Sunday, October 08, 2017

பிராயத்தில் அமர்ந்த திரௌபதி! - சௌப்திக பர்வம் பகுதி – 11

Draupadi sat on praya! | Sauptika-Parva-Section-11 | Mahabharata In Tamil

(ஐஷீக பர்வம் - 02)


பதிவின் சுருக்கம் : திரௌபதியை யுதிஷ்டிரனிடம் அழைத்து வந்த நகுலன்; மயக்கமடைந்த திரௌபதி; அஸ்வத்தாமனைப் பாண்டவர்கள் கொல்லவில்லையெனில் பிராயத்தில் அமரப்போவதாகத் தீர்மானித்த திரௌபதி; அவளுக்கு ஆறுதல் சொன்ன யுதிஷ்டிரன்; அஸ்வத்தாமனைக் கொன்று அவனுடைய தலையிலுள்ள மணியைக் கொண்டு வரச் சொன்ன திரௌபதி; நகுலனைச் சாரதியாகக் கொண்டு அஸ்வத்தாமனைக் கொல்லப் புறப்பட்ட பீமன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஜனமேஜயா, போரில் தனது மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கொல்லப்பட்டதைக் கண்ட மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆன்மா பெருந்துயரில் மூழ்கியது.(1) அந்த மகன்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் கூட்டாளிகளை நினைத்துப் பார்த்ததும் அந்தச் சிறப்புமிக்க ஏகாதிபதியை ஆழமான சோகம் ஆட்கொண்டது.(2) உணர்வற்று நடுங்கிக் கொண்டிருந்த அவனுடைய கண்கள் கண்ணீரால் குளித்தன. அப்போது அவனது நண்பர்களும் கவலையில் மூழ்கியிருந்தாலும், அவனுக்கு ஆறுதல் சொல்லத் தொடங்கினர்.(3) அந்நேரத்தில் {தன் அண்ணனின்} குற்றேவல்களை நிறைவேற்றுவதில் திறம் கொண்டவனான நகுலன், பெரும் துயரில் இருந்த இளவரசி கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்}, சூரியப் பிரகாசம் கொண்ட தனது தேரில் அங்கே வந்து சேர்ந்தான்.(4) 


அவள் {திரௌபதி இதுவரை} உபப்லாவ்யத்தில் வசித்திருந்தாள். அவள் {திரொபதி}, தன் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்ற இதயம் பிளக்கும் செய்தியைக் கேட்டு மிகவும் கலக்கமடைந்திருந்தாள்.(5) காற்றால் அசைக்கப்பட்ட வாழையைப் போல நடுங்கிய அந்த இளவரசி கிருஷ்ணை {திரௌபதி}, யுதிஷ்டிரனின் முன்னிலைக்கு வந்து, துயரால் பீடிக்கப்பட்டுக் கீழே விழுந்தாள்.(6) முற்றாக மலர்ந்த இரு தாமரைகளுக்கு ஒப்பான கண்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவளது முகம், இருளால் மூடப்பட்ட சூரியனைப் போலத் துயரால் கறுத்திருந்தது.(7) கோபம் நிறைந்தவனும், கலங்கடிக்க முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான விருகோதரன் {பீமன்}, பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் அவளைக் {திரௌபதியைக்} கண்டு வேகமாகச் சென்று, அவளை உயர்த்தி {எழச் செய்து}, தன் கரங்களால் அவளை {ஆறுதலாகப்} பிடித்துக் கொண்டான்.(8)

