Sunday, October 01, 2017

கிருபர் சொன்ன நல்லாலோசனை! - சௌப்திக பர்வம் பகுதி – 02

The good counsel of Kripa! | Sauptika-Parva-Section-02 | Mahabharata In Tamil

(சௌப்திக பர்வம் - 02)


பதிவின் சுருக்கம் : அஸ்வத்தாமனால் கேட்கப்பட்ட கிருபர், செயலின் வெற்றி தோல்வி எதனால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதைச் சொல்வது; துரியோதனனின் தீச்செயல்களையும், அதனால் தங்களுக்கு ஏற்பட்ட பேரிடரையும் எடுத்துச் சொல்வது; கிருபர் அஸ்வத்தாமனுக்குச் சொன்ன நல்லாலோசனை...


கிருபர் {அஸ்வத்தாமனிடம்}, "ஓ! பலமிக்கவனே {அஸ்வத்தாமா}, நீ சொன்னதனைத்தையும் நாங்கள் கேட்டோம். எனினும், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, என் வார்த்தைகள் சிலவற்றையும் கேட்பாயாக.(1) விதி மற்றும் முயற்சி ஆகிய இந்த இரண்டு சக்திகளுக்கும் மனிதர்கள் அனைவரும் கட்டுப்பட்டு, அவற்றால் ஆளப்படுகிறார்கள்.(2) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, விதியின் விளைவால் மட்டுமே, அல்லது முயற்சியால் மட்டுமே நமது செயல்பாடுகள் வெற்றியை அடைவதில்லை. அவ்விரண்டின் ஒருங்கிணைப்பிலேயே வெற்றி எழுகிறது.(3) உயர்ந்தவை மற்றும் இழிந்தவை ஆகிய நோக்கங்கள் அனைத்தும் இவ்விரண்டின் ஒருங்கிணைப்பைச் சார்ந்தே இருக்கின்றன. இந்த உலகம் முழுவதிலும், மனிதர்கள் செயல்படுவதும், செயலைத் தவிர்ப்பதும் இவ்விரண்டின் மூலமே நடக்கிறது.(4)


மலையின் மீது மழையைப் பொழியும் மேகங்களால் என்ன விளைவு உண்டாகிறது? உழப்பட்ட நிலத்தில் பொழிவதால் என்ன விளைவுகள் உண்டாகவில்லை?(5) எங்கே விதி மங்கலமாக இல்லாமல், முயற்சி இருக்கிறதோ, எங்கே விதி மங்கலமாயிருந்தும் முயற்சி இல்லையோ அவ்விரண்டு இடங்களும் கனியற்றவையாகும் {பலனற்றவையாகும்}. (அவ்விரண்டின் ஒருங்கிணைப்பு குறித்து) நான் முன்பே சொன்னதுதான் உண்மை[1].(6) நன்கு உழப்பட்ட மண்ணை மழையானது முறையாக நனைத்தால் வித்துகள் பெரும் விளைவுகளை உண்டாக்குகின்றன. மனிதவெற்றியானது இவ்வியல்பைக் கொண்டதே.(7) சிலவேளைகளில், விதியானது, நிகழ்வுகளின் வழிகளைத் தீர்மானித்துக் கொண்டு, (முயற்சிக்காகக் காத்திராமல்) தானே செயல்படுகிறது. இவை அனைத்திற்காகவும்தான், ஞானிகள் திறனின் துணை கொண்டு முயற்சியில் {உழைப்பில்} ஈடுபடுகிறார்கள்.(8) ஓ! மனிதர்களில் காளையே, மனித செயல்களின் அனைத்து நோக்கங்களும், இவ்விரண்டின் துணையாலேயே நிறைவேறுகின்றன. இவ்விரண்டின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டே மனிதர்கள் உழைப்பதாகவோ, {உழைப்பைத்} தவிர்ப்பதாகவோ காணப்படுகிறார்கள்.(9) முயற்சியானது செய்யப்படலாம். ஆனால், அம்முயற்சி விதியின் மூலமே வெற்றியை அடைகிறது. விதியின் விளைவாலேயே, முயற்சியை நம்பி ஒருவன், தன்னைச் செயலில் ஈடுபடுத்திக் கொண்டு வெற்றியை அடைகிறான்.(10)

