Monday, October 09, 2017

ருத்திர உதவி! - சௌப்திக பர்வம் பகுதி – 18

The aid of Rudra! | Sauptika-Parva-Section-18 | Mahabharata In Tamil

(ஐஷீக பர்வம் - 09)


பதிவின் சுருக்கம் : கிருதயுக முடிவில் தேவர்கள் செய்த பெரும் வேள்வி; வேள்வியை அழித்த ருத்திரன்; ருத்திரனின் உதவியின் மூலம் வெற்றியை அடைந்த அஸ்வத்தாமன்...


அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, "கிருத யுகம் {தேவயுகம்} கடந்ததும், ஒரு வேள்வியைச் செய்ய விரும்பிய தேவர்கள், அதற்கு வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி முறையான ஆயத்தங்களைச் செய்தனர்.(1) தெளிந்த நெய்யையும், தேவைப்படும் வேறு பொருட்களையும் சேகரித்தனர். அவர்கள், தங்கள் வேள்விக்குத் தேவையான பொருட்கள் என்ன என்பதை மட்டும் திட்டமிடாமல், வேள்விக்கொடைகளில் தங்களுக்குச் சேர வேண்டிய பங்குகளைக் குறித்தும் தீர்மானித்துக் கொண்டனர்.(2) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உண்மையில் ருத்திரனை அறியாத தேவர்கள், அந்தத் தெய்வீக ஸ்தாணுவுக்கு எந்தப் பங்கையும் ஒதுக்கவில்லை.(3) மான்தோல் உடுத்துபவனான ஸ்தாணு, வேள்விக் கொடைகளில் தனக்கு எந்தப் பங்கையும் தேவர்கள் ஒதுக்காததைக் கண்டு, அந்த வேள்வியை அழிக்க விரும்பி, அந்நோக்கத்திற்காக ஒரு வில்லைக் கட்டமைத்தான்.(4) வேள்விகள், லோக வேள்வி, தனிச்சிறப்புகளடங்கிய சடங்குகளுடன் கூடிய வேள்வி {கிரியா வேள்வி}, அழிவில்லாத இல்லற வேள்வி {கிருஹ வேள்வி}, ஐந்து மூலகப் பொருட்கள் மற்றும் அவற்றின் சேர்மங்களில் இன்புற்று மனிதன் நிறைவை அடக்கிய வேள்வி {பஞ்சபந்ரு வேள்வி} என நான்கு வகை வேள்விகள் இருக்கின்றன. இந்த நால்வகை வேள்விகளின் மூலமே இந்த அண்டம் உதித்தது[1].(5)


[1] "இங்கே குறிப்பிடப்படும் நான்கு வகை வேள்விகளைக் குறித்த நீலகண்டரின் விளக்கம் பின்வருமாறு: "நல்லோரெனக் கருதப்படுவோரால் பேணி வளர்க்கப்படும் ஆசை என்பது லோக வேள்வியின் பொருளாகும்; தனிச்சிறப்புமிக்க வேளைகளில் செய்யப்படும் தனிச்சடங்குகள் என்பது கிரியா வேள்வியின் பொருளாகும்; அக்னி ஹோத்ரம் போன்று சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள அறச்சடங்குங்களைத் தினமும் செய்வது என்பது கிருஹய வேள்வியின் பொருளாகும்; இறுதியாக, ந்ரு வேள்வி என்பது ஒரு மனிதன் தன் வாழ்வில் தென்படும் பொருட்களை அனுபவித்து, அதன் மூலம் அடையும் மகிழ்ச்சியே அதன் பொருளாகும்" {இவ்வாறு நீலகண்டர் விளக்குகிறார்}. இந்த நால்வகை வேள்விகளைச் சார்ந்தோ, அவற்றின் மூலமோ எவ்வாறு அண்டம் உதிக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

முதல் மற்றும் நான்காம் வகை வேள்விகளின் பொருட்களைக் கொண்டு கபர்தின் {அடர்ச்சடையன் சிவன்} அந்த வில்லைக் கட்டமைத்தான். அந்த வில்லானது ஐந்து முழம்[2] நீளம் இருந்தது.(6) ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, புனித (மந்திரமான) வஷட்காரமே அதன் நாண்கயிறானது. வேள்வியின் நான்கு அங்கங்கள் அந்த வில்லின் அலங்காரங்களாகின.(7) பிறகு சினத்தால் நிறைந்த மஹாதேவன் அந்த வில்லை எடுத்துக் கொண்டு, தேவர்கள் வேள்வி செய்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றான். பிரம்மச்சாரியைப் போல உடுத்தியவனும், வில்லைத் தரித்திருந்தவனும் மங்காதவனுமான ருத்திரன் அங்கே வந்ததைக் கண்ட பூமாதேவி, அச்சத்தால் சுருங்கி, தன் மலைகளுடன் நடுங்கத் தொடங்கினாள்.(9) காற்று அசைவதை நிறுத்தியது, நெருப்பு மூட்டப்பட்டால் சுடர்விட்டெரியவில்லை. ஆகாயத்தின் நட்சத்திரங்கள் கவலையால் ஒழுங்கற்ற வழிகளில் திரியத் தொடங்கின.(10) சூரியனின் ஒளி குறைந்தது. சந்திரவட்டில் தன் அழகை இழந்தது. மொத்த ஆகாயமும் அடர்த்தியான இருளில் மூழ்கியது.(11)

[2] கும்பகோணம் பதிப்பில் இந்த வில்லானது 60 முழம் நீளம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் கங்குலியில் உள்ளதைப் போன்றே 5 முழ நீளம் என்றே சொல்லப்பட்டுள்ளது.

