Sunday, October 08, 2017

ஆயுதத்தைத் திருப்ப முடியாத அஸ்வத்தாமன்! - சௌப்திக பர்வம் பகுதி – 15

Aswatthama unable to withdraw the weapon! | Sauptika-Parva-Section-15 | Mahabharata In Tamil

(ஐஷீக பர்வம் - 06)


பதிவின் சுருக்கம் : தன் ஆயுதத்தை விலக்கித் திருப்பிக் கொண்ட அர்ஜுனன்; தன் ஆயுதத்தை விலக்கிக் கொள்ள முடியாத அஸ்வத்தாமன், அதைப் பாண்டவப் பெண்களின் கருவறையை நோக்கிச் செலுத்துவது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மனிதர்களில் புலியே, நெருப்பைப் போன்ற காந்தியைக் கொண்ட அவ்விரு முனிவர்களையும் கண்டவுடனேயே, தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் தெய்வீகக் கணையைத் திரும்பிப் பெறத் தீர்மானித்தான்.(1) கரங்களைக் கூப்பிக் கொண்ட அவன், அம்முனிவர்களிடம், "நான் இவ்வாயுதத்தைப் பயன்படுத்தும் போது, "(எதிரியின்) அந்த ஆயுதம் தணிவடையட்டும்" என்று சொல்லியே ஏவினேன்.(2) நான் இந்த உயர்ந்த ஆயுதத்தைத் திரும்பப் பெற்றால், பாவம் நிறைந்த செயல்களைச் செய்யும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, தன் ஆயுதத்தின் சக்தியால் எங்கள் அனைவரையும் எரித்துவிடுவார் என்பதில் ஐயமில்லை.(3) நீங்கள் இருவரும் தேவர்களைப் போன்றவர்களாவீர். எங்கள் நன்மையையும், மூன்று உலகங்களின் நன்மையையும் பாதுகாக்கும்படியான ஏதாவது வழிமுறையை ஆலோசிப்பதே உங்களுக்குத் தகும்" என்றான்.(4)


இந்த வார்த்தைகளைச் சொன்ன தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் ஆயுதத்தைத் திருப்பிக் கொண்டான். போரில் அவ்வாயுதத்தைத் திருப்புவது தேவர்களுக்கே மிகக் கடினமான செயலாகும்.(5) ஒரு முறை ஏவப்பட்ட அந்த உயர்ந்த ஆயுதத்தைப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} தவிர, மஹேந்திரனாலும் திருப்பமுடியாது.(6) அவ்வாயுதம் பிரம்ம சக்தியில் பிறந்ததாகும். தூய்மையற்ற ஆன்மா கொண்ட எந்த மனிதனாலும் அதைத் திருப்ப முடியாது. பிரம்மச்சரிய வாழ்வுமுறையை நோற்கும் ஒருவனால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.(7) பிரம்மச்சரிய நோன்பைப் பயிலாத ஒருவன், அஃதை ஏவிய பிறகு மீண்டும் திருப்பினால், அனைத்துக் கருவிகளுடன் சேர்த்து, அவனுடைய {ஏவியவனின்} தலையையும் அது தாக்கி வீழ்த்தும்.(8) அர்ஜுனன் ஒரு பிரம்மச்சாரியும், நோன்புகளை நோற்பவனுமாவான். கிட்டத்தட்ட அடையமுடியாத ஆயுதத்தை அடைந்த அவன் {அர்ஜுனன்}, பெரும் ஆபத்தான சூழ்நிலையில் மூழ்கியிருந்தபோதும், ஒருபோதும் அதைப் பயன்படுத்தவில்லை.(9) உண்மை நோன்பை நோற்பவனும், பெரும் வீரம் கொண்டவனும், பிரம்மச்சாரியின் வாழ்வுமுறையை நோற்பவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பணிவுடையவனாகவும், பெரியோர் அனைவருக்கும் கீழ்ப்படிந்தவனாகவும் இருந்தான். இதன் காரணமாகவே அவனால் அவ்வாயுதத்தைத் திருப்பிக் கொள்ள முடிந்தது.(11)

