Monday, August 19, 2013

ஒவ்வொரு நாளும் கன்னியானாள் திரௌபதி! - ஆதிபர்வம் பகுதி 200

Draupadi regained her virginity every day! | Adi Parva - Section 200 | Mahabharata In Tamil

(வைவாஹிக பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் முதலான பாண்டவர்கள் வயதுக்குத் தக்க வரிசையில் திரௌபதியைத் திருமணம் செய்து கொண்டது...

வைசம்பாயனர் சொன்னார், "இதைக் கேட்ட துருபதன், "ஓ பெரும் முனிவரே {வியாசரே}, நீர் சொல்வதைக் கேட்காதிருந்தால், நான் முன்பு சொன்னவாறே நடந்து கொண்டிருப்பேன். இப்போது நான் அனைத்தையும் அறிந்ததால், தேவர்களால் தீர்மானிக்கப்பட்டதற்கு நான் வேறுபட்டிருக்க முடியாது. எனவே, நீர் சொன்னதைச் செய்ய நான் தீர்மானிக்கிறேன்.(1) விதியின் முடிச்சு அவிழ்க்கப்பட முடியாதது. இந்த உலகத்தில் இருக்கும் எதுவும் நமது செயல்களின் விளைவு கிடையாது {விளைவால் ஏற்பட்டவை கிடையாது}. ஒரு மணமகனை அடையும் நோக்கில் எங்களால் எது நிர்ணயிக்கப்பட்டதோ, அது இப்போது பலருக்கு {பல மணமகன்களுக்கு} ஆதரவாக முடிகிறது.(2) கிருஷ்ணை {திரௌபதி} (தனது முந்தைய பிறப்பில்) திரும்பத் திரும்ப, "எனக்குக் கணவனைக் கொடு" என்று பெரும் தேவனிடமே {சிவனிடமே} வரம் கேட்டிருக்கிறாள். இக்காரியத்தில் சரியும், தவறும் அந்தத் தேவன் மட்டுமே அறிவான்.(3) என்னைப் பொறுத்த மட்டில், சங்கரன் எதைத் தீர்மானித்தாலும், அது சரியோ, தவறோ பாவம் என்னைத் தொட முடியாது. எனவே, விதிக்கப்பட்டது போலவே இவர்கள் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் கிருஷ்ணையின் {திரௌபதியின்} கரங்களை உரிய சடங்குகளுடன் பெறட்டும்" என்றான்".(4)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "சிறப்புமிக்க வியாசர், நீதிமானான யுதிஷ்டிரனிடம், "ஓ பாண்டுவின் மகனே, இன்று ஒரு நன்னாள் {அதிர்ஷ்டகரமான நாள்}! இன்று பூச(ம்) நட்சத்திரக்கூட்டத்திற்குள் சந்திரன் நுழைகிறான். இன்றே, உனது சகோதரர்களுக்கு முன்பு, நீ முதலில் கிருஷ்ணையின் {திரௌபதியின்} கரங்களைப் பெற்றுக் கொள்வாயாக" என்றார்.(5)

வியாசர் இப்படிச் சொன்னதும், மன்னன் யக்ஞசேனனும் {துருபதனும்}, அவனது மகனும் {திருஷ்டத்யும்னனும்} திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த ஏகாதிபதி, பல்வேறு விலையுயர்ந்த பொருட்களைத் திருமணப் பரிசாகத் தர, தயாராக வைத்திருந்தான். அவனது மகளான கிருஷ்ணை குளித்த பிறகு, பல நகைகளாலும், முத்துக்களாலும் அவளை அலங்கரித்துக் கொண்டு வந்தான்.(6) மன்னனின் நண்பர்களும், உறவினர்களும், நாட்டின் அமைச்சர்களும், பல பிராமணர்களும், அந்நாட்டுக் குடிமக்களும் அத்திருமணத்தைக் கண்டு மகிழ அங்கே வந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் தகுதிகளுக்கேற்ப இருக்கைகளில் அமர்ந்தனர்.(7) தாமரை மலர்களாலும் அந்த அரண்மனை அலங்கரிக்கப்பட்டிருந்தது. அல்லி மலர்கள் தூவப்பட்ட முற்றத்தில், படைகளை அழகாக வரிசையாக நிற்க வைத்து, வைரங்களும் ரத்தினங்களும் பதிக்கப்பட்ட அந்த அரண்மனை, நட்சத்திரங்களால் நிரம்பிய வானம் போல முக்கிய மனிதர்களின் கூட்டத்தால் நிறைந்திருந்தது.(8) இளமையுடன் கூடிய அந்தக் குரு குல இளவரசர்கள் {பாண்டவர்கள்}, குளித்து முடித்து, காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டு, விலையுயர்ந்த ஆடை உடுத்தி, சந்தனக்குழம்பால் நறுமணமாக்கப்பட்டு, வழக்கமான அறச்சடங்குகள் செய்து,(9) நெருப்பின் பிரகாசமுள்ள தங்கள் புரோகிதர் தௌமியரை உடன் அழைத்துக் கொண்டு திருமண மண்டபத்திற்குள் பெரும் காளைகள் பசுவின் கொட்டகையில் நுழைவது போல மகிழ்ச்சிகரமான இதயத்துடன் தகுந்த வரிசையில் ஒருவர் பின் ஒருவராக நுழைந்தனர்.(10)

