Thursday, July 18, 2013

அழ ஆரம்பித்த பீமன் - ஆதிபர்வம் பகுதி 153

Bhima started to cry | Adi Parva - Section 153 | Mahabharata In Tamil

(ஜதுக்கிரகப் பர்வம் - 11)

பதிவின் சுருக்கம் : தன் தாயையும், சகோதரர்களையும் ஒரு ஆலமரத்தடியில் விட்டுவிட்டு நெடுந்தொலைவு சென்று நீர் கொணர்ந்து வந்த பீமன்; பஞ்சணையில் படுப்பவர்களான தனது தாயாரும், சகோதரர்களும்  கட்டாந்தரையில் கிடப்பதைக் கண்டு புலம்பி அழுதது...

Bhima started to cry 
Adi Parva - Section 153 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் சொன்னார், "இப்படி அந்தப் பெரும் பலம்வாய்ந்த பீமன் முன்னேறிச் செல்கையில், அவனது மார்பின் மோதலால் அந்த முழுக் கானகமே அதன் மரங்களுடனும், கிளைகளுடனும் நடுங்குவது போலத் தெரிந்தது.(1) அவனது தொடைகளின் அசைவு உண்டாக்கிய காற்றானது, ஆனி மற்றும் ஆடி மாதக் காற்றைப் போல வீசியது. அந்தப் பெரும் பலம்வாய்ந்த பீமன் மரங்களையும், செடிகொடிகளையும் சாய்த்துத் தனக்கான வழியை உண்டாக்கியபடியே முன்னேறிச் சென்றான்.(2)  உண்மையில் அவன், தன் வழியில் நின்ற பெரும் மரங்களையும், செடிகளையும், அதன் பூக்கள் மற்றும் கனிகளுடன் ஒடித்துப் போட்டு முன்னேறிச் சென்றான்.(3) யானை மந்தையின் அறுபது வயதான தலைமை யானை குறிப்பிட்ட காலத்தில் தனது உடலின் மூன்று பகுதிகளில் நீர் வழிய, பெரும் மரங்களை ஒடித்துப் போட்டுக் கடந்து செல்வதைப் போல அந்தக் கானகத்தைப் பீமன் கடந்து சென்றான்.(4) பீமனின் சக்தி, கருடன் மற்றும் மருதனின் (வாயுத்தேவன்) வேகத்திற்கு இணையாக இருந்தது. அதனால் பாண்டவர்கள் {அப்படிச் செல்லும் பீமன் மீது அமர்ந்து இருந்ததால்} மயக்கமடையும் சூழல் ஏற்பட்டது.(5)



பாண்டவர்கள், கடக்கக் கடினமான நீரோட்டங்களை நீந்தி, திருதராஷ்டிரனின் மகன்களுக்குப் பயந்து, வழியில் மாறுவேடம் பூண்டு கொண்டு சென்றனர்.(6) சமமற்ற நதிகளின் கரைகளில், பீமன், நுட்பமான உணர்வுகள் கொண்டவளான தனது தாயைத் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றான்.(7) ஓ! பாரதக் குலத்தின் காளையே, மாலை நெருங்கும் போது பீமன் (தனது சகோதரர்களையும் தாயையும் முதுகில் சுமந்து கொண்டே), பழங்களும், கிழங்குகளும் நீரும் அரிதாகவே கிடைக்கும் ஒரு பயங்கரமான கானகத்தை அடைந்தான். அந்தக் கானகத்தைச் சுற்றிலும் பறவைகள் மற்றும் விலங்குகளின் பயங்கரமான அலறல்கள் கேட்டுக் கொண்டே இருந்தன.(8) அந்தி சாய்ந்ததும், அவற்றின் அலறல்கள் கடுமையாகின. இருட்டு, அனைத்தையும் பார்வையில் இருந்து மறைத்தது. அகாலமான நேரத்தில் கடும் காற்று வீசிப் பெரிதும் சிறிதுமான பல மரங்களையும், கொடிகளையும், இலைகளையும், பழங்களையும் தரையில் சாய்த்தது.(9,10)

களைப்பாலும், தாகத்தாலும் அவதிப்பட்ட அந்தக் கௌரவ இளவரசர்கள் {பாண்டவர்கள்} கனத்த உறக்கத்தால் மேலும் முன்னேற முடியாமல் தவித்தனர்.(11) அவர்கள் அனைவரும் உணவும், நீரும் இன்றி அந்தக் கானகத்தில் அமர்ந்தனர். தாகத்தால் அவதிப்பட்ட குந்தி, தனது மகன்களிடம்,(12) "நான் ஐந்து பாண்டவர்களின் தாய். இப்போது அவர்கள் மத்தியிலேயே இருக்கிறேன். இருப்பினும் நான் தாகத்தால் அவதிப்படுகிறேன்" என்றாள். இதையே திரும்பத் திரும்பத் தனது மகன்களிடம் குந்தி சொன்னாள்.(13) இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமனின் இதயம், தாய் மீது கொண்ட பாசத்தால் இரக்கப்பட்டு வெந்தது.  உடனே அவன் (முன்பு போலவே) {அனைவரையும் தூக்கிக் கொண்டு} புறப்படத் தீர்மானித்தான்.(14)

