Sunday, October 15, 2017

துச்சாசனனைக் கண்ட காந்தாரி! - ஸ்திரீ பர்வம் பகுதி – 18

Gandhari beheld Duhshasana! | Stri-Parva-Section-18 | Mahabharata In Tamil

(ஸ்திரீவிலாப பர்வம் - 03) [ஸ்திரீ பர்வம் - 09]


பதிவின் சுருக்கம் : தன் மருமகள்களின் பரிதாபகரமான நிலையைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக்காட்டிய காந்தாரி; துச்சாசனனைக் கொன்று அவனுடைய உயிர்க்குருதியைக் குடித்த பீமனை நினைத்தது; துச்சாசனன் செய்த தீமையைச் சொன்னது; பீமனைக் குறித்துத் துரியோதனனுக்குத் தான் எச்சரித்ததைக் கிருஷ்ணனிடம் நினைவுகூர்ந்த காந்தாரி...


காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "ஓ! மாதவா, (போர்முயற்சியில்) களைப்படைய இயலாத என் மகன்கள் நூறு பேரும், போரில் பீமசேனனின் கதாயுதத்தால் கொல்லப்பட்டனர்.(1) என் மகன்களை இழந்தவர்களான இளம் வயதுடைய என் மருமகள்கள், கலைந்த கேசங்களுடன் இன்று போர்க்களத்தில் திரிவதே எனக்குப் பெரும் துயரை அளிக்கிறது.(2) ஐயோ, பல ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கால்களுடன், சிறந்த மாளிகைகளின் உப்பரிகைகளிலேயே நடந்த இவர்கள், இப்போது, பெருந்துயரால் இதயம் பீடிக்கப்பட்ட நிலையில், குருதியால் சகதியாகியிருக்கும் இந்தக் கடும்பூமியைத் தங்கள் கால்களால் தீண்டுகின்றனர்.(3) கவலையில் சுழலும் இவர்கள், பெருஞ்சிரமத்துடன் கழுகுகளையும், நரிகளையும், காகங்களையும் விரட்டிக் கொண்டு, மதுவால் வெறியேற்றப்பட்டவர்களைப் போலத் திரிந்து கொண்டிருக்கின்றனர்[1].(4) பழுதற்ற அங்கங்களைக் கொண்டவர்களும், கொடியிடை கொண்டவர்களுமான இந்த மங்கையர், இந்தப் பயங்கரப் பேரழிவைக் கண்டு, துயரத்தில் மூழ்கிக் கீழே விழுவதைப் பார்.(5)


[1] "வங்கப் பதிப்பு இதில் சற்றே மாறுபடுகிறது" என இங்கே குறிப்பிடுகிறார் கங்குலி. மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்தச் சுலோகம் கங்குலியில் உள்ளது போலவே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "துக்கத்தால் பீடிக்கப்பட்டவர்களும், மதங்கொண்டவர்களைப் போலச் சுழலுகின்றவர்களுமான இந்தப் பெண்கள், கழுகுகளையும், நரிகளையும், காக்கைகளையும் பிரயாஸத்தினால் ஓட்டிக் கொண்டு திரிகின்றனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "துயரத்தால் பீடிக்கப்பட்டும், பைத்தியக்காரர்களைப் போலச் சுழன்றும் சுற்றிலும் திரிந்து கொண்டிருக்கும் அவர்கள், கழுகுகளையும், நரிகளையும், காகங்களையும் விரட்டிக் கொண்டிருக்கின்றன்னர்" என்றிருக்கிறது.

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, லக்ஷ்மணனின் தாயான இந்த இளவரசியை {பானுமதியைக்} கண்டு என் இதயம் துயரத்தால் பிளக்கிறது.(6) அழகிய கரங்களைக் கொண்ட இந்த மங்கையரில் சிலர், வெறுந்தரையில் இறந்து கிடப்பவர்களான தங்கள் சகோதரர்களையும், சிலர் தங்கள் கணவர்களையும், சிலர் தங்கள் மகன்களையும் கண்டு, கொல்லப்பட்டவர்களின் கரங்களைப் பற்றிக் கொண்டு கீழே விழுகின்றனர்.(7) ஓ! வெல்லப்படாதவனே, இந்தப் பயங்கரப் பேரழிவைக் கண்டு கதறி அழும் முதிய மற்றும் நடுத்தர வயது பெண்களின் ஓலத்தைக் கேட்பாயாக.(8) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, அந்தக் காரிகையர், களைப்பால் மயங்கி, உடைந்த தேர்க்கூடுகளில் தங்களைத் தாங்கிக் கொண்டு ஓய்வதைப் பார்.(9) ஓ! கிருஷ்ணா, அவர்களில் சிலர், அழகிய மூக்கு மற்றும் காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதும், துண்டிக்கப்பட்டதுமான தங்கள் சொந்தக்காரனின் தலையை எடுத்துக் கொண்டு துயரில் நிற்பதைப் பார்.(10)

