Thursday, January 03, 2013

பர்வத் திரட்டு! | ஆதிபர்வம் - பகுதி 2 இ

Sangraha Parva! | Adi Parva - Section 2c | Mahabharata In Tamil

(பர்வசங்கிரகப் பர்வம்)

பதிவின் சுருக்கம் : ஐந்தாவது பர்வமான உத்யோகபர்வம் சுருக்கம்; ஆறாவது பர்வமான பீஷ்ம பர்வம் சுருக்கம்; அதன் பிறகு வரும் ஏழாவது பர்வமான துரோண பர்வ சுருக்கம்; அதன் பிறகு வரும் எட்டாவது பர்வமான கர்ண பர்வ சுருக்கம் ...

கிருஷ்ணன் தூது
அடுத்து, உத்யோக பர்வம் என்று அறியப்படும் ஐந்தாவது பர்வத்தை (உத்யோக பர்வத்தின் உள்ளடக்கத்தைக்) கேட்பீராக. வெற்றியை விரும்பிய பாண்டவர்கள், உபப்பிலாவ்யம் என்றழைக்கப்படும் இடத்தில் இருந்த போது,(218) துரியோதனனும் அர்ஜுனனும் ஒரே நேரத்தில் வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} சென்று, "இந்தப் போரில் உன் துணையை எங்களுக்கு அளிக்க வேண்டும்" என்று கேட்டனர்.(219) இவ்வார்த்தைகளைக் கேட்ட உயர் ஆன்மக் கிருஷ்ணன் "மனிதர்களில் முதன்மையானவர்களே! ஒருபுறம் போர் புரியாத ஆலோசகராக நானும்,(220) மற்றொருபுறம் ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளும் இருக்கிறோம். இதில் உங்கள் இருவரில் யாருக்கு எதைக் கொடுப்பது?" என்றான். தன் சுய விருப்பங்களால் குருடனாவனும், மூடனுமான துரியோதனன் துருப்புகளைக் கோரியது;(221) அர்ஜுனன் போரிடாத ஆலோசகராகக் கிருஷ்ணனயே வேண்டியது. அதன்பிறகு, மத்ரத்தின் மன்னன் {சல்லியன்} பாண்டவர்களுக்குத் துணைபுரிய வந்து கொண்டிருந்தபோது, கொடைகளாலும், விருந்தோம்பலாலும் அவனை வஞ்சித்த துரியோதனன், அவனை ஒரு வரம் தரத் தூண்டி, பிறகு அந்த வரமாகப் போரில் அவனது துணையை வேண்டுவது;(222,223) சல்லியன் துரியோதனனிடம் இப்படி வார்த்தையைக் கொடுத்துவிட்டுப் பாண்டவர்களிடம் வந்து நடந்த நிகழ்ச்சியையும் சொல்லி, இந்திரனின் வெற்றிக் கதை (இந்திரனுக்கு விருத்திராசுரனுக்கும் நடைபெற்ற போர்) ஒன்றையும் சொல்லி பாண்டவர்களுக்கு ஆறுதலளித்தது.(224)



அதன்பிறகு, பாண்டவர்களின் புரோகிதர் கௌரவர்களிடம் அனுப்பப்படுதல் வருகிறது. அதன்பிறகு மன்னன் திருதராஷ்டிரனிடம் பாண்டவர்களின் புரோகிதர் சொல்லும் இந்திரனின் வெற்றிக்கதையைக் கேட்ட பின் {திருதராஷ்டிரன்} தனது புரோகிதரை அனுப்ப நினைத்து இறுதியில் சஞ்சயனை பாண்டவர்களிடம் அமைதியேற்பட அனுப்புவது.(225,226) இங்கேதான் பாண்டவர்களையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} அவர்களது நண்பர்களையும் பற்றிக் கேள்விப்பட்டுக் கவலையடையும் திருதராஷ்டிரனின் தூக்கமற்ற நிலை விவரிக்கப்படுகிறது. இந்த நேரத்தில்தான் உண்மை பிறழாத விதுரன் திருதராஷ்டிரனிடம் விவேகம் நிறைந்த பல ஆலோசனைகளைக் கூறும் சம்பவம் வருகிறது.(227,228) மேலும் இந்த இடத்தில்தான் கவலையில் மூழ்கியிருக்கும் மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} ஆன்மிகத் தத்துவங்களின் உண்மைத் தன்மையைச் சனத்சுஜாதர் விவரிக்கிறார். அடுத்த நாள் காலையில் மன்னனின் {திருதராஷ்டிரனின்} சபையில், சஞ்சயன், வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் உடல் மற்றும் மனக் குறிப்புகளைத் தெரிவிக்கிறான்.

