Friday, October 13, 2017

கோபம் அகன்ற திருதராஷ்டிரன்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 13

Dhritarashtra wrathfree! | Stri-Parva-Section-13 | Mahabharata In Tamil

(ஜலப்ரதானிக பர்வம் - 13) [ஸ்திரீ பர்வம் - 04]


பதிவின் சுருக்கம் : பீமனிடம் கோபத்தை வளர்ப்பதற்காகத் திருதராஷ்டிரனைக் கடிந்துரைத்த கிருஷ்ணன்; கோபத்தை விட்டு தன் தம்பியின் பிள்ளைகளை ஒருவர்பின் ஒருவராகத் தழுவிக் கொண்ட திருதராஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அப்போது சில பெண்பணியாட்கள் மன்னனைக் கழுவி விட அங்கே வந்தனர். அவன் முறையாகத் தூய்மைப்படுத்தப்பட்ட பிறகு, மதுசூதனன் {கிருஷ்ணன்}, அவனிடம் {திருதராஷ்டிரனிடம்} மீண்டும்,(1) "ஓ! மன்னா, நீர் வேதங்களையும், பல்வேறு சாத்திரங்களையும் படித்திருக்கிறீர். பழைய வரலாறுகள் அனைத்தையும், மன்னர்களின் கடமைகள் குறித்த அனைத்தையும் நீ கேட்டிருக்கிறீர்.(2) கல்விமானான நீர் பெரும் ஞானம் கொண்டவராகவும், பலம் மற்றும் பலவீனத்துக்குத் தகுந்தவராகவும் இருக்கிறீர். உமக்கு நேர்ந்தவை அனைத்தும் உமது தவறுகளின் விளைவே எனும்போது இத்தகு கோபத்தை ஏன் வளர்க்கிறீர்?(3) போருக்கு முன்பே நான் உம்மிடம் பேசினேன். ஓ! பாரதரே, பீஷ்மர், துரோணர், விதுரர், சஞ்சயன் ஆகியோரும் உம்மிடம் பேசினர். எனினும், நீர் எங்கள் அறிவுரையைப் பின்பற்றவில்லை.(4) உண்மையில், எங்களால் பரிந்துரைக்கப்பட்டாலும், உமக்கும், உமது பலம் மற்றும் துணிவுக்கும் பாண்டவர்கள் மேம்பட்டவர்கள் என்பதை அறிந்து, நாங்கள் சொன்ன ஆலோசனைகளின் படி நீர் செயல்படவில்லை.(5)


தன் குறைகளைக் காணவல்லவனும், கால, நேர வேறுபாடுகளை அறியவல்லவனுமான மன்னன் பெருஞ்செழிப்பை அடைகிறான்.(6) எனினும், எந்த மனிதன் நலன்விரும்பிகளால் ஆலோசனை கூறப்பட்டும், அவர்களது நல்ல {இனிமையான}, அல்லது தீய {கசப்பான} வார்த்தைகளை ஏற்கவில்லையோ, அவன் தன் தீய கொள்கையின் விளைவால் உண்டாகும் துயரை அடைந்து துன்பப்படுகிறான்.(7) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இப்போது வாழ்வின் வேறு வழியைக் காண்பீராக. நீர் உமது ஆன்மாவைக் கட்டுப்படுத்தாமல், துரியோதனனின் ஆளுகைக்குள் இருந்து உம்மைத் துன்புறுத்திக் கொண்டீர்.(8) உமக்கு நேர்ந்திருப்பவை உமது தவறாலேயே உம்மை அடைந்தன. பிறகு ஏன் நீர் பீமரைக் கொல்ல முயல்கிறீர்? உமது சொந்த தவறுகளை நினைத்துப் பார்த்து, உமது கோபத்தை இப்போது அடக்குவீராக.(9) அற்பனான எவன் செருக்கினால் பாஞ்சால இளவரசியை {திரௌபதியைச்} சபைக்குக் கொண்டு வந்தானோ, அவன் நியாயமாகப் பழி தீர்க்கப்படவே பீமசேனரால் கொல்லப்பட்டான்.(10) உமது சொந்த செயல்பாடுகளையும், தீய ஆன்மா கொண்ட உமது மகனின் {துரியோதனனின்} செயல்பாடுகளையும் பார்ப்பீராக. பாண்டுவின் மகன்கள் முற்றிலும் அப்பாவிகளாவர். இருப்பினும், அவர்கள் உம்மாலும், அவனாலும் {துரியோதனனாலும்} மிகக் கொடூரமாக நடத்தப்பட்டார்கள்" என்றான் {கிருஷ்ணன்}".(11)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "கிருஷ்ணனால் இவ்வாறு உண்மை சொல்லப்பட்ட பிறகு, மன்னன் திருதராஷ்டிரன் அந்தத் தேவகியின் மகனிடம் {கிருஷ்ணனிடம்} மறுமொழியாக,(12) "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ சொன்னது போலத்தான் இருக்கிறது. ஓ! மாதவா, நீ சொல்வது முற்றிலும் உண்மையே. ஓ! அற ஆன்மாவே, பிள்ளை பாசமே என்னை அறத்திலிருந்து விழச் செய்தது.(13) மனிதர்களில் புலியும், உண்மை ஆற்றல் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான பீமன், என் அணைப்புக்குள் வராமல் உன்னால் பாதுகாக்கப்பட்டது நற்பேற்றாலேயே.(14) இருப்பினும், நான் இப்போது கோபத்திலிருந்தும், நோயிலிருந்தும் விடுபட்டிருக்கிறேன். ஓ! மாதவா, வீரனான அந்தப் பாண்டுவின் இரண்டாம் மகனை {பீமனைத்} தழுவிக் கொள்ளும் விருப்பத்தால் ஆவலடைந்திருக்கிறேன்.(15) மன்னர்கள் அனைவரும் இறந்து, என் பிள்ளைகளும் இல்லையென்றான பிறகு, என் நல்வாழ்வும், மகிழ்ச்சியும் பாண்டுவின் மகன்களைச் சார்ந்தே இருக்கப் போகிறது" என்றான் {திருதராஷ்டிரன்}.(16) இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த முதிய மன்னன், அற்புத உடற்கட்டுகளைக் கொண்டோரான பீமன், தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரையும், மனிதர்களில் முதன்மையானவர்களான மாத்ரியின் மகன்கள் {நகுலன், சகாதேவன்} இருவரையும் தழுவியழுது, ஆறுதலடைந்து, அவர்களை வாழ்த்தியருளினான்" {என்றார் வைசம்பாயனர்}.(17)

ஸ்திரீ பர்வம் பகுதி – 13ல் உள்ள சுலோகங்கள் : 17

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்