Sunday, October 01, 2017

அஸ்வத்தாமனின் கொடூரத் திட்டம்! - சௌப்திக பர்வம் பகுதி – 03

Aswatthama's cruel plan! | Sauptika-Parva-Section-03 | Mahabharata In Tamil

(சௌப்திக பர்வம் - 03)


பதிவின் சுருக்கம் : கிருபரை மறைமுகமாக நிந்தித்த அஸ்வத்தாமன்; தன் ஆதங்கத்தைக் கிருதவர்மனிடமும், கிருபரிடமும் சொன்னது; அன்றைய இரவில் தான் செய்யப் போகும் கோரச் செயலை அவ்விருவருக்கும் எடுத்துச் சொன்னது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "மங்கலமானவையும், அறம் மற்றும் பொருள் நிரம்பியவையுமான கிருபரின் வார்த்தைகளைக் கேட்ட அஸ்வத்தாமன் கவலையிலும், துயரத்திலும் மூழ்கினான்.(1) சுடர்மிக்க நெருப்பைப் போலத் துயரத்தில் எரிந்த அவன், ஒரு தீய தீர்மானத்தை அமைத்துக் கொண்டு, அவர்கள் இருவரிடமும் {கிருபர் மற்றும் கிருதவர்மனிடம்},(2) "வெவ்வேறு மனிதர்களிடம் உள்ள அறிவுப்புலம் வெவ்வேறானவையே. எனினும், ஒவ்வொரு மனிதனும், தன்னறிவில் மகிழ்ச்சி கொள்கிறான்.(3) ஒவ்வொரு மனிதனும் பிறரைவிடத் தன்னை அதிக அறிவு கொண்டவனான கருதிக் கொள்கிறான். ஒவ்வொருவனும் தன்னறிவை மதித்து, அதன்படியே பெரிதாக அதைப் புகழ்ந்து கொள்கிறான்.(4) ஒவ்வொருவரும் தன் ஞானத்தைப் புகழத்தக்க ஒன்றாகக் கருதுகிறான். ஒவ்வொருவனும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிறரின் ஞானத்தைப் பழித்து, தனதை நல்லதாகச் சொல்கிறான்.(5)


பல்வேறு கருத்துகள் இருந்தாலும், ஏதாவது அடையப்படாத நோக்கத்தை ஏற்கும் தீர்மானத்துடன் கூடிய மனிதர்கள், நிறைவை அடைந்து ஒருவரையொருவர் புகழ்ந்து கொள்கிறார்கள்.(6) மேலும் அதே மனிதர்களின் தீர்மானங்கள், காலத்தின் ஆளுகையால் மாறுபட்டு ஒருவரையொருவர் எதிர்க்கவும் செய்கிறார்கள்.(7) மிகவும் குறிப்பாக, மனித அறிவுகளின் பன்முகத்தன்மையின் விளைவால் அறிவு மயக்கமடையும்போது தீர்மானங்கள் வேறுபடுகின்றன[1].(8) ஒரு திறன்மிக்க மருத்துவர், ஒரு நோயை முறையாகக் கண்டறிந்து, அதைக் குணப்படுத்துவதற்காகத் தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு மருந்தைப் பரிந்துரைப்பது போலவே,(9) மனிதர்கள், தங்கள் செயல்களை நிறைவேற்றுவதற்காகத் தங்கள் ஞானத்தின் {அறிவின்} துணையுடன் தங்கள் அறிவைப் {புத்தியைப்} பயன்படுத்துகின்றனர். அவர்கள் செய்வதும் பிறரால் ஏற்கப்படுவதில்லை.(10)

[1] கும்பகோணம் பதிப்பில், "பெரும்பாலும் மனிதர்களுடைய சித்தங்கள் நிலையற்றிருப்பதனால் அவற்றிற்கு மெலிவுண்டாகவே அந்த அந்தப் புத்தி உண்டாகின்றது" என்றிருக்கிறது.

