Thursday, January 03, 2013

பர்வத் திரட்டு! | ஆதிபர்வம் - பகுதி 2 ஆ

Sangraha Parva! | Adi Parva - Section 2b | Mahabharata In Tamil

(பர்வசங்கிரகப் பர்வம்)

பதிவின் சுருக்கம் : இரண்டவது பர்வமான சபாபர்வம் சுருக்கம்; மூன்றாவது பர்வமான வன பர்வம் சுருக்கம்; அதன் பிறகு வரும் விராட பர்வ சுருக்கம் ...

பாண்டவர்களைச் சூதாடி வஞ்சிக்கும்
துரியோதனனும் சகுனியும்
இரண்டாவதாக வரும் நீண்ட சபா பர்வமானது பொருள் நிறைந்ததாகும். இந்தப் பர்வத்தில் வரும் நிகழ்வுகளாவன: பாண்டவர்கள் நிறுவிய அரசவையும் {சபா மண்டபம்}, அவர்களுடன் தொடர்புடையோரின் மதிப்புரைகளும்;(133) தேவலோகங்களை நன்கறிந்தவரான நாரதரின் லோகபாலகர்கள் குறித்த வர்ணனை; ராஜசூய வேள்விக்கான ஆயத்தம்; ஜராசந்த வதம்;(134) மலையடிவாரத்தில் {மகதத்தின் தலைநகரான கிரிவ்ரஜம் [மலையடிவாரம்]} அடைபட்டுக் கிடந்த இளவரசர்களை வாசுதேவன் {கிருஷ்ணன்} விடுதலை செய்வது; பாண்டவர்களின் உலகளாவிய படையெடுப்புகள்;(135) ராஜசூய வேள்விக்குக் காணிக்கையோடு வந்த பிற இளவரசர்களின் வருகை; வேள்வியின் போது ஆர்கியம் அளித்தல் தொடர்பாகச் சிசுபாலன் கொல்லப்படுவது;(136) சபையில் துரியோதனனைப் பீமன் கேலி செய்வது; பெருமளவில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைக் கண்டு துரியோதனன் அடையும் பொறாமையும், கவலையும்; துரியோதனனின் உளக்கொதிப்பும்,(137) பகடையாட்டத்திற்கான ஆயத்தங்களும்; வஞ்சகன் சகுனியுடனான ஆட்டத்தில் {சூதாட்டத்தில்} யுதிஷ்டிரன் தோல்வியுறல்;(138) திருதராஷ்டிரன், புயலின் அலைகளால் கலங்கடிக்கப்பட்ட படகைப் போலச் சூதாட்டத்தால் விளைந்த துன்பக்கடலில் மூழ்கியிருந்த தன் மருமகள் திரௌபதியைத் துன்பத்தில் இருந்து விடுவித்தல்.(139) யுதிஷ்டிரனை மீண்டும் சூதாட வைக்கத் துரியோதனன் செய்த முயற்சி;(140) {சூதாட்டத்தில்} வீழ்த்தப்பட்ட யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் வனவாசம் புகுதல். பெரும் வியாசரால் தொகுக்கப்பட்ட சபா பர்வம் இவற்றால் {இந்தச் சம்பவங்களால்} ஆனதே.(141) இந்தப் பர்வமானது எழுபத்தி எட்டு {78}[3] பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஓ பிராமணர்களில் சிறந்தோரே, இரண்டாயிரத்தி ஐநூற்றி ஏழு {2507} பாடல்களுடன் {சுலோகங்களுடன்} உள்ளது.

[3] கங்குலியின் பதிப்பில் சபாபர்வத்தில் 80 பகுதிகளும், 2708 சுலோகங்களும் உள்ளன.

