Friday, October 13, 2017

அரசக்குடும்பத்தை வழியில் சந்தித்த மூவர்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 11

Three heroes met the Royal family on the way! | Stri-Parva-Section-11 | Mahabharata In Tamil

(ஜலப்ரதானிக பர்வம் - 11) [ஸ்திரீ பர்வம் - 02]


பதிவின் சுருக்கம் : தன் மகனின் படையில் எஞ்சியிருக்கும் மூன்று வீரர்களை வழியில் சந்தித்த திருதராஷ்டிரன்; துரியோதனன் நியாயமற்ற முறையில் கொல்லப்பட்டதைக் காந்தாரிக்குச் சொன்ன கிருபர்; பாண்டவர்களிடம் கொண்ட அச்சத்தால் கிருபர், அஸ்வத்தாமன் மற்றும் கிருதவர்மன் ஆகியோர், காந்தாரியிடமும், திருதராஷ்டிரனிடமும் விடைபெற்றுக் கொண்டு சென்றது...



வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "திருதராஷ்டிரன், இரண்டு மைல்கள் {ஒரு குரோச தொலைவு} செல்வதற்குள், சரத்வான் மகனான கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் கிருதவர்மன் ஆகியோரைச் சந்ததித்தான்.(1) பெரும் சக்தி கொண்டவனும், பார்வையற்றவனுமான அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} அம்மூவரும் கண்டதும், துயரால் பெருமூச்சுவிட்டபடியும், கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அழுதுகொண்டும், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அடைதற்கரிய சாதனைகளைச் செய்த உமது அரசமகன் {துரியோதனன்}, தன் தொண்டர்களுடன் இந்திரலோகம் சென்றுவிட்டான்.(3) துரியோதனனின் படையில் நாங்கள் மூன்று தேர்வீரர்கள் மட்டுமே உயிரோடு தப்பினோம். ஓ! பாரதக் குலத்தின் காளையே, பிறரனைவரும் அழிந்துவிட்டனர்" என்றனர்.(4)


மன்னனிடம் அவர்கள் இதைச் சொன்னதும், சரத்வான் மகனான கிருபர், துயரால் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரியிடம், இவ்வார்த்தைகளைச் சொன்னார்,(5) "உன் மகன்கள், போரில் அச்சமில்லாமல் போரிட்டு, பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளை வீழ்த்தி, வீரர்களுக்குத் தகுந்த சாதனைகளைச் செய்து கொண்டிருந்தபோது வீழ்ந்தனர்.(6) அவர்கள், ஆயுதங்களைப் பயன்படுத்தி அடையும் பிரகாசமான உலகங்களை அடைந்து, பிரகாசமான வடிவங்களை ஏற்று விளையாடிக் கொண்டிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.(7) அவர்களில் எந்த வீரனும் போரில் புறமுதுகிடவில்லை. அனைவரும் ஆயுதம் தீர்ந்தோ, ஆயுதமுனையினாலோ வீழ்ந்தனர். அவர்களில் எவரும் தங்கள் கரங்களைக் கூப்பித் தஞ்சம் கேட்கவில்லை {சரணடையவில்லை}.(8) ஆயுதங்கள் தீர்ந்தோ, ஆயுதங்களின் முனையிலோ போரில் மரணத்தை அடைவது க்ஷத்திரியன் அடையும் உயர்ந்த கதி என்று சொல்லப்படுகிறது.(9) ஓ! ராணி {காந்தாரி}, அவர்களின் எதிரிகளான பாண்டவர்களும் அதிக நற்பேற்றைப் பெறவில்லை. அஸ்வத்தாமன் தலைமையில் நாங்கள் என்ன செய்தோம் என்பதைக் கேட்பாயாக.(10)

