Friday, October 13, 2017

திருதராஷ்டிரத் தழுவல்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 12

The embrace of Dhritarashtra! | Stri-Parva-Section-12 | Mahabharata In Tamil

(ஜலப்ரதானிக பர்வம் - 12) [ஸ்திரீ பர்வம் - 03]


பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் நகரத்தைவிட்டுப் புறப்பட்டதை அறிந்து அவனைச் சந்திக்கப் புறப்பட்ட யுதிஷ்டிரன்; அவனை அடைந்து வணங்கியது; யுதிஷ்டிரனை ஆரத்தழுவிய திருதராஷ்டிரன்; பீமனை நொறுக்குவதாக எண்ணிக் கிருஷ்ணனால் கொடுக்கப்பட்ட இரும்புப் பதுமையைத் தூள் தூளாக்கிய திருதராஷ்டிரன்; முடிவை ஏற்றுக் கொள்ளுமாறு திருதராஷ்டிரனிடம் சொன்ன கிருஷ்ணன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "போர்வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகு, யுதிஷ்டிரன், தன் பெரியப்பாவான திருதராஷ்டிரன், யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தைவிட்டு {ஹஸ்தினாபுரத்தை விட்டுத்} புறப்பட்டதைக் கேள்விப்பட்டான்.(1) ஓ! மன்னா {ஜனமேஜயா}, மகன்கள் கொல்லப்பட்ட துயரத்தில் இருந்த யுதிஷ்டிரன், தன் (நூறு) மகன்களின் படுகொலையால் துயரில் முழ்கி, கவலையில் நிறைந்திருக்கும் தன் பெரியப்பாவைச் சந்திக்கத் தன் தம்பிகளுடன் புறப்பட்டான்.(2) அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, உயரான்ம வீரனும், தசார்ஹ குலத்தோனுமான கிருஷ்ணனாலும், யுயுதானனாலும் {சாத்யகியாலும்}, யுயுத்சுவாலும் பின்தொடரப்பட்டான்.(3) துயரில் எரிந்து கொண்டிருந்த திரௌபதியும், தன்னுடன் இருந்த பாஞ்சாலப் பெண்களின் துணையுடன், தன் தலைவனை {யுதிஷ்டிரனைக்} கவலையோடு பின்தொடர்ந்து சென்றாள்.(4) யுதிஷ்டிரன், ஓ! மன்னா, துயரால் பீடிக்கப்பட்டு, பெண் அன்றில் கூட்டத்தைப் போல அழுது கொண்டிருக்கும் பாரத மகளிர்க்கூட்டத்தைக் கங்கைக் கரையின் அருகில் கண்டான்.(5)


மன்னன் {யுதிஷ்டிரன்}, ஏற்புடைய மற்றும் ஏற்கமுடியாத அனைத்துவகை வார்த்தைகளையும் சொல்லி அழுது புலம்பிக் கொண்டும், துயரால் தங்கள் கரங்களை உயர்த்திக் கொண்டும் வந்த அந்த ஆயிரக்கணக்கான மகளிரால் சூழப்பட்டு,(6) "தந்தைமார், சகோதரர்கள், ஆசான்கள், மகன்கள் மற்றும் நண்பர்களைக் கொன்ற அந்த நீதிமிக்க மன்னன் எங்கே? அவனது உண்மையும், கருணையும் எங்கே?(7) ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே {யுதிஷ்டிரா}, துரோணரையும், உன் பாட்டனான பீஷ்மரையும், {மைத்துனனான} ஜெயத்ரதனையும் கொன்றபிறகாவது உன் இதயம் அமைதி அடைந்ததா?(8) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உன் தந்தைமாரும், சகோதரர்களும், தடுக்கப்பட முடியாத அபிமன்யுவும், திரௌபதியின் மகன்களும் இவ்வாறு கொல்லப்பட்டதைக் கண்ட பிறகும், உனக்கு அரசுரிமைக்கான தேவை என்ன இருக்கிறது?" {என்று அவர்களால் கேட்கப்பட்டான்}.(9)

வலிய கரங்களைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், பெண் அன்றில்களைப் போலக் கதறிக்கொண்டிருந்த அந்த மங்கையரைக் கடந்து சென்று, தன் பெரியப்பாவின் {திருதராஷ்டிரரின்} பாதங்களை வணங்கினான்.(10) எதிரிகளைக் கொல்பவர்களான பாண்டவர்கள், முறைப்படி தங்கள் பெரியப்பாவை வணங்கி, தங்கள் பெயரைச் சொல்லி அவனிடம் தங்களை அறிவித்துக் கொண்டனர்.(11) தன் மகன்களின் படுகொலையால் துயரில் மிகவும் பீடிக்கப்பட்டிருந்த திருதராஷ்டிரன், அந்தப் படுகொலைக்குக் காரணமான பாண்டுவின் மூத்த மகனை {யுதிஷ்டிரனை}, விருப்பமில்லாமலேயே தழுவிக் கொண்டான்.(12) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை ஆரத்தழுவி, சில ஆறுதல் வார்த்தைகளைச்சொன்ன பிறகு, தீய ஆன்மா கொண்டவனான அந்தத் திருதராஷ்டிரன், தன்னை அணுகும் அனைத்தையும் எரித்துவிடும் சுடர்மிக்க நெருப்பைப் போலப் பீமனைத் தேடினான்.(13) உண்மையில், அவனது துயரெனும் காற்றால் தூண்டப்பட்ட கோபமெனும் நெருப்பானது, பீமக் காட்டை எரிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிந்தது.(14)

