Monday, October 16, 2017

சகுனியிடம் அச்சங்கொள்கிறேன்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 24

I fear Shakuni! | Stri-Parva-Section-24 | Mahabharata In Tamil

(ஸ்திரீவிலாப பர்வம் - 09) [ஸ்திரீ பர்வம் - 15]


பதிவின் சுருக்கம் : பூரிஸ்ரவஸ், சோமதத்தன் மற்றும் சகுனி ஆகியோர் இறந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; பூரிஸ்ரவஸின் தாய் மற்றும் அவனது மனைவியர் ஆகியோரின் அழுகையை விவரித்துச் சொன்னது; சகுனி இறந்தாலும், அவனைக் குறித்து அஞ்சுவதாகக் கிருஷ்ணனிடம் சொன்ன காந்தாரி ...


காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "யுயுதானனால் {சாத்யகியால்} கொல்லப்பட்ட சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, பெரும் எண்ணிக்கையிலான பறவைகளால் கொத்திக் கிழிக்கப்படுவதைப் பார்.(1) ஓ! ஜனார்த்தனா, (அங்கே கிடக்கும்) சோமதத்தன், தன் மகனின் மரணத்தால் துயரில் எரிந்து பெரும் வில்லாளியான யுயுதானனை {சாத்யகியை} நிந்தித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.(2) களங்கமற்ற பெண்ணும், துயரில் மூழ்கிருப்பவளுமான பூரிஸ்ரவஸின் தாய், அங்கே தன் தலைவன் சோமதத்தனிடம்,(3) "ஓ! மன்னா, யுகமுடிவில் நேரும் காட்சிகளுக்கு ஒப்பான குருக்களின் நிர்மூலத்தையும், பாரதர்களுக்கு ஏற்பட்ட இந்தப் பேரழிவையும் நீர் காணாதது நற்பேற்றாலேயே.(4) கொடியில் வேள்விக்கம்பத்தை {யூபத்தைக்} கொண்டவனும், அனைவருக்கும் பெருங்கொடைகள் கொடுக்கப்பட்ட எண்ணற்ற வேள்விகளைச் செய்தவனுமான உமது வீர மகன் {பூரிஸ்ரவஸ்} போர்க்களத்தில் கொல்லப்படுவதை நீர் காணாததும் நற்பேற்றாலேயே.(5)


கடலுக்கு மத்தியில் நாரைக்கூட்டம் கதறுவதைப் போல, இந்தப் பேரழிவுக்கு மத்தியில் அச்சம்நிறைந்திருப்பவர்களான உமது மருமகள்கள் துயரத்துடன் கதறுவதை நீர் கேட்காததும் நற்பேற்றாலேயே.(6) ஒற்றையாடை உடுத்தியிருப்பவர்களும், கருகுழல்கள் கலைந்தவர்களும், கணவர்கள் மற்றும் மகன்களை இழந்தவர்களான உமது மருமகள்கள், அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(7) அர்ஜுனனால் வீழ்த்தப்பட்டுக் கரங்களை இழந்தவனும், உமது மகனுமான அந்த மனிதர்களில் புலி {பூரிஸ்ரவஸ்}, இரைதேடும் விலங்குகளால் இப்போது விழுங்கப்படுவதை நீர் காணாதது நற்பேற்றாலேயே.(8) போரில் கொல்லப்பட்ட உமது மகன் சலனையும், உயிரை இழந்த பூரிஸ்ரவஸையும், துயரில் மூழ்கி விதவைகளாகியிருக்கும் உமது மருமகள்களையும் இன்று நீர் காணாதது உமது நற்பேற்றாலேயே.(9) வேள்விக்கம்பத்தைத் தன் கொடிமரத்தில் கொண்டிருந்த அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரனின் தங்கக் குடை கிழிக்கப்பட்டு, அவனது தேர்த்தட்டில் நொறுக்கப்பட்டிருப்பதை நீர் காணாததும் நற்பேற்றாலேயே" என்கிறாள் {பூரிஸ்ரவஸின் தாய்}.(10)

பூரிஸ்ரவஸின் கருங்கண் மனைவியர், சாத்யகியால் கொல்லப்பட்ட தங்கள் தலைவனைச் சூழ்ந்து கொண்டு அங்கே பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.(11) ஓ! கேசவா {கிருஷ்ணா}, தங்கள் தலைவன் கொல்லப்பட்ட துயரால் பீடிக்கப்பட்டு, பயங்கரப் புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அம்மங்கையர், தரையை நோக்கிய முகங்களுடன் பூமியில் விழுந்து, மெதுவாக உன்னை அணுகுகின்றனர். அவர்கள்,(12) "ஐயோ, தூய செயல்பாடுகளைக் கொண்ட அர்ஜுனன், வேள்வி செய்வதில் அர்ப்பணிப்புள்ளவரான இந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர் {பூரிஸ்ரவஸ்} கவனமில்லாமல் இருந்தபோது, அவரது கரங்களைத் தாக்கி வீழ்த்தி இத்தகு நிந்திக்கத்தக்க செயலை ஏன் செய்தான்? ஐயோ, பிராய நோன்பை நோற்று அமர்ந்திருந்தவரும், தன்னடக்கம் கொண்டவருமான அந்த மனிதரின் உயிரை எடுத்ததன் மூலம் சாத்யகி இன்னும் அதிகப் பாவத்தைச் செய்திருக்கிறான்.(14) ஐயோ, ஓ! நேர்மையாளரே {அறவோனே}, நியாயமற்ற {அதர்மமான} முறையில் இரண்டு எதிரிகளால் கொல்லப்பட்டு, நீர் தரையில் கிடக்கிறீர்" என்கின்றனர். ஓ! மாதவா, பூரிஸ்ரவஸின் இரு மனைவியரும் இவ்வாறே துயரத்தால் உரக்க அழுகின்றனர்.(15)

