Sunday, August 25, 2013

சுந்தனும் உபசுந்தனும்! - ஆதிபர்வம் பகுதி 211

Sunda and Upasunda! | Adi Parva - Section 211 | Mahabharata In Tamil

(ராஜ்யலாப பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : சுந்தன் உபசுந்தன் ஆகியோரின் கடுந்தவம்; பிரம்மா அவர்களுக்குக் கொடுத்த வரம்; கொடுக்க முடியாத வரம்; மாற்றிக் கொடுத்த வரம்; மகிழ்ச்சி நிறைந்த தைத்தியர்களின் நகரம்…

வைசம்பாயனர் சொன்னார், "யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நாரதர், "ஓ பிருதையின் {குந்தியின்} மகனே, ஓ யுதிஷ்டிரா, நான் சொல்லப்போகும் இந்தப் பழைய கதையை உனது தம்பிகளுடன் சேர்ந்து நடந்தது அத்தனையும் நடந்தபடியே கேள்.(1) பழங்காலத்தில் பெரும் பலம் வாய்ந்தவனும், பெரும் சக்தியும் பலமும் கொண்வனுமான தைத்தியன் ஒருவன், பெரும் அசுரனான ஹிரண்யகசிபுவின் {விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தில் கொல்லப்பட்டவன்} குலத்தில் நிகும்பன் என்ற பெயரில் பிறந்திருந்தான்.(2) அந்த நிகும்பனுக்குச் சுந்தன், உபசுந்தன் என்ற இரு மகன்கள் பிறந்தார்கள். அந்தப் பலம் வாய்ந்த அசுரர்கள் இருவரும், பெரும் சக்தியையும், பயங்கரமான ஆற்றலையும் கொண்டிருந்தார்கள். அச்சகோதரர்கள் இருவரும், கடுமையானவர்களாகவும், தீய இதயம் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(3) அந்தத் தைத்தியர்கள் இருவரும் ஒரு தீர்மானத்துடன் கூடியவர்களாக, ஒரே சாதனைகளையும், முடிவுகளையும் எப்போதும் அடைவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் தங்கள் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் பகிர்ந்து அனுபவித்தனர்.(4) ஒருவருக்கு ஒருவர் ஏற்கும் வகையில் செயல்களைச் செய்து, அந்தச் சகோதரர்கள் இருவரும் எப்போதும் சேர்ந்தே இருந்தனர். எங்குச் சென்றாலும் சேர்ந்தே சென்றனர்.(5)

ஒரே வகையான தீர்மானமும், பழக்க வழக்கமும் கொண்ட அவர்களைக் காணும் போது, இரு பகுதிகளாகப் பிரிந்த ஒரே மனிதனைப் போலத் தெரிந்தனர். பெரும் சக்தி கொண்டு, எல்லாவற்றிலும் எப்போதும் ஒரே தீர்மானம் கொண்ட அந்தச் சகோதரர்கள் இவ்வாறே படிப்படியாக வளர்ந்தும் வந்தனர்.(6) ஒரு காரணத்துக்கான செயலைச் செய்து, மூன்று உலகங்களையும் அடக்கி ஆள விருப்பம் கொண்ட அந்தச் சகோதரர்கள், சரியான ஆயத்தங்களுக்குப் பிறகு, விந்திய மலைக்குச் சென்றனர். அங்கே சென்று கடும் தவங்களைச் செய்தனர்.(7) பசியாலும், தாகத்தாலும் துன்புற்றுத் தலையில் சடாமுடி தரித்து, மரவுரி {மரப்பட்டைகளால் ஆன உடுப்பு} உடுத்தி, நீண்ட காலத்திற்குப் பிறகு ஆன்மத் தகுதி அடைந்தனர்.(8) அவர்கள் தங்களை தலை முதல் கால் வரை அழுக்காக்கிக்கொண்டு, காற்றை மட்டுமே உண்டு, கால் கட்டைவிரலில் நின்று தவம் செய்தனர்.  பிறகு தங்கள் உடல் சதைகளைத் துண்டுகளாக அறுத்து நெருப்பில் போட்டனர். தங்கள் கரங்களை உயரத் தூக்கியபடி, நிலைத்த கண்களுடன், அவர்கள் நோற்ற தவம் நீண்ட காலமாக தொடர்ந்தது.(9)

அவர்கள் அப்படி தவம் இயற்றிக் கொண்டிருக்கையில், ஓர் அற்புதமான நிகழ்வு நடந்தது. அவர்களது தவத்தின் சக்தியினால் நீண்ட காலமாகக் கொதிப்படைந்திருந்த விந்தியமலை அனைத்துப்புறங்களிலும் புகையை வெளியிடத் தொடங்கியது.(10) அவர்களது கடுந்தவத்தின் மகிமையைக் கண்ட தேவர்கள் அச்சமடைந்தனர். அவர்களது தவமானது முன்னேற்றம் அடையாமல் இருக்க, அந்தத் தேவர்கள் எண்ணற்ற தடைகளை அவர்களுக்கு உண்டாக்கினர்.(11) தேவர்கள் தொடர்ச்சியாக அச்சகோதரர்களை, விலைமதிப்புமிக்க பல பொருட்களைக் கொண்டும், மிகுந்த அழகுடைய கன்னிகைகளைக் கொண்டும் அவர்களை மயக்க முயன்றனர். இருப்பினும் அந்தச் சகோதரர்கள் தங்கள் உறுதியை உடைக்கவில்லை.(12)

