Saturday, July 20, 2013

பீமனிடம் பேசிய ராட்சசி! - ஆதிபர்வம் பகுதி 154

Rakshasha woman spoke to Bhima! | Adi Parva - Section 154 | Mahabharata In Tamil

(ஹிடிம்ப வத பர்வம் - 1)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்களைக் கொன்று இறைச்சியைக் கொண்டுவர ஹிடிம்பையை அனுப்பிய ஹிடிம்பன்; பீமனைக் கண்டு காமுற்ற ஹிடிம்பை; பீமனிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்தி, தன் தமயனிடம் இருந்து பாண்டவர்களைக் காப்பதாகச் சொன்னது; ராட்சசர்களால் தன் பலத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது என்று சொல்லி ஹிடிம்பையைப் புறக்கணித்த பீமன்...

வைசம்பாயனர் சொன்னார், "பாண்டவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு சால மரத்தில் {ஆச்சா மரம்} ஹிடிம்பன் {இடும்பன்} என்ற பெயர் கொண்ட ராட்சசன் ஒருவன் இருந்தான்.(1)

பெரும் ஆற்றலையும் வலிமையையும் கொண்ட அவன், மனித இறைச்சியை உண்ணும் கொடியவனாவான். அவனது முகம் கடுமையுடனும், அவனது பற்கள் நீண்டு கூர்மையாகவும் இருந்தன. அப்போது அவன் பசியோடும் மனித இறைச்சியை உண்பதற்கு ஏங்கிக் கொண்டும் இருந்தான். நீண்ட கால்களும், பெருத்த வயிறும் கொண்ட அவனது கேசமும், தாடியும் சிவப்பு நிறத்திலிருந்தன. அவனது தோள்கள் அகலமாக, மரத்தின் கழுத்துப் போல இருந்தன; அவனது காதுகள் கணைகளின் முனைகளைப் {அம்பு முனை} போன்று இருந்தன. அவனது தோற்றம் அச்சமேற்படுத்தும் வகையில் இருந்தது. கடும் முகமும், சிவந்த கண்களும் உடைய அந்த மிருகம் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்த போது, தற்செயலாகப் பாண்டுவின் மகன்கள் அக்கானகத்தில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான்.(2-4) அவன் பசியுடனும், மனித இறைச்சிக்காக ஏங்கிக் கொண்டும் இருந்தான். அவனது காய்ந்த கோரை மயிரை ஆட்டித் தனது விரல்களால் அதை மேல்நோக்கிக் கோதிவிட்டுக் கொண்ட அந்தப் பெரும் வாய் படைத்த மனித ஊனுண்ணி, ஆவலுடன் கொட்டாவி விட்டுக் கொண்டே திரும்பத் திரும்பத் தூங்கிக் கொண்டிருந்த பாண்டுவின் மகன்களைப் பார்த்தான். பெரும் உடலும், பெரும் பலமும், பெருமேகத்தின் நிறமும், கூர்மையான நீண்ட பற்களும், ஒருவிதமான பளபளப்புடன் கூடிய முகங்களும் கொண்ட அவன் எப்போதும் மனித இறைச்சியை விரும்புபவன் ஆவான்.(5-7)

