Sunday, October 08, 2017

கிருஷ்ணச் சக்கரம் கேட்ட அஸ்வத்தாமன்! - சௌப்திக பர்வம் பகுதி – 12

Aswatthama solicited Krishna's discus! | Sauptika-Parva-Section-12 | Mahabharata In Tamil

(ஐஷீக பர்வம் - 03)


பதிவின் சுருக்கம் : அஸ்வத்தாமன் பிரம்மாயுதத்தைக் கொண்டவனாதலால் பீமனின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு யுதிஷ்டிரனை வேண்டிய கிருஷ்ணன்; அஸ்வத்தாமன் பிரம்மாயுதத்தை அடைந்த வரலாறு; கிருஷ்ணனின் சக்கரத்தை அடைவதற்காகத் துவாரகை சென்ற அஸ்வத்தாமனின் துணிபு; அவனால் சக்கரத்தை உயர்த்த இயலாமை; கிருஷ்ணனின் கடிந்துரை; பீமனைப் பாதுகாக்க யுதிஷ்டிரனிடம் வேண்டிய கிருஷ்ணன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தடுக்கப்படமுடியாதவனான பீமசேனன் புறப்பட்டதும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனான அந்த யதுகுலத்தின் காளை {கிருஷ்ணன்}, குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம்,(1) "ஓ! பாண்டுவின் மைந்தரே {யுதிஷ்டிரரே}, உமது தம்பி, தன் மகன்களின் படுகொலைகளால் உண்டான துயரத்தில் மூழ்கி, துரோணரின் மகனை {அஸ்வத்தாமரைக்} கொல்லும் விருப்பத்தில் போரிடத் தனியொருவராகச் செல்கிறார்.(2) ஓ! பாரதக் குலத்தின் காளையே, உமது தம்பியர் அனைவரிலும், பீமரே உமக்கு அன்பானவர். அவர் பெரும் ஆபத்தில் வீழ்ந்தும், நீர் ஏன் இன்னும் காக்க முயலவில்லை?(3) பகை நகரங்களை அடக்கவல்ல துரோணர், தன் மகனுக்கு {அஸ்வத்தாமருக்கு} அறிவித்த பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதமானது, மொத்த உலகத்தையும் எரிக்கவல்லதாகும்.(4) சிறப்புமிக்கவரும், உயர்ந்த அருளைக் கொண்டவரும், வில்தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவருமான அந்த ஆசான் {துரோணர்}, அந்த ஆயுதத்தைத்தான் மகிழ்ச்சியுடன் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்குக்} கொடுத்தார்.(5)


அதைத் தாங்கிக்கொள்ள முடியாதவரான அவருடைய {துரோணருடைய} ஒரே மகன் {அஸ்வத்தாமர்}, அஃதை {பிரம்மசிரத்தை} அவரிடம் இரந்து கேட்டார். அவர் {துரோணர்}, தமக்கு விருப்பமில்லாமலேயே அவ்வாயுதத்தின் அறிவை அஸ்வத்தாமருக்குப் புகட்டினார்.(6) சிறப்புமிக்கத் துரோணர், தன் மகனின் மன உலைவை {சஞ்சலத்தை} அறிந்திருந்தார். கடமைகள் அனைத்தையும் அறிந்தவரான அந்த ஆசான் அவருக்குக் கட்டளையாக,(7) "ஓ! குழந்தாய், போருக்கு மத்தியில் நீ பெரும் ஆபத்தைச் சந்தித்தாலும், இவ்வாயுதத்தை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது, அதிலும் குறிப்பாக மனிதர்களை எதிர்த்துப் பயன்படுத்தக்கூடாது" என்று சொன்னார்.(8) இவ்வாறே ஆசான் துரோணர் தன் மகனிடம் சொன்னார். அவர் {துரோணர்}, சிறிது நேர் கழித்து மீண்டும் அவரிடம் {அஸ்வத்தாமரிடம்}, "ஓ! மனிதர்களில் காளையே, நீ நீதியின் பாதையில் நடக்கமாட்டாய் என்று தெரிகிறது" என்றார்.(9) தன் தந்தையின் இந்தக் கசப்பான வார்த்தைகளைக் கேட்டவரும், தீய ஆன்மா கொண்டவருமான அஸ்வத்தாமர், அனைத்து வகைச் செழிப்பையும் அடையும் {அடைய முடியாத} மனத்தளர்ச்சியுடன், துயரத்தில் பூமியெங்கும் திரியத் தொடங்கினார்.(10)

