Wednesday, December 20, 2017

போரில் கொலையே அறம்! - சாந்திபர்வம் பகுதி – 55

Slaughter is war virtue! | Shanti-Parva-Section-55 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 55)


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைக் கொண்டாடிய பீஷ்மர்; உறவினர்களின் கொலைக்குக் காரணமாக அமைந்ததால் யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் பேச நாணுவதாகத் தெரிவித்த கிருஷ்ணன்; போரில் கொலையே அறமெனச் சொன்ன பீஷ்மர்; பீஷ்மரை வணங்கிய யுதிஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெரும் சக்தியுடன் கூடியவரும், குருக்களைத் திளைக்கச் செய்பவருமான அவர் (பீஷ்மர்), "கடமைகள் {தர்மங்கள்} குறித்து நான் உரையாடப் போகிறேன். ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, அனைத்துப் பொருளின் நித்திய ஆன்மாவாக நீயே இருப்பதால், உன் அருளின் மூலம் என் பேச்சும், மனமும் உறுதியடைந்திருக்கின்றன.(1) அற ஆன்மாவான யுதிஷ்டிரன், அறநெறி மற்றும் கடமை குறித்து என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும். அதனால் நிறைவடைந்து கடமைகள் அனைத்தையும் குறித்து நான் பேசுவேன்.(2)


எவன் பிறப்பால் விருஷ்ணிகள் அனைவரும் மகிழ்ச்சியில் நிறைந்தனரோ அந்த நல்ல பேரான்மா கொண்ட அரச முனியான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(3) குருக்கள் அனைவரின் மத்தியிலும், நன்னடத்தைக் கொண்டோர் அனைவரின் மத்தியிலும், பெரும் புகழைக் கொண்டோர் அனைவரின் மத்தியிலும் எவனுக்கு இணையில்லையோ அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(4) நுண்ணறிவு, தற்கட்டுப்பாடு, பிரம்மச்சரியம், மன்னிக்கும் தன்மை {பொறுமை}, நீதி, மனோபலம் மற்றும் சக்தி ஆகியன எவனிடம் உண்டோ அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(5)

உறவினர்கள், விருந்தினர்கள், பணியாட்கள், தன்னை நம்பியிருக்கும் பிறர் ஆகியோரிடம் எப்போதும் நல்ல செல்வாக்கு எவனிடம் உண்டோ அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(6) உண்மை, ஈகை, தவம், வீரம், அமைதி, புத்தி, அச்சமின்மை ஆகியவை எவனிடம் உண்டோ, அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(7) இன்பத்திலுள்ள விருப்பம், ஆதாயம், அச்சம் ஆகியவற்றின் ஆதிக்கத்தால் ஒரு போதும் எவன் எந்தப் பாவத்தையும் இழைக்கவில்லையோ அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(8) உண்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, அறிவு ஆகியவற்றிற்கும், விருந்தினர்களுக்கும் எப்போதும் எவன் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, நல்லோருக்கு எப்போதும் எவன் கொடையளிக்கிறானோ, அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(9) வேள்விகள், வேத கல்வி, அறநெறி நடைமுறை, கடமை ஆகியவற்றில் எப்போதும் எவன் ஈடுபடுகிறானோ, எவன் எப்போதும் அமைதி நிறைந்தனவோ, எவன் புதிர்கள் {சாத்திரங்கள்} அனைத்தையும் கேட்டிருக்கிறானோ, அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்" என்றார் {பீஷ்மர்}.(10)