அப்போதுதான் அன்பாலும், அமைதிக்கான ஆசையாலும் உந்தப்பட்ட சிறப்புமிக்கக் கிருஷ்ணன், தானே கௌரவத் தலைநகரான ஹஸ்தினாபுரம்த்திற்குச் சென்று அமைதியை வேண்டுகிறான். இரு தரப்புக்கும் நன்மையைத் தரக்கூடிய கிருஷ்ணனின் ஆலோசனைகள் துரியோதனனால் மறுக்கப்படுவது. இந்த இடத்தில் தம்போத்பவனின் கதை சொல்லப்படுகிறது;(229-233) உயர்ந்த உள்ளங்கொண்ட மாதலி தனது மகளுக்குக் கணவனைத் தேடுவது; அதன்பிறகு பெருமுனிவரான காலவரின் வரலாறு;(234) அதன்பிறகு விதுலையின் பயிற்சிகளும் ஒழுக்கமுறைகளும் வருகின்றன. மன்னர்களின் முன்னிலையில், துரியோதனன் மற்றும் கர்ணனின் தீய ஆலோசனைகளை அறிந்து கொண்டு, தனது யோக வலிமையால் கிருஷ்ணன் விஸ்வரூபக் காட்சி தருவது; அதன்பிறகு கிருஷ்ணன் தனது தேரில் கர்ணனை அழைத்துப் போய் அறிவுரை கூறுவதும்,(235,236) கர்ணன் தற்பெருமையால் {கர்வத்தால்} அதை மறுப்பதும் வருகிறது. பிறகு எதிரிகளைத் தண்டிப்பவனான கிருஷ்ணன், ஹஸ்தினாபுரத்திலிருந்து உபப்பிலாவியத்திற்குத் திரும்பி,(237) பாண்டவர்களிடம் நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கிறான். அதன்பிறகு பகைவர்களை ஒடுக்குபவர்களான பாண்டவர்கள், அனைத்தையும் கேட்டு, ஒருவரோடொருவர் நன்கு ஆலோசித்து, போருக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்கின்றனர்.(238-239)

அதன்பிறகு காலாட்படை வீரர்கள், குதிரைகள், தேர்வீரர்கள் மற்றும் யானைகள் போருக்கு அணிவகுத்து வருவது. பிறகு இருதரப்பில் உள்ள துருப்புகளின் எண்ணிக்கை சொல்லப்படுகிறது. போருக்கு முன்பு உலூகனை துரியோதனன் பாண்டவர்களிடம் தூதனுப்புகிறான். பல்வேறு பிரிவுகளின் தேரோட்டிகள் கதை அதன்பிறகு வருகிறது. அதன்பிறகு அம்பையின் கதை.(240,241) போர் தயாரிப்புகளும், அமைதி ஏற்பாடுகளுமான இவையனைத்தும் மஹாபாரதத்தின் ஐந்தாவது பர்வமான உத்யோக பர்வத்தில் வருகின்றன.(242) ஓ துறவிகளே! பெருமுனிவர் வியாசர் நூற்று எண்பத்து ஆறு {186} பகுதிகளில்[7] ஆறாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று எட்டு {6698} பாடல்களில் {சுலோகங்களில்} விவரித்துள்ளார். (243,244)

[7] கங்குலியில் உத்யோக பர்வத்தில் 199 பகுதிகள் இருக்கின்றன.

