Wednesday, February 27, 2013

உலகைத் தாங்கு ஆதிசேஷா! | ஆதிபர்வம் - பகுதி 36

Bear the earth Adisesha! | Adi Parva - Section 36 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 24)

பதிவின் சுருக்கம் : தாயை விட்டுப் பிரிந்து கடுமையான தவமியற்றிய சேஷன்; சேஷன், பிரம்மன் உரையாடல்; உலகைச் சுமக்கப் பணிக்கப்பட்ட சேஷன்...

உலகைத் தாங்கும் ஆதிசேஷன்
சௌனகர், "ஓ குழந்தாய்! {சௌதியே}, பெரும் சக்தியுடனும், எளிதில் வெல்லப்பட முடியாதவர்களுமாக வரம் அருளப்பட்ட, பல பாம்புகளின் பெயர்களைக் குறிப்பிட்டாய். {கத்ரு தந்த} அந்தச் சாபத்தைக் கேட்ட பிறகு அவர்கள் என்ன செய்தார்கள்?" என்று கேட்டார்.(1)

"சௌதி சொன்னார், "அவர்களில் {பாம்புகளில்} புகழ்வாய்ந்தவனும், சிறப்பு மிக்கவனுமான சேஷன், தனது தாயை விட்டுச் சென்று, கடுமையான விரதங்களை நோற்றுக் காற்றை மட்டும் உண்டு, கடுந்தவம் செய்தான்.(2) அவனது தவங்களை கந்தமாதன மலையிலும், பதரி, கோகர்ண மலைகளிலும், புஷ்கர வனத்திலும், இமய மலையின் அடிவாரத்திலேயும் மேற்கொண்டான்.(3)

அவன் {சேஷன்} தனது காலத்தை அந்தப் புனிதமான இடங்களிலேயே உறுதியாக விரதங்களை நோற்றுக் கழித்தான். சில இடங்கள் தங்கள் நீருக்காகவும் {தீர்த்தப் பெருமை கொண்டவையாக}, சில இடங்கள் தங்கள் மண்ணுக்காகவும் {தலப்பெருமை கொண்டவையாக} புனிதத்தன்மை வாய்ந்ததாகவும் இருந்தன. அந்த இடங்களில் ஒரே குறிக்கோளுடன், தனது உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு கடும் தவம் இருந்தான்.(4) தலையில் சடை தரித்தவனும், கந்தல்துணியை உடுத்தியவனும், கடுந்தவம் பயின்றதால் தனது சதைகளும், தோலும், சதை நார்களும் வற்றிப் போய் இருந்தவனுமான அந்தத் துறவியை {சேஷனை}, எல்லோருக்கும் பெருந்தகப்பனான பிரம்மன் கண்டான்.(5) பெருந்தகப்பன் {பிரம்மன்}, தவம் பயிலும் பெரும் உறுதி கொண்ட அவனிடம் {சேஷனிடம்}, "ஓ சேஷா! நீ என்ன இன்னலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாய்[1]? உலகங்களில் வாழும் மற்ற உயிர்களின் நன்மையும் உனது எண்ணத்தில் இருக்கட்டும்.(6) ஓ பாவங்களற்றவனே! உனது கடுந்தவத்தால் நீ மற்ற உயிரினங்களை வருத்திக் கொண்டிருக்கிறாய். ஓ சேஷா! உனது இதயத்தில் குடிகொண்டிருக்கும் விருப்பத்தை என்னிடம் சொல்வாயாக" என்றான் {பிரம்மன்}.(7)


[1] மனத்தில் குறிக்கோளுடன் யாராவது தொடர்ந்து தவம் செய்தால் அதனால் மூவுலகத்தினரும் இன்னலை அடைவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் வேண்டும் வரத்தைத் தந்து தெய்வங்கள் அவர்களை மன நிறைவு கொள்ளச் செய்ய வேண்டும். தவத்திற்கு அவ்வளவு சக்தி உண்டு.

அதற்குச் சேஷன், "என்னுடன் ஒரே கருவறையில் பிறந்தவர்கள் {மற்ற பாம்புகள்} அனைவரும் இதயத்தால் தீயவர்களாக இருக்கிறார்கள். நான் அவர்களுடன் வாழ விரும்பவில்லை. இஃது உம்மால் அங்கீகரிக்கப்படட்டும்.(8) {அவர்கள்} பகைவர்களைப் போல், ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்டுள்ளனர். அதனால், நான் தவத்துறவுகளில் ஈடுபட வந்துவிட்டேன். நான் அவர்களைப் பார்க்கக்கூட மாட்டேன்.(9) வினதையிடமும், அவளது மகனிடமும் {கருடனிடமும்} அவர்கள் அன்புடன் இருப்பதில்லை. விண்ணை அதிகாரம் செய்யும் வல்லமை பெற்றிருக்கும் வினதையின் மைந்தன் {கருடன்} எங்களுக்கு மற்றுமொரு சகோதரனே. அவனை {அவர்கள்} எப்போதும் பகைக்கிறார்கள். எங்கள் தந்தை உயரான்ம கசியபரின் வரத்தால், அவன் {கருடன்} பெரும் பலத்துடன் இருக்கிறான்.(10,11) அடுத்தப் பிறவியிலும் எனக்கு அவர்கள் உறவு இல்லாதபடி தவம் செய்து நான் என் உடலை விடப்போகிறேன்" என்றான் {சேஷன்}.(12)

