Sunday, October 15, 2017

பானுமதியின் நிலை! - ஸ்திரீ பர்வம் பகுதி – 17

The state of Bhanumathi! | Stri-Parva-Section-17 | Mahabharata In Tamil

(ஸ்திரீவிலாப பர்வம் - 02) [ஸ்திரீ பர்வம் - 08]


பதிவின் சுருக்கம் : துரியோதனனின் உடலைக் கண்டு கதறி விழுந்த காந்தாரி; தன் மகனின் உடலைக் கண்ணீரால் நனைத்தது; ஆதரவற்ற திருதராஷ்டிரனுக்காக வருந்தியது; துரியோதனனின் மனைவியான பானுமதியின் நிலையைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணனிடம் புலம்பிய காந்தாரி...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "காந்தாரி, துரியோதனனைக் கண்டதும், துயரால் தன் உணர்வுகளை இழந்து, வேரோடு சாய்க்கப்பட்ட வாழை மரத்தைப் போலத் திடீரெனப் பூமியில் விழுந்தாள்.(1) விரைவில் தன் உணர்வுகள் மீண்ட அவள், குருதியில் மறைந்து வெறுந்தரையில் கிடக்கும் தன் மகனைக் கண்டு மீண்டும் மீண்டும் உரக்க ஓலமிட்டபடியே அழத் தொடங்கினாள்.(2) தன் மகனை ஆரத்தழுவி கொண்ட காந்தாரி, அவனுக்காகப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டாள். துயரால் பீடிக்கப்பட்டவளும், அதிகமான புலன்கலக்கம் அடைந்தவளுமான அந்தக் குரு குல ராணி {காந்தாரி}, "ஐயோ, ஓ! மகனே", "ஐயோ, ஓ! மகனே" என்று சொல்லி அழுதாள்.(3) கவலையால் எரிந்த அந்த ராணி, பருத்த, அகன்ற தோள்களைக் கொண்டவனும், மாலைகளாலும், கழுத்தணிகளாலும் அலங்கரிக்கப்பட்டவனுமான தன் மகனின் {துரியோதனனின்} உடலைத் தன் கண்ணீரால் நனைத்தாள்.


அருகே நின்றிருந்த ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்} அவள் {காந்தாரி},(4) "ஓ! பலமிக்கவனே, ஓ! விருஷ்ணி குலத்தோனே, இந்தக் குலத்திற்கு அழிவை ஏற்படுத்திய இந்தப் போரின் தொடக்கத்தில், இந்த மன்னர்களில் முதன்மையானவன் {துரியோதனன்} என்னிடம், "ஓ! தாயே, இந்த உட்பூசலில் எனக்கு வெற்றியை விரும்புவாயாக" என்றான். அவன் இவ்வார்த்தைகளை என்னிடம் சொன்னபோது, ஓ! மனிதர்களில் புலியே, பேரிடர் எங்களை அணுகியதை அறிந்த நான், அவனிடம் {துரியோதனனிடம்}, "எங்கே அறமிருக்கிறதோ, அங்கேயே வெற்றியுமிருக்கும்.(6) ஓ! மகனே, உன் இதயம் போரில் நிலைத்திருப்பதால், ஆயுதங்களால் ({ஆயுதங்களைப்} பயன்படுத்தி) அடையும் உலகை தேவர்களைப் போலவே நீ அடைவாயாக ({அடைந்து} அங்கே விளையாடிக் கொண்டிருப்பாயாக)" என்றேன்.(7) இவையே நான் அவனிடம் சொன்ன வார்த்தைகளாகும். இதன் காரணமாக நான் என் மகனுக்காக வருந்தவில்லை. எனினும், நண்பர்களையும், சொந்தங்களையும் இழந்து ஆதரவற்றவராக இருக்கும் திருதராஷ்டிரருக்காகவே நான் வருந்துகிறேன்.(8) ஓ! மாதவா, தேர்வீரர்களில் முதன்மையானவனும், கோபம் நிறைந்தவனும், ஆயுதங்களில் திறன்மிக்கவனும், போரில் தடுக்கப்பட முடியாதவனுமான என் மகன் {துரியோதனன்} வீரர்களின் படுக்கையில் உறங்குவதைப் பார்.(9) காலத்தால் கொண்டுவரப்பட்ட மாறுபாடுகளைப் பார். பழங்காலத்தில் மகுடம் தரித்தோர் அனைவரின் தலைகளிலும் நடந்து சென்ற இந்த எதிரிகளை எரிப்பவன், இப்போது புழுதியில் உறங்குகிறான்.(10)

