Sunday, October 08, 2017

பிரம்மசிரமேவிய அஸ்வத்தாமன்! - சௌப்திக பர்வம் பகுதி – 13

Aswatthama let off brahmashira! | Sauptika-Parva-Section-13 | Mahabharata In Tamil

(ஐஷீக பர்வம் - 04)


பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனுடன் சேர்ந்து பீமனைப் பின்தொடர்ந்த பாண்டவர்கள்; நிற்குமாறு அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டும் நிற்காத பீமன்; வியாசருடன் அமர்ந்திருக்கும் அஸ்வத்தாமனைக் கண்ட பாண்டவர்கள்; பிரம்மசிர ஆயுதத்தை வெளியிட்ட அஸ்வத்தாமன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், யாதவர்கள் அனைவரையும் மகிழ்விப்பவனுமான அவன் {கிருஷ்ணன்}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, வலிமைமிக்க அனைத்து வகை ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருக்கும் தன் அற்புதத் தேரில் ஏறிக் கொண்டான்.(1) தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், காம்போஜ இனத்தைச் சேர்ந்த முதன்மையானவையுமான குதிரைகளில் ஈரிணைகள் {இரண்டு ஜோடிகள்} அவ்வாகனத்தில் பூட்டப்பட்டிருந்தன. அந்தச் சிறந்த தேரின் தூரம் {ஏர்க்கால்} காலைச் சூரியனின் நிறத்தில் இருந்தது.(2) {அந்த ஏர்க்காலின்} வலப்புறத்தில் சைவியம் என்றறியப்பட்ட குதிரையும், இடப்புறத்தில் சுக்ரீவமும்; பார்ஷினியில் {பின்புறத்தில்} மேகபுஷ்பம் மற்றும் வலாஹகம் என்றழைக்கப்பட்ட இரு குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன.(3) அந்தத் தேரில், ரத்திரங்கள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீகத் தச்சனால் {விஸ்வகர்மனால்} செய்யப்பட்டதுமான தெய்வீகக் கொடிமரமொன்று மாயனை (விஷ்ணுவைப்) போலவே உயர்ந்து நின்றிருந்தது.(4) அந்தக் கொடிமரத்தின் நுனியில் வினதையின் மகன் (கருடன்) பெருங்காந்தியுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். உண்மையில், அந்தப் பாம்புகளின் எதிரியானவன் {கருடன்}, உண்மையின் உடல்வடிவமான {சத்தியரூபியான} கேசவனின் {கிருஷ்ணனின்} கொடிமர உச்சியில் அமர்ந்திருந்தான்.(5)


வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான ரிஷிகேசன் {கிருஷ்ணன்} அத்தேரில் ஏறிக்கொண்டான். அவனை அடுத்து தடுத்தற்கரிய சாதனைகளைக் கொண்ட அர்ஜுனனும், குருக்களின் மன்னனான யுதிஷ்டிரனும் அதே வாகனத்தில் ஏறினார்கள்.(6) சாரங்கம் என்றழைக்கப்படும் வில்லைத் தரிக்கும் தசார்ஹ குலத்தோனின் {கிருஷ்ணனின்} அருகில் அத்தேரில் அமர்ந்திருந்த பாண்டுவின் மகன்கள் இருவரும், வாசவனின் {இந்திரனின்} அருகில் அமர்ந்திருக்கும் அசுவினி இரட்டையர்களைப் போல மிக அழகாகத் தெரிந்தனர்.(7) அந்தத் தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, உலகமனைத்தாலும் புகழப்படும் தன் தேரில் அவர்களை ஏறச் செய்து, பெரும் வேகம் கொண்ட அந்த முதன்மையான குதிரைகளைத் தூண்டினான்.(8) பாண்டு மகன்கள் இருவராலும், அந்த யாதவக் காளையாலும் {கிருஷ்ணனாலும்} செலுத்தப்பட்ட அந்தச் சிறந்த வாகனத்தில் இருந்த குதிரைகள் அவர்களை ஏற்றிக் கொண்ட பிறகு திடீரெனப் பறந்தன.(9) அந்தச் சாரங்கபாணியை {கிருஷ்ணனை} அவ்விலங்குகள் பெரும் வேகத்தோடு சுமந்து சென்ற போது, அவற்றின் விரைவால் ஏற்பட்ட ஒலியானது, காற்றின் ஊடாகச் செல்லும் பறவைகளின் ஒலியைப் போலப் பேரொலியாக இருந்தது.(10)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பெரும் வேகத்தில் சென்ற அவர்கள், விரைவாகத் தாங்கள் பின்தொடர்ந்து சென்ற வலிமைமிக்க வில்லாளியான பீமசேனனை அடைந்தனர்.(11) அந்தப் பெருந்தேர்வீரர்கள் பீமனைச் சந்தித்தாலும், எதிரியை நோக்கி மூர்க்கமாகச் செல்பவனும், கோபத்தில் நிறைந்தவனுமான அந்தக் குந்தியின் மகனைத் {பீமனைத்} தடுக்கத் தவறினர்.(12) சிறப்புமிக்கவர்களும், உறுதியானவர்களுமான அந்த வில்லாளிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவன் {பீமன்}, பகீரதனால் கீழே கொண்டுவரப்பட்ட ஆற்றின் {கங்கையாற்றின்} கரையை, மிக வேகமாகச் செல்லும் தன் குதிரைகளின் மூலம் அடைந்தான்.(13) அங்கே நீர் முனையின் {கரையின்} அருகில், உயர் ஆன்மா கொண்டவரும், சிறப்புமிக்கவரும், கரிய நிறத்தவரும், தீவில் பிறந்தவருமான வியாசர் பல முனிவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருப்பதைக் கண்டான்.(14) மேலும் அவன் {பீமன்}, புழுதியால் மறைக்கப்பட்டவனும், குசப்புல்லாலான ஆடை உடுத்தியவனும், தெளிந்த நெய்யை மேனியெங்கும் பூசிக்கொண்டிருந்தவனும், தீச்செயல்கள் புரிபவனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அங்கே அவரின் {வியாசரின்} அருகில் அமர்ந்திருப்பதையும் கண்டான்.(15)

