Sunday, March 17, 2013

தக்ஷகனைக் கைவிட்டான் இந்திரன்! | ஆதிபர்வம் - பகுதி 56

Indra cast off Takshaka! | Adi Parva - Section 56 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 44)

பதிவின் சுருக்கம் : ஆஸ்தீகரைப் பாராட்டி வரமளிக்க முன்வந்த ஜனமேஜயன்; இந்திரனின் பாதுகாப்பில் தக்ஷகன் இருப்பதாக ஜனமேஜயனுக்குச் சொல்லப்படுவது; அச்சத்தால் தக்ஷகனைக் கைவிட்ட இந்திரன்; வேள்வியை நிறுத்தும் வரத்தைக் கோரிய ஆஸ்தீகர்...

ஜனமேஜயன், "இவர் சிறுவனைப் போல இருந்தாலும், விவேகமுள்ள முதிர்ந்தவர் போலப் பேசுகிறார். இவர் சிறுவனில்லை. விவேகி. முதிர்ந்தவர். இவருக்கு நான் வரமளிக்கலாம் என்று நினைக்கிறேன். பிராமணர்களே, அதற்கான அனுமதியை எனக்கு அளியுங்கள்" என்றான்.(1)

அதற்குச் சதயஸ்யர்கள், "பிராமணன் ஒருவன் சிறுவனாக இருந்தாலும், மன்னனால் மதிக்கப்பட வேண்டியவன். கற்றோர் எப்போதும் அப்படியே செய்வர். இந்தச் சிறுவனின் விருப்பங்கள் உன்னால் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், வேகத்துடன் தக்ஷகன் வந்து விழுவதற்கு முன்னால் அல்ல " என்றனர்."(2)

சௌதி தொடர்ந்தார், "மன்னன் {ஜனமேஜயன்} அந்தப் பிராமணச் சிறுவனிடம் {ஆஸ்தீகனிடம்}, "ஒரு வரத்தைக் கேள்" என்றான். இதனால் அதிருப்தி அடைந்த ஹோத்ரி {சண்டபார்கவர்}, "தக்ஷகன் இன்னும் இந்த வேள்விக்குள் வரவில்லை" என்றார்.(3)

ஜனமேஜயன், "உங்கள் பலத்தில் சிறந்ததைச் செய்து, தக்ஷகனை விரைவாக வர வைத்து, இந்த வேள்வியை முடித்து வையுங்கள். அவன் {தஷகன்} எனது எதிரி" என்றான்.(4)

அதற்கு ரித்விக்குகள், "சாத்திரங்கள் அறிவிப்பதும், இந்த நெருப்பு {அக்னி பகவானும்} சொல்வதும், ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, தக்ஷகன் அச்சத்தால் பீடிக்கப்பட்டு இந்திரனின் இருப்பிடத்தில் இருக்கிறான் (என்றே தெரிகிறது)" என்றனர்.(5)

சௌதி தொடர்ந்தார், "புராணங்களில் தெளிந்த அறிவுடையவரும், லோஹிதாக்ஷன்[1] என்ற பெயரைக் கொண்ட சிறப்புமிக்க சூதர் ஒருவரும் முன்பே இதைச் சொல்லியிருக்கிறார். அவர் {லோஹிதாக்ஷர்}, மன்னனால் {ஜனமேஜயனால்} தற்போது கேட்கப்பட்டு, அந்த ஏகாதிபதியிடம் மீண்டும்,(6) "ஐயா {ஜனமேஜயரே}, பிராமணர்கள் கூறுவதையே புராணங்களை அறிந்த நானும் சொல்கிறேன், ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயரே}, இந்திரன் "என்னிடம் மறைவாக இருப்பாயாக. அக்னி உன்னை எரிக்கமாட்டான்" என்ற வரத்தை அவனுக்கு {தஷகனுக்கு} அளித்திருக்கிறான்" என்றார்.(7)


[1] சிவந்த கண்களைக் கொண்டவர் என்று பொருள்

சௌதி தொடர்ந்தார், "வேள்வியில் அமர்த்தப்பட்ட மன்னன் {ஜனமேஜயன்}, இதைக் கேட்டு மிகவும் கவலை கொண்டு, ஹோத்ரியைத் {சண்டபார்கவரைத்} தனது கடமையைச் செய்யத் தூண்டினான். அந்த ஹோத்ரி, மந்திரங்களை உச்சரித்து, தெளிந்த நெய்யை நெருப்பில் விடும்போது இந்திரன் அங்கே தோன்றினான்.(8) அந்தச் சிறப்பு மிகுந்தவன், தேவர்கள் சுற்றிலும் நின்று போற்ற, மேகக் கூட்டங்களும், தேவலோக பாடகர்களும், தேவலோக நடன மாதர்களின் கூட்டங்களும் பினதொடர தன் தேரில் தெரிந்தான்.(9)

தக்ஷகன் பயத்தினால் கலக்கமடைந்து இந்திரனின் மேலாடையினுள் ஒளிந்து கொண்டு கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தான். மன்னன் {ஜனமேஜயன்} மிகுந்த கோபம் கொண்டு, தக்ஷகனை அழிக்கும் நோக்கத்தில் மந்திரங்கள் அறிந்த பிராமணர்களிடம்,(10) "அந்தப் பாம்பு தக்ஷகன், இந்திரனிடம் இருந்தால், அவனை {தஷகனை} இந்திரனோடே வந்து இந்த நெருப்பில் விழச்செய்யுங்கள்" என்றான் {ஜனமேஜயன்}.(11)