வீரர்களுக்கான படுக்கையில் உறங்கும் வீரத் துரியோதனன், அடைதற்கு மிக அரிய கதியையே அடைந்திருக்கிறான் என்பதில் ஐயமில்லை.(11) முன்பு, பேரழகுப் பெண்கள் புடைசூழ அமர்ந்திருந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, இப்போது வீரர்களின் படுக்கையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு மங்கலமற்ற நரிகள் திளைக்கின்றன.(12) முன்பு, மகிழ்ச்சிப்படுத்துவதற்காக ஒருவரோடொருவர் போட்டிப் போட்டுக் கொண்ட மன்னர்களால் சூழப்பட்ட இவன், இப்போது கழுகுகளால் சூழப்பட்டுத் தரையில் கிடக்கிறான்.(13) முன்பு, அழகிய பெண்களால் அழகிய விசிறிகளைக் கொண்டு விசிறப்பட்டவன், இப்போது (ஊனுண்ணும்) பறவைகளின் சிறகடிப்பால் விசிறப்படுகிறான்.(14) பெரும் பலத்தையும், உண்மை ஆற்றலையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட இந்த இளவரசன் {துரியோதனன்}, போரில் பீமசேனனால் கொல்லப்பட்டு, சிங்கத்தால் கொல்லப்பட்ட ஒரு யானையைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறான்.(15)

ஓ! கிருஷ்ணா, பீமசேனனின் கதாயுதத்தால் கொல்லப்பட்டு, குருதியில் மறைந்து, வெறுந்தரையில் கிடக்கும் துரியோதனனைப் பார்.(16) ஓ! கேசவா, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட எவன், பதினோரு {11} அக்ஷௌஹிணி துருப்புகளைத் திரட்டினானோ, அவன் தன் தீயக் கொள்கையின் {தீய புத்தியின்} விளைவால் இப்போது கொல்லப்பட்டுக் கிடக்கிறான்.(17) ஐயோ, பெரும் வில்லாளியான, இந்த வலிமைமிக்கத் தேர்வீரன், பீமசேனனால் கொல்லப்பட்டு, சிங்கத்தால் கொல்லப்பட்ட ஒரு புலியைப் போல இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறான்.(18) அலட்சியம் செய்பவனும், மூடனுமான இந்தத் தீய இளவரசன் {துரியோதனன்}, விதுரன் மற்றும் தன் தந்தையை {திருதராஷ்டிரரை} அலட்சியம் செய்து, பெரியோரை அவமதித்ததன் விளைவாகவே மரணத்திற்கு அடிபணிந்திருக்கிறான்.(19) எவன் எந்த எதிரியுமில்லாமல் பதிமூன்று {13} ஆண்டுகள் இந்தப் பூமியை ஆண்டானோ, ஐயோ, என் மகனான அந்த இளவரசன், எதிரிகளால் கொல்லப்பட்டு இன்று வெறுந்தரையில் உறங்குகிறான்.(20)