அதன்பிறகு அற்புதமான நிகழ்வுகள் கொண்ட பீஷ்ம பர்வம் உரைக்கப்படுகிறது. ஜம்பூ என்ற இடம் உருவான வரலாற்றுக் குறித்துச் சஞ்சயனால் இங்குச் சொல்லப்படுகிறது.(245) யுதிஷ்டிர சேனையின் பெரிய மனத்தளர்ச்சியும், அடுத்தடுத்து பத்து நாட்கள் நடந்த கொடூரப் போரும் வருகின்றன.(246) தன் பாட்டன் மீது கொண்ட மதிப்பால் அர்ஜுனனிடம் எழுந்த கழிவிரக்கத்தை, உயர் ஆன்ம வாசுதேவன் {கிருஷ்ணன்}, இறுதி விடுதலை தத்துவத்தின் {பகவத்கீதையின்} மூலம் அவனிடம் இருந்து விரட்டுவது.(247) மகத்தானவனும், யுதிஷ்டிரனின் நன்மையில் கவனமாக இருப்பவனுமான கிருஷ்ணன், (பாண்டவப் படைக்கு) நேர்ந்த அழிவைக் கண்டு, தைரியமான இதயத்துடனும், கையில் சாட்டையுடனும், தன் தேரில் இருந்து இறங்கி பீஷ்மரைக் கொல்ல அவரை நோக்கி வேகமாக ஓடுவதும் இதில் {இந்தப் பர்வத்தில்} வருகிறது. இதில்தான், காண்டீவதாரியும், ஆயுததாரிகள் அனைவரிலும் போரில் முதன்மையானவனுமான அர்ஜுனனைத் துளைக்கும் வார்த்தைகளால் கிருஷ்ணன் தாக்குவது வருகிறது. வில்லாளிகளில் முதன்மையான அர்ஜுனன், தன் முன் சிகண்டியை நிறுத்திக் கொண்டு, தன் கூரிய கணைகளால் பீஷ்மரைத் துளைத்து, அவரது தேரில் இருந்து வீழ்த்துவது வருகிறது. இதில் தான் பீஷ்மர் தன் கணைப்படுக்கையில் நீண்டு கிடப்பதும் வருகிறது.(248-251) இந்தப் பெரிய பர்வமானது மஹாபாரதத்தின் ஆறாவது பர்வமாக அறியப்படுகிறது. வேதங்களை அறிந்த வியாசரால் நூற்றுப் பதினேழு {117} பகுதிகளில்[8], ஐயாயிரத்து எண்ணூற்று எண்பத்தெட்டு {5888} பாடல்களில் இவையனைத்தும் விவரிக்கப்படுகின்றன.

[8] கங்குலியில் பீஷ்ம பர்வத்தில் 124 பகுதிகள் இருக்கின்றன.

அதன்பிறகு நிகழ்வுகள் நிறைந்த அற்புத பர்வமாகிய துரோண பர்வம் வருகிறது.(252-254) முதலில், பெரும் ஆயுத ஆசானான துரோணரைப் படைத் தலைமையில் நிறுவப்படுவது; துரியோதனனை மனநிறைவு செய்வதற்காக யுதிஷ்டிரனைக் கைப்பற்றுவதாகத் துரோணர் சூளுரைப்பது; சம்சப்தகர்களிடம் இருந்து அர்ஜுனன் பின்வாங்கி,(255,256) களத்தில் இரண்டாவது இந்திரனைப் போல இருந்த பகதத்தனையும், அவனது யானையையும் வீழ்த்துவது; தனியனாக, ஆதரவற்றவனாகத் தன் பதின்ம வயதில் இருந்த வீரன் அபிமன்யு, ஜெயத்ரதன் உள்ளிட்ட பல மஹாரதர்களின் கைகளில் மரணத்தை அடைவது;(258) அபிமன்யுவின் மரணத்திற்குப் பிறகு, ஏழு அக்ஷௌஹிணி துருப்புகளையும் ஜெயத்ரதனையும் அர்ஜுனன் அழிப்பது;(259) யுதிஷ்டிரனின் கட்டளையை ஏற்று, தேவர்களாலும் ஊடுருவப்பட முடியாத கௌரவத் துருப்புகளுக்குள் வலிய கரங்களைக் கொண்ட பீமனும், தேர்வீரர்களில் முதன்மையான சாத்யகியும் அர்ஜுனனைத் தேடி ஊடுருவுவதும், சம்சப்தகர்களின் அழிவும்.(260,261) அலம்புசன், சுருதாயு, ஜலசந்தன், சௌமதத்தன் {சோமதத்தன்}, விராடன், பெரும் தேர்வீரனான துருபதன், கடோத்கசன் ஆகியோரும், இன்னும் பிறரும் மரணமடைவது இந்தத் துரோண பர்வத்தில் விவரிக்கப்படுகின்றன; மேலும் அஸ்வத்தாமன் தனது தந்தையின் மரணத்தால் கோபங்கொண்டு நாராயணக் கணையை ஏவுதல். (மூன்று நகரங்களை) அழித்ததில் ருத்ரனின் மகிமை.(262-264) கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் பெருமைகளை வியாசர் வந்து விவரித்தல் ஆகியவை வருகின்றன.(265) இதுவே, வீரத்தலைவர்களும், இளவரசர்களும் மரணமடைந்ததைச் சொல்லும் மஹாபாரதத்தின் ஏழாவது பர்வமான துரோண பர்வமாகும்.(266) இதில் மொத்தம் நூற்று எழுபது {170} பகுதிகள் இருக்கின்றன.[9] மேலும் பராசரர் மகனும், அதிகத் தியானத்திற்குப் பிறகு உண்மை ஞானத்தை அடைந்தவருமான வியாசமுனிவரால் தொகுக்கப்பட்ட இந்தத் துரோண பர்வத்தில் எட்டாயிரத்து தொள்ளாயிரத்து ஒன்பது {8909} பாடல்கள் {சுலோகங்கள்} இருக்கின்றன.(267,268)

