Friday, October 13, 2017

காந்தாரியின் கோபம்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 14

The wrath of Gandhari! | Stri-Parva-Section-14 | Mahabharata In Tamil

(ஜலப்ரதானிக பர்வம் - 14) [ஸ்திரீ பர்வம் - 05]


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைச் சபிக்க நினைத்திருந்த காந்தாரி; தீடீரென அங்கே வந்த வியாசர் அவளது கோபத்தைத் தணிக்க ஆலோசனை கூறுவது; அவரது ஆலோசனையை ஏற்றுக் கொண்ட காந்தாரி, பீமனின் அநியாயத்தைச் சுட்டிக்காட்டியது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "திருதராஷ்டிரனால் ஆணையிடப்பட்ட குரு குலக் காளைகளான அந்தப் பாண்டவச் சகோதரர்கள், கேசவனின் {கிருஷ்ணனின்} துணையுடன் காந்தாரியைக் காணச் சென்றனர்.(1) களங்கமற்றவளான காந்தாரி, தன் நூறு மகன்களின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தன் எதிரிகள் அனைவரையும் கொன்றதை நினைவுகூர்ந்து அவனைச் {யுதிஷ்டிரனைச்} சபிக்க விரும்பினாள்.(2) சத்தியவதியின் மகன் {வியாசர்}, பாண்டவர்களிடம் அவள் கொண்டிருக்கும் தீய நோக்கங்களைப் புரிந்த கொண்டு, தொடக்கத்திலேயே அதற்கு எதிர்வினையாற்றத் தனக்குள் தீர்மானித்தார்.(3) மனோவேகத்தில் தாம் விரும்பும் இடத்திற்குச் செல்ல வல்ல அந்தப் பெரும் முனிவர் {வியாசர்}, கங்கையின் புனிதமான தெளிந்த நீரால் தம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.(4) ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்தையும் தமது ஆன்மப் பார்வையால் பார்க்க வல்ல அந்தத் தவசி {வியாசர்}, தன் மனத்தை அதை நோக்கிச் செலுத்தி அங்கே தோன்றினார்.(5)


பெரும் தவத்தகுதியைக் கொண்டவரும், எப்போதும் உயிரினங்களின் நன்மையையே நோக்கமாகக் கொண்டவருமான அந்த முனிவர் {வியாசர்}, சரியான நேரத்தில் தன் மருமகளிடம் {காந்தாரியிடம்},(6) "சபிப்பதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாதே. மறுபுறம் உன் மன்னிப்பைக் காட்ட {வழங்க} அதைப் பயன்படுத்துவாயாக {பொறுமை காட்டுவாயாக}. ஓ! காந்தாரி, நீ பாண்டவர்களிடம் கோபங்கொள்ளக் கூடாது. உன் இதயத்தை அமைதியில் நிலைநிறுத்துவாயாக. உன் உதடுகளிலிருந்து உதிரப்போகும் வார்த்தைகளைத் தடுப்பாயாக. என் அறிவுரையைக் கேட்பாயாக.(7) வெற்றியை விரும்பிய உன் மகன் {துரியோதனன்}, பதினெட்டு நாட்கள் நீடித்த அந்தப் போரின் போது ஒவ்வொருநாளும்[1] உன்னிடம், "ஓ! தாயே, எதிரிகளுடன் போரிடப் போகும் எனக்கு அருள்புரிவாயாக" என்று வேண்டினான்.(8) வெற்றியை விரும்பிய உனது மகன் ஒவ்வொரு நாளும் இவ்வார்த்தைகளால் இரந்து கேட்டுக் கொண்டும், நீ அவனுக்கு எப்போதும் கொடுத்த பதில், "எங்கே அறமிருக்கிறதோ, அங்கே வெற்றியுமிருக்கும்" என்பதாகும்.(9)

[1] பிபேக்திப்ராயின் பதிப்பில், "வெற்றியை விரும்பிய உன் மகன் உன்னிடம் பதினெட்டு நாட்களுக்கு முன் பேசினான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இந்த நாட்கள் குறிப்பிடப்படவில்லை.