துயரில் மூழ்கிய தேவர்கள் என்ன செய்வது என்பதை அறியாதிருந்தனர். அவர்களது வேள்வி சுடர்விட்டெரிவது நின்றது. தேவர்கள் அனைவரும் பீதியடைந்தனர்.(12) அப்போது ருத்திரன், அந்த வேள்வியுடைய உடல்வடிவத்தின் இதயத்தைக் கடுங்கணையொன்றால் துளைத்தான். உடல் வடிவம் கொண்ட வேள்வியானது, மானின் வடிவத்தையேற்று, நெருப்பு தேவனுடன் {அக்னியுடன்} தப்பி ஓடியது.(13) அவ்வடிவில் சொர்க்கத்தை அடைந்த அவன் {வேள்வியானவன்} அழகால் சுடர்விட்டெரிந்தான். எனினும், ஓ! யுதிஷ்டிரரே, ருத்திரன் அவனை ஆகாயத்தில் பின்தொடர்ந்து சென்றான்.(14) வேள்வியானவன் தப்பி ஓடியபிறகு, தேவங்கள் தங்கள் ஒளியை இழந்தனர். தங்கள் உணர்வுகளை இழந்தவர்களான தேவர்கள் திகைப்படைந்திருந்தனர்.(15)

அப்போது முக்கண்ணனான மஹாதேவன், தன் வில்லைக் கொண்டு, சாவித்ரியின் கரங்களைச் சினத்தால் முறித்து, பகனின் கண்களையும், பூஷ்ணனின் {பூஷாவின்} பற்களையும் பிடுங்கினான்.(16) பிறகு தேவர்களும், அந்த வேள்வியின் பல்வேறு அங்கங்கள் அனைத்தும் தப்பி ஓடின. அவர்களில் சிலர் தப்பி ஓட முயலும்போது சுழன்று உணர்வுகளையற்றுக் கீழே விழுந்தனர்.(17) நீல மிடறு கொண்ட ருத்திரன் இவ்வாறு அவர்களைக் கலங்கடித்து, தன் வில்லின் நுனியைச் சுழற்றி அவர்களை முடக்கி உரக்கச் சிரித்தான்.(18) தேவர்கள் அப்போது பெருங்கூச்சலிட்டனர். அவர்களின் ஆணையின் பேரில் அந்த வில்லின் நாண்கயிறு அறுந்தது. நாண்கயிறு அறுந்ததும், அந்த வில்லானது ஒரு கோடாக நெடுக விரிந்தது.(19) பிறகு தேவர்கள், வில்லற்றவனாக இருந்த அந்தத் தேவர்களின் தேவனை {சிவனை}, {மான்வடிவில்} உடல் கொண்ட வேள்வியானவனுடன் அணுகி, அந்தப் பலமிக்க மஹாதேவனின் பாதுகாப்பை நாடி, அவனை நிறைவுகொள்ளச் செய்ய முயன்றனர்.(20)

நிறைவையடைந்த அந்தப் பெருந்தேவன் தன் கோபத்தை நீருக்குள் எறிந்தான். ஓ! மன்னா, அந்தக் கோபமானது நெருப்பின் வடிவத்தை ஏற்று, அந்த நீர்த்தனிமத்தை எரிப்பதிலேயே எப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.(21) பிறகு அவன் சாவித்ரிக்கு {சூரியனுக்கு} அவனது கரங்களையும், பகனுக்கு அவனது கண்களையும், பூஷ்ணனுக்கு {பூஷாவுக்கு} அவனது பற்களையும் மீண்டும் கொடுத்தான். ஓ! பாண்டவரே {யுதிஷ்டிரரே}, பிறகு அவன் வேள்விகளையும் மீண்டும் நிறுவினான்.(22) உலகமானது மீண்டும் பாதுகாப்பானதாகவும், நலமானதாகவும் மாறியது. தேவர்கள், அந்தப் பெருந்தெய்வத்தின் {சிவனின்} பங்காகத் தெளிந்த நெய்க்காணிக்கைகள் அனைத்தையும் ஒதுக்கினர்.(23) ஓ! ஏகாதிபதி, மஹாதேவன் கோபமடைந்த போது, மொத்த உலகமும் இவ்வாறே கலங்கியது; அவன் நிறைவடைந்தபோதோ அனைத்தும் பாதுகாப்பானவை ஆகின. பெருஞ்சக்தி கொண்ட அந்த மஹாதேவனே அஸ்வத்தாமரால் நிறைவுகொள்ளச் செய்யப்பட்டான்.(24) இதன் காரணமாகவே வலிமைமிக்க வில்லாளிகளான அந்த உமது மகன்களை அந்தப் போர்வீரரால் கொல்ல முடிந்தது. இதன் காரணமாகவே, பாஞ்சாலர்களையும், அவர்களது தொண்டர்கள் அனைவரையும் அவரால் கொல்லமுடிந்தது.(25) உமது மனத்தில் இவற்றை நினைக்காதீர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அக்காரியத்தைச் செயவில்லை. அது மஹாதேவனின் அருளாலேயே செய்யப்பட்டது. இப்போது அடுத்ததாகச் செய்ய வேண்டியதைச் செய்வீராக" என்றான் {கிருஷ்ணன்}" {என்றார் வைசம்பாயனர்}.(26)

*********ஐஷீக உபபர்வம் முற்றும்*********
*********சௌப்திக பர்வம் முற்றிற்று*********

சௌப்திக பர்வம் பகுதி – 18ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்