வலிமைக்கக் கரங்களைக் கொண்ட குந்தியின் மகன் பீமசேனன், அஸ்வத்தாமனை நோக்கி விரைந்து, கணை பொருத்தப்பட்ட தன் வில்லை எடுத்து, "நில், நிற்பாயாக" என்றான்.(16) கையில் வில்லுடன் தன்னை நோக்கி வரும் அந்தப் பயங்கர வில்லாளியையும் {பீமனையும்}, ஜனார்த்தனனின் {கிருஷ்ணனின்} தேரிலிருந்த அவனது சகோதரர்கள் இருவரையும் {யுதிஷ்டிரன் மற்றும் அர்ஜுனனையும்} கண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்},(17) மிகுந்த கலக்கத்தை அடைந்து, தன் நேரம் வந்ததென நினைத்தான். தளர்வடையா ஆன்மா கொண்ட அவன் {அஸ்வத்தாமன்}, (தன் தந்தையிடம் இருந்து தான் அடைந்த) அந்த உயர்ந்த ஆயுதத்தை {பிரம்மசிரத்தை} தன் மனத்தில் அழைத்தான்.(18) பிறகு அவன் {அஸ்வத்தாமன்}, தன் இடக்கையால் ஒரு புல்லை {சீழ்கீர்க்கையை {நாணற்புல்லை}} எடுத்தான். 

பெரும்துன்பத்தில் வீழ்ந்த அவன் {அஸ்வத்தாமன்}, அந்தப் புல்லை உரிய மந்திரங்களுடன் ஈர்த்து, அதைப் பலமிக்க அந்தத் தெய்வீக ஆயுதமாக {பிரம்மசிரமாக} மாற்றினான்.(19) (பாண்டவர்களின்) கணைகளையும், தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட அவர்களையும் {பாண்டவர்களையும்} காணப்பொறுக்காத அவன் {அஸ்வத்தாமன்}, கோபத்தால், "பாண்டவர்களின் அழிவுக்காக" என்ற இந்தப் பயங்கரமான வார்த்தைகளைச் சொன்னான்.(20) ஓ! மன்னர்களில் புலியே {ஜனமேஜயா}, துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்} இவ்வார்த்தைகளைச் சொல்லி, அனைத்துலகங்களும் திகைக்கும் வகையில் அவ்வாயுதத்தை ஏவினான்.(21) யுகத்தின் முடிவில் அனைத்தையும் அழிக்கும் யமனைப் போல, மூவுலகங்களையும் எரிக்கவல்லதாகத் தெரிந்த அந்தப் புல்லில் இருந்து நெருப்புண்டானது" {என்றார் வைசம்பாயனர்}.(22)

சௌப்திக பர்வம் பகுதி – 13ல் உள்ள சுலோகங்கள் : 22

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்