Wednesday, May 15, 2013

உண்மையை வெளிப்படுத்தினாள் கங்கை! - ஆதிபர்வம் பகுதி 99

Ganga told the truth! | Adi Parva - Section 99 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 35)

பதிவின் சுருக்கம் : வசிஷ்டிரனின் சாபத்தினால் வசுக்கள் சந்தனுவுக்குப் பிள்ளைகளாகப் பிறந்ததை எடுத்துரைத்த கங்கை; தியோவசுவின் மனைவி நந்தினி என்ற பசுவை விரும்புதல்; நந்தினியைக் கவர்ந்த தியோவசு; பீஷ்மனைக் கங்கை தன்னுடன் அழைத்துச் செல்வது...

சந்தனு, "வசுக்களின் குற்றம் என்ன? ஆபவர் என்பவர் யார்? யாருடைய சாபத்தால் வசுக்கள் மனிதர்கள் மத்தியில் பிறந்தனர்?(1) இந்த உனது குழந்தை கங்காதத்தன், மனிதர்களுடன் வாழும்படி என்ன செய்தான்?(2) மூவுலகங்களின் தலைவர்களான வசுக்கள் மனிதர்களுக்கு மத்தியில் பிறக்க ஏன் சபிக்கப்பட்டனர்? ஓ ஜானுவின் மகளே, அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(3)


வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிக் கேட்கப்பட்ட ஜானுவின் தெய்வீக மகள் கங்கை, தனது கணவனும், மனிதர்களில் காளையுமான அந்த ஏகாதிபதியிடம்,(4) "ஓ பாரதக் குலத்தில் சிறந்தவரே, வருணனால் மகனாகப் பெறப்பட்டவரே வசிஷ்டர், அந்த முனிவரே பிற்காலத்தில் ஆபவர்[1] என்று அறியப்பட்டார்.(5)



[1] ஆபம் என்பது நீர்நிலைகளைக் குறிக்கும். அவற்றுக்குத் தலைவன் வருணன் என்று அழைக்கப்படுகிறான். அதன் காரணமாவே அவனுடைய மகனாகிய வசிஷ்டருக்கு ஆபவர் என்ற பெயர் ஏற்பட்டது.

அவரது ஆசிரமம், மலைகளின் மன்னனான மேருவின் சாரலில் இருந்தது. பல பறவைகளுனும், விலங்குகளும் நிறைந்திருந்த அந்த இடம் புனிதமானதாக இருந்தது. அங்கே எல்லாக் காலங்களிலும், அந்தந்த காலங்களுக்கு ஏற்ற வகையில் மலர்கள் பூத்துக் குலுங்கும்.(6) ஓ பாரதக் குலத்தில் சிறந்தவரே, அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான அந்த வருணனின் மகன் {வசிஷ்டர்}, இனிய கிழங்குகளும், நீரும் நிறைந்திருந்த அந்தக் கானகத்திலேயே தவம் செய்து வந்தார்.(7) தக்ஷனுக்குச் சுரபி என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள். ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அவள் உலகத்தின் நன்மைக்காகக் கசியபருடன் கூடி பசுவின் உருவில் ஒரு மகளைப் (நந்தினி) ஈன்றாள்.(8) அந்தப் பசுக்களில் முதன்மையான நந்தினி அனைத்தும் உடைய (விரும்பிய அனைத்தையும் கொடுக்கும் திறன் கொண்டவளாக) பசுவாக இருந்தாள். வருணனின் அறம்சார்ந்த மகன் {வசிஷ்டர்}, நந்தினியைத் தனது ஹோம காரியங்களுக்காக அடைந்தார்.(9)

