Monday, October 09, 2017

பிரம்மனால் படைக்கப்பட்ட மற்றொரு படைப்பாளன்! - சௌப்திக பர்வம் பகுதி – 17

Brahma invoked another creator! | Sauptika-Parva-Section-17 | Mahabharata In Tamil

(ஐஷீக பர்வம் - 08)


பதிவின் சுருக்கம் : தனியொருவனாக இருந்து கொண்டு அஸ்வத்தாமனால் பலரை எவ்வாறு கொல்ல முடிந்தது என்று கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷடிரன்; மஹாதேவனின் மகிமை குறித்துச் சொல்லத் தொடங்கிய கிருஷ்ணன்; உயிரினங்களைப் படைக்குமாறு சிவனிடம் சொன்ன பிரம்மன்; சிவன் தவம் செய்தது; அந்நேரத்தில் மற்றொருவனை உண்டாக்கி உயிரினங்களைப் படைக்கச் செய்த பிரம்மன்; தவம் நிறைந்து திரும்பிய சிவன் கோபம் கொண்டு மஞ்சவான் மலைக்குச் சென்றது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "உறங்கும் வேளையில், அந்த மூன்று தேர்வீரர்களால் துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்ட பிறகு, பெருந்துயரில் இருந்த யுதிஷ்டிரன், தசார்ஹ குலோத்தனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1) "ஓ! கிருஷ்ணா, பாவம் நிறைந்தவரும், இழிந்தவரும், போரில் பெருந்திறமற்றவருமான அஸ்வத்தாமரால் வலிமைமிக்கத் தேர்வீரர்களான என் மகன்கள் அனைவரையும் எவ்வாறு கொல்ல முடிந்தது?(2) அதே போலவே, ஆயுதங்களில் சாதித்தவர்களும், பேராற்றல் கொண்டவர்களும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எதிரிகளுடன் போரிட வல்லவர்களுமான துருபதன் பிள்ளைகள் அனைவரையும் அந்தத் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமரால்} எவ்வாறு கொல்ல முடிந்தது?(3) எவனுடைய முன்பு, பெரும் வில்லாளியான துரோணராலேயே தோன்ற முடியாதோ அந்த முதன்மையான தேர்வீரனான திருஷ்டத்யும்னனை அவரால் எவ்வாறு கொல்ல முடிந்தது?(4) ஓ! மனிதர்களில் காளையே, போரில் நம் மக்கள் அனைவரையும் தனியொருவராகக் கொல்லவதற்கு அந்த ஆசான் மகனால் {அஸ்வத்தாமரால்} என்ன காரியம் செய்யப்பட்டது?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(5)


அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, "உண்மையில், அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, தேவர்கள் அனைவரிலும் உயர்ந்தவனும், நித்தியமானவனுமான மஹாதேவனின் உதவியை நாடினார். இதன் காரணமாகவே, இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான போர்வீரர்களைத் தனியொருவராக அவரால் கொல்ல முடிந்தது.(6) மஹாதேவன் நிறைவுகொண்டால், அவனால் அழிவின்மையையும் {மரணமில்லா பெருவாழ்வை} அளிக்க முடியும். கிரிசனால் {சிவனால்} இந்திரனையே தடுக்குமளவுக்குப் பெரும் வீரத்தை அளிக்க முடியும்.(7) ஓ! பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நான் உண்மையில் மஹாதேவனை {உள்ளபடியே} அறிவேன். பழங்காலத்தில் அவன் செய்த பல்வேறு செயல்களையும் நான் அறிவேன்.(8) ஓ! பாரதரே, அவனே உயிரினங்கள் அனைத்தின் தொடக்கமும், நடுவும், முடிவும் ஆவான். இந்த மொத்த அண்டமே அவனது சக்தியின் மூலமே இயங்கி அசைகிறது.(9)