அதன்பிறகு மூன்றாவதாக வருவது (காடு தொடர்பான) ஆரண்யகம் என்றழைக்கப்படும் பர்வம் ஆகும்.(142,143) இந்தப் பர்வத்தில் பாண்டவர்கள் காட்டுக்குச் செல்வதும், ஞானியான யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து குடிமக்கள் செல்வதும்,(144) தன்னைச் சார்ந்திருக்கும் பிராமணர்களுக்கு உணவும், நீரும் அளிக்கத் தௌமியரின் சொல் கேட்டு யுதிஷ்டிரன் நாளின் தேவனை {சூரியனைத்} துதித்தலும் சொல்லப்பட்டுள்ளது; சூரியனின் அருளால் உணவை உண்டாக்குவது; தலைவனின் நன்மைக்காகவே எப்போதும் பேசும் விதுரனை திருதராஷ்டிரன் வெளியேற்றுதல்;(145,146) விதுரன் பாண்டவர்களிடம் வந்ததும், பின்னவர்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் மீண்டும் அவன் திரும்பச் சென்றதும்;(147) காட்டில் வாழ்ந்துவரும் பாண்டவர்களை அழிக்க, கர்ணனின் தூண்டுதலின் பேரில் துரியோதனன் திட்டம் தீட்டுவது;(148) வியாசர் வருவதும், காட்டுக்குப் போகும் துரியோதனனைத் தடுத்தலும்; சுரபியின் வரலாறு;(149) மைத்திரேயரின் வரவு; அவர் திருதராஷ்டிரனுக்கு விதித்த நடைமுறையும்; துரியோதனனுக்கு அவர் அளித்த சாபமும்;(150) போரில் பீமன் கிர்மீரனைக் கொல்வது; சகுனியால் சூதாட்டத்தில் வஞ்சகமாக யுதிஷ்டிரன் வீழ்த்தப்பட்டதைக் கேட்டுப் பாஞ்சாலர்களும், விருஷ்ணி குலத்தின் இளவரசர்களும் வருவது; கிருஷ்ணனின் கோபத்தைத் தனஞ்சயன் {அர்ஜுனன்} தணிப்பது;(151,152) மாதவனிடம் {கிருஷ்ணனிடம்} திரௌபதி அழுது புலம்புவது; கிருஷ்ணன் அவளுக்கு உற்சாகமூட்டுவது;(153) {வியாச} முனிவரால் இங்கே சௌபனின் வீழ்ச்சியும் விளக்கப்படுகிறது; கிருஷ்ணன் சுபத்திரையையும், அவள் பிள்ளையையும் {அபிமன்யுவையும்} துவாரகைக்கு அழைத்துப் போவது;(154) திருஷ்டத்யும்னன் திரௌபதியின் மகனை பாஞ்சாலம் அழைத்துப் போவது; அழகான துவைத வனத்திற்குப் பாண்டுவின் மைந்தர்கள் செல்வது;(155) பீமன், யுதிஷ்டிரன், திரௌபதி விவாதம்;(156) பாண்டவர்களிடம் வியாசரின் வருகை, பிராதிசிம்ரிதி என்ற சக்தியை அவர் யுதிஷ்டிரனுக்கு அளித்தல்;(157) அதன்பிறகு, வியாசர் புறப்பாடு, பாண்டவர்கள் காம்யக வனம் செல்வது; சக்தி வாய்ந்த ஆயுதங்களை {அஸ்திரங்களைத்} தேடி அர்ஜுனன் அலைவது;(158) வேடுவ ரூபத்தில் இருக்கும் மகாதேவனுடன் {சிவனுடன்} அர்ஜுனன் போர்புரிவது; லோகபாலகர்களைச் சந்தித்து, அவர்களிடம் இருந்து ஆயுதங்களைப் பெறுவது;(159) அவனது {அர்ஜுனனின்} இந்திரலோகப் பயணமும், அதன் விளைவாகத் திருதராட்டிரன் அடைந்த கவலையும்;(160) வழிபடத்தக்க பெருமுனிவர் பிருகதஸ்வரைச் சந்திக்கும் போது, அவரிடம் யுதிஷ்டிரனின் அழுகையும், துயருரைப்பும் விளக்கப்படுகிறது.(161)

இந்த இடத்தில்தான் புனிதமானதும், மிகத்துயர்நிறைந்ததும், தமயந்தியின் பொறுமையையும், நளனின் குணத்தையும் எடுத்துரைப்பதுமான நளனின் கதை சொல்லப்படுகிறது.(162) அதே பெருமுனிவரிடம் இருந்து யுதிஷ்டிரன் பகடையின் (சூதாட்டத்தின்) புதிர்களை {இரகசியம்} அறிவது; அதன்பிறகு, மேலுலகிலிருந்து பாண்டவர்கள் இருந்த இடத்திற்குப் பெருமுனி லோமசர் வருகை,(163) சகோதரன் அர்ஜுனன் சொர்க்கத்தில் இருப்பதைத் தெரிவித்த முனிவரை, அந்த உயர் ஆன்ம காட்டுவாசிகள் {பாண்டவர்கள்} வரவேற்றது;(164) புனிதப் பயணம் மேற்கொள்ளும் பாண்டவர்கள், பல்வேறு புண்ணியத்தலகளுக்குச் செல்வது;(165) பிறகு பெருமுனிவர் நாரதர் புண்ணியத்தலமான புடஸ்டாவுக்குப் புனிதப் பயணம் செல்வதும்; உயர் ஆன்மப் பாண்டவர்களின் புனிதப் பயணமும்.(166) இங்கேதான் இந்திரன் கர்ணனிடம் காதணிகளை வாங்குவது விளக்கப்படுகிறது. மேலும் இங்கேதான் கயனின் வேள்வி மகத்துவம் விளக்கப்படுகிறது.(167)