அப்படிப்பட்ட அவன், மனித வாடையை முகர்ந்து கொண்டே, தனது தங்கையிடம், "ஓ தங்காய், வெகு நாட்களுக்குப் பிறகு எனக்கு ஏற்ற உணவு என்னை அணுகியிருக்கிறது!(8) இப்படிப்பட்ட உணவின் சுவையை நினைத்தாலே, எனது வாயில் நீரூறுகிறது. எந்தப் பொருளும் தாங்கிக் கொள்ள முடியாத எனது கூர்மையான எட்டுப் பற்களுக்கு, வெகு நாளைக்குப் பிறகு, சுவையான இறைச்சியைக் கொடுக்கப் போகிறேன்.(9)  அவற்றைக் கொண்டு மனிதத் தொண்டையைத் தாக்கி, நரம்புகளை அறுத்துப் புத்தம்புதிய  சூடான மனித இரத்தத்தை (இன்று) நான் அதிகமாகக் குடிக்கப் போகிறேன். இக்கானகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் அவர்கள் யார் என்பதை அறிந்து வா.(10,11) பிடித்தமான கடும் மனித வாடை எனது மூக்கைத் துளைக்கிறது. அந்த மனிதர்களைக் கொன்று, அவர்களை என்னிடம் கொண்டு வா.(12) அவர்கள் என் எல்லைக்குள் தூங்குகிறார்கள். நீ அவர்களைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. நாம் இருவரும் சேர்ந்து அவர்களது உடல்களை மகிழ்ச்சியாகக் கிழித்து, அவர்களது இறைச்சியை உண்பதற்காக நான் சொன்னதைச் செய்வாயாக.(13,14) மனித இறைச்சியை நிறைவுடன் உண்ட பிறகு, நாம் இருவரும் பல வகைகளில் நடனமாடலாம்" என்றான்.

அந்த வனத்தில் ஹிடிம்பனால் இப்படிக் சொல்லப்பட்ட ஹிடிம்பை என்ற மனித ஊனுண்ணி {நர மாமிசம் உண்பவள்}, தனது தமையனின் கட்டளைக்கிணங்கி, ஓ பாரதக் குலத்தோனே {ஜனமேஜயா}, பாண்டவர்கள் இருந்த இடத்திற்குச் சென்றாள்.(15,16) அங்கே சென்றதும், அவள் தங்கள் தாயுடன் உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும், விழிப்புடன் அமர்ந்திருந்தவனும், வெல்லப்பட முடியாதவனுமான பீமசேனனையும் கண்டாள்.(17)

பலம் வாய்ந்த சால மரத்தைப் போன்ற அந்தப் பீமசேனனிடம் பூமியில் ஒப்பிடமுடியாத அழகைக் கண்ட அந்த ராட்சசி, உடனே அவனிடம் காதலில் விழுந்து, தனக்குத் தானே,(18) "புடம்போட்ட தங்கம் போன்ற நிறத்துடன், பெரும் கரங்களுடன், சிங்கம் போன்ற அகலமான தோள்களுடன், சங்கு போலக் கழுத்தில் மூன்று கோடுகளுடன், தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடன் இருக்கும் இந்த மனிதர் எனக்குக் கணவனாக இருக்கத் தகுந்தவர்.(19) எனது தமையனின் கொடூர ஆணைக்கு நான் கீழ்ப்படிய மாட்டேன். ஒரு பெண் தனது சகோதரனிடம் கொண்டிருக்கும் பாசத்தைவிட, அவளது கணவனின் மீது கொண்டிருக்கும் காதல் வலுவானது.(20) இவரைக் கொல்வதால், எனது தமையனுக்கும் எனக்கும் கிடைக்கும் மனநிறைவு சில நொடிகளுக்கானதே. நான் இவரைக் கொல்லாதிருந்தால், இவருடன் எப்போதும் இன்பமாக இருக்க முடியும்" என்று சொல்லிக் கொண்டாள்.(21)

நினைத்த வடிவை அடையும் சக்தி கொண்ட அந்த ராட்சசி {ஹிடிம்பை}, அழகான பெண்ணின் வடிவத்தை ஏற்றுக் கொண்டு மெதுவாகப் பெரும் கரம் கொண்ட பீமனை நோக்கி முன்னேறினாள்.(22) தெய்வீக ஆபரணங்கள் பூண்டு, இதழ்களில் புன்னகையுடன் எளிமையாக நடந்து சென்று, பீமனிடம்,(23) "ஓ மனிதர்களில் காளையே, எங்கிருந்து நீர் இங்கு வந்தீர்? நீர் யார்? தெய்வீக அழகுடன் உறங்கிக் கொண்டிருக்கும் இவர்கள் யாவர்?(24) ஓ பாவங்களற்றவரே, தனது அறையில் கிடப்பதைப் போல நம்பிக்கையாக இந்தக் கானகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த மேம்பட்ட அழகுடைய பெண்மணி யார்?(25) இக்கானகம் ஒரு ராட்சசனின் உறைவிடம் என்பதை நீர் அறியீரா? நான் உண்மையாகவே சொல்கிறேன். இங்கு ஹிடிம்பன் என்ற தீய ராட்சசன் வாழ்ந்து வருகிறான்.(26)