பலமிக்கப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, உயிரினங்களைப் படைக்க விரும்பி ருத்திரனைக் கண்டான்; அந்தப் பெரும்பாட்டன் அவனிடம், "தாமதமில்லாமல் உயிரினங்களைப் படைப்பாயாக" என்றான்.(10) இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்ட செஞ்சடை ருத்திரன் {சிவன்}, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, நீரில் மூழ்கி, உயிரினங்களின் குறைகளை உணரும் வரை நீண்ட காலத்திற்குத் தவம் பயின்றான்.(11) ருத்திரனை எதிர்பார்த்து மிக நீண்ட காலம் காத்திருந்த பெரும்பாட்டன் {பிரம்மன்}, தன் விருப்பத்தின்படியான ஆணையொன்றால் அனைத்து வகை உயிரினங்களின் படைப்பாளனாக வேறொருவனை இருப்புக்கு அழைத்தான்.(12) நீருக்குள் மூழ்கியிருக்கும் கிரிசனை {சிவனைக்} கண்ட அவன் {இரண்டாமவன்}, தன் தந்தையிடம், "எனக்கு முன்பு எந்த உயிரினமும் பிறக்கவில்லையென்றால் நான் உயிரினங்களைப் படைப்பேன்" என்றான்.(13) அதற்கு அவனது தந்தை, அவனிடம், "உன்னைத் தவிர்த்து முதலில் பிறந்த வேறொருவனும் இல்லை. இந்த ஸ்தாணு, நீரில் மூழ்கியிருக்கிறான். எந்தக் கவலையுமின்றிச் சென்று உயிரினங்களைப் படைப்பாயாக" என்றான்.(14) அவன் {இரண்டாமவன்}, இந்த நால்வகை உயிரினங்கள் அனைத்தையும் படைத்த தக்ஷனை முதலாகக் கொண்ட உயிரினங்கள் பலவற்றைப் படைத்தான்.(15)

எனினும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அவர்கள் படைக்கப்பட்ட உடனேயே பசியால் பீடிக்கப்பட்டு, தங்கள் தந்தையையே உண்ண விரும்பி அவனை நோக்கி ஓடினர்.(16) அதன் பேரில் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட அந்த இரண்டாமவன், தன் வாரிசுகளிடம் இருந்து பாதுகாக்கப்பட விரும்பி, அவனை {பிரம்மனை} நோக்கி ஓடினான். அவன் அந்தப் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்}, "ஓ! சிறப்புமிக்கவரே, இவர்களிடம் இருந்து என்னைப் பாதுகாப்பீராக, இந்த உயிரினங்களுக்கு நிர்ணயிக்கப்படும் உணவை அவர்கள் உண்ணட்டும்" என்றான்.(17) அப்போது பெரும்பாட்டன், செடிகொடிகளையும், காய்கறிகளையும் அவர்களது உணவாக நிர்ணயித்து, பலமிக்கவர்களுக்கு {பலமிக்க உயிரினங்களின்} வாழ்வாதாரமாக {உணவாக} பலவீனர்களை {பலமற்ற உயிரினங்களை} நிர்ணயித்தான்.(18) புதிதாகப் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் இவ்வாறு தங்களுக்கு ஊட்டப்பண்பு {வாழ்வாதாரம்} நிர்ணயிக்கப்பட்டதும், தங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று, மகிழ்ச்சியுடன் தங்கள் தங்கள் வகைக்கான இனங்களுடன் கூடி {புணர்ந்து} பெருகினர்.(19) அந்த உயிரினங்கள் பெருகி, பெரும்பாட்டனும் நிறைவடைந்ததும், முதலில் பிறந்தவன் நீரில் இருந்து எழுந்து, உயிரோட்டத்துடன் கூடிய படைப்பைக் கண்டான்.(20)