வாழும் ஆன்மா ஒன்றும் {ஒரு உயிரினமும்} இல்லாத அந்தப் பயங்கரமான பெரிய கானகத்தில், பீமன் முன்னேறி நடந்து, அகலமாகக் கிளைகள் பரவிய ஓர் அழகான ஆல மரத்தைக் கண்டான்.(15) ஓ! பாரதக் குலக் காளையே {ஜனமேஜயா}, அங்கே தனது சகோதரர்களையும், தாயையும் இறக்கிவிட்டு, அவர்களிடம், "இங்கே ஓய்வெடுங்கள், அதே வேளையின் நான் நீர் தேடிச் செல்லப் போகிறேன்.(16) நீர் வாழ் பறவைகளின் இனிய ஒலிகளைக் கேட்கிறேன். இங்கே ஒரு பெரிய குளம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்றான்.(17) ஓ! பாரதா {ஜனமேஜயா}, "செல்வாயாக" என்று தனது மூத்த சகோதரனால் {யுதிஷ்டிரனால்} கட்டளையிடப்பட்ட பீமன், அந்த நீர்வாழ் பறவைகளின் ஒலி வந்த திக்கில் முன்னேறிச் சென்றான்.(18) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அவன் விரைவில் ஓர் தடாகத்தை வந்தடைந்தான். அங்கே குளித்து முடித்துத் தனது தாகத்தைத் தணித்துக் கொண்டான். தனது சகோதரர்கள் மீது கொண்ட பாசத்தால் தனது மேலாடையை நீரில் முக்கி, அதை அவர்களுக்குக் கொண்டு வந்தான். தான் சென்ற நான்கு மைல் வழியைத் தொடர்ந்து தனது தாய் இருக்கும் இடத்திற்கு வேகமாக வந்து, அவளைக் கண்டு பெரும் துன்பமடைந்து, பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டான்.(19,20)

விருகோதரன் {பீமன்}, தனது தாயும், சகோதரர்களும் வெறும் தரையில் படுத்துறங்குவதைக் கண்டு, துக்கத்தால் மன உளைச்சலடைந்து அழுது புலம்பத் தொடங்கினான்.  "ஓ!, சகோதரர்கள் வெறுந்தரையில் தூங்குவதைக் காணும் பாவியானேனே, இதைவிடப் பெரிய வலியைத் தர வேறு என்ன நிகழ வேண்டும்?(22) ஐயோ, வாரணவதத்தின் விலையுர்ந்த மென்மையான படுக்கையில் தூங்க முடியாதவர்கள், இப்போது வெறுந்தரையில் தூங்குகிறார்களே!(23) ஓ!, தாமரை இதழ்களைப் போன்ற மென்மை கொண்டவளான இந்தக் குந்தி, எதிரிப் படைகளைத் துவம்சம் செய்யும் வாசுதேவனின் தங்கையான இந்தக் குந்தி, குந்திராஜனின் மகளான இந்தக் குந்தி, அதிர்ஷ்டக் குறிகள் நிறைந்தவளான இந்தக் குந்தி,(24) விசித்திரவீரியனின் மருமகளும், சிறப்புமிக்கப் பாண்டுவின் மனைவியுமான இந்தக் குந்தி, எங்களின் (ஐந்து சகோதரர்கள்) தாயான இந்தக் குந்தி,(25) விலையுயர்ந்த படுக்கையில் படுக்கத் தகுதி வாய்ந்த இந்தக் குந்தி, வெறும் தரையில் தூங்குவதைக் காணும் காட்சியை விட, வலி நிறைந்த காட்சி எது இருக்க முடியும்!(26)

ஓ!, தர்மன், இந்திரன், மருதன் {வாயு} ஆகியோரின் பிள்ளைகளை ஈன்றெடுத்து, அரண்மனையில் மட்டுமே உறங்கியவள், களைப்படைந்து வெறும் தரையில் உறங்குகிறாளே!(27) ஓ!, இந்த மனிதப் புலிகள் (எனது சகோதரர்கள்) வெறும் தரையில் தூங்குவதைக் காணும் காட்சியை விட வலி நிறைந்த காட்சி எது இருக்க முடியும்?(28) ஓ!, மூவுலகத்தையும் ஆளும் தகுதி கொண்ட அறவோனான இந்த யுதிஷ்டிரர், சாதாரண மனிதனைப் போலக் களைப்படைந்து தரையில் தூங்குகிறாரே!(29) மனிதர்களில் ஒப்பில்லாதவனும், நீல மேகங்களைப் போலக் கருநிறம் கொண்டவனுமான அர்ஜுனன், வெறுந்தரையில் சாதாரண மனிதனைப் போலத் தூங்குகிறானே! ஓ!, இதைவிட வலிநிறைந்தது எது இருக்க முடியும்?(30)

