Sunday, July 28, 2013

குந்தியின் சொல்லமுதம்! - ஆதிபர்வம் பகுதி 163

Nectar words of Kunti! | Adi Parva - Section 163 | Mahabharata In Tamil

(பக வத பர்வம் - 5)

பதிவின் சுருக்கம் : பகாசுரனிடம் தன் பிள்ளையை அனுப்புவதாக அந்தப் பிராமணனிடம் சொன்ன குந்தி; அதை மறுத்த பிராமணன்; குந்தியின் பேச்சு ஏற்றுக் கொள்ளப்பட்டது...

அப்போது, குந்தி, "ஓ பிராமணரே! இந்த ஆபத்திற்காக அஞ்சாதீர். நீர் அந்த ராட்சசனிடம் இருந்து தப்புவதற்கு ஒரு வழியை நான் காண்கிறேன்.(1) உமக்கு ஒரு மகன் தான் இருக்கிறான், அவனும் பச்சிளங்குழந்தையாக இருக்கிறான். இளமையான ஆதரவற்ற ஒரே மகளும் இருக்கிறாள். உமது மனைவி உட்பட இவர்களில் எவரும் ராட்சசனிடம் செல்வதை நான் விரும்பவில்லை.(2) ஓ பிராமணரே! எனக்கு ஐந்து மகன்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவன் ராட்சசனுக்கான அந்தக் காணிக்கையை எடுத்துக் கொண்டு செல்லட்டும்" என்றாள் {குந்தி}.(3)


இதைக் கேட்ட பிராமணன், "என் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, ஒருபோதும் நான் இந்தக் காரியத்தைச் செய்ய மாட்டேன். எனது வாழ்வுக்காக, ஒரு பிராமணனின் உயிரையோ அல்லது ஒரு விருந்தாளியின் உயிரையோ நான் துறக்க மாட்டேன்.(4) பாவகரக் காரியங்கள் செய்பவர்களும், தாழ்ந்த பிறப்புப் பிறந்தவர்களும் கூட இதைச் (நீ என்னைச் செய்யச் சொல்வதைச்) செய்ய மறுப்பார்கள். ஒரு பிராமணனின் நன்மைக்காக, ஒருவன் தன்னையோ அல்லது தனது வாரிசையோ தியாகம் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.(5) நான் அந்த அருமையான அறிவுரையை மதித்து நடக்க விரும்புகிறேன். ஒரு பிராமணனின் மரணமா? அல்லது எனது மரணமா? என்று வரும்போது நான் பின்னதையே தேர்ந்தெடுப்பேன்.(6)

பிராமணனைக் கொல்வது என்பது பாவத்திலேயே பெரும் பாவமாகும், அதற்கு விமோசனமே இல்லை. ஒரு பிராமணனின் உயிர்த்தியாகத்தைவிட, ஒருவன் தன்னைத் தியாகம் செய்து கொள்வதே சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.(7) ஓ அருளப்பட்டவளே, நான் என்னைத் தியாகம் செய்வதால், தற்கொலை செய்யும் குற்றவாளி ஆக மாட்டேன். இன்னொருவன் எனது உயிரை எடுக்கும்போது, எந்தப் பாவமும் என்னைப் பற்ற முடியாது.(8) ஆனால் தெரிந்தே நான் ஒரு பிராமணனை மரணத்திற்கு அனுப்பினேன் என்றால், அந்தக் கொடிய பாவகரச் செயலில் இருந்து நான் எப்போதும் தப்ப முடியாது.(9) தனது வீடு தேடி வந்தவரையோ, தன்னிடம் தஞ்சமடைந்தவர்களையோ கைவிடுவதும், தன்னிடம் மரணம் வேண்டுபவனைக் கொல்வதும் கொடூரமான பாவகரச் செயல்களாகும் என்று கல்விமான்கள் கூறியிருக்கிறார்கள்.(10)

துயர் நிறைந்த காலத்தில் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட செயல்களை அறிந்த சிறந்தவர்கள், இது போன்ற கொடூரக் காரியங்களைச் செய்யக்கூடாது என்கின்றனர்.(11) நான் இன்று எனது மனைவியுடன் அழிவதே சிறந்தது. ஆனால் ஒரு பிராமணனின் மரணத்தை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்" என்றான் {அந்தப் பிராமணன்}.(12)

குந்தி, "ஓ பிராமணரே! நானும் ஒரு பிராமணன் எப்போதும் காக்கப்பட வேண்டும் என்று உறுதியான கருத்தையே வைத்திருக்கிறேன். ஐந்து மகன்களுக்குப் பதில் எனக்கு நூறு மகன்கள் இருந்தாலும், நான் எவரிடமும் குறைவான அன்பு வைக்க முடியாது.(13) அவர்கள் அனைவரையும் என்னைப் போலவே நான் நினைப்பேன். ஆனால் இந்த ராட்சசனால் எனது மகனைக் கொல்ல முடியாது. ஏனென்றால் எனது மகன் பெரும் சக்தியும், ஆற்றலும் கொண்டவனாவான். அவனுக்கு மந்திரங்களிலும் நிபுணத்துவம் உண்டு.(14) அவன் அந்த ராட்சசனுக்கு நன்றியுடன் அவனது உணவைக் கொடுப்பான். ஆனால், அவன் தன்னைக் காத்துக் கொள்வான் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.(15)

பெரும் உடல் கொண்ட பல ராட்சசர்கள் எனது வீர மகனிடம் மோதுவதை நான் கண்டிருக்கிறேன். இறுதியில் அவர்கள் எனது மகன் கையால் கொல்லப்பட்டுள்ளனர்.(16) ஆனால், ஓ பிராமணரே! இக்காரியத்தை யாரிடமும் சொல்லிவிடாதீர். ஏனென்றால், இப்படிப்பட்ட சக்தியை அடையவிரும்பும் மனிதர்களின் ஆவலால், எனது மகன்களுக்குப் பிரச்சனைகள் எழும்.(17) தனது குருவுக்குத் தெரியாமல் இந்த ஞானத்தை வேறு ஒருவனுக்கு என் மகன் கொடுத்தால், அவனுக்கு {என் மகனுக்கு} அந்த ஞானம் பயன்படாது என்று ஞானமுள்ளவர்கள் சொல்லியிருக்கின்றனர்" என்றாள் {குந்தி}.(18)

பிருதையால் இப்படிச் சொல்லப்பட்டதும், அந்த பிராமணன் தனது மனைவியுடன் மகிழ்ச்சியடைந்து, அமுதத்தைப் போன்ற குந்தியின் பேச்சை ஏற்றுக் கொண்டான்.(19) அப்போது குந்தி, அந்த பிராமணனை அழைத்துக் கொண்டு, வாயுவின் மகனிடம் (பீமனிடம்) சென்று, காரியத்தை முடித்துக் கொடுக்கும்படிக் கேட்டுக் கொண்டாள். அதற்குப் பீமன், "அப்படியே ஆகட்டும்" என்று மறுமொழி கூறினான்" {என்றார் வைசம்பாயனர்}.(20)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்