இளைஞன் ஒருவன், ஒருவகை அறிவைக் கொண்டிருக்கிறான். அவனே நடுவயதை அடையும்போது, அதே அறிவுக்கு இணங்குவதில்லை, முதுமையில் வேறு வகை அறிவே அவனுக்கு ஏற்புடையதாகிறது.(11) ஓ! போஜர்களின் தலைவா {கிருதவர்மா}, பயங்கரத் துன்பத்தில் வீழும்போதோ, பெருஞ்செழிப்பையடையும்போதோ, ஒருவனது அறிவு மிகவும் பீடிக்கப்படுவதாகத் தெரிகிறது.(12) அதே மனிதன், ஞானமில்லாமையால் {அறிவில்லாமையால்} வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு அறிவை {புத்தியைக்} கொண்டிருக்கிறான். ஒரு நேரத்தில் ஏற்புடைய அறிவானது, வேறு நேரத்தில் முற்றாக மாறுகிறது.(13) எனினும், ஒருவனின் ஞானத்திற்குத் தக்க தீர்மானத்தை அடைந்த பிறகு, சிறப்பான அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றவே முயற்சிக்க வேண்டும். எனவே, அத்தகு தீர்மானமானது அவனை முயற்சி செய்யத் தூண்ட வேண்டும்.(14) ஓ! போஜர்களின் தலைவா, மரணத்தைத் தரக்கூடிய காரியங்களில் கூட, அவற்றைத் தங்களால் அடைய முடியும் என்ற நம்பிக்கையில் மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகச் செயல்படத் தொடங்குகின்றனர்.(15)

தங்கள் தீர்மானங்களையும், ஞானத்தையும் நம்பும் மனிதர்கள் அனைவரும், பல்வேறு நோக்கங்களை நல்லவையாக அறிந்து அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர்.(16) நமக்கு ஏற்பட்ட பேரிடரின் விளைவால் இன்று என் மனத்தை ஆக்கிரமித்த தீர்மானத்தை, என் துயரத்தை அகற்றவல்ல ஒன்றாகக் கருதுகிறேன். உங்கள் இருவருக்கும் அதைச் சொல்கிறேன்.(17) படைப்பாளன், உயிரினங்களைப் படைத்து அவை ஒவ்வொன்றிற்கும் உரிய தொழிலையும் நிர்ணயித்திருக்கிறான். பல்வேறு வகைகளை {வர்ணங்களைப்} பொறுத்தவரையில், அவன் ஒவ்வொன்றுக்கும் சிறப்பான பங்கைக் கொடுத்திருக்கிறான்.(18) பிராமணர்களுக்கு அனைத்துப் பொருட்களிலும் முதன்மையான வேதத்தை நிர்ணயித்திருக்கிறான். க்ஷத்திரியர்களுக்கு மேன்மையான சக்தியை நிர்ணயித்திருக்கிறான். வைசியர்களுக்குத் திறனையும், சூத்திரர்களுக்கு மூவகை வர்க்கங்களுக்குத் தொண்டாற்றும் கடமையையும் நிர்ணயித்திருக்கிறான்.(19) எனவே தன்னடக்கம் இல்லாத ஒரு பிராமணன் நிந்திக்கத் தகுந்தவனாவான். சக்தியற்ற க்ஷத்திரியன் இழிந்தவனாவான். திறனற்ற வைசியனும் (வேறு வகையினரிடம்) பணிவில்லாத சூத்திரனும் இகழத்தக்கவர்களாவார்கள்.(20)