ஓ! பாவமற்றவனே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அவர்களுடையவர்களும், சிறுமதி கொண்டவளான என்னுடையவர்களுமான உறவினர்கள் மற்றும் சொந்தங்கள் அனைவரும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதால், நாங்கள் எங்கள் முந்தைய பிறவியில் பெரும்பாவங்களைச் செய்திருக்க வேண்டும். ஓ! விருஷ்ணி குலத்தோனே, நியாயமானவையாகவோ, நியாயமற்றவையாகவோ இருக்கும் எங்கள் செயல்பாடுகள் பலமில்லாமல் போகாது.(11,12) ஓ! மாதவா, அழகிய முலைகளையும், வயிற்றையும் கொண்டவர்களும், நற்குடியில் பிறந்தவர்களும், பணிவுடையவர்களும், கரிய இமை முடிகளைக் கொண்டவர்களும், தங்கள் தலைகளில் கருங்குழலைக் கொண்டவர்களும், இனிய குரலைக் கொண்டவர்களும், அன்னப்பறவைகளைப் போல அன்பானவர்களுமான அந்த இளம்பெண்கள், பெருந்துயரத்தால் தங்கள் புலனுணர்வுகளை இழந்து, நாரைக் கூட்டத்தைப் போலப் பரிதாபகரமாக அழுவதைப் பார்.(13,14) ஓ! தாமரைக்கண் வீரா, முற்றுமுழுதாக மலர்ந்திருக்கும் தாமரைகளுக்கு ஒப்பான அவர்களுடைய அழகிய முகங்கள் சூரியனால் எரிக்கப்படுவதைப் பார்.(15)

ஐயோ, ஓ! வாசுதேவா {கிருஷ்ணா}, செருக்குடையவர்களும், மதங்கொண்ட யானைகளைப் போன்ற ஆற்றலைக் கொண்டவர்களுமான என் பிள்ளைகளின் மனைவியர், இப்போது பொதுமக்களின் வெறித்த பார்வைக்கு வெளிப்பட்டு நிற்கின்றனர்.(16) ஓ! கோவிந்தா, என் மகன்களுக்குச் சொந்தமானவையான, நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட கேடயங்கள், சூரியப் பிரகாசத்துடன் கூடிய கொடிமரங்கள், தங்கக் கவசங்கள், கழுத்தணிகள், தங்கத்தாலான மார்புக் கவசங்கள், தலைக்கவசங்கள் ஆகியன, தெளிந்த நெய்யிலான நீர்க்காணிக்கைகள் {ஆகுதிகள்} ஊற்றப்பட்டு, காந்தியுடன் சுடர்விட்டெரியும் வேள்வி நெருப்புகளைப் போலப் பூமியில் சிதறிக் கிடப்பதைப் பார்.(17,18) பீமனால் வீழ்த்தப்பட்டு, எதிரிகளைக் கொல்லும் அந்த வீரனால் அங்கமெல்லாம் உள்ள குருதி குடிக்கப்பட்டு அங்கே துச்சாசனன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.(19) ஓ! மாதவா, பகடையாட்டத்தின் போது உண்டான தன் துயரங்களை நினைத்துப் பார்த்த திரௌபதியினால் தூண்டப்பட்டு, பீமனின் கதாயுதத்தால் கொல்லப்பட்ட என் மற்றொரு மகனை {துச்சாசனனைப்} பார்.(20)