முனிவர்களால் வழிபடப்பட்ட அந்த ஆசிரமத்திலேயே நந்தினியும் வசித்து வந்தாள். அப்படி வசித்து வரும்போது, அச்சமற்று மகிழ்ச்சியுடன் அந்தப் புனிதமான இடத்தில் அவள் உலவிக் கொண்டிருந்தாள்.(10) ஒரு நாள், ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அந்தக் கானகத்திற்குத் தெய்வீக முனிவர்களாலும், தேவர்களாலும் வழிபடப்படும் வசுக்கள், பிருதுவைத் தலைமையாகக் கொண்டு அங்கு வந்தனர்.(11) அந்த மலைகளுடன் கூடிய அழகான கானகத்தில் தங்கள் மனைவியருடன் உலவித் திரிந்து அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.(12) ஓ இந்திரனின் ஆற்றலைக் கொண்டவரே! அப்படி அவர்கள் உலவிக் கொண்டிருக்கையில், கொடியிடை கொண்டவளான, அந்த வசுக்களின் ஒருவனுடைய மனைவி, அந்தக் கானகத்தில் உலவிக் கொண்டிருந்த எல்லாம் வல்ல நந்தினியைக் கண்டாள்.(13) அவள் {நந்தினி}, பெரிய கண்களுடன், மடி கனத்து, மெலிதான வாலுடன், அழகான கால்களுடன், அனைத்து நற்குறிகளும் நிறைந்து, பாலும், அனைத்து செல்வங்களும் கொண்டிருந்த அந்தப் பசுவைத் தனது கணவனான தியோவுக்குக் {பிரபாசனுக்குக்} காட்டினாள்.(14-16) ஓ முதன்மையான யானைகளின் ஆற்றலைக் கொண்டவனே {ஜனமேஜயா}, அந்தப் பசுவைக் கண்ட தியோ, அதன் சிறப்புகளை ஆராய்ந்து ரசித்துத் தனது மனைவியிடம்,(17) "ஓ அழகான தொடைகளையும், கருங்கண்களையும் பெண்ணே, இந்த அழகான ஆசிரமத்திற்கு உரிமையாளரான முனிவருக்குச் சொந்தமானதே இந்தப் பசு.(18) ஓ கொடியிடையாளே, சாகப் பிறந்தவன் இதன் பாலை அருந்தினால், பத்தாயிரம் வருடங்களுக்கு இளமை மாறாமல் இருப்பான்" என்றான்.(19)

ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே, இதைக்கேட்ட களங்கமற்ற குணம் கொண்ட கொடியிடை தேவி, தனது பிரகாசமிக்கத் தலைவனிடம்,(20) "இந்த உலகத்தில் ஜிதவதி என்ற பெயரில் எனக்கு ஒரு தோழி இருக்கிறாள். அவள் பேரழகும், இளமையுமுடையவளாவாள்.(21) அவள் மனிதர்களில் தேவனாக இருக்கும் அரசமுனி உசீனரனின் மகள். அவள் மிகுந்த புத்திசாலியாகவும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவளாகவும் இருக்கிறாள்.(22) ஓ சிறப்புமிக்கவரே, அந்த எனது தோழிக்காக இந்தப் பசுவை அதன் கன்றுடன் பெற விரும்புகிறேன். எனவே, ஓ தேவர்களில் சிறந்தவரே, எனது தோழி அதன் பாலைக் குடித்து, இந்த உலகத்தில் நோய்களும், பலவீனமும் அடையாமல் இருக்க, நீர் அதை இங்கே கொண்டு வாரும்.(23,24) ஓ சிறப்புமிக்கவரே, பழியற்றவரே, எனது விருப்பத்தை நீர் நிறைவேற்ற வேண்டும். அதைத் தவிர நான் வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்" என்றாள்.(25)

தனது மனைவியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தியோ, அவளுக்கு மகிழ்ச்சியை உண்டாக்க விருப்பங்கொண்டு, தனது சகோதரன் பிருது மற்றும் ஏனையோர் துணையுடன் அதைத் திருடினான்.(26) அந்தப் பசுவைக் கொண்ட முனிவரின் பெரும் ஆன்மத்தகுதிகளை மறந்த தியோ, நிச்சயமாகத் தனது தாமரைக் கண் மனைவியின் உத்தரவின் பேரிலேயே அதைச் செய்தான். அந்நேரத்தில் அவன், பசுவைத் திருடிய பாவத்திற்காக நாம் விழுந்துவிடுவோம் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.(27) மாலையில் கனிகளைச் சேகரித்துக் கொண்டு, அந்த வருணனின் மகன் தனது ஆசிரமத்திற்கு வந்த போது, பசுவையும், கன்றையும் காணவில்லை என்பதைக் கண்டார். அவர் கானகத்திற்குள் தேடத் துவங்கினார்,(28) உயர்ந்த புத்திக்கூர்மை உடைய அந்த முனிவர், தனது பசுக்களைக் காணவில்லை என்றவுடன், தனது ஆன்மிகப் பார்வையில் வசுக்கள் அவற்றைத் திருடிவிட்டனர் என்பதைக் கண்டார். அவருக்கு உடனே கோபம் மூண்டது. வசுக்களை, " இனிமையான பால் தரும், அழகான வால் கொண்ட எனது பசுவை வசுக்கள் திருடியதால், அவர்கள் உண்மையாகப் பூமியில் பிறக்கட்டும்" என்று சபித்தார்.(29-31)

ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அந்தச் சிறப்புவாய்ந்த முனிவர் அபர்வர் {வசிஷ்டர்} கோபத்தால் வசுக்களை அப்படிச் சபித்தார்.(32) அப்படிச் சபித்துவிட்டு, மீண்டும் தனது தவத்தில் முழு இதயத்துடன் மூழ்கினார். ஓ மன்னா! அந்தப் பெரும் சக்திவாய்ந்த, ஆன்மச் செல்வம் கொண்ட பிரம்மரிஷி கோபங்கொண்டு தங்களைச் சபித்ததை வசுக்கள் அறிந்தனர். அவர்கள் வேகமாக அந்த ஆசிரமத்திற்கு வந்து அந்த முனிவரைக் குளிர்விக்க முயன்றனர்.(33-35) ஆனால், ஓ மனிதர்களில் புலியே, அறத்தின் எல்லா விதிகளையும் அறிந்த அந்த முனிவர் ஆபர்வரின் அருளைப் பெறுவதில் அவர்கள் தோற்றனர்.(36)

அந்த அறம்சார்ந்த ஆபர்வர், "தவனுடன் {தரனுடன்} {வசுக்களில் ஒருவனின் பெயர்} கூடிய வசுக்களே, நீங்கள் என்னால் சபிக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் மனிதர்களுக்கு மத்தியில் பிறந்த ஒரு வருடத்திற்குள் உங்கள் சாபத்திலிருந்து விடுபடுவீர்கள்.(37) ஆனால் யாருடைய செயலால் நீங்கள் சபிக்கப்பட்டீர்களோ, அவன் {தியோ} அவனது பாவச் செயலிற்காக, நீண்ட காலத்திற்கு உலகத்தில் வசிப்பான்.(38) நான் கோபத்துடன் உதிர்த்த வார்த்தைகளைப் பயனற்றதாக்க மாட்டேன். தியோ பூமியில் வசித்தாலும், அவன் பிள்ளைகளைப் பெற மாட்டான்.(39) இருப்பினும், அவன் அறம் சார்ந்தவனாகவும், சாத்திர அறிவுடனும் இருப்பான். அவன் தனது தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பான். பெண் துணையின் இன்பத்திலிருந்து அவன் விலகியே இருப்பான்" என்று சொன்னார்.(40)

வசுக்களிடம் இப்படிச் சொல்லிவிட்டு, அந்தப் பெருமுனிவர் சென்று விட்டார். பிறகு வசுக்கள் அனைவரும் கூடி என்னிடம் வந்தனர்.(41) ஓ மன்னா! அவர்கள், தாங்கள் பிறந்தவுடன், தங்களை நீரில் தூக்கி எறிந்துவிட வேண்டும் என்று வரம் தருமாறு என்னிடம் இரந்து கேட்டனர்.(42) ஓ மன்னர்களில் சிறந்தவரே, அவர்களை உலக வாழ்விலிருந்து விடுவிப்பதற்காக, நான் அவர்கள் விருப்பப்படியே நடந்தேன்.(43) ஓ மன்னர்களில் சிறந்தவரே, அந்த முனிவரின் {வசிஷ்டரின்} சாபப்படி, இந்தக் குழந்தையே (தியோ) பூமியில் சில காலத்திற்கு வாழ்வான்" என்றாள்.(44)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிச் சொல்லிவிட்டு, அந்த தேவி {கங்காதேவி} அங்கேயே அப்போதே மறைந்து போனாள். அவள் தன்னுடன் தனது பிள்ளையையும் கூட்டிக் கொண்டு தான் விரும்பிய இடத்திற்குச் சென்றுவிட்டாள்.(45) அந்தச் சந்தனுவின் மகன் காங்கேயன் என்றும் தேவவிரதன் என்றும் இருவகையில் பெயர் சூட்டப்பட்டான். அவன் எல்லாச் சாதனைகளிலும் அவனது தந்தையை மிஞ்சினான்.(46) சந்தனு, தனது மனைவி மறைந்தவுடன், தன் தலைநகருக்குத் துயரம் நிறைந்த இதயத்துடன் சென்றான். இனி பாரதக் குலத்தைச் சார்ந்த அந்தச் சிறந்த மன்னன் சந்தனுவின் அறங்கள் பலவற்றையும், பெரும் நற்பேறுகளையும் விவரிக்கிறேன். உண்மையில், இந்த அற்புதமான வரலாறே மஹாபாரதம் என்று அழைக்கப்படுகிறது.(47,48)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்