Wednesday, March 06, 2013

புத்திரப்பேறு குறித்து யாயாவரர்கள்! | ஆதிபர்வம் - பகுதி 45

Yayavaras regarding merit of begetting a son! | Adi Parva - Section 45 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 33)

பதிவின் சுருக்கம் : யாயாவரர்களின் துயர் களைய வழி கேட்ட ஜரத்காரு; ஜரத்காருவை நிந்தித்த யாயாவரர்கள்...

{சௌதி தொடர்ந்தார்}, “அதேவேளையில், பெரும் துறவி ஜரத்காரு, எந்த இடத்தில் பொழுது மறைகிறதோ, அந்த இடத்தை {அந்த} இரவுக்கான தனது இல்லமாக்கி, உலகம் முழுதும் சுற்றினார்.(1) ஆன்ம பலத்தைக் கொடையாகக் கொண்டு, சுற்றித் திரிந்து, முதிர்வுறாதவர்களால் செய்ய முடியாத கடினமான பல நோன்புகளை நோற்று, பல புனித நீர் நிலைகளில் நீராடினார்.(2) அவர் காற்றை மட்டுமே உணவாகக் கொண்டும், உலக இன்பங்களின் மீது ஆசை இல்லாமலும் சுதந்திரமாக இருந்தார். தினமும் மெலிந்துகொண்டு வந்து, சதைப்பற்றில்லாமல் இருந்தார். அவர் ஒருநாள் தனது முன்னோர்களின் ஆவிகள் ஒரு பொந்துக்குள், ஒரே ஒரு விலாமிச்சை {விரானா} மர வேரைக் கயிறாகக் கொண்டு, தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த ஒரு வேரையும், அப்பொந்துக்குள் வாழும் பெரிய எலி ஒன்று தின்று கொண்டிருப்பதைக் கண்டார்.(3,4)



அப்படி இருந்த அந்தப் பித்ருக்கள், முக்தியில் பெருவிருப்பம் கொண்டவர்களாக, உணவில்லாமல், உடல் மெலிந்து, பார்ப்பதற்குப் பரிதாபமாக இருந்தனர். ஜரத்காரு அந்தப் பரிதாபமானவர்களை {பித்ருக்களை} அடக்கத்துடன் அணுகி,(5) "இந்த விலாமிச்சை {விரானா} வேர்களில் தொங்கிக் கொண்டிருக்கும் நீங்கள் யார்? விலாமிச்சை வேர்கள் எலியின் கூரிய பற்களால் {கடித்து} தின்னப்பட்ட நிலையில் மீதமிருக்கும் மெல்லியதான ஒற்றை வேரும் அதே எலியாலே கடிக்கப்படுகிறதே!(6,7) மீதமிருக்கும் அந்த ஒற்றை இழையும் விரைவிலேலேயே அறுந்து விடும். நீங்கள் இந்தப் பொந்துக்குள் தலைகுப்புற விழப்போவது தெளிவாகத் தெரிகிறது.(8) தலைகீழாகத் தொங்கும் உங்களையும், உங்களது பெருந்துயரையும் பார்க்கும் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. நான் உங்களுக்கு என்ன நல்லது செய்யட்டும்?(9) இந்த உங்கள் துயரை, எனது தவத்தில் நாலில் ஒரு பங்கு {1/4}, அல்லது மூன்றிலொரு பங்கு {1/3}, அல்லது இரண்டில் ஒரு பங்கைக் {1/2} கொண்டு விலக்க முடியுமா என்று விரைவாக எனக்குச் சொல்லுங்கள்.(10) ஓ! {அல்லது} எனது முழுப் புண்ணியங்களையும் எடுத்துக் கொண்டு உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். அனைத்திற்கும் நான் ஒப்புக் கொள்கிறேன். நீங்கள் விருப்பப்படும்படி செய்யுங்கள்" என்றார் {ஜரத்காரு}.(11)