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, தன் அண்ணனுக்கும் {துரியோதனனுக்கும்}, கர்ணனுக்கும் ஏற்புடையதைச் செய்ய விரும்பிய இந்தத் துச்சாசனன், பகடையில் வெல்லப்பட்ட அந்தப் பாஞ்சால இளவரசியிடம் {திரௌபதியிடம்}, சபைக்கு மத்தியில் வைத்து, "நீ இப்போது ஓர் அடிமையின் மனைவியாவாய். ஓ! பெண்ணே, சகாதேவன், நகுலன் மற்றும் அர்ஜுனனுடன் இப்போது நீ எங்கள் வீட்டுக்குள் நுழைவாயாக" என்றான்[2].(21,22) ஓ!கிருஷ்ணா, அச்சந்தர்ப்பத்தில் நான் மன்னன் துரியோதனனிடம், "ஓ! மகனே {துரியோதனா}, (உன் தரப்பில் இருந்து) கோபம் நிறைந்தவனான சகுனியைக் கைவிடுவாயாக.(23) உன் தாய்மாமன் மிகத் தீய ஆன்மாக் கொண்டவனும், சச்சரவை அதிகம் விரும்புபவனுமாக இருக்கிறான். ஓ! மகனே, தாமதமில்லாமல் அவனைக் கைவிட்டு, பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்வாயாக.(24) ஓ! சிறு மதி கொண்டோனே, கோபம் நிறைந்த பீமசேனனைக் குறித்து நீ நினைத்துப் பார்க்கவில்லை. எரிப்பந்தங்களைக் கொண்டு யானையைத் தாக்கும் மனிதனைப் போல நீ உன் வார்த்தைகளெனும் கணைகளால் அவனைத் {பீமனைத்} துளைக்கிறாய்" என்றேன்.(25)

[2] கும்பகோணம் பதிப்பில், "ஜனார்த்தன, ப்ராதாவுக்கும், கர்ணனுக்கும் பிரியத்தைச் செய்ய விருப்பமுள்ள இந்தத் துச்சாஸனனால் சூதாட்டத்தால் ஜயிக்கப்பட்ட பாஞ்சாலியானவள், "ஓ, பாஞ்சாலி, ஸஹதேவனோடும், நகுலனோடும், அர்ஜுனனோடுங்கூடவே அடிமையாகிவிட்டாய். எம்முடைய அரண்மனையில் சிக்கிரமாக நுழை" என்று ஸபையில் சொல்லப்பட்டாள்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பிலோ, "ஓ ஜனார்த்தனா, சபாமண்டபத்தில் பாஞ்சாலி பகடையில் வெல்லப்பட்டபோது, தன் அண்ணனையும், கர்ணனையும் நிறைவு கொள்ளச் செய்ய விரும்பிய அவன் {துச்சாசனன்}, அவளிடமும், சகாதேவன், நகுலன் மற்றும் அர்ஜுனனிடம் கடும் வார்த்தைகளைப் பேசினான். அவன், "ஓ பாஞ்சாலி நீ எங்கள் அடிமையும், மனைவியுமாவாய். விரைவாக வீட்டிற்குள் நுழைவாயாக" என்றான்" என்றிருக்கிறது.

ஐயோ, என் வார்த்தைகளை அலட்சியம் செய்த அவன் {துரியோதனன்}, பெருங்காளையின் மீது விஷத்தைக் கக்கும் பாம்பொன்றைப் போலத் தன் வார்த்தை நஞ்சை அவன் {பீமன்} மீதும், ஏற்கனவே சொல்லீட்டிகளால் துளைக்கப்பட்டிருந்த அவர்கள் {பாண்டவர்கள்} மீதும் கக்கினான்.(26) அதோ அங்கே சிங்கத்தால் கொல்லப்பட்ட பெரும் யானையொன்றைப் போல, பீமசேனனால் கொல்லப்பட்டுத் தன் பருத்த கரங்கள் இரண்டையும் விரித்தபடியே துச்சாசனன் உறங்கிக் கொடிருக்கிறான்.(27) பெருங்கோபம் கொண்டவனான பீமசேனனோ, தன் எதிரியின் {துச்சாசனனின்} குருதியைப் போரில் குடித்து மிகப் பயங்கரமான செயலைச்செய்துவிட்டான்" என்றாள் {காந்தாரி}.(28)

ஸ்திரீ பர்வம் பகுதி – 18ல் உள்ள சுலோகங்கள் : 28

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்