அங்கே, கொடியிடை கொண்டோரான அந்தப் போர்வீரனின் மனைவியர், வெட்டப்பட்ட தன் தலைவனின் கரத்தைத் தங்கள் மடியில் வைத்துக் கொண்டு கடுமையாக அழுகின்றனர்.(16) அவர்களில் ஒருத்தி, "அழகிய பெண்களின் இடுப்புக்கச்சைக்குள் புகுந்து, பருத்த முலைகளைக் கசக்கி, தொப்பு, தொடைகள் மற்றும் இடைகளைத் தீண்டி, அவர்களால் உடுத்தப்படும் அரைக்கச்சின் முடிச்சுகளைத் தளர்த்தும் அந்தக் கரம் இதோ.(17) எதிரிகளைக் கொன்று, நண்பர்களின் அச்சத்தை அகற்றி, ஆயிரம் பசுக்களைக் கொடையளித்து, போரில் க்ஷத்திரியர்களை நிர்மூலமாக்கிய அந்தக் கரம் இதோ.(18) களங்கமில்லாச் செயல்களைச் செய்யும் அர்ஜுனன், வேறொருவருடன் போரிட்டுக் கவனமில்லாமல் இருந்த உமது கரத்தை, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வெட்டினான்.(19) ஓ! ஜனார்த்தனா, சபைகளுக்கு மத்தியில் பேசும்போது, அர்ஜுனனின் இந்தப் பெரும் சாதனையை எவ்வாறு நீ சொல்லப் போகிறாய்? அந்தக் கிரீடியே {அர்ஜுனனே} கூட என்ன சொல்லப் போகிறான்?" என்கிறாள்.(20) அந்தப் பெண்களில் முதன்மையானவள் {தன் புலம்பல்களை}, உன்னை இவ்வாறு நிந்தித்துவிட்டு, இறுதியாக நிறுத்திக் கொண்டாள். அந்தப் பெண்மணியின் சக்காளத்திகள், அவள் ஏதோ தங்கள் மருமகளைப் போல அவளுடன் சேர்ந்து பரிதாபகரமாக ஒப்பாரியிடுகின்றனர்.(21)

கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்டவனும், காந்தாரர்களின் தலைவனுமான வலிமைமிக்கச் சகுனி, சகோதரியின் மகனால் கொல்லப்படும் தாய்மாமனாக, சகாதேவனால் கொல்லப்பட்டு இதோ கிடக்கிறான்.(22) முன்பெல்லாம் தங்கக் கைப்பிடிகளைக் கொண்ட இரு விசிறிகளால் இவன் எப்போதும் விசிறப்படுவான். ஐயோ, இப்போது நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் அவன் {சகுனி}, பறவைகளின் சிறகடிப்பால் விசிறப்படுகிறான்.(23) இவன் {சகுனி} நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வடிவங்களை ஏற்பவனாவான். எனினும், பெரும் மாயசக்திகளைக் கொண்ட இவனது மாயைகள் அனைத்தும், பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} சக்தியால் எரிக்கப்பட்டுவிட்டன.(24) வஞ்சகத்தில் திறன்மிக்க அவன் {சகுனி}, தன் மாய சக்தியால் சபையில் யுதிஷ்டிரனை வென்று, பரந்த நாட்டை வென்றான். எனினும், இப்போது அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} சகுனியின் உயிர்மூச்சையே வென்றுவிட்டான்.(25)

ஓ! கிருஷ்ணா, பெரும் எண்ணிக்கையிலான பறவைகள் இப்போது சகுனியைச் சுற்றி அமர்ந்திருப்பதைப் பார். பகடையில் திறன் மிக்க இவன் {சகுனி}, ஐயோ, அத்திறனை என் மகன்களின் அழிவுக்காகவே அடைந்திருக்கிறான்.(26) என் பிள்ளைகளுக்கும், இந்தச் சகுனிக்கும், இவனைப் பின்தொடர்ந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் அழிவை உண்டாக்கிய பாண்டவர்களுடனான இந்தப் பகைமையெனும் நெருப்பு இவனாலேயே {இந்தச் சகுனியாலேயே} தூண்டப்பட்டது.(27) ஓ! பலமிக்கவனே, ஆயுதம் பயன்படுத்துவதன் மூலம் என் மகன்கள் அடைந்ததைப் போலவே, தீயவனாக இருப்பினும், ஆயுதங்களைப் பயன்படுத்தி {அழிந்ததால்} அருள் உலகங்கள் பலவற்றை இவனும் அடைந்துவிட்டான்.(28) ஓ! மதுசூதனா, இந்தக் கோணல்புத்திக்காரன் {சகுனி}, நம்பிக்கையுள்ளவர்களும், பாகுபாடற்றவர்களுமான என் பிள்ளைகளுக்குள், அங்கேயும் சச்சரவை உண்டாக்கி விடக்கூடாதே என்பதே என் அச்சமாக இருக்கிறது" என்றாள் {காந்தாரி}.(29)

ஸ்திரீ பர்வம் பகுதி – 24ல் உள்ள சுலோகங்கள் : 29

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்