பிறகு அசுரன் வாதாபியை அகத்தியர் உண்பதும், வாரிசு பெறும் விருப்பத்தால் லோபாமுத்திரையைத் திருமணம் செய்வதும் சொல்லப்பட்டுள்ளது.(168) பிறகு பிள்ளைப் பருவம் முதலே ரிஷ்யசிருங்கர் பிரம்மச்சரிய வாழ்வை ஏற்ற கதை சொல்லப்படுகிறது; பிறகு ஜமதக்னி முனிவரின் மைந்தனும், பேராற்றல் கொண்டவருமான இராமரின் {பரசுராமரின்} வரலாறும்,(169) கார்த்தவீரியன் மற்றும் ஹைஹயர்களின் மரணமும் விளக்கப்படுகிறது; பிரபாசம் என்றழைக்கப்படும் புனிதத்தலத்தில் பாண்டவர்களும், விருஷ்ணிகளும் சந்திப்பது;(170) பிருகு முனிவரின் மைந்தனான சியவனன், சர்யாதி மன்னனின் வேள்வியில் அசுவினி இரட்டையர்களைச்
{மற்ற தேவர்களால் அவர்களுக்கு விலக்கப்பட்டிருந்த} சோம பானம் அருந்தச் செய்த நிகழ்வுடன் கூடிய சுகன்யாவின் கதையும், (அதன் மூலம் நன்றியுடன் கூடிய அசுவினி இரட்டையர்களிடம் இருந்து வரமாக) முடிவில்லாத இளமையைச் சியவனன் பெறுவதும் சொல்லப்படுகிறது[4]. பிறகு மன்னன் மாந்தாதாவின் வரலாறு விளக்கப்படுகிறது;(171,172) பிறகு ஜந்துவின் வரலாறு; மன்னன் சோமகன், தன் ஒரே மகனை (ஜந்துவை) வேள்வியில் காணிக்கையாக்கி, நூறு மகன்களை அடைந்தது;(173) பிறகு பருந்து மற்றும் புறாவின் அற்புத வரலாறு; இந்திரன், அக்னி மற்றும் தர்மனால் சோதிக்கப்படும் மன்னன் சிபி {சிபிச்சக்கரவர்த்தி};(174) வருணனின் மகனும், ஏரணவியலாளருமான {தர்க்கவியலாளருமான} வந்தினுக்கும், அஷ்டவக்கிர முனிவருக்கும் இடையில் ஜனகரின் வேள்வியில் நடக்கும் சச்சரவு;(175.176) பெரும் அஷ்டவக்கிரனால் வந்தின் {வாதில்} வீழ்த்தப்படுவதும், பெருங்கடலின் ஆழத்தில் இருந்து அம்முனிவரின் தந்தை விடுதலையடைவதும்.

[4] கும்பகோணம் பதிப்பில் இந்த இடத்தில், “பிருகுபுத்திரராகிய ச்யவனமுனி சர்யாதிமுனிவருடைய யாகத்தில் அசுவினிதேவர்களுக்கு ஸோம்பானம் செய்வித்ததையும், அசுவினிதேவர்கள் இந்தச் சியவனமுனிக்கு யௌவனம் கொடுத்ததையும் பற்றிய ஸுகன்னியின் உபாக்கியானமும், மாந்தாதாவென்னும் ராஜாவின் உபாக்கியானமும் இதிற்சொல்லப்பட்டிருக்கின்றன” என்றிருக்கிறது.