ஓ! கிருஷ்ணா, சிறிது காலத்திற்கு முன்புதான் யானைகள், பசுக்கள் மற்றும் குதிரைகள் நிறைந்த பூமியானது, துரியோதனனால் ஆளப்படுவதை நான் கண்டேன்.(21) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இன்றோ, யானைகள், பசுக்கள் மற்றும் குதிரைகளற்று வேறொருவனால் அவள் {பூமி} ஆளப்படுவதை நான் காணப் போகிறேன். ஓ! மாதவா, நான் உயிர்வாழ வேண்டிய தேவை என்ன இருக்கிறது?(22) கொல்லப்பட்ட வீரர்களின் அருகில் இந்த அழகிய பெண்களின அழுது கொண்டிருக்கும் காட்சியே என் மகன் கொல்லப்பட்டதைக் காட்டிலும் அதிகத் துன்பத்தைத் தருவதைப் பார்.(23) ஓ! கிருஷ்ணா, லக்ஷ்மணனின் தாயும், பெரும் இடையைக் கொண்டவளும், கலைந்த கேசத்துடன் இருப்பவளும், தங்கமயமான வேள்விப்பீடத்திற்கு ஒப்பானவளுமான துரியோதனனின் அன்புக்குரிய மனைவியை {பானுமதியைப்}[1] பார்.(24) பெரும் நுண்ணறிவைக் கொண்ட இந்தக் காரிகை, தன் வலிமைமிக்கத் தலைவன் {துரியோதனன்} உயிரோடிருந்த போது, தன் தலைவனின் அழகிய கரங்களின் அணைப்பிற்குள் விளையாடிக் கொண்டிருந்தாள்.(25)

[1]  இங்கேயும், இந்தப் பகுதியில் வேறெங்கேயும் துரியோதனனுடைய மனைவியின் பெயரானது, கங்குலி, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளிலும், கும்பகோணம் பதிப்பிலும் சொல்லப்படவில்லை.

போரில் கொல்லப்பட்ட என் மகனையும், பேரப்பிள்ளையையும் கண்டும், உண்மையில் என் இதயம் நூறு துண்டுகளாக ஏன் நொறுங்கவில்லை?(26) ஐயோ, அந்தக் களங்கமற்ற மங்கை {பானுமதி}, குருதியால் மறைந்திருக்கும் தன் மகனை (மகனின் தலையை) முகர்ந்து பார்க்கிறாள். மேலும், அழகிய தொடைகளைக் கொண்டவளான அந்த மங்கை, தன் அழகிய கரத்தால் துரியோதனனின் உடலை மென்மையாகத் தடவுகிறாள்.(27) ஒரு நேரம் தன் தலைவனுக்காகவும் {துரியோதனனுக்காகவும்}, மறுநேரம் தன் மகனுக்காகவும் {லக்ஷ்மணனுக்காகவும்} அவள் {பானுமதி} கவலையுறுகிறாள். ஒரே நேரம் அவள் தன் தலைவனையும், மறுநேரம் தன் மகனையும் பார்க்கிறாள்.(28) ஓ! மாதவா, தன் கரங்களால் தன் தலையை அடித்துக் கொண்டு, குருக்களின் மன்னனான தன் வீரத் துணைவனின் மார்பில் அவள் விழுவதைப் பார்.(29) தாமரையின் இதழ்களைப் போன்ற நிறத்தைக் கொண்டவளான அவள், ஒரு தாமரையைப் போலவே அழகாக இருக்கிறாள். நற்பேறற்ற அந்த இளவரசி இப்போது தன் மகனின் முகத்தையும், இப்போது தன் தலைவனின் முகத்தையும் தடவுகிறாள்.(30) சாத்திரங்களும், சுருதிகளும் உண்மையென்றால், ஆயுதப் பயன்பாட்டால் ஒருவன் வெல்லும் (அருள் நிறைந்த) உலகங்களையும் இந்த மன்னனும் {துரியோதனனும்} அடைந்திருப்பான் என்பதில் ஐயமில்லை" என்றாள் {காந்தாரி}.(31)

ஸ்திரீ பர்வம் பகுதி – 17ல் உள்ள சுலோகங்கள் : 31

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்