Sunday, March 17, 2013

சூதனின் தீர்க்க தரிசனம்! | ஆதிபர்வம் - பகுதி 51

The prophesy of a Suta! | Adi Parva - Section 51 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 39)

பதிவின் சுருக்கம் : ஜனமேஜயன் பாம்பு வேள்விக்கு உத்தரவிட்டான்; அந்தணனால் வேள்வி தடைபடும் என்றான் ஒரு சூதன்…

சௌதி சொன்னார், "மன்னன் ஜனமேஜயன் இப்படிச் சொல்லவும், அமைச்சர்களும் அதை உறுதி செய்தனர். அந்த ஏகாதிபதி {ஜனமேஜயன்}, பாம்பு வேள்வியை நடத்தப்போவதாகத் தனது முடிவைச் சொன்னான்.(1) பிறகு அந்தப் பூமியின் தலைவன், பாரதக் குலத்தின் புலி, பரீக்ஷித்தின் மைந்தன் {ஜனமேஜயன்} தனது புரோகிதரையும் ரித்விக்குகளையும், அழைத்தான்.(2)



பேச்சில் வல்லவனான அவன், தன்னுடைய பெரும்பணியை நிறைவேற்றுவது குறித்து இந்தச் சொற்களைச் சொன்னான். "எனது தந்தையைக் {பரீக்ஷித்தைக்} கொன்ற அந்தப் பாவி {பாம்பு மன்னன்} தக்ஷகனை நான் பழிதீர்க்க வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குச் சொல்லுங்கள்.(3) அந்தப் பாம்பு தக்ஷகனும் அவனது உறவினர்களும் சேர்ந்து எரியும் நெருப்பில் விழ நான் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? முன்பு எனது தந்தையைத் {பரீக்ஷித்தைத்} தனது விஷமென்னும் நெருப்பால் எரித்த தக்ஷகனை நானும் எரிக்கவே விரும்புகிறேன்" {என்றான் ஜனமேஜயன்}.(4,5)

அதற்கு அந்தப் புரோகிதர்களின் தலைவர், "ஓ மன்னா! {ஜனமேஜயா}, உனக்காகவே தேவர்கள் ஒரு பெரிய வேள்வியை உருவாக்கியிருக்கிறார்கள். அது பாம்பு வேள்வி (சர்ப்ப வேள்வி) என்று அறியப்படுகிறது. இது புராணங்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது.(6) ஓ மன்னா {ஜனமேஜயா}, உன்னால் மட்டுமே இந்தக் காரியத்தை நிறைவேற்ற முடியும். வேறு எவராலும் முடியாது. புராணங்களை நன்கு அறிந்தவர்கள் இப்படி ஒரு வேள்வி இருப்பதாகச் சொல்லியிருக்கின்றனர்."(7)

சௌதி தொடர்ந்தார், "ஓ சிறந்தவரே! {சௌனகரே}, இப்படிப் பதில் சொல்லப்பட்ட மன்னன், வேள்வி நெய்யை உண்ணும் அக்னியின் ஒளிரும் வாயில் தக்ஷகன் எரிந்துவிட்டதாகவே எண்ணம் கொண்டான்.(8) அதன்பிறகு அந்த மன்னன் {ஜனமேஜயன்} மந்திரங்களில் தேர்ந்த பிராமணர்களிடம், "நான் வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்கிறேன். தேவையான பொருட்கள் என்னென்ன வேண்டும் என்று சொல்லுங்கள்" என்றான்.(9) ஓ சிறந்த பிராமணரே! {சௌனகரே}, வேதங்களில் தேர்ந்தவர்களும், அந்த வேள்வியின் சடங்குகளை அறிந்தவர்களுமான அரசனின் ரித்விக்குகள், வேள்விமேடை அமைப்பதற்காகச் சாத்திரங்களில் சொன்னபடி நிலத்தை அளந்தனர்.(10)

மேடை விலையுயர்ந்த பொருட்களாலும், பிராமணர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அது {மேடை} கிடைத்தற்கரிய பொருட்களாலும் நெல்லாலும் நிறைந்திருந்தது. ரித்விக்குகள் அதில் வசதியாக அமர்ந்தனர். அந்த மேடை விதிகளின்படி விரும்பியவாறு கட்டி முடிக்கப்பட்டதும், குறித்த நோக்கம் நிறைவேற மன்னனை {ஜனமேஜயனை} நாக வேள்வியில் அமர்த்தினர். வேள்வி ஆரம்பிப்பதற்கு முன்னர்,(11-13) அந்த வேள்வி பின்னர் தடைபடும் என்பதை முன்னறிவிக்கும் வகையில் ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது. வேள்விக்கான மேடையைக் கட்டும்போது, கட்டுமானக் கலையில் நிபுணரும், சூத சாதியைச்[1] சேர்ந்தவரும், புராணங்களில் தெளிந்த அறிவுடையவரும் அடித்தளங்கள் {அஸ்திவாரங்கள்} அமைப்பதை நன்கறிந்தவருமான {வாஸ்து, மனையடி சாத்திரம் ஆகியவற்றில் வல்ல ஸ்தபதி} ஒருவர்[2], (14,15) "இந்த மேடை அமைந்த மண்ணின் தன்மையும், வேள்வி மேடைக்காக அளவுகள் எடுத்த நேரமும், ஒரு பிராமணனால் இந்த வேள்வி முழுமையடையாமல் போகப் போகிறது என்பதை உணர்த்துகிறது" என்றார்.(16) இதைக்கேட்ட மன்னன் {ஜனமேஜயன்}, மேடையில் அமரும் முன்பு, வாயில் காப்போரிடம் தனது கவனத்துக்கு வராமல் யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்று கட்டளையிட்டான் {ஜனமேஜயன்}" {என்றார் சௌதி}.(17)

[1] கங்குலி, கும்பகோணம், மன்மதநாததத்தர் ஆகிய பதிப்புகளில் சூதசாதியைச் சேர்ந்தவன் என்றே சொல்லப்பட்டுள்ளது. பிபேக்திப்ராயின் பதிப்பில் மட்டும் சூதனான அம்மனிதன் என்று சொல்லப்பட்டுள்ளது. சாதி என்ற சொல் மூலத்தில் இல்லை. மூல ஸ்லோகம். இதி அப்ராவித் சூத்ரதாரா சூத பௌராணிகா ததா. புராணங்களைச் சொல்லும் சூதர் என்கிறது. அதாவது அந்த ஸ்தபதியும் புராணங்களைச் சொல்ல வல்லவர்.  

ity abravīt sūtradhāraḥ sūtaḥ paurāṇikas tadā
     yasmin deśe ca kāle ca māpaneyaṃ pravartitā
     brāhmaṇaṃ kāraṇaṃ kṛtvā nāyaṃ saṃsthāsyate kratuḥ 

[2] ஆதி 56:6ல் {ஆதிபர்வம் 56ம் பகுதி 6ம் ஸ்லோகத்தில்} சொல்லப்படும் லோகிதாக்ஷர் என்ற பெயரைக் கொண்ட சூதர் இவராகவே இருக்கக்கூடும்.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்