வாசுதேவன் {கிருஷ்ணன் பீஷ்மரிடம்}, "நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர், பெரும் வெட்கமடைந்தும், (உமது) சாபத்திற்கு அஞ்சியும், உம்மை அணுகத் துணியவில்லை.(11) ஓ! ஏகாதிபதி {பீஷ்மரே}, அந்தப் பூமியின் தலைவர் {யுதிஷ்டிரர்}, பெரும் படுகொலைகளை ஏற்படுத்திவிட்டதால், (உமது) சாபத்திற்கு அஞ்சி உம்மை அணுகத் துணியவில்லை.(12) தமது வழிபாட்டிற்கு உரியோரையும், தம்மிடம் அர்ப்பணிப்புமிக்கோரையும், தமது ஆசான்களையும், தமது உறவினர்கள், சொந்தங்களையும், உயர்ந்த மதிப்புக்குத் தகுந்தோரையும் தமது கணைகளால் துளைத்திருப்பதால், அவர் உம்மை அணுகத் துணியவில்லை" என்றான்.(13)

பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கிருஷ்ணா, பிராமணர்களுக்கு ஈகை, கல்வி, தவம் ஆகியவை கடமையானதைப் போலவே, க்ஷத்திரியர்களுக்குப் போரில் தங்கள் உடல்களைக் கைவிடுவது கடமையாகும்.(14) நீதியற்ற முறையில் போரில் ஈடுபடும் தந்தைமார், பாட்டன்மார், சகோதரர்கள், ஆசான்கள், உறவினர்கள், சொந்தங்கள் ஆகியோரை ஒரு க்ஷத்திரியன் கொல்லவே வேண்டும். இஃது அவர்களுக்கான அறிவிக்கப்பட்ட கடமையாகும்.(15) ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாவம் நிறைந்தவர்களும், பேராசை கொண்டவர்களும், கட்டுப்பாடுகள் மற்றும் நோன்புகளில் அலட்சியம் நிறைந்தவர்களும் போர் தொடுத்து வந்தால், அவர்கள் தன் ஆசான்களேயானாலும், அவர்களைப் போரில் கொல்லும் க்ஷத்திரியன், தன் கடமையை அறிந்தவன் என்றே சொல்லப்படுகிறான்.(16)

பேராசையினால் நித்திய அறவரம்புகளை அலட்சியம் செய்யும் எந்த மனிதனையும் போரில் கொல்லும் க்ஷத்திரியன், தன் கடமையை அறிந்தவன் என்றே சொல்லப்படுகிறான்.(17) கொல்லப்பட்ட போர்வீரர்களின் தலை முடிகளையே புற்களாகவும், யானைகளைப் பாறைகளாகவும், கொடிமரங்களையே கரைகளின் மரங்களாகவும் கொண்ட குருதித் தடாகத்தைப் போரில் பூமியில் உண்டாக்கும் க்ஷத்திரியன் தன் கடமையை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(18) நியாயமான போர் சொர்க்கத்துக்கும், பூமியில் புகழுக்கும் வழிவகுக்கும் என மனு சொல்வதால், போருக்கு அறைகூவி அழைக்கப்படும் ஒரு க்ஷத்திரியன், எப்போதும் போரில் ஈடுபடவே வேண்டும்" என்றார் {பீஷ்மர்}".(19)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பீஷ்மர் இவ்வாறு பேசியதும், தர்மனின் மகனான யுதிஷ்டிரன், பெரும்பணிவுடன் அந்தக் குரு வீரரை அணுகி, அவரது பார்வைக்கெதிரில் நின்றான்.(20) அவன் பீஷ்மரின் பாதத்தைப் பற்றினான். அவர் பாசமிகு வார்த்தைகளால் அவனைப் பதிலுக்குத் திளைக்கச் செய்தார். பீஷ்மர் யுதிஷ்டிரனை உச்சிமுகர்ந்து அவனை அமரச் சொன்னார். பிறகு வில்லாளிகளில் முதன்மையான அந்தக் கங்கையின் மைந்தர், யுதிஷ்டிரனிடம், "ஓ! குருக்களில் சிறந்தவனே, அஞ்சாதே. ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, எந்தக் கவலையுமின்றி என்னிடம் கேள்வி கேட்பாயாக" என்றார்".(22)

சாந்திபர்வம் பகுதி – 55ல் உள்ள சுலோகங்கள் : 22

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்