ஆனால் துரோணரின் மகனோ {அஸ்வத்தாமனோ}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த உயர்ந்த ஆயுதத்தைப் போரில் திரும்பப் பெற முடியாமல், தீவில் பிறந்தவரான முனிவரிடம் {வியாசரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(12) "ஓ! தவசியே, பேராபத்தால் அச்சமடைந்தும், என் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பியும், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகவும் நான் இந்த ஆயுதத்தை ஏவினேன்.(13) ஓ! புனிதமானவரே {வியாசரே}, பொய் நடத்தை கொண்ட இந்தப் பீமசேனன், போரில் திருதராஷ்டிரர் மகனைக் {துரியோதனனைக்} கொன்றபோது பாவம் நிறைந்த செயலைச் செய்தான்.(14) ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, அதன் காரணமாகவே தூய்மையற்ற ஆன்மா கொண்டவனான நான் இந்த ஆயுதத்தை ஏவினேன். எனினும், இப்போது இதை நான் திரும்பப் பெறத் துணிய மாட்டேன்.(15) பாண்டவர்களின் அழிவுக்காகவே, தடுத்தற்கரிய இந்தத் தெய்வீக ஆயுதத்தை நெருப்பின் சக்தியால் ஈர்த்து நான் ஏவினேன்.(16) பாண்டவர்களின் அழிவுக்காகத் திட்டமிட்டு ஏவப்பட்டதே இந்த ஆயுதம். எனவே, அது பாண்டு மகன்கள் அனைவரின் உயிரையும் எடுக்கும்.(17) ஓ! மறுபிறப்பாளரே, கோபத்தால் நான் இந்தப் பாவம் நிறைந்த செயலைச் செய்துவிட்டேன். பாண்டவர்களின் அழிவுக்காகவே போரில் நான் இவ்வாயுதத்தை இருப்புக்கு அழைத்தேன்" என்றான் {அஸ்வத்தாமன்}.(18)

வியாசர் {அஸ்வத்தாமனிடம்}, "ஓ! குழந்தாய் {அஸ்வத்தாமா}, பிருதையின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதத்தை அறிந்தவனாவான். கோபத்தாலோ, போரில் உன்னை அழிக்கவோ அவன் அந்த ஆயுதத்தை ஏவவில்லை.(19) மறுபுறம், உன் ஆயுதத்தைக் கலங்கடிக்கவே அவன் அதைப் பயன்படுதிதனான். மேலும் அவன் {அர்ஜுனன்} அதைத் திரும்பவும் பெற்றான்.(20) உன் தந்தை கற்பித்ததன் மூலம் பிரம்ம ஆயுதத்தையே அடைந்தும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிடவில்லை.(21) அர்ஜுனன் அந்த அளவுக்குப் பொறுமையும், அந்த அளவுக்கு நேர்மையும் கொண்டிருக்கிறான். மேலும் அவன் அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவனாவான். அப்படிப்பட்ட ஒரு மனிதனை, அவனது சகோதரர்களுடன் சேர்த்து அழிக்க நீ ஏன் முயல்கிறாய்?(22) பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதமானது எந்த இடத்தில் வைத்து, மற்றொரு உயர்ந்த ஆயுதத்தால் கலங்கடிக்கப்படுமோ, அந்த இடத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு சொட்டு நீரையும் மேகங்கள் பொழியாது. அக்காலத்தில் அங்கே பஞ்சமேற்படும்.(23)