அவன் {ருத்திரன்}, பல்வேறு வகை உயிரினங்கள் படைக்கப்பட்டுவிட்டதையும், அவை தங்கள் சக்தியாலேயே பல்கி பெருகிவிட்டதையும் கண்டான். இக்காட்சியால் கோபமடைந்த ருத்திரன், தன் பிறப்புறுப்பை {லிங்கத்தைப்} பூமியின் குடல்களுக்குள் மறையும்படி செய்தான். மங்காதவனான பிரம்மன் அவனிடம் மென்மையான வார்த்தைகளில்,(21,22) "ஓ! சர்வா, இவ்வளவு காலம் நீருக்குள் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? என்ன காரணத்தினால் உனது பிறப்புறுப்பை {லிங்கத்தை} பூமியின் குடல்களுக்குள் காணாமல் போகச் செய்தாய்?" என்று கேட்டான்.(23) இவ்வாறு கேட்கப்பட்ட அந்த அண்டத்தின் தலைவன் {சிவன்}, கோபத்துடன் தலைவன் பிரம்மனிடம், "இந்த உயிரினங்கள் அனைத்தையும் வேறு எவனோ படைத்திருக்கிறான். பிறகு இந்த என் அங்கமானது என்ன நோக்கத்தை நிறைவேற்றப் போகிறது?[1](24) ஓ! பெரும்பாட்டனே, கடுந்தவத்தின் மூலம் நான் இந்த உயிரினங்கள் அனைத்திற்கான உணவைப் படைத்திருக்கிறேன். இந்தச் செடிகொடிகளும், அவற்றை உண்டு உயிர்வாழ்வோரைப் போலவே பல்கிப் பெருகும்" என்றான்.(25)

[1] "உணவும், உயிரினங்களும் இவ்வாறு விதிக்கப்பட்ட பிறகு, இனியும் படைப்பு கொள்கைக்கான தேவையில்லை என்பது இங்கே பொருளாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மூத்தவரான அந்த ஸ்தாணுவானவர் ஜலத்தினின்று எழுந்தார்; இந்திப் பிரஜைகளையும் கண்டார். ஸ்ருஷ்டிக்கப்பட்டவைகளும் தம் தேஜஸினால் விருத்தி அடைந்திருப்பவைகளுமான பற்பலரூபமுள்ள பிரஜைகளைக் கண்டு அதிகக் கோபங்கொண்டார். தம்முடைய லிங்கத்தையும் பூமியில் விழும்படி செய்தார். அவ்வாறு வீழ்த்தப்பட்ட அந்த லிங்கமானது பூமியில் அப்படியே நேரில் நின்றது. அழிவற்றவரான பிரம்மதேவர் நல்ல வசனங்களால் போகத்தைத் தணிக்கின்றவரான அந்த ஸ்தாணுவைப் பார்த்து, "சர்வரே, ஜலத்தில் நெடுங்காலமாக இருந்த உம்மால் என்ன காரியம் செய்யப்பட்டது? என்ன காரணத்திற்காக இந்த லிங்கமானது அறுக்கப்பட்டுப் பூமியில் நாட்டப்பட்டது?" என்று வினவினர். லோககுருவான அந்த ஸ்தாணுவானவர் அவ்வாறு கோபமுள்ளவராகக் குருவான நான்முகரைப் பார்த்து, "வேறொருவனால் இந்தப் பிரஜைகள் படைக்கப்பட்டன. இந்த லிங்கத்தினால் என்ன செய்யப்போகிறேன்? பிதாமஹரே, பிரஜைகளின் பொருட்டு என்னுடைய தவத்தினால் அன்னம் அடையப்பட்டது. ஓஷதிகள் இவ்வண்ணம் எப்பொழுதும் உண்டாகி விருத்தியடைவதோடு பிரஜைகளுமாகப்போகின்றன" என்று மறுமொழி கூறினார்" என்றிருக்கிறது.

இந்த வார்த்தைகளைச் சொன்ன பவன், உற்சாகமற்றவனாகவும் கோபத்துடனும் மிகக் கடும் தங்களைப் பயில்வதற்காக {இமயமலைச் சாரலில் உள்ள} முஞ்சவான் மலைகளின் அடிவாரத்திற்குச் சென்றான்" {என்றான் கிருஷ்ணன்}.(26)

சௌப்திக பர்வம் பகுதி – 17ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்