பீமசேனனால் ஆறுதலளிக்கபட்ட அந்த அழகிய மங்கை {திரௌபதி} அழத் தொடங்கி, தன் சகோதரர்களுடன் கூடியவனான பாண்டு மகன்களில் மூத்தவனிடம் {யுதிஷ்டிரனிடம்},(9) "ஓ! ஏகாதிபதி, க்ஷத்திரியக் கடமைகளை நோற்ற உமது துணிச்சல்மிக்க மகன்களின் படுகொலைக்குப் பின்பு, நீர் மொத்த பூமியையும் அடைந்து அதை {பூமியை} அனுபவிக்கப் போவது நற்பேற்றாலேயே.(10) ஓ@ பிருதையின் {குந்தியின்} மைந்தரே {யுதிஷ்டிரரே}, மொத்த பூமியையும் அடைந்துவிட்டோம் என்ற நினைப்பில் நீர் மகிழ்ச்சியாக இருப்பதும் நற்பேற்றாலேயே. மதங்கொண்ட யானைக்கு ஒப்பான நடையைக் கொண்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு} குறித்து நீர் சிந்திக்காததும் நற்பேற்றாலேயே. உபப்லாவ்யத்தில் வசித்த என்னைப் போலல்லாமல், க்ஷத்திரியக் கடமைகளை நோற்றுக் கொல்லப்பட்ட உமது வீர மகன்களை நீர் எண்ணாதிருப்பதும் நற்பேற்றாலேயே.(12) ஓ! பிருதையின் மைந்தரே, உறங்கிக் கொண்டிருந்த அந்த வீரர்கள், பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவனான துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} படுகொலை செய்யப்பட்டதைக் கேட்டு, ஏதோ நெருப்பின் மத்தியில் இருப்பவளைப் போல, துயரம் என்னை எரித்துக் கொண்டிருக்கிறது.(13) போரில் உமது ஆற்றலை வெளிப்படுத்தி, பாவச் செயல்கள் புரியும் அந்த இழிந்தவன் {அஸ்வத்தாமன்} மற்றும் அவனது தொண்டர்கள் அனைவரின் உயிர்களையும் நீர் எடுக்காமல், அந்தத் துரோணர் மகனைத் தனது பாவச்செயலுக்கான கனியை அறுவடை செய்ய வைக்காமல் இருந்தால், பாண்டவர்களே, கேளுங்கள், நான் இங்கே பிராயத்தில் அமரப் போகிறேன்" என்றாள் {திரௌபதி}.(14,15)

யக்ஞசேனன் மகளும், ஆதரவற்றவளுமான கிருஷ்ணை {திரௌபதி}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, பாண்டு மகனில் மூத்தவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனின் அருகில் அமர்ந்தாள்.(16) நீதிமிக்க ஆன்மா கொண்டவனான அரசமுனி யுதிஷ்டிரன், தன் அன்புக்குரிய ராணி {திரௌபதி} பிராயத்தில் அமர்வதைக் கண்டு, அவளிடம், "ஓ! மங்கலமான பெண்ணே {கல்யாணி}, ஓ! அறநெறிகளை அறிந்தவளே, உன் மகன்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உன்னதமான இறப்பை நேர்மையாகச் {க்ஷத்திரிய முறைக்கேற்ப} சந்தித்தனர். அவர்களுக்காக நீ வருந்துவது தகாது.(17,18) ஓ! அழகிய இளவரசி, துரோணர் மகனைப் பொறுத்தவரை, அவர் தொலைதூரக் காட்டுக்குச் சென்றுவிட்டார். ஓ! பெண்ணே, போரில் அவருடைய வீழ்ச்சியை உன்னால் எவ்வாறு உறுதிசெய்ய முடியும்?" என்று கேட்டான்.(19)

திரௌபதி {யுதிஷ்டிரனிடம்}, "துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் தலையில் ஒரு ரத்தினத்துடனேயே {மணியுடனே} பிறந்தான் என நான் கேட்டிருக்கிறேன். போரில் அந்த இழிந்தவனைக் கொன்ற பிறகு, என்னிடம் கொண்டு வரப்படும் அந்த ரத்தினத்தை {மணியை} நான் காண்பேன். ஓ மன்னா, அந்த ரத்தினத்தை உமது தலையில் சூட்டிய பிறகே நான் என் உயிரைத் தாங்கிக் கொள்ளவேன். இதுவே எனது தீர்மானம்" என்று பதிலுரைத்தாள்.(20)