பீமனிடம் அவன் கொண்டிருக்கும் தீய நோக்கங்களை உறுதி செய்து கொண்ட கிருஷ்ணன், உண்மையான பீமனை இழுத்துவிட்டு, அந்த முதிய மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} இரும்பாலான இரண்டாம் பாண்டவனின் {பீமனின்} சிலையைக் கொடுத்தான்.(15) பெரும் நுண்ணறிவைக் கொண்ட கிருஷ்ணன், தொடக்கத்திலேயே திருதராஷ்டிரனின் நோக்கங்களைப் புரிந்து கொண்டு, அவற்றைக் கலங்கடிப்பதற்காகவே இந்தச் சூழ்ச்சியைச் செய்தான்.(16) பெரும் பலம் கொண்டவனான மன்னன் திருதராஷ்டிரன், தன்னிரு கரங்களாலும் அந்த இரும்பு பீமனைப் பற்றிக் கொண்டு, இரத்தமும், சதையுமான உண்மையான பீமனாகவே கருதி அதைத் துண்டுகளாக நொறுக்கினான்.(17) பத்தாயிரம் {10000} யானைகளுக்கு இணையான வலிமையைக் கொண்ட அம்மன்னன் {திருதராஷ்டிரன்} அந்தச் சிலையைத் துண்டு துண்டானச் சிதறல்களாக்கினான். எனினும், தன் மார்பும் குறிப்பிட்ட அளவுக்குக் காயமடைந்ததால் {மிகவும் நசுக்கப்பட்டதால்} அவன் ரத்தம் கக்கத் தொடங்கினான்.(18) குருதியில் மறைந்திருந்த அந்த மன்னன், மலர்களின் சுமையை உச்சியில் கொண்டிருக்கும் பாரிஜாத மரத்தைப் போலக் கீழே தரையில் விழுந்தான்.(19) கல்விமானும், அவனது தேரோட்டியும், கவல்கணன் மகனுமான சஞ்சயன் அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} உயர்த்தி, ஆறுதல் சொல்லித் தேற்றி, "இவ்வாறு செயல்படாதீர்" என்றான்.(20)

பிறகு, தன் கோபத்தைக் கைவிட்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, தன் இயல்பான நிலையை அடைந்து, துயரால் நிறைந்து, "ஐயோ, ஓ! பீமா, ஐயோ, ஓ! பீமா!" என்று சொல்லி உரக்க அழத்தொடங்கினான்.(21) அவன் இன்னும் கோபத்தின் ஆளுகையில் இல்லை என்பதையும், பீமனைக் கொன்றதால் உண்மையாக வருந்துவதையும் (தான் நம்பியவாறே)[1] புரிந்து கொண்டவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னான்,(22) "ஓ! திருதராஷ்டிரரே, நீர் பீமசேனரைக் கொல்லவில்லை என்பதால் வருந்தாதீர். ஓ! மன்னா, நீர் நொறுக்கியது ஓர் இரும்பு சிலையே.(23) ஓ! பாரதக் குலத்தின் காளையே, நீர் சினத்தால் நிறைந்திருக்கிறீர் என்பதைப் புரிந்து கொண்ட நான், குந்தியின் மகனை {பீமரைக்} காலனின் கோரப் பற்களுக்கிடையில் இருந்து இழுத்துவிட்டேன்.(24) ஓ! மன்னர்களில் புலியே, உடல்வலுவில் உமக்கு இணையாக எவனும் இல்லை. ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, உமது கரங்களின் அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள இங்கே எவன் இருக்கிறான்?(25)

[1] கங்குலி தான் இதை நம்பவில்லை என்பதைக் குறிக்க இந்த அடைப்புக்குறி சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறாரா, அல்லது மூலத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. மூலத்தில் இருக்குமானால் கிருஷ்ணன் நம்பினான், வியாசரும், வைசம்பாயனரும் நம்பவில்லை என்று இது பொருள்படும். கும்பகோணம் பதிப்பிலும், பிபேகத் திப்ராயின் பதிப்பிலும் இவ்வாறான குறிப்பு இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே அடைப்புக்குறி வசனம் இருக்கிறது. எனினும் இங்கே திருதராஷ்டிரனின் செயல்பாடுகள் கணிகர் முன்பு சொன்னது போலவே "நம்ப வைத்துக் கொல்லும் வகையில்" இருக்கின்றன.

உண்மையில், காலனுடன் மோதி எவனும் உயிருடன் தப்ப முடியாது என்பதைப் போலவே, உமது அணைப்புக்குள் இருந்து பாதுகாப்பாக எவனாலும் வெளியேற முடியாது.(26) அதன் காரணமாகவே, உமது மகனால் {துரியோதனனால் கதாயுதப் பயிற்சிக்காகச்} செய்யப்பட்ட பீமரின் இந்தச் சிலையை உமக்காகவே தயாராக வைத்திருந்தேன்.(27) உமது மகன்களின் மரணத்தால் உண்டான துயரின் மூலம் உமது மனம் நீதியில் இருந்து விழுந்துவிட்டது. ஓ! பெரும் மன்னா, இதன் காரணமாகவே நீர் பீமசேனரைக் கொல்ல முயன்றீர்.(28) எனினும், ஓ! மன்னா, பீமரைக் கொல்வது உமக்கு ஒரு நன்மையையும் செய்யாது. ஓ! ஏகாதிபதி, அதனால் உமது மகன்கள் பிழைத்து வர மாட்டார்கள்.(29) எனவே, உமது இதயத்தைத் துயரில் நிலைநிறுத்தாமல், அமைதியை எட்டும் நோக்கில் எங்களால் எது செய்யப்பட்டதோ அஃதை ஏற்றுக்கொள்வீராக {அங்கீகரிப்பீராக}" என்றான் {கிருஷ்ணன்}".(30)



 ஸ்திரீ பர்வம் பகுதி – 12ல் உள்ள சுலோகங்கள் : 30
ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்