பிறகு யவக்கிரீதியின் கதை மற்றும் பெரும் ரைவ்யனின் கதை;(177) பிறகு கந்தமாதனத்திற்குப் புறப்பட்டு (பாண்டவர்கள்) நாராயண ஆசிரமத்தைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டது; திரௌபதியின் வேண்டுகோளுக்கிணங்க கந்தமாதனத்தில் (இனிய நறுமணமிக்க மலரைத்தேடி) பீமன் மேற்கொள்ளும் பயணம்.(178) பீமன் தன் வழியில், ஒரு வாழைத்தோப்பில் வைத்து பெரும் ஆற்றலைக் கொண்ட பவனனின் மகனான {வாயு மைந்தன்} அனுமானைச் சந்திப்பது;(179) பீமன் தடாகத்தில் குளித்து, (தான் தேடி வந்த) நறுமணமிக்க மலருக்காகப் பிற மலர்களைப் அழிப்பது; வலிமிக்க ராட்சசர்களுடன் அவன் {பீமன்} போரிடுவது(180), பெரும் ஆற்றலைக் கொண்ட மணிமான் மற்றும் பிற யக்ஷர்களுடன் அவன் போரிடுவது; பீமன் அசுரன் ஜடனை அழிப்பது;(181) அரசமுனியான விருஷபர்வனை (பாண்டவர்கள்) சந்திப்பது; ஆர்ஷ்டிசேனரின் ஆசிரமத்திற்குப் புறப்பட்டு, அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொள்வது;(182) (பழிதீர்ப்பதற்காக) திரௌபதியால் தூண்டப்படும் பீமன். பிறகு, கைலாச மலைச்சரிவில், மணிமான் தலைமையிலான வலிமைமிக்க யக்ஷர்களுடன் பீமசேனன் பயங்கரமாகப் போரிடுவது சொல்லப்படுகிறது; பிறகு வைஸ்ரவணனுடன் (குபேரனுடன்) பாண்டவர்கள் சந்திப்பதும், யுதிஷ்டிரனின் காரியத்திற்காகப் பல தெய்வீக ஆயுதங்களை அடைந்து வந்த அர்ஜுனனைச் சந்திப்பதும்;(183,184) ஹிரண்யபுரத்தில் வசிக்கும் நிவாதகவசர்களுடன் அர்ஜுனன் பயங்கரமாக மோதுவது;(185) பௌலோமர்கள் மற்றும் காலகேயர்களுடனும் மோதுவது; அர்ஜுனன் கரங்களில் அவர்களுக்கு ஏற்படும் அழிவு;(186) யுதிஷ்டிரனின் முன்னிலையில் தெய்வீக ஆயுதங்களைக் காட்சிப்படுத்தத் தொடங்கும் அர்ஜுனனும், அதைத் தடுத்த நாரதரும்;(187) கந்தமாதனத்தில் இருந்து பாண்டவர்கள் இறங்குவது; காட்டில் மலையைப் போன்ற பெரும்பாம்பொன்றிடம் {நகுஷனிடம்} பீமன் அகப்படுவது;(188) குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு யுதிஷ்டிரன் பதிலளித்ததும், அந்தப் பாம்பின் சுருளில் இருந்து {பீமன்} விடுபடுவது;(189) காம்யக வனத்திற்குப் பாண்டவர்கள் திரும்புவது.

இங்கேதான் வலிமைமிக்கப் பாண்டுவின் மகன்களை வாசுதேவன் {கிருஷ்ணன்} மீண்டும் சந்திப்பது விளக்கப்படுகிறது; மார்க்கண்டேயரின் வருகையும், அவரால் பல்வேறு கதைகள் உரைக்கப்படுதலும்(190,191), அந்தப் பெரும் முனிவரால் வேனனின் மகனான பிருதுவின் வரலாறு உரைக்கப்படுகிறது; சரஸ்வதி மற்றும் முனிவர் தார்க்ஷியரின் கதைகளும் உரைக்கப்படுகின்றன.(192) இதன் பிறகு, மத்ஸ்யத்தின் {மீனின்} கதை; மற்றும் பிற பழங்கதைகளை மார்க்கண்டேயர் உரைப்பது;(193) இந்திரத்யும்னன் மற்றும் துந்துமாரனின் கதைகள்; பிறகு கற்புடைய மனைவியின் வரலாறு; அங்கிரஸின் வரலாறு;(194) திரௌபதி மற்றும் சத்யபாமா சந்திப்பும், உரையாடலும்; துவைதவனத்திற்குப் பாண்டவர்கள் திரும்புவது;(195) கன்றுகளைக் கணக்கெடுத்தலும் {கோஷயாத்திரையும்}, துரியோதனன் கைப்பற்றப்படுவதும்; அந்தப் பொல்லாதவன் தூக்கிச் செல்லப்படும்போது அர்ஜுனன் அவனை மீட்பது;(196) யுதிஷ்டிரனின் மான் கனவு; பாண்டவர்கள் மீண்டும் காம்யக வனத்திற்குள் நுழைவதும்,(197) விரீஹித்ரௌணிகம் எனும் நெடுங்கதையும் இங்கே சொல்லப்படுகிறது. இங்கே துர்வாசரின் கதை உரைக்கப்படுகிறது;(198)