தெய்வீக அழகுடையவர்களே, நான் எனது தமையனான அந்த ராட்சசனால், உங்களைக் கொன்று உங்களை அவனது உணவாக்க அனுப்பப்பட்டேன்.(27) ஆனால் உண்மையைச் சொல்கிறேன். தெய்வீகப் பிரகாசத்துடன் இருக்கும் உம்மைக் கண்டதும், உம்மைத் தவிர வேறு எவரையும் கணவராக ஏற்க முடியாது என்று கருதி உம்மைக் காக்க நினைத்தேன்.(28) கடமைகளையும், நீதிகளையும் அறிந்த நீர், இவற்றையும் அறிந்து, எனக்கு எது சரியோ அதைச் செய்வீராக. எனது இதயமும், எனது உடலும் காமனால் (மன்மதனால்) (அவனது கணையால்) துளைக்கப்படுகின்றன. ஓ, நான் உம்மை அடைய விருப்பத்தோடிருப்பதால், என்னை உமதாக்கிக் கொள்வீராக.(29) ஓ பெரும் கரங்கள் கொண்டவரே! மனித ஊனுண்ணும் ராட்சசனிடம் இருந்து நான் உம்மைக் காக்கிறேன். சாதாரண மனிதர்கள் நுழைய முடியாத மலைகளின் சாரலில் நாம் வாழலாம்.(30) என்னால் காற்றில் பறக்க முடியும். நான் அதை என் மகிழ்வுக்காகச் செய்வேன். நீர் என்னுடன் அப்பகுதிகளில் மிகுந்த இன்பத்துடன் இருக்கலாம்" என்றாள் {ஹிடிம்பை}.(31)

அவளது இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமன், "ஓ ராட்சசப் பெண்ணே, ஒரு முனிவனைப் போலத் தனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவனால், தனது தாயையும் மூத்த மற்றும் இளைய சகோதரர்களையும் எப்படிக் கைவிட்டுவிட்டு வர முடியும்?(32) தூங்கும் தாயையும், சகோதரர்களையும் ராட்சசனுக்கு உணவாகப் போகும்படி விட்டு, என்னைப் போன்ற எந்த மனிதன், தனது காமத்தைத் தணித்துக் கொள்ளச் செல்வான்?" என்றான்.(33)

அதற்கு அந்த ராட்சசப் பெண், "ஓ, இவர்களை விழிப்படையச் செய்வீராக. நான் உமக்கு ஏற்புடைய அனைத்தையும் செய்வேன்! நர மாமிசம் உண்பவனான என் தமையனிடம் இருந்து, நான் உங்கள் அனைவரையும் நிச்சயம் காப்பேன்!" என்றாள்.(34)

பீமன், "ஓ ராட்சசப் பெண்ணே, "உனது தீய தமையனிடம் இருக்கும் அச்சத்தால், இக்கானகத்தில் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் எனது சகோதரர்களையும், எனது தாயையும் எழுப்ப மாட்டேன்.(35) ஓ மருட்சியுடையவளே, ராட்சசர்களால் எனது கரத்தின் பலத்தைத் தாங்க முடியாது. ஓ அழகான கண்களுடையவளே, மனிதர்களாலோ, கந்தர்வர்களாலோ, யக்ஷர்களாலோ எனது பலத்தைத் தாங்க முடியாது.(36) ஓ இனிமையானவளே, நீ இங்கே இருப்பதும் செல்வதும் உனது விருப்பமாகும். அல்லது நீ சென்று உனது தமையனையே கூட இங்கு அனுப்புவாயாக. ஓ கட்டுடல் கொண்டவளே நான் அதுபற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலை கொள்ளவில்லை" என்றான்".(37)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்