ஓ! குருக்களின் தலைவரே {யுதிஷ்டிரரே}, நீங்கள் காட்டில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, துவாரகைக்கு வந்த அவர் {அஸ்வத்தாமர்}, விருஷ்ணிகளால் வழிபடப்பட்டுத் தன் வசிப்பிடத்தை அங்கே அமைத்துக் கொண்டார்.(11) அவர், துவாரகையில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட பிறகு, ஒரு நாள், தோழனற்றவனாகவும், அருகே யாருமில்லாதவனாகவும் கடற்கரையில் இருந்த என்னிடம் வந்து, சிரித்துக் கொண்டே,(12) "ஓ! கிருஷ்ணா, ஓ! தாசார்ஹா, தேவர்களாலும், கந்தர்வர்களாலும் வழிபடப்படுவதும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட, பாரதர்களின் ஆசானான என் தந்தை {துரோணர்}, கடுந்தவங்களுக்குப் பிறகு அகஸ்தியரிடம் இருந்து அடைந்ததுமான பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதமானது, என் தந்தையிடம் இருப்பது போலவே, இப்போது என்னிடமும் இருக்கிறது.(13,14) ஓ! யதுகுலத்தில் முதன்மையானவனே, அந்தத் தெய்வீக ஆயுதத்தைப் பெற்றுக் கொண்டு, போரில் எதிரிகள் அனைவரையும் கொல்லவல்ல உனது சக்கரத்தை எனக்குக் கொடுப்பாயாக" என்று கேட்டார்.(15)

கரங்களைக் கூப்பிக் கொண்டு பெரும்பிதற்றல் செய்து, இவ்வாறு அவர் என்னிடம் எனது சக்கரத்தைக் கேட்டபோது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, நான் அவரை மகிழ்விக்க விரும்பி, அவரிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னேன்,(16) "தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள் ஆகியோர் அனைவரும், பறவைகள், பாம்புகள் ஆகிய அனைத்தும் ஒன்றுகூடினாலும், என் சக்தியின் நூறில் ஒரு பங்குக்கும் அஃது இணையாகாது.(17) நான் இந்த வில்லையும், இந்த ஈட்டியையும் {சக்தியையும்}, இந்தச் சக்கரத்தையும், இந்தக் கதாயுதத்தையும் கொண்டிருக்கிறேன். என்னிடம் இருக்கும் இவற்றில், நீர் எதை விரும்பினாலும், நான் அஃதை உமக்குக் கொடுப்பேன். நீர் கொடுக்க விரும்பும் ஆயுதத்தைக் கொடுக்காமலே, இந்த என் ஆயுதங்களில் நீர் எதையெடுக்க வல்லவரோ, அஃதை எடுத்துக் கொண்டு, போரில் பயன்படுத்திக் கொள்வீராக" என்றேன்.(19) இவ்வாறு சொல்லப்பட்டதும், என்னை அறைகூவி அழைப்பதைப் போலத் துரோணரின் அந்தச் சிறப்புமிக்க மகன் {அஸ்வத்தாமன்}, இரும்பாலானதும், ஆயிரம் ஆரங்களைக் கொண்டதும், வஜ்ரத்தைப் போன்று கடினமானதும், சிறப்புமிக்கக் குழியை {நடுத்துவாரத்தைக்} கொண்டதுமான என் சக்கரத்தை என்னிடம் இருந்து வேண்டினார்.(20)

நான் அவரிடம், "எடுத்துக் கொள்ளும்" என்று சொன்னேன். இவ்வாறு சொல்லப்பட்டதும், திடீரென எழுந்த அவர், தன் இடக்கையால் அச்சக்கரத்தைப் பற்றினார்.(21) இருப்பினும், அந்த ஆயுதத்தை அது கிடந்த இடத்தில் இருந்து அவரால் அசைக்கவும் முடியவில்லை. பிறகு அவர் அதை வலக்கரத்தால் பற்ற ஆயத்தமானார்.(22) பிறகு அவர், உறுதியாக அதைப் பற்றிக் கொண்டு, தன் பலமனைத்தையும் வெளிப்படுத்தினாலும் அதைத் தரிக்கவோ, அசைக்கவோ முடியவில்லை. இதனால் அந்தத் துரோணரின் மகன் சோகத்தில் நிறைந்தார். ஓ! பாரதரே, முயற்சியால் களைத்தபிறகே அவர் {அஃதை எடுப்பதை} நிறுத்தினார்.(23,24)