[1] கும்பகோணம் பதிப்பில், "தனித்த மனித முயற்சியும், முயற்சியில்லாத தெய்வமும் எல்லா இடத்திலும் பயனற்றனவாகின்றன. அவ்விரண்டில் முந்தின பக்ஷமானது சிறந்தது என்பது நிச்சயம்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

எனினும், முயற்சியானது, தகுந்த மனிதர்களால் செய்யப்பட்டு, நன்கு நடைமுறைப்படுத்தப்பட்டாலும், விதியின் இசைவின்றிக் கனியை உண்டாக்காமல் போவதும் இவ்வுலகில் காணப்படுகிது.(11) எனவே, மனிதர்களில் சோம்பேறிகளும், அறிவற்றவர்களும்தான் முயற்சியை {உழைப்பை} ஏற்க மறுக்கின்றனர். எனினும், இது ஞானியரின் கருத்தல்ல.(12) செய்யப்பட்ட செயலானது கனியை உண்டாக்காமல் போவது பொதுவாக இவ்வுலகில் காணப்படவில்லை. மேலும், செயலின்மையானது, பெருந்துன்பத்தை உண்டாக்குவதையும் காணமுடிகிறது.(13) எந்த முயற்சியும் செய்யாமல் ஒன்றை அடைபவனும், முயன்ற பிறகு எதையும் அடையாதவனையும் காண முடிவதில்லை.(14) செயலில் எப்போதும் மும்முரமாக இருப்பவன், தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ளவல்லவனாவான். மறுபுறம், சோம்பேறியோ ஒருபோதும் மகிழ்வை அடையமாட்டான். மனிதர்களின் இவ்வுலகில், செயலுக்கு அடிமையாக இருப்போர், எப்போதும் நன்மையை ஈட்டும் விருப்பத்தால் தூண்டப்பட்டவர்களாகவே பொதுவாகக் காணப்படுகிறார்கள்[2].(15)

[2] "அப்படிப்பட்ட ஒரு மனிதனை மனக்கசப்போ {மனத்தளர்ச்சியோ}, மானிட வெறுப்போ ஒருபோதும் அணுகாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

செயலில் அர்ப்பணிப்புக் கொண்ட ஒருவன், தன் நோக்கத்தை அடைவதில் வெற்றி கொண்டாலோ, தன் செயல்களுக்கான கனியை அடையத் தவறினாலோ, எவ்வகையிலும் அவன் நிந்திக்கத்தகுந்தவனாக மாட்டான்.(16) எந்தச் செயலையும் செய்யாமல், செயலின் கனிகளை அனுபவித்துக் கொண்டு, இவ்வுலகில் ஆடம்பரமாகக் காணப்படும் ஒருவன், கேலிக்கும், வெறுப்புக்கும் உள்ளாவது பொதுவாகவே காணப்படுகிறது.(17) செயலைக் குறித்த இவ்விதியை அலட்சியம் செய்யும் ஒருவன், வேறுவகையில் வாழ்வதால், தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது. இதுவே நுண்ணறிவைக் கொண்டோரின் கருத்தாகும்.(18) விதியிருந்தும் கடும் முயற்சியில்லாமை மற்றும் கடும் முயற்சியிருந்தும் விதியில்லாமை ஆகிய இவ்விரண்டு காரணங்களின் விளைவாகவே முயற்சிகள் கனிகளை உண்டாக்குவதில்லை[3].(19) முயற்சியில்லாமல் இவ்வுலகில் எச்செயலும் வெற்றியடையாது. எனினும், தேவர்களை வணங்கி, செயல்பாட்டில் அர்ப்பணிப்பு, திறம் ஆகியவற்றைக் கொண்டு, தன் நோக்கங்களின் நிறைவை வேண்டும் ஒருவன் ஒருபோதும் வீழ்வதில்லை {வெற்றியடையாமல் போவதில்லை}.(20)

[3] கும்பகோணம் பதிப்பில், "தெய்வம் புருஷகாரத்தினாலாவது, புருஷகாரம் தெய்வத்தினாலாவது விடுபட்டிருக்குமேயாகில் இந்த இரண்டு காரணங்களாலும் முயற்சியானது பயனற்றதாகவிடும்" என்றிருக்கிறது.