[9] கங்குலியில் துரோண பர்வத்தில் 203 பகுதிகள் இருக்கின்றன.

இதன் பிறகு அற்புதமான கர்ண பர்வம் வருகிறது. இதில் (கர்ணனின்) தேரோட்டியாக ஞானியான மத்ர மன்னன் {சல்லியன் நியமிக்கப்பட்டது உரைக்கப்படுகிறது.(269) அதற்கடுத்து திரிபுரன் என்ற அசுரனின் வீழ்ச்சி பற்றிய வரலாறு சொல்லப்படுகிறது. போருக்குப் புறப்படுமுன்பு கர்ணனுக்கும் சல்லியனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம், கர்ணனை அவமதிக்க அன்னத்தையும் காக்கையையும் ஒப்பிட்டு {சல்லியன்} கதை சொல்வது; அஸ்வத்தாமன் கையால் பாண்டியன் இறப்பது;(271) தண்டசேனன் மற்றும் தண்டன் ஆகியோரின் மரணம்; ஆபத்து என்றறிந்தும் அனைத்து வீரர்களுக்கு மத்தியில் கர்ணனுடன் யுதிஷ்டிரன் தனித்துப் போர் புரிவது; அர்ஜுனனும் யுதிஷ்டிரனும் ஒருவருக்கொருவர் கோபத்துடன் பேசிக்கொள்வது;(272,273) கிருஷ்ணன் அவர்களை அமைதிப்படுத்தல் ஆகியன இந்தப் பர்வத்தில் வருகின்றன. இந்தப் பர்வத்தில், பீமன் தன் சபதத்தை நிறைவு செய்யும் வகையில், துச்சாதனனுடைய மார்பைக் கிழித்து, அவனுடைய இதயத்தின் இரத்தத்தைக் குடிக்கும் காட்சி விவரிக்கப்படுகிறது. பின்பு அர்ஜுனன் நேருக்கு நேராகக் கர்ணனிடம் போர் புரிந்து அவனை {கர்ணனை} வீழ்த்துவது வருகின்றது.(274,275) பாரதத்தை உரைப்பவர்கள் இதை எட்டாவது பர்வம் என்று சொல்கின்றனர். இஃது அறுபத்தொன்பது {69) பகுதிகளும்,[10] நாலாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்கு {4964} பாடல்களில் {சுலோகங்களில்} விவரிக்கப்பட்டுள்ளது.(276,277)

[10] கங்குலியில் கர்ண பர்வத்தில் 96 பகுதிகளும், 4887 ஸ்லோகங்களும் இருக்கின்றன.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்