அந்நோக்கத்தில் இருந்து தமது இதயத்தை விலக்கியப் பிறகு, உணர்வற்றவராகவும், கவலை கொண்டவராகவும் இருந்த அஸ்வத்தாமரிடம் நான்,(25) "ஓ! பிராமணரே, எவன் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகக் கருதப்படுகிறானோ, எவன் காண்டீவத்தைத் தரித்திருக்கிறானோ, எவன் வெண்குதிரைகளைத் தன் தேரில் பூட்டியிருக்கிறானோ, எந்த வீரன் தன் கொடிமரத்தில் குரங்குகளின் இளவரசனைப் பொறித்திருக்கிறானோ,(26) எந்த வீரன், தேவர்களின் தேவனும், நீலமிடறு கொண்டவனும், உமையின் தலைவனுமான பெரும் சங்கரனிடமே மல்யுத்தம் செய்து வெல்ல விரும்பினானோ,(27) எந்தப் பல்குனனைத் தவிரப் பூமியில் எனக்கு வேறு அன்புக்குரிய நண்பவன் எவனும் இல்லையோ, எந்த நண்பனுக்கு என் மனைவியர் மற்றும் பிள்ளைகள் உட்பட எதையும் நான் கொடுப்பேனோ,(28) அந்த என் அன்புக்குரிய நண்பனான, களங்கமற்ற செயல்களையுடைய பார்த்தன் {அர்ஜுனன்} கூட என்னிடம் இத்தகு வார்த்தைகளை ஒருபோதும் சொன்னதில்லை.(29)

தவத்துறவுகளின் மூலமும், இமய மலைச்சாரலில் பனிரெண்டு வருடங்கள் கடுந்தவம் செய்தும் எந்த மகனை அடைந்தேனோ,(30) எவன் சனத்குமாரனின் ஒரு பகுதியோ, என்னைப் போலவே கடும் நோன்புகளை நோற்றவளான என் மனைவி ருக்மிணியிடம் என்னால் எவன் பெறப்பட்டானோ,(31) அந்தப் பெருஞ்சக்தி கொண்ட எனது மகன் பிரத்யும்னன் கூட, சிறுமதி கொண்ட உம்மைப் போல, பொருட்களில் சிறந்ததும், ஒப்பற்றதுமான இந்தச் சக்கரத்தை ஒருபோதும் என்னிடம் கேட்டதில்லை.(32) பெரும் வலிமையைக் கொண்ட ராமர் {பலராமர்}, ஒருபோதும் இத்தகு வார்த்தைகளை என்னிடம் பேசியதில்லை. கதனோ, சாம்பனோ நீர் கேட்டதை ஒருபோதும் கேட்டதில்லை.(33) துவாரகையில் வசிக்கும் விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களின் பெருந்தேர்வீரர்களில் எவரும் என்னிடம் நீர் கேட்டதைக் கேட்டதில்லை.(34) நீர் பாரதர்களுடைய ஆசானின் {துரோணரின்} மகனாவீர். யாதவர்கள் அனைவராலும் நீர் உயர்வாக மதிக்கப்படுகிறீர். ஓ! தேர்வீரர்களில் முதன்மையானவரே, நான் கேட்கிறேன், இவ்வாயுதத்தைப் பயன்படுத்தி நீர் யாருடன் போரிடப்போகிறீர்?" என்று கேட்டேன்.(35)

இவ்வாறு என்னால் சொல்லப்பட்ட துரோணர் மகன், "ஓ! கிருஷ்ணா, ஓ மங்கா மகிமை கொண்டவனே, உன்னை வணங்கிய பிறகு, உன்னிடம் போரிட வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. ஓ! கிருஷ்ணா, தேவர்கள் மற்றும் தானவர்களால் புகழப்படும் உன் சக்கரத்தை அதற்காகவே நான் வேண்டினேன். நான் அஃதை அடைந்திருந்தால், இவ்வுலகில் வெல்லப்பட முடியாதவனாக ஆகியிருப்பேன்.(37) ஓ! கேசவா, ஓ! கோவிந்தா, கிட்டத்தட்ட அடையமுடியாத என் விருப்பத்தை அடைய முடியாமலே நான் உன்னை விட்டுச் செல்லப் போகிறேன். இப்போது என்னிடம் நல்வார்த்தைகளைப் பேசுவாயாக.(38) பயங்கரமான மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான நீ ,இந்தப் பயங்கரமான ஆயுதத்தைத் தரித்திருக்கிறாய். இவ்வாயுதத்தால் நீ ஒப்பற்றவனாக இருக்கிறாய். இவ்வுலகில் இதைத்தரிக்கவல்லவன் எவனுமில்லை" என்றார்.(39)

என்னிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, பிறகு, குதிரை இணைகள் {ஜோடிகள்} பலவற்றையும், அதிகச் செல்வத்தையும், பல்வேறு வகை ரத்தினங்களையும் பெற்றுக் கொண்டு துவாரகையை விட்டகன்றார்.(40) அவர் கோபம்நிறைந்தவராகவும், தீய ஆன்மா கொண்டவராகவும், மன அமைதியற்றவராகவும், மிகக் கொடூரராகவும் இருக்கிறார். பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதத்தை அவர் அறிந்திருக்கிறார். விருகோதரர் {பீமர்} அவரிடம் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்" என்றான் {கிருஷ்ணன்}".(41)

சௌப்திக பர்வம் பகுதி – 12ல் உள்ள சுலோகங்கள் : 41

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்