உன் மகன் துரியோதனன், பீமனால் நியாயமற்ற வகையில் கொல்லப்பட்டான் என்பதை அறிந்த நாங்கள், உறக்கத்தில் புதைந்திருந்த பாண்டவர்களின் முகாமில் புகுந்து அவர்கள் அனைவரையும் கொன்றோம்.(11) பாஞ்சாலர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். உண்மையில் துருபதனின் மகன்கள் அனைவரும், திரௌபதியின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(12) நம் பகைவரின் மகன்களுக்கு இந்தப் பேரழிவைச் செய்துவிட்டு, போரில் அவர்கள் முன்பு நிற்க இயலாததால் இப்போது தப்பிச் செல்கிறோம்.(13) நம் எதிரிகளான பாண்டவர்கள் அனைவரும் வீரர்களும், வலிமைமிக்க வில்லாளிகளுமாவர். சினத்தால் நிறையும் அவர்கள், பழிதீர்ப்பதற்காக எங்களை அடைய விரைவில் வருவார்கள்.(14) ஓ! சிறப்புமிக்கப் பெண்மணியே, தங்கள் மகன்கள் கொல்லப்பட்டதைக் கேட்டு, சினத்தால் மதங்கொள்பவர்களும் வீரர்களுமான அந்த மனிதர்களில் காளைகள் {பாண்டவர்கள்} வேகமாக எங்கள் தடத்தைப் பின்தொடர்ந்து வருவார்கள்.(15)

(உறங்கும் முகாமுக்குள்) பேரழிவை ஏற்படுத்திய நாங்கள் {இங்கே} நிற்பதற்கும் துணியமாட்டோம். ஓ! ராணியே {காந்தாரியே}, எங்களுக்கு விடைகொடுப்பாயாக. உன் இதயத்தைக் கவலையில் ஆழ்த்துவது உனக்குத் தகாது.(16) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீயும் எங்களுக்கு விடைகொடுப்பாயாக. மன உரம் அனைத்தையும் {உதவிக்கு} அழைப்பாயாக. க்ஷத்திரியக் கடமைகளை அதன் உயர்ந்த வடிவில் நோற்பாயாக" என்றார் {கிருபர்}.(17)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, கிருபர், கிருதவர்மன் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர், பெரும் ஞானம் கொண்ட மன்னன் திருதராஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அவனை வலம் வந்து,(18) அவனிடமிருந்து தங்கள் கண்களை அகற்ற முடியாமல், தங்கள் குதிரைகளைத் தூண்டி கங்கைக்கரையை நோக்கிச் சென்றனர்.(19) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவ்விடத்தைவிட்டு அகன்ற அந்தப் பெருந்தேர்வீரர்கள், இதயங்கள் கவலையில் மூழ்கிய நிலையிலேயே, ஒருவரிடமிருந்து ஒருவர் விடைபெற்றுக் கொண்டு, பிரிந்து சென்றனர்.(20)

சரத்வான் மகனான கிருபர் ஹஸ்தினாபுரத்திற்கும்; ஹிருதிகனின் மகன் {கிருதவர்மன்} தன் நாட்டுக்கும்; துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} வியாசரின் ஆசிரமத்திற்கும் புறப்பட்டுச் சென்றனர்.(21) இவ்வாறே, பாண்டுவின் உயரான்ம மகன்களுக்குக் குற்றமிழைத்த அவ்வீரர்கள், அச்சத்தால் பீடிக்கப்பட்டும், ஒருவரின் மீது மற்றவர் பார்வையைச் செலுத்திக் கொண்டும் தாங்கள் விரும்பிய இடத்திற்குச் சென்றனர்.(22) இவ்வாறு மன்னனைச் சந்தித்தவர்களும், துணிச்சமிக்கவர்களுமான அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, சூரியன் உதிக்கும் முன்பே தாங்கள் தேர்ந்தெடுத்த இடங்களுக்குச் சென்றனர்.(23) ஓ! மன்னா {ஜனமேஜயா}, இதற்குப் பின்னரே, பெரும் தேர்வீரர்களான பாண்டுவின் மகன்கள் துரோணரின் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} மோதி, தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி (ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல) அவனை வென்றனர்" {என்றார் வைசம்பாயனர்}.(24)

 ஸ்திரீ பர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 24

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்