பாண்டுவின் அரசமகனிடம் {யுதிஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, பீமசேனனை அணுகி, உயர்ந்த நோக்கம் கொண்ட இந்த வார்த்தைகளை அவனிடம் {பீமனிடம்} சொன்னாள்:(21) "ஓ! பீமரே, க்ஷத்திரியக் கடமைகளை நினைவுகூர்ந்து, நீர் என்னைக் காப்பதே உமக்குத் தகும். சம்பரனைக் கொன்ற மகவத்தை {இந்திரனைப்} போல, பாவச்செயல்களைச் செய்யும் அம்மனிதனை {அஸ்வத்தாமனைக்} கொல்வீராக.(22) இவ்வுலகில் உமது ஆற்றலுக்கு இணையானவர்கள் வேறு எவரும் இல்லை. வாரணாவத நகரில் பேரிடர் நேர்ந்த சமயத்தில் நீர் எவ்வாறு பார்த்தர்கள் அனைவரின் புகலிடமாக இருந்தீர் என்பது உலகம் முழுவதும் நன்றாக அறியப்பட்டிருக்கிறது.(23) மேலும் ஹிடிம்பனால் நாம் பார்க்கப்பட்டபோதும்,[1] அதே வழியில் நீரே எங்கள் புகலிடமானீர்.(24) மகவத் {இந்திரன்} (தன் மனைவியான) புலோமனின் மகளை {பௌலோமி [அ] சச்சியைக்] காத்தது போலவே, விராட நகரத்தில் நீர் என்னைப் பேரிடரில் {கீசகனிடம்} இருந்து காத்தீர்[1].(25) ஓ! பார்த்தரே {பீமரே}, ஓ! எதிரிகளைக் கொல்பவரே, முன் நாட்களில் நீர் அடைந்த அந்தப் பெரும் சாதனைகளைப் போலவே, இப்போது துரோணர் மகனை {அஸ்வத்தாமனைக்} கொன்று மகிழ்ச்சியடைவீராக" {என்றாள் திரௌபதி}.(26)

[1] திரௌபதி இங்கே தன்னையும் சேர்த்துச் சொல்வதாகப் பொருள்படுகிறது. ஆனால், ஹிடிம்பவதத்தின் போது திரௌபதியின் சுயம்வரமே நடந்திருக்கவில்லை. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், கங்குலியில் உள்ளதைப் போலவே திரௌபதி தன்னையும் சேர்த்து சொல்வது போலவே இவ்வாக்கியம் அமைந்திருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நாம் ஹிடிம்பனைக் கண்டபோது, நீரே மீண்டும் புகலிடமானீர்" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பிலோ, "அவ்வாறே ஹிடிம்பனைக் கண்ட ஸமயத்திலும் நீர் பார்த்தர்களுக்கு ரக்ஷகரானீர்" என்ற வரிகளில் திரௌபதி தன்னையும் சேர்த்து சொல்வது போலத் தெரியவில்லை.

பெரும் வலிமைமிக்கவனும், குந்தியின் மகனுமான பீமசேனனால், அந்த இளவரசியின் {திரௌபதியின்} இவ்வார்த்தைகளையும், பரிதாபகரமான இன்னும் வேறு புலம்பல்களையும் கேட்டுப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(27) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் பெருந்தேரில் ஏறிய அவன் {பீமன்}, நாண்கயிற்றில் கணை பொருத்தப்பட்ட தன் அழகிய வில்லையும் எடுத்துக் கொண்டான்.(28) நகுலனைத் தன் தேரோட்டியாகச் செய்து கொண்டும், துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} கொல்லும் தீர்மானத்துடனும், தன் வில்லை வளைக்கத் தொடங்கி, தாமதமில்லாமல் தன் குதிரைகளைத் தூண்டச் செய்தான்.(29) ஓ! மனிதர்களில் புலியே, காற்றின் வேகத்தைக் கொண்ட அக்குதிரைகள் இவ்வாறு தூண்டப்பட்டுப் பெரும் வேகத்தில் சென்றன.(30) பெரும் வீரமும், மங்காத சக்தியும் கொண்ட பீமன், பாண்டவ முகாமில் இருந்து புறப்பட்டு, அஸ்வத்தாமனின் வாகனத்தடத்தைப் பின்தொடர்ந்தபடியே பெரும் வேகத்தில் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(31)

சௌப்திக பர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 31

[1] நான்காம் பர்வமான விராட பர்வத்தில் வரும் உபபர்வமான கீசகவதப் பர்வத்தில் 

http://mahabharatham.arasan.info/2014/11/Mahabharatha-Virataparva-Section21.html


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்