Sunday, March 10, 2013

ஜரத்காரு கேட்ட பிச்சை! | ஆதிபர்வம் - பகுதி 46

Jaratkaru begged for! | Adi Parva - Section 46 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 34)

பதிவின் சுருக்கம் : திருமணத்திற்காக ஜரத்காரு செய்த முயற்சி; காட்டிலே மணமகளை இரந்து கேட்ட ஜரத்காரு; வாசுகிக்குத் தகவல் தெரிவித்த பாம்புகள்; ஜரத்காரு விதித்த நிபந்தனைகள்...

மானஸா தேவி - ஜரத்காரு
சௌதி சொன்னார், "இதையெல்லாம் கேட்ட ஜரத்காரு மிகுந்த துயருற்றார். அந்தத் துயரத்தால் உந்தப்பட்டுக் கண்ணீரால் தடைப்பட்டுத் தனது பித்ருக்களிடம் பேசலானார்.(1) ஜரத்காரு, “நீங்களே முன்சென்ற எனது தந்தையும், பாட்டன்களும் ஆவீர்கள். எனவே, நான் உங்கள் நன்மைக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்வீராக.(2) நானே உங்கள் மகனான, அந்தப் பாவி ஜரத்காரு. பாதகனான என்னை, எனது பாவங்களுக்காகத் தண்டியுங்கள்" என்றார் {ஜரத்காரு}.(3)

பித்ருக்கள், ”ஓ மகனே! {ஜரத்காருவே}, உனது நற்பேறாலேயே உன் பயணத்தில் இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாய். ஓ பிராமணா, நீ ஏன் ஒரு மனைவியை உனக்கு ஏற்றுக் கொள்ளவில்லை?" என்றனர்.(4)



ஜரத்காரு, "பித்ருக்களே, எனது உயிர் வித்தை மேல்நோக்கி எழும்பச் செய்து, எனது உடலுடன் மற்ற உலகங்களுக்குச் செல்ல ஆவல் கொண்டேன்.(5) மனைவியைக் கொள்ளவேண்டாம் என்ற எண்ணத்தை என் மனம் கொண்டது. ஆனால் பாட்டன்மார்களே, நீங்கள் பறவைகளைப் போலத் தொங்குவதைக் கண்ட பிறகு,(6) எனது மனத்தைப் பிரம்மச்சரியத்திலிருந்து விலக்கிக் கொண்டேன். நீங்கள் விரும்புவதை உண்மையாகச் செய்வேன்.(7) எனது பெயர் {ஜரத்காரு என்ற பெயரே} கொண்ட ஒரு மங்கையை நான் கண்டால், அவளும் அவளுடைய விருப்பத்தின் பேரில் என்னிடம் பிச்சையாக ஒப்படைப்பட்டால், அவளை நான் காப்பாற்ற வேண்டியது இல்லையென்றால், நான் கண்டிப்பாக மணமுடிப்பேன். அப்படி ஒருத்தி கிடைத்தால், நான் மணமுடிப்பேன்.(8,9) அப்படி இல்லையென்றால் நான் மணமுடிக்க மாட்டேன். இஃது உண்மை பாட்டன்மார்களே, அவளால் பெறப்படும் பிள்ளை உங்கள் முக்திக்கு வழி வகுப்பான். என் பித்ருக்களே, நீங்கள் எப்போதும் அச்சமின்றி அருள் வாழ்க்கை வாழ்வீர்கள்" என்றார் {ஜரத்காரு பித்ருக்களிடம்}."(10)

சௌதி தொடர்ந்தார், "இப்படித் தமது பித்ருக்களிடம் சொல்லிவிட்டு, அந்த முனிவர் {ஜரத்காரு}, மறுபடியும் உலகைச் சுற்றினார். ஓ சௌனகரே! வயதான பிறகும் அவரால் ஒரு மனைவியைக் கொள்ளமுடியவில்லை.(11) தமது தோல்வியை உணர்ந்த அவர் துயர்கொண்டார். ஆனால் தமது முன்னோர்களின் வழிகாட்டுதலின்படி அவரது தேடலைத் தொடர்ந்தார். அடர்ந்த கானகத்திற்குள் சென்று {தமது முன்னோர்களை நினைத்து} துயரத்தால் கதறி அழுதார்.(12)