வெற்றியை விரும்பும் ஒருவன், பெரியோருக்குப் பணிவிடை செய்து, தனக்கு நன்மையானதை வேண்டி, அவர்களது நல்ல ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவனுக்கும் அதே நிலையே ஏற்படுகிறது {அவனும் வெற்றியடையாமல் போவதில்லை}.(21) ஒருவன் முயற்சியில் ஈடுபடும்போது, பெரியோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனிதர்களின் ஆலோசனைகளை எப்போதும் வேண்டிக் கேட்க வேண்டும். இம்மனிதர்களே பிழையற்ற வழிமுறைகளின் வேர்களாவர், மேலும் வெற்றியானது வழிமுறைகளையே நம்பி இருக்கிறது.(22) பெரியோரின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, முயற்சியில் ஈடுபடும் ஒருவன், அம்முயற்சிகளில் இருந்து அபரிமிதமான கனிகளை அறுவடை செய்கிறான்.(23) மதிப்பில்லாமல், (தனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க வல்ல) யாரையும் மதிக்காமல் இருக்கும் மனிதன், விருப்பம், கோபம், அச்சம், பேராசை ஆகியவற்றால் உந்தப்பட்டு, தன் நோக்கங்களின் நிறைவை வேண்டும் போது, விரைவாகத் தன் செழிப்பை இழக்கிறான்.(24)

பொருளில் பேராசை கொண்டவனும், முன்னறிதிறமற்றவனுமான துரியோதனன், ஆலோசனைகளை ஏற்காமல், செரிக்க முடியாத திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மூடத்தனமான முயற்சியைத் தொடங்கினான்.(25) தனது நலன்விரும்பிகள் அனைவரையும் அலட்சியம் செய்து, {அவர்களால்} தடுக்கப்பட்டும், தீயவர்களின் ஆலோசனையை மட்டுமே ஏற்று, நல்ல குணங்கள் அனைத்திலும் தனக்கு மேம்பட்டவர்களான பாண்டவர்களிடம் பகைமை கொண்டான்.(26) தொடக்கத்திலிருந்தே அவன் மிகத் தீயவனாகவே இருந்தான். அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. நண்பர்கள் கேட்டுக் கொண்டதை அவன் செய்யவில்லை. அவை அனைத்தின் காரணமாகவே அவன் இப்போது பேரிடருக்கு மத்தியில் துயரில் எரிந்து கொண்டிருக்கிறான்.(27) நம்மைப் பொறுத்தவரை, அந்த இழிந்த பாவியை நாம் பின்பற்றியதால் நம்மையும் இந்தப் பேரிடர் வந்தடைந்தது.(28) இந்தப் பேரிடர் என் அறிவை எரிக்கிறது. சிந்தனையில் மூழ்கினாலும், நமக்கான நன்மையைக் காண்பதில் நான் தவறுகிறேன்.(29)

{மயக்கத்தினால்} திகைப்படைந்திருக்கும் ஒருவன், தன் நண்பர்களின் ஆலோசனையைக் கேட்க வேண்டும். அத்தகு நண்பர்களிலேயே அவன், தன் அறிவையும், பணிவையும், செழிப்பையும் கொண்டிருக்கிறான்.(30) ஒருவனின் செயல்பாடுகள் அவர்களிலேயே வேர்விட்டிருக்க வேண்டும்[4]. நுண்ணறிவுமிக்க நண்பர்கள் சொன்ன ஆலோசனைகளைக் கேட்டுத் தங்கள் அறிவைக் கொண்டு தீர்மானித்து அவற்றை {அந்தச் செயல்பாடுகளைச்} செய்ய வேண்டும்.(31) எனவே, திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் உயர் ஆன்ம விதுரனிடம் சென்று நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் கேட்போம்.(32) நம்மால் கேட்கப்பட்டதும் அவர்கள் என்ன சொல்வார்களோ, அது நமது நன்மைக்கானதாகவே இருக்கும். அவர்கள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். இதுவே எனது உறுதியான தீர்மானமாகும்.(33) நன்கு முயற்சி செய்தும் செயல்கள் வெற்றிபெறாத மனிதர்கள், விதியால் பீடிக்கப்பட்டவர்களாகவே கருதப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை" என்றார் {கிருபர்}".(34)

[4] "ஒருவன் அவர்கள் சொல்வதைப் போலவே செயல்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சௌப்திக பர்வம் பகுதி – 02ல் உள்ள சுலோகங்கள் : 34

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்