வேதங்களை நன்கு அறிந்தவரான தௌமியர், புனித நெருப்பை மூட்டி, தகுந்த உச்சரிப்புகள் கொண்ட வாழ்த்துகளுடன் {மந்திரங்களுடன்} தூய்மையாக்கப்பட்ட நெய்யை அந்தச் சுடர்விட்டெரியும் நெருப்பில் விட்டார். யுதிஷ்டிரனை அழைத்தவரும், மந்திரங்கள் அறிந்தவருமான தௌமியர், அவனைக் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்த்து வைத்தார்.(11) நெருப்பை {ஏழுமுறை} வலம் வந்த மணமகனும், மணமகளும் ஒருவரையொருவர் கரம்பற்றினர். இந்த ஒருங்கிணைப்பு முடிந்ததும், புரோகிதரான தௌமியர், போர்க்கள ரத்தினமான யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு, அரண்மனையை விட்டு வெளியேறினார்.(12) அதன்பிறகு, குருகுலத்தைத் தழைக்கச்செய்பவர்களும், பெருந்தேர்வீரர்களுமான அந்த இளவரசர்கள், ஆடம்பர உடை உடுத்திக் கொண்டு, அடுத்த அடுத்த நாட்களில், அந்தப் புரோகிதரின் துணையுடன் அந்தப் பெண்களில் சிறந்தவளின் கரங்களைப் பற்றினர்.(13) ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தத் தெய்வீக முனிவர் {வியாசர்} என்னிடம், இந்தத் திருமணங்களுக்குத் தொடர்புடைய, இயல்புக்குமிக்க ஓர் அற்புதமான காரியத்தைச் சொன்னார். அதாவது, கொடியிடை கொண்ட அந்தச் சிறப்புமிக்க இளவரசி, முந்தைய நாள் திருமணத்திற்குப் பிறகு, ஒவ்வொரு நாளும் தனது கன்னித் தன்மையை மீண்டும் பெற்றாள் என்றார்.(14)

திருமணங்கள் முடிந்த பிறகு, மன்னன் துருபதன், அந்தப் பெரும் தேர் வீரர்களுக்குப் பல்வேறு அற்புதமான செல்வங்களைக் கொடுத்தான். அந்த மன்னன் {துருபதன்}, தங்கக் கடிவாளத்துடன் கூடிய நான்கு குதிரைகள் பூட்டப்பட்டவையும், தங்கக்கூடுகள் கொண்டவையுமான நூறு தேர்களை அவர்களுக்குக் கொடுத்தான்.(15) தங்கச் சிகரங்கள் கொண்ட நூறு மலைகளைப் போல நெற்றிப் பொட்டிலும், முகங்களிலும் அனைத்து நற்குறிகளும் கொண்ட நூறு யானைகளையும் கொடுத்தான். அழகான ஆடைகளுடனும், ஆபரணங்களுடனும், பூவேலை அலங்காரங்களுடனும் கூடியவர்களும், இளமையின் தொடக்கத்தில் இருந்தவர்களுமான நூறு பெண் பணியாட்களை, தெய்வீக அழகுடன் கூடிய அந்த இளவரசர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தான்.(16) அந்தச் சந்திர குலத்தின் சிறப்பு வாய்ந்த ஏகாதிபதி {துருபதன்}, புனித நெருப்பைச் சாட்சியாக வைத்துக் கொண்டு, இவை யாவற்றையும், இன்னும் பல பரிசுகளையும், பெரும் செல்வத்தையும், பல விலையுயர்ந்த ஆடைகளையும், பிரகாசமான ஆபரணங்களையும் கொடுத்தான்.(17) பெரும் பலம் பொருந்திய பாண்டுவின் மகன்கள், திருமணம் முடிந்து, தாங்கள் இரண்டாவது ஸ்ரீ-யைப் போல இருந்த கிருஷ்ணையை {திரௌபதியை} அடைந்து, பாஞ்சால மன்னனின் {துருபதனின்} தலைநகரில் {காம்பில்யத்தில்} பல இந்திரர்கள் இருப்பது போல, தங்கள் நாட்களை இன்பத்துடனும், மகிழ்ச்சியுடனும் கடத்தினார்கள்" {என்றார் வைசம்பாயனர்}.(18)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்