ஓ! காந்தாரி, நீ சொன்ன வார்த்தைகள் ஏதும் பொய்த்ததாக எனக்கு நினைவில்லை. எனவே, துரியோதனனால் வேண்டிக் கேட்டுக் கொள்ளப்பட்டு, நீ சொன்ன அந்த வார்த்தைகளும் பொய்க்க முடியாது. நீ எப்போதும் அனைத்து உயிரினங்களின் நன்மையிலேயே ஈடுபட்டிருக்கிறாய்.(10) க்ஷத்திரியர்களின் அந்தப் பயங்கரப் போரில் அடுத்தக் கரையை அடைந்த பாண்டுவின் மகன்களே நிச்சயமாக வென்றிருக்கிறார்கள், {அவர்களிடமே} அறத்தின் அளவும் அதிகமாக இருக்கிறது.(11) நீ முன்பு மன்னிக்கும் அறத்தை {பொறுமையை} நோற்று வந்தாய். அஃதை இப்போது ஏன் நீ நோற்கக்கூடாது? ஓ! அறமறிந்தவளே, அநீதியை அடக்குவாயாக. எங்கே அறமிருக்கிறதோ, அங்கேதான் வெற்றியுமிருக்கும்.(12) ஓ! காந்தாரி, உன் அறத்தையும், நீ பேசிய வார்த்தைகளையும் நினைவுகூர்ந்து உன் கோபத்தை அடக்குவாயாக. ஓ! அழகாகப் பேசுபவளே, வேறுவகையில் செயல்படாதே" என்றார் {வியாசர்}.(13)

இவ்வார்த்தைகளைக் கேட்ட காந்தாரி {வியாசரிடம்}, "ஓ! புனிதமானவரே, பாண்டவர்களிடம் நான் எந்தக் கோபமும் கொள்ளவில்லை, அவர்கள் அழிய வேண்டும் என்று விரும்பவுமில்லை. எனினும், என் மகன்களின் மரணத்தால் ஏற்பட்ட துயரின் விளைவாக, என் இதயம் மிகப் பலத்த கலக்கத்தையடைகிறது.(14) குந்தி எவ்வளவு கவனமாகப் பாண்டவர்களைப் பாதுகாக்கிறாளோ, அதே அளவு நானும் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், நான் பாதுகாக்கும் அளவுக்குத் திருதராஷ்டிரரும் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் நான் அறிவேன்.(15) துரியோதனன் மற்றும் சுபலரின் மகனான சகுனி ஆகியோரின் குற்றத்தின் மூலமும், கர்ணன் மற்றும் துச்சாசனன் ஆகியோரின் செயல்பாடுகளின் மூலமும், குருக்களின் இந்த முற்றான அழிவு நடைபெற்றிருக்கிறது.(16) இக்காரியத்தில், பீபத்சு {அர்ஜுனன்} மீதோ, பிருதையின் மகனான விருகோதரன் {பீமன்} மீதோ, நகுலன் மீதோ, சகாதேவன் மீதோ, யுதிஷ்டிரன் மீதோ சிறு பழியையும் இணைத்துச் சொல்ல முடியாது.(17)

ஆணவம் மற்றும் செருக்குடன் கூடிய கௌரவர்கள், போரில் ஈடுபடும்போது, (அவர்களின் உதவிக்கு வந்த) பலருடன் சேர்ந்து வீழ்ந்திருக்கிறார்கள். இதனால் நான் வருத்தமடையவில்லை.(18) ஆனால், வாசுதேவன் {கிருஷ்ணன்} முன்னிலையில், பீமனால் செய்யப்பட்ட ஒரு காரியம் (என் சினதைத் தூண்டும்படி} இருக்கிறது. உயர் ஆன்ம விருகோதரன் {பீமன்}, ஒரு பயங்கரக் கதாயுதப் போருக்குத் துரியோதனனை அறைகூவி அழைத்து விட்டு,(19) போரில் பல்வேறு வகைகளில் திரியும்போது, அவனை {பீமனை} விட என் மகன் {துரியோதனன்} திறனில் மேன்மையானவன் என்பதை அறிந்து, உந்திக்கு {தொப்புளுக்குக்} கீழே தாக்கினான்.(20) இதுவே என் கோபத்தைத் தூண்டுகிறது. கடமைகள் {தர்மங்கள்} அனைத்தையும் அறிந்த உயரான்ம மனிதர்களால் தீர்மானிக்கப்பட்ட கடமைகளை, வீரர்கள் தங்கள் உயிர்களுக்காக ஏன் கைவிடுகிறார்கள்?[2]" என்று கேட்டாள் {காந்தாரி}".(21)

[2] கும்பகோணம் பதிப்பில், "தர்மத்தை அறிந்தவர்களான சூரர்கள், மஹாத்மாக்களால் விதிக்கப்பட்டிருக்கிற தர்மத்தை யுத்தத்தில் எவ்விதத்தினாலாவது பிராணனைக் காப்பாற்றுவதற்காக எவ்வாறு விடுவார்கள்" என்றிருக்கிறது.

ஸ்திரீ பர்வம் பகுதி – 14ல் உள்ள சுலோகங்கள் : 21

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்