வாறு செயல்பட்ட அடியேனிடம் நிறைவு கொள்வீராக.(27) வேதங்கள் மற்றும் பிற அங்கங்களை அறிந்த ஒரு மதிப்புக்குரிய ஆசான் ஒருவனுக்குத் தந்தையுமாவார் என்பதில் ஐயமில்லை. இதன் காரணமாகவே நான் என்னை உமது குலத்தைச் சேர்ந்தவனாக அறிமுகம் செய்து கொண்டேன்" என்றான்.(28)

அந்த முதன்மையான பிருகு குலத்தவர் {பரசுராமர்}, கோபத்தால் நிறைந்திருந்தாலும், உற்சாகமற்றவனாக, நடுங்கிக் கொண்டிருப்பவனாகக் கரங்களைக் கூப்பி, பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த கர்ணனிடம் புன்னகையுடன் {எரிச்சலுடன்}, "ஓ! இழிந்தவனே, ஆயுதங்கள் மீது கொண்ட பேராசையின் காரணமாக நீ பொய்யுரைத்ததால், இந்தப் பிரம்மாயுதம் உன் நினைவில் தங்காது[1].(30) நீ பிராமணனாக இல்லாததால், உனக்குச் சமமான ஒரு போர்வீரனுடன் நீ போரிட்டுக் கொண்டிருக்கும்போது, மரணம் உன்னை நெருங்கும்வரை இஃது உன்னிடம் தங்காது[2].(31) செல்வாயாக, பொய் நடத்தை கொண்டோருக்கான இடம் இஃதல்ல. இந்தப் பூமியில், உனக்கு இணையான எந்த க்ஷத்திரியனும் இருக்க மாட்டான்" என்றார்.(32)

[1] அஃதாவது, "உள்ளொளியின் மூலம் உனக்குத் தோன்றாது" என்பது பொருள் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] இதன் பொருளாவது, "இந்த ஆயுதமானது உனது இறுதி கணம் வரையில் உன்னுடன் தங்காது. நீ இதில் திறம்படைத்தவனாக இருப்பினும், உனக்கு மரணம் நெருங்கும்போது, இதை நீ மறப்பாய், அல்லது நீ அழைக்கும்போது இஃது உன்னிடம் தோன்றாது" என்பதாகும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ராமரால் {பரசுராமரால்} இவ்வாறு சொல்லப்பட்ட கர்ணன், முறையாக அவரிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றான். பிறகு துரியோதனனின் முன்னிலைக்கு வந்த அவன் {கர்ணன்}, "நான் ஆயுதங்கள் அனைத்தையும் திரட்டிவிட்டேன்" என்று சொன்னான்".(33)

சாந்திபர்வம் பகுதி – 03ல் உள்ள சுலோகங்கள் : 33
கிருத யுகத்தில் *:
கிருதயுகம் , திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இந்த நான்கு யுகமும் சேர்ந்து ஒரு சதுர்யுகம் அல்லது தேவயுகம் எனப்படும்.

யுகம் என்பது காலத்தைக் கணக்கிட உதவும் ஒரு பொதுவான அலகு. மொத்தம் 4,32,000 ஆண்டுகள் சேர்ந்தது ஒரு யுகம் என்று அழைக்கப்படும். இந்து புராணங்களின்படி நான்கு வகையான யுகங்கள் இருக்கின்றன. அவை முறையே கிருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், மற்றும் கலியுகம் என்பனவாம். ஒவ்வொரு யுகமும் வெவ்வேறான கால அளவைக் கொண்டது.
பொதுவாக 1 யுகம் : 4,32,000 ஆண்டுகள்
கிருத யுகம் : 4 யுகங்கள் (17,28,000 ஆண்டுகள்)
த்ரேதா யுகம் : 3 யுகங்கள் (12,96,000 ஆண்டுகள்)
துவாபர யுகம் : 2 யுகங்கள் (8,64,000 ஆண்டுகள்)
கலியுகம் : 1 யுகம் (4,32,000 ஆண்டுகள்)

பூமியில் இந்த யுகங்கள் சுழற்சி முறையில் வரிசையாக நிகழும். முதலில் கிருதயுகம், பிறகு த்ரேதாயுகம், அதன்பிறகு துவாபரயுகம், பிறகு கடைசியாக கலியுகம் என வரிசையாக நடக்கும். தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. கலியுகம் முடியும் சமயத்தில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் தோன்றி தீயசக்தியான "கலி"யுடன் போரிட்டு வெல்வார். பிறகு புதிய உலகம் பிறக்கும். கிருதயுகம் தோன்றும்.
கிருதயுகத்திலிருந்து கலியுகம் வரையிலான, இந்த ஒரு முழுமையான சுழற்சிக்கு சதுர் யுகம் என்று பெயர். மொத்தம் 10 யுகங்களின் கால அளவைக்கொண்டதே ஒரு சதுர்யுகம்.

1 சதுர்யுகம் = கிருதயுகம்(4) + த்ரேதாயுகம்(3) + துவாபரயுகம்(2) + கலியுகம்(1) = 10 யுகங்கள்.
ஒரு சதுர்யுகத்தின் மொத்த கால அளவை, ஆண்டுகளில் கூறினால் 43,20,000 ஆண்டுகள் வரும். இதைப்போல 72 சுழற்சிகள் நடந்து முடிந்தால் அது ஒரு மனுவந்தரம் என்று அழைக்கப்படும். அதாவது 72 சதுர்யுகங்கள் சேர்ந்தது ஒரு மனுவந்தரம். அதேபோல 14 மனுவந்தரங்கள் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு பகல். மற்றொரு 14 மனுவந்தரங்கள் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு இரவு. ஆக மொத்தம் 28 மனுவந்தரங்கள் சேர்ந்தது தான் பிரம்மாவின் ஒரு நாள்.
1 சதுர்யுகம் = 10 யுகங்கள்
1 மன்வந்தரம் = 72 சதுர்யுகங்கள்
1 கல்பம் = 14 மனுவந்தரங்கள் = பிரம்மாவின் ஒரு பகல்
1 மகா பிரளயம் = 14 மனுவந்திரங்கள் = பிரம்மாவின் ஒரு இரவு
1 பிரம்மா நாள் = (1 கல்பம் + 1 மகா பிரளயம்) = 28 மன்வந்தரங்கள்

இதுபோல பிரம்மா மொத்தம் 100 ஆண்டுகள் உயிர் வாழ்வார். அதற்குப் பிறகு இந்தப் பிரபஞ்சமே அழிந்து மறுபடியும் புதிய பிரம்மா பிறப்பார். புதிய உலகைப் படைப்பார்.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்