அதற்கு அந்தப் பித்ருக்கள் {மூதாதையர்கள்}, "பெருமதிப்புக்குரிய பிரம்மச்சாரியே, நீ எங்களை விடுவிக்க விரும்புகிறாய். ஆனால், ஓ பிராமணர்களில் முதன்மையானவனே! உனது புண்ணியத்தால் {தவப்பயனால்} எங்கள் துன்பத்தை நீக்க முடியாது.(12) ஓ பேச்சாளர்களில் முதன்மையானவனே! குழந்தாய், எங்கள் சொந்தப் புண்ணியங்களின் பலன்கள் எங்களுக்கும் உள்ளன. ஆனால், ஓ பிராமணா! வாரிசற்ற நிலையிலேயே நாங்கள் இந்தப் புனிதமற்ற பொந்துக்குள் விழுகிறோம்.(13) ஒரு {ஒருவனின்} மகனே, ஒருவனுக்குச் சிறந்த தகுதி என்று பெருந்தகப்பனே {பிரம்மனே} சொல்லியிருக்கிறான். இந்தக் குழிக்குள் நாங்கள் விழப்போகும் இந்தத் தருணத்தில், எங்களுக்கு எந்தச் சிந்தனையும் தெளிவாக இல்லை.(14) எனவே, ஓ குழந்தாய்! உன்னை நாங்கள் அறியவில்லையென்றாலும், உனது மனிதத்தன்மையை உலகம் அறியும். எங்கள் துயரையும் அவலநிலையையும் கண்டு, கருணையினால் எங்களுக்காகப் பரிதாபப்படும் நீ வணக்கத்துக்கும், நற்பேற்றுக்கும் உரியவன்.(15)

ஓ பிராமணா! நாங்கள் யார் என்பதைக் கேள், நாங்கள் கடுந்தவங்களைச் செய்யும் யாயாவரப் பிரிவைச் சேர்ந்த முனிவர்கள்.(16) ஓ முனிவனே! பிள்ளைப் பேறில்லாமல், புனிதமான இடத்திலிருந்து கீழே விழுந்திருக்கிறோம். எங்கள் தவப் பலன்கள் {புண்ணியங்கள்} முழுவதும் அழிந்துவிடவில்லையாதலால் ஓர் இழை இன்னும் இருக்கிறது.(17) ஆனால் இப்போது அந்த ஒரே ஓர் இழையை மட்டுமே நாங்கள் கொண்டிருக்கிறோம். எனினும், {அந்த ஒரே வாரிசு இழையான} அவன் இருப்பதனாலும், இல்லாமல் போவதாலும் காரியம் ஒன்றுமில்லை. எங்களைப் போலவே பேறற்றவனும், ஜரத்காரு என்று அறியப்படுபவனுமான ஓரிழையை நாங்கள் கொண்டிருக்கிறோம். அந்தப் பேறற்றவன் {ஜரத்காரு}, வேதங்களையும் அதன் அனைத்துக் கிளைகளையும் பயின்று, துறவை மேற்கொண்டு தனியாக இருக்கிறான். ஆன்மாவை முழுமையாகத் தன் கட்டுக்குள் வைத்திருப்பவனும், உயர் ஆன்மாக் கொண்டவனும், நோன்புகளைக் கடைப்பிடிப்பவனும், தவத்துறவுகளில் ஆழமாக ஈடுபட்டு, தவத் தகுதிகளைக் {புண்ணியங்களைக்} குறித்த பேராசைகளைத் துறந்தவனுமான அவனே {ஜரத்காருவே} எங்களை இந்த நிலைக்குக் கீழிறக்கியிருக்கிறான். அவனுக்கு {ஜரத்காருவுக்கு} மனைவி கிடையாது, மகன் கிடையாது, எந்த உறவினர்களும் கிடையாது.(18-20) அதனால், நாங்கள் எங்கள் சுயநினைவை இழந்து கவனிக்க ஆள் இல்லாதவர்களைப் போல {அனாதைகளைப் போல} இந்தப் பொந்துக்குள் தொங்கிக் கொண்டிருக்கிறோம்.