இக்காரணத்திற்காகவே, சக்தியைக் கொண்டவனாகவே இருந்தாலும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான இந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, வாழும் உயிரினங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் உனது ஆயுதத்தை அவனது ஆயுதத்தால் கலங்கடிக்கவில்லை.(24) பாண்டவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; நீயும் பாதுகாக்கப்பட வேண்டும்; இந்த நாடும் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இந்த உனது தெய்வீக ஆயுதத்தைத் திரும்ப அழைப்பாயாக.(25) உன் இதயத்தில் இருந்து இந்தக் கோபத்தை அகற்றி, பாண்டவர்களைப் பாதுகாப்பாக இருக்கச் செய்வாயாக. அரச முனியான யுதிஷ்டிரன், பாவம் நிறைந்த எச்செயலையும் செய்து வெற்றியடைய ஒருபோதும் விரும்பமாட்டான்[1].(26) உன் தலையில் இருக்கும் அந்த மணியைக் கொடுப்பாயாக. பாண்டவர்கள் அதை {மணியை} எடுத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக உனக்கு உன் உயிரைத் தருவார்கள்" என்றார் {வியாசர்}.(27)

[1] "யுதிஷ்டிரன் உன்னைக் கொன்று ஆட்சி செய்ய மாட்டான் என்று இதற்குப் பொருள் என நான் நினைக்கிறேன்" என்று கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ராஜரிஷியான பாண்டவன் அதர்மத்தினால் வெல்வதற்கு விரும்பவில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அரசமுனியான பாண்டவன், அதர்மத்தின் மூலம் வெல்லவிரும்பவில்லை" என்றிருக்கிறது.

துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, "பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இதுவரை ஈட்டியிருக்கும் செல்வங்கள் அனைத்தையும் விட இந்த எனது மணி விலைமதிப்புமிக்கதாகும். இந்த மணியைச் சூடியவனுக்கு ஆயுதங்கள், நோய் மற்றும் பசி ஆகியவற்றிடமிருந்து எப்போதும் அச்சமேற்படாது. தேவர்கள், தானவர்கள் மற்றும் நாகர்களிடம் அவன் அச்சங்கொள்ளத் தேவையில்லை.(29) ராட்சசர்கள் மற்றும் கள்வர்களிடமும் அவன் அச்சங்கொள்ள மாட்டான். எவ்வழியிலும் நான் அதைப் பிரிந்திருக்க முடியாது.(30) இருப்பினும், ஓ! புனிதமானவரே, நீர் எதைச் செய்யச் சொல்கிறீரோ அஃது என்னால் செய்யப்பட வேண்டும். இதோ எனது மணி. இதோ நான். எனினும், (மரண ஆயுதத்தால் ஈர்க்கப்பட்டிருக்கும்) இப்புல்லானது,(31) உயர்வானதும், வலிமைமிக்கதும், கலங்கடிக்கப்பட முடியாத ஆயுதமாகவும் இருப்பதால், இது பாண்டவப் பெண்களின் கருவறைகளில் பாயும். ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே- வியாசரே}, இவ்வாயுதத்தை ஒருமுறை ஏவியபிறகு என்னால் திரும்பப் பெற முடியாது.(32) நான் இப்போது இந்த ஆயுதத்தைப் பாண்டவப் பெண்களின் கருவறைகளில் வீசப் போகிறேன். ஓ! புனிதமானவரே, உமது ஆணைகளைப் பொறுத்தவரையில், வேறு விதங்களில் நான் அவற்றுக்கு நிச்சயம் கீழ்ப்படிவேன்" என்றான் {அஸ்வத்தாமன்}.(33)

வியாசர், "இவ்வாறே செய். எனினும், ஓ! பாவமற்றவனே, வேறு எந்த நோக்கத்திலும் புத்தியைச் செலுத்தாதே. இவ்வாயுதத்தைப் பாண்டவப் பெண்களின் கருவறைகளில் வீசி ஒழிவடைவாயாக {அனைத்தையும் நிறுத்துவாயாக}" என்றார்".(34)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தீவில் பிறந்தவரின் {துவைபாயனரான வியாசரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட துரோணரின் மகன், அந்த ஆயுதத்தைப் பாண்டவப் பெண்களின் கருவறைகளில் வீசினான்".(36)

சௌப்திக பர்வம் பகுதி – 15ல் உள்ள சுலோகங்கள் : 36

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்