ஓ! அஸ்வினி இரட்டையர்களைப் போன்ற அழகுடன் தேவர்களைப் போல இருக்கும் இந்த இரட்டையர்கள் சாதாரணமானவர்கள் போல வெறும் தரையில் தூங்குகிறார்களே!(31) பொறாமை மற்றும் தீய எண்ணங்கொண்ட உறவினர்கள் யாரும் இல்லாதவன், கிராமத்தில் இருக்கும் ஒற்றை மரம் போல இவ்வுலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்வான்.(32) அதே வகை மரங்கள் வேறு இல்லாமல், தனியாக இலைகளுடனும் கனிகளுடனும் கிராமத்தில் நிற்கும் மரம் புனிதமடைந்து, அனைவராலும் வழிபடப்பட்டுக் கொண்டாடப்பட்டு இருக்கும்.(33) நிறைய உறவினர்களுடனும், வீரத்துடனும், அறத்துடனும் இருப்பவர்களும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள்.(34) பலத்துடனும், வளமையில் வளர்ந்தும், எப்போதும் நண்பர்களையும் உறவினர்களையும் மகிழ்வூட்டுபவர்கள், ஒரே கானகத்தில் வளரும் நெடும் மரங்களைப் போல ஒருவரை ஒருவர் நம்பியே வாழ்கின்றனர்.(35)

நாம் தீய திருதராஷ்டிரனாலும் அவனது மகன்களாலும் நாடுகடத்தப்பட்டு, மரணத்திலிருந்து பெரும் சிரமத்திற்கிடையில் தப்பித்து வந்திருக்கிறோம்.(36) அந்த நெருப்பிலிருந்து தப்பித்து, இந்த மரத்தின் நிழலின் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே இவ்வளவு துன்பப்பட்ட பிறகு, இனி நாம் எங்கே செல்வது?(37) தொலைநோக்குப் பார்வை சிறிதும் அற்ற திருதராஷ்டிரன் மைந்தர்களே, நீங்கள் தீயவர்கள், உங்கள் தற்காலிக வெற்றியில் மகிழ்ச்சி கொள்ளுங்கள். தேவர்கள் உங்களுக்கு நற்பேற்றைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் தீய பாவிகளே, நீங்கள் இன்னும் உயிரோடிருப்பது, யுதிஷ்டிரர் உங்களைக் கொல்ல எனக்குக் கட்டளையிடாமல் இருப்பதால்தான். இல்லையேல் கோபத்தால் நிறைந்திருக்கும் நான், இந்நாளிலேயே (ஓ! துரியோதனா) உன்னை, உனது பிள்ளைகள்[1], நண்பர்கள், சகோதரர்கள், கர்ணன் மற்றும் (சகுனியுடன்) சுபலனின் மகனோடு சேர்த்து யமனின் உலகத்திற்கு (புளூட்டோ கிரகம் என்கிறார் கங்குலி) அனுப்பியிருப்பேன். ஆனால், இழிந்த பாவிகளே, நான் என்ன செய்ய? பாண்டவர்களில் மூத்த அறம்சார்ந்த மன்னன் யுதிஷ்டிரன், இன்னும் உங்களிடம் கோபம் கொள்ளவில்லையே?" என்று சொல்லி அழுதான்.(38-41)

[1] இக்காலத்திற்குள் துரியோதனனின் திருமணம் நடந்து முடிந்திருக்க வேண்டும் என்பதற்கு இவ்வரிகள் வலுசேர்க்கின்றன.

இப்படிச் சொன்னவனும், பலம்வாய்ந்த கரங்களைக் கொண்டவனுமான பீமன், கோபத்தால் எரிந்து, தனது உள்ளங்கைகளைப் பிசைந்து கொண்டு, துக்கத்தால் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான்.(42) தனது சகோதரர்கள் வெறும் தரையில் நம்பிக்கையுடன் சாதாரண மனிதர்களைப் போலத் துயில்வதைக் கண்டே விருகோதரன் {பீமன்}, திடீரென்று கோபமடைந்தான். பீமன் தனக்குள்,(43) "இந்தக் கானகத்திற்கு அருகில் ஏதோ நகரம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே நான் விழிப்புடன் அமர்ந்து கொள்வேன்.(44) அவர்கள் உறக்கத்திலிருந்து எழுந்ததும், இது {நான் கொண்டு வந்த இந்த நனைந்த ஆடை} இவர்களது தாகத்தைத் தணிக்கும்" என்று சொல்லிக் கொண்டான். இப்படிச் சொல்லிக் கொண்ட, பீமன் விழிப்புடன் அமர்ந்து, தனது தாயையும், சகோதரர்களையும் பார்த்துக் கொண்டான்" {என்றார் வைசம்பாயனர்}.(45)




ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்