நீ அவனைச் சந்தித்தால், எங்கள் மீது கருணை கொண்டு அவனிடம் {ஜரத்காருவிடம்},(21) ‘துயர் கொண்டிருக்கும் உமது பித்ருக்கள் தலைகுப்புறப் பொந்துக்குள் தொங்கிக் கொண்டிருக்கின்றனர். புனிதமானவரே {ஜரத்காருவே}, ஒரு மனைவியைத் தேர்ந்தெடுத்து, பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வீராக.(22) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே, ஓ மனதுக்கினியவரே, நீரே ஒரே ஒரு இழையாக உமது பித்ருக்களின் பரம்பரையில் இருக்கிறீர்’ என்று சொல்வாயாக. ஓ பிராமணா! நாங்கள் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த ஒரே இழையான விலாமிச்சை {விரானா} வேரானது,(23) எங்கள் குலத்தின் பெருக்கத்தைக் குறிக்கிறது. நீ காண்பதான {எலியால்} உண்ணபட்ட விரானா வேர்களின் இழைகளே, காலத்தால் உண்ணப்பட்ட நாங்கள் ஆவோம். பாதி உண்ணப்பட்ட நிலையில் நீ காண்பதும், நாங்கள் தொங்கி கொண்டிருப்பதுமான இந்த வேரே, அந்தத் தவத்தை மட்டுமே தேர்ந்தடுத்தவன் {ஜரத்காரு} ஆவான். நீ காணும் அந்த எலியே பெரும்பலம்பொருந்திய காலமாகும்.(24-26) அந்தக்காலமானது, தவ பயன்களால் படிப்படியாக தூண்டப்பட்டுத் தவங்களில் ஈடுபட்டு இருக்கும், அறிவும், {நல்} இதயமும் அற்ற அந்தப் பாதகன் ஜரத்காருவைக் கொல்கிறது {பலவீனப்படுத்துகிறது}.(27)

ஓ சிறந்தவனே! அவனது தவத்தால் எங்களைக் காக்க முடியாது. வேர்கள் அறுந்து காலத்தால் சுயநினைவை இழந்து மேலுலகில் இருந்து பாவங்கள் செய்த பாதகர்களைப் போலக் கீழே விழும் எங்களைப் பார். நாங்கள் எங்கள் உறவினர்களுடன் இந்தக் குழிக்குள் விழுந்தால், அவனும் இந்த நரகத்திற்குள்ளேயே விழுவான். ஓ குழந்தாய், ஆன்மிகமாக இருந்தாலும், வேள்வியாக இருந்தாலும், புனிதமான எந்தச் செயலாக இருந்தாலும், அவையெல்லாம் ஒரு மகனுக்கு ஈடாகாது. ஓ குழந்தாய்! அனைத்தையும் கண்ட நீ, ஆன்மீகத்தைச் செல்வமாகக் கொண்ட ஜரத்காருவிடம் பேசுவாயாக.(28-31) நீ கண்டதையெல்லாம் விபரமாக அவனிடம் எடுத்துக்கூறுவாயாக. ஓ பிராமணா, நீ எங்கள் மீது கொண்ட கருணையால், அவன் தன் நண்பர்களுக்கிடையிலோ, எங்கள் குலத்திலேயோ திருமணம் செய்துகொண்டு பிள்ளைகள் பெற தூண்டும் வகையில் பேசுவாயாக.(32) ஓ சிறந்தவனே! எங்கள் நண்பனைப் போல எங்கள் துயரைக் கண்டு வருந்தும் நீ யார்? இங்கே நிற்கும் நீ யார் என்பதைக் கேட்க விரும்புகிறோம்" என்றார்கள் {யாயாவரர்கள்}."(33)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்