அப்படிச் சொன்ன சேஷனிடம் பெருந்தகப்பன், "ஓ சேஷா! உன் சகோதரர்களின் நடத்தையையும், தங்கள் தாயை {கத்ருவை} மறுத்துப் பேசியதால் அவர்கள் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தையும் நான் அறிவேன். ஆனால் அதற்கு முன்பே, ஓ பாம்பே! {சேஷனே}, (அதற்கான) பரிகாரத்தை நான் கொடுத்திருக்கிறேன்.(13,14) அதனால் நீ உனது சகோதரர்களைக் குறித்து வருந்தாதே. ஓ சேஷா, நீ விரும்பும் வரத்தைக் கேள்.(15) நான் உன்னால் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். ஆகையால் இன்று உனக்கு ஒரு வரம் தருகிறேன். ஓ பாம்புகளில் சிறந்தவனே! {சேஷனே}, உனது மனம் அறத்தில் நிலைத்திருப்பது நல்லதே. உனது மனம் மேலும், மேலும் அறம் சார்ந்தே இருக்கட்டும்" என்றான். {பிரம்மன்}.(16)

சேஷன், "ஓ தெய்வீகமானவரே! பெருந்தகப்பனே, ஓ அனைவருக்கும் தேவனே. எனது இதயம் எப்போதும் அறத்திலும், அருள் நிறைந்த ஆன்ம தவத்திலும் இன்பம் அடையட்டும். இவ்வரத்தையே நான் விரும்புகிறேன்" என்று கேட்டான். (17)

பிரம்மன், "ஓ சேஷா! உனது தன்னலமற்ற தன்மையையும், அமைதிக்கான விருப்பத்தையும் அறிந்து நான் பெருமகிழ்வு கொள்கிறேன். ஆனால் என்னுடைய ஆணைக்கிணங்க, என் படைப்புகளின் நன்மைக்காக நீ இந்தச் செயலை செய்யவேண்டும்.(18) இதுமுதல், ஓ சேஷா, மலைகளுடனும், கானகங்களுடனும், கடல்களுடனும், நகரங்களுடனும், தோட்டங்களுடனும் இருக்கும் இந்த உறுதியற்ற பூமியை, சரியாகவும் சிறப்பாகவும் தாங்கிக் கொள்வாயாக. அதனால் அவள் {பூமாதேவி} உறுதியுடன் இருப்பாள்" என்றான்.(19)

சேஷன், "ஓ அனைத்து உயிர்களுக்கும், பூமிக்கும், படைக்கப்பட்ட அனைத்து பொருள்களுக்கும், அண்டத்திற்கும் தேவனே, அனைத்து வரங்களையும் அளிப்பவரே, நீர் சொல்வது போலவே, நான் இந்தப் பூமியை உறுதியாகத் தாங்கிக் கொள்வேன். அதனால் ஓ அனைத்து உயிர்களுக்கும் தலைவரே, அவளை {பூமியை} என் தலையில் வையும்" என்றான்.(20)

"பிரம்மன், "ஓ பாம்புகளில் சிறந்தவனே! {சேஷா}, பூமிக்கடியில் செல்வாயாக, நீ உள்ளே கடந்து செல்வதற்காக அவளே தன்னுள் பிளவு ஏற்படுத்தி வழி தருவாள். ஓ சேஷா, நீ பூமியைத் தாங்கி, என்னால் பெரிதும் மதிக்கப்படும் செயலைச் செய்வாயாக" என்றான்."(21)

சௌதி தொடர்ந்தார், "பாம்புகள் மன்னனின் {வாசுகியின்} அண்ணன் {சேஷன்}, ஒரு பொந்துக்குள் புகுந்து, பூமியின் மறுபுறம் சென்று, அவளை, எங்கும் பரவியிருந்த கடல் என்னும் கச்சையுடன் சேர்த்து, தனது தலையால் முட்டுக் கொடுத்துத் தாங்கினான்.(22)

பிரம்மன், "ஓ சேஷா! ஓ பாம்புகளில் சிறந்தவனே, நீயே தர்ம தேவன், ஏனெனில், என்னை அல்லது வலவித்தைப் (இந்திரன்)[2] போலத் தனியாளாக, உன் பெரும் உடலுடன், இந்தப் பூமியை அதன் எல்லாப் பொருளுடனும் சேர்த்துத் தாங்குகிறாய்" என்றான்."(23)

[2] மன்மதநாததத்தரின் பதிப்பிலும், கும்பகோணம் பதிப்பிலும் நேரடியாக இந்திரன் என்ற பெயரே இருக்கிறது.  பிபேக்திப்ராயின் பதிப்பில் பலன் Bala என்றிருக்கிறது. மூல ஸ்லோகத்தில் balabhid பலபித் என்ற வார்த்தைத் தென்படுகிறது. பலமிகுந்த சேனைகளை அழிப்பவன் என்பது இதன் பொருள்.

சௌதி தொடர்ந்தார், "அந்தப் பாம்பு, சேஷன், தேவன் ஆனந்தன், அந்தப் பெரும் ஆற்றல் மிக்கவன், பிரம்மனின் கட்டளையால், அன்று முதல் பூமிக்கடியில் தனியாக உலகத்தைத் தாங்கிக் கொண்டு நிற்கிறான்.(24) அந்தப் புகழ்மிக்கப் பெருந்தகப்பன் {பிரம்மன்}, இறவாதவர்களில் சிறந்தவன், அனந்தனின் {சேஷனின்} உதவிக்காக அழகான இறகுகள் கொண்ட வினதையின் மைந்தனை {கருடனை} நியமித்தான்" {என்றார் சௌதி}.(25)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்