போற்றுதலுக்குரிய உயர்ந்த பிராமணர்களின் குடும்பத்தில் நான் பிறந்தேன். எனினும், தீப்பேற்றால் நான் க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றுபவனானேன்.(21) க்ஷத்திரியக் கடமைகளை அறிந்தவனானதால், இப்போது நான் பிராமணர்களின் கடமையைப் பின்பற்றி (இத்தகு தீங்குகளில் தன்னடக்கத்துடன்) உயர்ந்த நோக்கத்தை அடைந்தால், அவ்வழி பெருமைக்குத் தகுந்ததாக இராது.(22) நான் போரில் சிறந்த வில்லையும், சிறந்த ஆயுதங்களையும் தரிக்கிறேன். என் தந்தையின் படுகொலைக்கு நான் பழிதீர்க்கவில்லை என்றால், மனிதர்களுக்கு மத்தியில் என்னால் எவ்வாறு வாயைத் திறக்க முடியும்?(23) எனவே நான், எந்தத் தயக்கமும் இல்லாமல் க்ஷத்திரியக் கடமைகளை மதித்து என் உயர் ஆன்மத் தந்தை {துரோணர்} மற்றும் மன்னனின் {துரியோதனனின்} அடிச்சுவட்டில் இன்று நடக்கப் போகிறேன்.(24) வெற்றியால் ஊக்கமடைந்திருக்கும் பாஞ்சாலர்கள், தங்கள் கவசங்களை அகற்றி, தாங்கள் அடைந்த வெற்றியை எண்ணி மகிழ்ச்சியடைந்து, களைப்படைந்தவர்களாக இன்றிரவு நம்பிக்கையுடன் உறங்குவார்கள்.(25)

அவர்கள் இவ்விரவில் தங்கள் முகாமில் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் போது, நான் அந்த முகாமில் பயங்கரத் தாக்குதலை நடத்தப் போகிறேன்.(26) தானவர்களைக் கொல்லும் மகவத்தை {இந்திரனைப்} போல நான், தங்கள் முகாமில் உணர்வற்றவர்களாக இறந்தவர்கள் போல உறங்கிக் கொண்டிருக்கும் அவர்களைத் தாக்கி, என் ஆற்றலை வெளிப்படுத்தி அவர்கள் அனைவரையும் கொல்லப் போகிறேன்.(27) வைக்கோல் குவியலை எரிக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போலத் தங்கள் தலைவனான திருஷ்டத்யும்னனின் தலைமையில் ஒரே இடத்தில் கூடியிருக்கும் அவர்கள் அனைவரையும் நான் கொல்லப் போகிறேன். ஓ! மனிதர்களில் சிறந்தவனே {கிருதவர்மா}, அந்தப் பாஞ்சாலர்களைக் கொன்று நான் மன அமைதியை அடையப் போகிறேன்.(28) அந்தப் படுகொலையில் ஈடுபடும்போது, உயிரினங்களுக்கு மத்தியில் திரியும் பினாகைதாரியான ருத்திரனைப் போல நான் அவர்களுக்கு மத்தியில் திரியப் போகிறேன்.(29) இன்று பாஞ்சாலர்கள் அனைவரையும் வெட்டிக் கொன்ற பிறகு, மகிழ்ச்சியுடன் நான் போரில் பாண்டுவின் மகன்களைப் பீடிக்கப் போகிறேன்.(30)

ஒருவர் பின் ஒருவராக அவர்களது உயிர்களை எடுத்து, பாஞ்சாலர்கள் அனைவரின் உடல்களையும் பூமியில் விரவிக் கிடக்கச் செய்து, என் தந்தைக்கு {துரோணருக்கு} நான் பட்டிருக்கும் கடனை அடைக்கப் போகிறேன்.(31) நான் இன்று, துரியோதனன், கர்ணன், பீஷ்மர், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோர் சென்ற கடினமான பாதையில் பாஞ்சாலர்களைப் பின்தொடரச் செய்யப் போகிறேன்.(32) என் வலிமையை வெளிப்படுத்தி, ஏதாவது ஒரு விலங்கின் தலையைப் போலப் பாஞ்சாலர்களின் மன்னனான திருஷ்டத்யும்னனின் தலையை முறிக்கப் போகிறேன்.(33) ஓ !கோதமரின் மகனே {கிருபரே}, உறங்கிக் கொண்டிருக்கும் பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்களின் மகன்களை இன்றைய இரவு போரில் என் கூரிய வாளால் வெட்டப் போகிறேன்.(34) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே {கிருபரே}, இன்றிரவு உறக்கத்தில் மூழ்கியிருக்கும் பாஞ்சாலப்படையை நிர்மூலமாக்கி, என் கடமையைச் செய்தவனாக என்னைக் கருதிக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை அடையப் போகிறேன்" என்றான் {அஸ்வத்தாமன்}.(35)

சௌப்திக பர்வம் பகுதி – 03ல் உள்ள சுலோகங்கள் : 35

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்