பிறகு ஆசிரமத்திலிருந்து ஜெயத்ரதனால் திரௌபதி அபகரிக்கப்படுவது; கடத்தியவனைப் பின்தொடர்ந்து சென்று பிடித்து, அவனது முடியை பீமன் சிரைப்பது ஆகியன இங்கே உரைக்கப்படுகின்றன. ராமன் தன் ஆற்றலால் எவ்வாறு போரில் ராவணனைக் கொன்றான் என்ற ராமனின் நெடும் வரலாறு இங்கே சொல்லப்படுகிறது. இங்கே சாவித்ரியின் கதையும் சொல்லப்படுகிறது;(199-201), இந்திரன் கர்ணனின் குண்டலங்களைப் பெற்று அதற்குப் பதிலாக, வீசப்பட்டால் ஒருவனை மட்டும் நிச்சயம் கொல்லக்கூடிய சக்தி ஆயுதத்தைக் கொடுப்பது.(202) (நீதி தேவன்) தர்மன் {யமன்} தன் மகனுக்கு (யுதிஷ்டிரனுக்கு) அறிவுரை வழங்கிய ஆரண்யம் என்றழைக்கப்படும் கதை; வரத்தை அடைந்து மேற்கு நோக்கிச் செல்லும் பாண்டவர்கள் இங்கு விவரிக்கப்படுகின்றனர்.(203) இவையே மூன்றாவது பர்வமான ஆரண்யக பர்வத்தில் வருவன. இருநூற்று அறுபத்து ஒன்பது {269} பகுதிகளுக்குள்[5] பதினோராயிரத்து அறுநூற்று அறுபத்து நாலு {11664} பாடல்களைக் {சுலோகங்களைக்} கொண்டது இந்தப் பர்வம்.

[5] கங்குலியில் வனபர்வத்தில் 313 பகுதிகள் இருக்கின்றன.

அதன்பிறகு வருவது விரிவானதும், விராடம் என்றழைக்கப்படுவதுமான பர்வமாகும்.(204-206) விராடனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் வரும் பாண்டவர்கள், அந்நகரத்தின் புறநகர்ப்பகுதியில் உள்ள மயானத்தில் ஒரு பெரிய சமி {வன்னி} மரத்தைக் கண்டு, அதில் தங்கள் ஆயுதங்களை {பதுக்கி} வைப்பது.(207) இங்கேதான் அவர்கள் {பாண்டவர்கள்} நகருக்குள் நுழைவதும், மாறுவேடத்தில் அங்கே தங்குவதும் உரைக்கப்படுகிறது. பிறகு, காமத்தால் மதியிழந்து திரௌபதியை வேண்டும் தீய கீசகனைப் பீமன் கொல்வது; இளவரசன் துரியோதனனால் புத்திசாலி ஒற்றர்கள் நியமிக்கப்படுவது; வலிமைமிக்கப் பாண்டு மகன்களைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் தோற்பது;(208-210) முதலில் திரிகர்த்தர்களால் விராடனின் பசுக்கள் கவரப்படுவதும்; அதைத் தொடர்ந்த பயங்கரப் போரும்;(211) பகைவனால் விராடன் கைப்பற்றப்படுவதும்; அவனைப் பீமசேனன் மீட்பதும்;(211) பாண்டவன் (பீமன்) பசுக்களை விடுவிப்பது;(212) குருக்களால் மீண்டும் விராடனின் பசுக்கள் கைப்பற்றப்படுவது; தனியொருவனான அர்ஜுனனால் போரில் குருக்கள் அனைவரும் வீழ்த்தப்படுவதும்;(213) மன்னனின் பசுக்கள் விடுவிக்கப்படுவதும்; சுபத்திரையின் மூலமான தன் மகனும், எதிரிகளை அழிப்பவனுமான அபிமன்யுவுக்காக விராடனின் மகள் உத்தரையை அர்ஜுனன் ஏற்பதும் சொல்லப்படுகின்றன. இவையே விரிவான நான்காம் பர்வமான விராட பர்வத்தின் உள்ளடக்கங்கள் ஆகும்.(214,215) பெருமுனிவரான வியாசர் அறுபத்தி ஏழு {67} பகுதிகளாக[6] இதைப் பிரித்து, இரண்டாயிரத்து ஐம்பது {2050} பாடல்களுக்குள் {சுலோகங்களுக்குள்} இதை அடக்கியுள்ளார்.(216,217)

[6] கங்குலியில் விராட பர்வத்தில் 72 பகுதிகள் இருக்கின்றன.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்