Sunday, August 18, 2013

விருந்தும் கண்காட்சியும்! - ஆதிபர்வம் பகுதி 196

The feast and the exhibition! | Adi Parva - Section 196 | Mahabharata In Tamil

(வைவாஹிக பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : குந்தியுடன் துருபதன் வசிப்பிடத்திற்குச் சென்ற பாண்டவர்கள்; பாண்டவர்களைச் சோதிப்பதற்காக பல பொருட்களைக் கொண்டு வந்த துருபதன்; திரௌபதியும் குந்தியும் அந்தப்புரம் சென்றது; உணவுக்குப் பிறகு ஆயுத வரிசையைப் பார்வையிட்ட பாண்டவர்கள்; ஒரு தீர்மானத்திற்கு வந்த துருபதன்...

வைசம்பாயனர் சொன்னார், "{அப்படி வந்த இரண்டாம்} தூதுவன், "மன்னர் துருபதர், தனது மகளின் திருமணத்தை முன்னிட்டு மணமகனுக்கு அருமையான விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார். உங்கள் தினசரிக் கடமைகளை முடித்துவிட்டு அங்கே வருவீராக. கிருஷ்ணையின் {திரௌபதியின்} திருமணம் அங்கே நடைபெறும். தாமதிக்காதீர்.(1) அற்புதமான குதிரைகள் பூட்டித் தங்கத்தாமரைகளால் அலங்கரிக்கப்பட்ட இந்தத் தேர் மன்னர்களுக்குத் தகுதியுடையது.  அவற்றில் செலுத்திக் கொண்டு பாஞ்சால மன்னனின் வசிப்பிடத்திற்கு வாருங்கள்" என்றான்".(2)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தக் குரு குல காளைகள், புரோகிதரை அனுப்பிவிட்டுக் குந்தியையும், கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} அந்த தேர்களில் ஒன்றில் ஏற்றி, அந்த அற்புதமான வாகனங்களில் தாங்களும் ஏறிக்கொண்டு துருபதனின் இடத்தை நோக்கிச் சென்றனர்.(3) அதே வேளையில், ஓ பாரதா {ஜனமேஜயா}, தனது புரோகிதர் மூலமாக யுதிஷ்டிரனின் வார்த்தைகளை அறிந்த துருபதன், அந்த வீரர்களின் குலத்தை அறிய எண்ணி, பல்வேறு பொருட்களின் பெரும் தொகுப்பைத் (நான்கு வகை வர்ணங்களின் படி திருமணத்திற்குத் தேவையான பொருட்களைத்) தயாராக வைத்திருந்தான். கனிகளையும், புனிதமான மாலைகளையும், கவசங்களையும், கேடயங்களையும், தரைவிரிப்புகளையும், பசுக்களையும், விதைகளையும், பல்வேறு பொருட்களையும், விவசாயத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக வைத்திருந்தான்.(4,5)

ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, அந்த மன்னன், பல கலைப்பொருட்களையும், பல்வேறு விளையாட்டுக் கருவிகளையும் திரட்டி வைத்தான்.(6) பல்வேறு அற்புதமான கவசங்களையும், பளபளக்கும் கேடயங்களையும், வாட்களையும், உறுதியான கூர்வாள்களையும், குதிரைகளுடன் கூடிய அழகான தேர்களையும், முதல்தரமான விற்களையும், அழகாக அலங்கரிக்கப்பட்ட அம்புகளையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஏகப்பட்ட கணைகளையும் திரட்டி வைத்தான். அம்புகளையும், கணைகளையும், போர்க்கோடாரிகளையும், போர்த்தளவாடங்களையும் கூட அவன் {துருபதன்} தயாராக வைத்திருந்தான். பல்வேறு படுக்கைகள், தரைவிரிப்புகள், பல அற்புதமான பொருட்கள், பலவகை ஆடைகள் அந்தத் தொகுப்பில் இருந்தன.(7,8)

{பாண்டவர்கள் அடங்கிய} அந்தக் குழு, துருபதனின் வசிப்பிடத்தை அடைந்ததும், குந்தி, அறம்சார்ந்த கிருஷ்ணையை மன்னனின் {துருபதனின்} அந்தப்புரத்திற்குள் அழைத்துச் சென்றாள். மன்னனின் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள், மகிழ்ச்சிகரமான இதயத்துடன் குருக்களின் ராணியை {குந்தியை} வழிபட்டனர்.(9) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, சிங்கத்தின் நடை கொண்டு, மான் தோலால் ஆன மேலாடை அணிந்து பார்ப்பதற்குப் பெரும்பலம்வாய்ந்த காளைகளைப் போல பாண்டவர்கள் இருந்தனர். அகன்ற தோள்களுடனும், பெரும் பாம்புகளைப் போன்று நீண்டு தொங்கும் கரங்களுடன் இருந்த மனிதர்களில் முதன்மையான {பாண்டவர்களில்} ஒவ்வொருவரையும் கண்ட மன்னனும் {துருபதனும்}, மன்னனின் அமைச்சர்களும், மன்னனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, மன்னனின் நண்பர்களும், பணியாட்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.(10,11) அந்த வீரர்கள், பாதத்தைத் தாங்கும் மனைப் பலகையுடன் கூடிய அற்புதமான இருக்கைகளில், எந்தத் தடுமாற்றமும், தயக்கமும் இல்லாமல் அமர்ந்தனர். மனிதர்களில் முதன்மையான அவர்கள், ஒருவர் பின் ஒருவராக, அவரவர் வயதுக்குத் தக்க வரிசையாக, அந்த விலையுயர்ந்த இருக்கைகளில் சிறிதும் அச்சமற்று அமர்ந்தனர்.(12)

அந்த வீரர்கள் அமர்ந்ததும், நன்கு உடுத்திய ஆண் மற்றும் பெண் பணியாட்களும், திறன் வாய்ந்த சமையற்காரர்களும், மன்னர்களுக்குத் தகுந்த பண்டங்களைத் தங்கம் மற்றும் வெள்ளி வட்டில்களில் {தட்டுகளில்} கொண்டு வந்தனர்.(13) அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் உணவுகளை உண்டு, பெரும் மனநிறைவைக் கொண்டனர். அந்த இரவு உணவு முடிந்ததும், அந்த வீர மனிதர்கள், அங்கிருந்த பொருட்களை எல்லாம் கடந்து, போர்க்கருவிகளைப் பார்வையிட்டனர்.(14) இதைக் கண்ட துருபதனின் மகனும், துருபதனும், தங்கள் நாட்டின் தலைமை அமைச்சர்களுடன் கூடி, குந்தியின் மகன்களை அரச ரத்தம் உடையவர்களாக அறிந்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(15)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்