அந்தக் கானகத்திற்குள் சென்ற அந்த விவேகி, தமது முன்னோர்களுக்கு நன்மை செய்வதற்கு எண்ணி, "நான் மனைவியை யாசிக்கிறேன்" என்று உறுதியுடன் மூன்று முறை கூறினார்.(13) அதன்பிறகு, "அசைவன, அசையாதன, கண்ணுக்குப் புலப்படாதவை என்று எந்த உயிரினங்கள் இங்கே இருக்கின்றனவோ, யாராக இருந்தாலும், எனது வார்த்தைகளைக் கேட்பீராக!(14) எனது முன்னோர்கள் துயரத்தால் உந்தப்பட்டு, கடும் தவங்களில் ஈடுபட்டிருந்த என்னை ‘ஒரு மகனுக்காகத் திருமணம் செய்து கொள்’ என்று பணித்தார்கள்.(15) நான் எனது முன்னோர்களின் {பித்ருக்களின்} வழிகாட்டுதல்படி, வறுமையுடனும், துயரத்துடனும் ஒரு மணமகளைப் பிச்சையாகக் கேட்டு உலகம் முழுவதும் சுற்றித் திரிகிறேன்.(16) இந்த எனது வார்த்தைகளைக் கேட்ட எந்த உயிரினமும் தனது மகளை எல்லா இடங்களிலும் அலையும் எனக்கு மணமுடிக்கட்டும்.(17) எனது பெயர் கொண்ட அந்த மணமகளை எனக்குப் பிச்சையாக இட்டாலும், நான் அவளைப் பராமரிக்க மாட்டேன். எனக்கு மணமகளை அளியுங்கள்" எனக் கூறினார்.(18)

இதைக் கவனித்தவையும், ஜரத்காருவின் வழியில் {வாசுகியால் கண்காணிக்கப் பணிக்கப்பட்டு} இருந்தவையுமான பாம்புகள், அவர் {ஜரத்காருவின்} விருப்பத்தை உணர்ந்து, வாசுகிக்குத் தகவலைத் தெரிவித்தன.(19) பாம்புகளின் மன்னன் {வாசுகி}, அந்த {பாம்புகளுடைய} வார்த்தைகளைக் கேட்டு, ஆபரணங்கள் பூண்ட மங்கையை {பெண் பாம்பு ஜரத்காருவை} அழைத்துக் கொண்டு முனிவர் {ஜரத்காரு} இருந்த வனத்திற்குச் சென்றான்.(20) ஓ பிராமணரே! {சௌனகரே}, பாம்புகளின் மன்னன் வாசுகி, அங்கே சென்று, அந்த மங்கையை அந்த உயரான்ம முனிவருக்கு {ஜரத்காருவுக்கு} பிச்சையாக இட்டான். அந்த முனிவர் {ஜரத்காரு} உடனே அவளை ஏற்கவில்லை.(21) தமது பெயர் கொண்டவளாக அவள் இருக்கமாட்டாள் என்றெண்ணியும், அவளுடைய பராமரிப்புக் குறித்து இன்னும் முடிவாகவில்லை என்றும் சிறிது நேரம் சிந்தித்த அந்த முனிவர் {ஜரத்காரு}, அவளை ஏற்பதில் தயக்கம் காட்டினார்.(22) அதன் பிறகு, ஓ பிருகுவின் மைந்தரே! {சௌனகரே}, வாசுகியிடம் அந்த மங்கையின் பெயரைக் கேட்டு, ‘இவளை நான் பராமரிக்க மாட்டேன்’ என்று அவனிடம் {வாசுகியிடம்} சொன்னார் {ஜரத்காரு}."(23)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்