சௌதி தொடர்ந்தார், "இவ்வாறு தக்ஷகனைக் குறித்து ஜனமேஜயனால் தூண்டப்பட்ட ஹோத்ரி அங்கிருந்த அவனது {தஷகனின்} பெயரைச் சொல்லி நெய்யை ஊற்றினார்.(12) அப்படி ஆகுதி ஊற்றப்படும்போது, கலவரமடைந்த தக்ஷகன், புரந்தரனுடன் {இந்திரனுடன்} உடனே வானத்தில் தெரிந்தான்.(13) புரந்தரன் {இந்திரன்}, அந்த வேள்வியைப் பார்த்து எச்சரிக்கையடைந்து விரைவாகத் தக்ஷகனைக் கைவிட்டுத் தனது இருப்பிடம் திரும்பினான்.(14) இந்திரன் அப்படிச் சென்றதும், அந்தப் பாம்பு இளவரசனான தக்ஷகன் அச்சத்தால் உணர்விழந்து, மந்திரங்களின் வலிமையால் வேள்வி நெருப்பின் அருகே வந்துவிட்டான்.(15)

அப்போது ரித்விக்குகள், "ஓ மன்னர் மன்னா! {ஜனமேஜயா} உனது வேள்வி சிறப்பாக நடக்கிறது. ஓ தலைவா! இனி நீ இந்த பிராமணர்களில் முதல்வனுக்கு  {ஆஸ்தீகனுக்கு} வரத்தை அருளலாம்" என்றனர்.(16)

ஜனமேஜயன், "அளவற்ற அழகுடன் குழந்தையைப் போல் இருப்பவரே, உமக்குத் தக்க வரமளிக்க விரும்புகிறேன். அதனால், உமது இதயத்தில் நீர் விரும்புவதைக் கேளும். கொடுக்க முடியாததையும் உமக்குக் கொடுக்கிறேன் என்று நான் உறுதியளிக்கிறேன்" என்றான்.(17)

ரித்விக்குகள், "ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயனே} தக்ஷகன் விரைவாக உனது கட்டுப்பாட்டுக்கள் வருவதைப் பார். அவனது {தஷகனது} கொடூரமான கதறலும், சத்தமான உருமலும் கேட்கிறது பார்.(18) நிச்சயமாக வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்} அந்தப் பாம்பைக் கைவிட்டுவிட்டான். உனது மந்திரங்களால் அவனது உடல் செயலிழந்துள்ளது, அவன் {தஷகன்} மேலுலகில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறான். இப்போது, வானத்தில் உருண்டு, சுய உணர்வை இழந்து, சத்தமாக மூச்சுவிட்டுக் கொண்டு அந்தப் பாம்புகளின் இளவரசன் {தஷகன்} வந்து கொண்டிருக்கிறான்" என்றனர்."(19)

சௌதி தொடர்ந்தார், "அவ்வாறு அந்தப் பாம்புகளின் இளவரசன் தக்ஷகன் அந்த வேள்வித்தீயில் விழுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன், அந்தக் குறுகிய காலத்திற்குள் ஆஸ்தீகர்,(20) "ஓ ஜனமேஜயா! நீ எனக்கு ஒரு வரம் அருள்வதாக இருந்தால், இந்த உனது வேள்வி இத்தோடு முடிவுக்கு வரட்டும். மேலும் பாம்புகள் இந்தத் தீயில் விழ வேண்டாம்" என்றார் {ஆஸ்தீகர்}.(21)

ஓ பிராமணரே! {சௌனகரே}, அந்தப் பரீக்ஷித்தின் மைந்தன் {ஜனமேஜயன்}, ஆஸ்தீகரால் இப்படிக் கேட்கப்பட்டதால் மிகவும் வருந்தி அவரிடம் {ஆஸ்தீகரிடம்},(22) "ஓ சிறந்தவரே! தங்கம், வெள்ளி, பசுக்கள் என்று நீர் எதை விரும்பினாலும் நான் தருகிறேன். ஆனால் எனது வேள்வி நிற்காதிருக்கட்டும்" என்றான் {ஜனமேஜயன்}.(23)

ஆஸ்தீகர், "நான் தங்கம், வெள்ளி, பசுக்கள் என்று எதையும் உன்னிடம் கேட்கவில்லை. ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயனே} உனது இந்த வேள்வி இத்தோடு நிற்கட்டும். எனது தாய்வழி {பெண் பாம்பு ஜரத்காருவின்} உறவினர்கள் {பாம்புகள்} இதனால் விடுதலை அடையட்டும்" என்றார்.(24)

சௌதி தொடர்ந்தார், "அந்தப் பரீக்ஷித்தின் மைந்தன் ஆஸ்தீகரால் இப்படிக் கேட்கப்பட்டு, மீண்டும் மீண்டும் அந்தப் பேச்சாளர்களில் முதன்மையானவரிடம் {ஆஸ்தீகரிடம்},(25) "பிராமணர்களில் சிறந்தவரே, வேறு ஏதாவது வரத்தைக் கேளும். நீர் அருளப்பட்டு இருப்பீர்!" என்றான். ஆனால், ஓ பிருகு குலத்தோரே! {சௌனகரே} அவர் {ஆஸ்தீகர்} வேறு எந்த வரத்தையும் வேண்டவில்லை.(26) அதன்பிறகு வேதமறிந்த சத்யஸ்யர்களும் அனைவரும் ஒருமித்த குரலில் மன்னனிடம் {ஜனமேஜயனிடம்}, "இந்த பிராமணன் தனது வரத்தைப் பெற்றுக் கொள்ளட்டும்" என்றனர்."(27)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்