தேவர்கள், அந்தச் சிறப்புமிகு சகோதரர்களின் முன்னிலையில் தங்கள் மாய சக்தியைப் பயன்படுத்தித் மீண்டும் மீண்டும் முயன்றனர். அவர்களது சகோதரிகள், தாய்மார்கள், மனைவியர் மற்றும் அவர்களது உறவினர்கள் அனைவரும், கலைந்த கேசம், ஆபரணம் மற்றும் உடைகளுடன் அவர்களை நோக்கிப் பயத்துடன் ஓடி வருவது போலவும், கையில் கதாயுதம் கொண்ட ஒரு ராட்சசன் அவர்களைத் துரத்தி அடித்துக் கொண்டு வருவதாகவும் அவர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} கண்டனர்.(13,14) அப்படி ஓடி வந்த பெண்கள் அந்தச் சகோதரர்களை நோக்கி, "எங்களைக் காப்பாற்றுங்கள்" என்று கேட்பது போலவும் தோன்றிற்று. ஆனால், இவையாவும் அவர்களை அசைக்கவில்லை. அந்தச் சகோதரர்கள் தங்கள் உறுதியை உடைக்கவில்லை.(15) இந்தக் காட்சி அவர்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாததைக் கண்ட போது அந்த மங்கையரும், ராட்சசனும் அவர்களது பார்வையில் இருந்து மறைந்து போனார்கள்.(16)

இறுதியாக, அனைவரின் நலனையும் வேண்டுபவனும், தலைவர்களுக்குத் தலைவனூமான பெரும்பாட்டன் {பிரம்மன்}, அந்தப் பெரும் அசுரர்களிடம் வந்து, அவர்கள் விரும்பிய வரத்தைக் கேட்குமாறு சொன்னான்.(17) பெரும் ஆற்றலைக் கொண்ட சகோதரர்களான சுந்தனும் உபசுந்தனும், பெரும்பாட்டனைக் {பிரம்மனைக்} கண்டு, தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து, கரங்களைக் கூப்பி அவருக்காகக் காத்திருந்தனர்.(18) அந்தச் சகோதரர்கள் இருவரும் {சுந்தனும், உபசுந்தனும்} அந்தத் தேவனிடம், "ஓ பெரும்பாட்டனே, நீர் எங்களது தவத்தால் மனநிறைவு அடைந்தீரேயானால்,(19) ஓ தலைவா, எங்களுக்கு அனைத்து ஆயுதங்களின் அறிவையும், மாய சக்திகளின் அறிவையும் கொடுத்து நன்மையைச் செய்வீராக. நாங்கள் பெரும்பலத்துடன் விரும்பிய உருவை எடுக்கும் சக்தியை எங்களுக்குத் தந்தருளும். இறுதியாக எங்களுக்குச் சாகா வரத்தை அருள்வீராக" என்று கேட்டனர் {சுந்தனும், உபசுந்தனும்}.(20)

அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட பிரம்மன், "சாகாவரம் தவிர்த்து, நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும். ஏதாவது ஒரு வகையில் மட்டும் மரணம் நேரும் வகையில் நீங்கள் வரம் கேட்டால், மரணிக்காதவர் போலவே வாழலாம்.(21) அரசுரிமையில் மட்டுமே விருப்பங்கொண்டு நீங்கள் இக்கடுந்தவத்தை இயற்றியதால், என்னால் உங்களுக்கு சாகாவரம் தர முடியாது.(22) நீங்கள் மூன்று உலகத்தையும் அடக்கி ஆளவே கடும் தவம் இயற்றினீர்கள். ஓ பெரும் பலம் வாய்ந்த தைத்தியர்களே, நீங்கள் கேட்ட அந்த ஒரு விருப்பத்தை {சாகா வரத்தை} மட்டும் என்னால் தர முடியாது" என்றான்".(23)

நாரதர் தொடர்ந்தார், "பிரம்மனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சுந்தனும், உபசுந்தனும், "ஓ பெரும்பாட்டனே, எங்களில் ஒருவரால் தவிர, அசைவன, அசையாதன என்ற மூவுலகத்தில் இருக்கும் படைக்கப்பட்ட எந்தப் பொருளினாலும் எங்களுக்கு மரணம் நேரக்கூடாது" என்று கேட்டனர்.(24)

அதற்குப் பெருந்தகப்பன் {பிரம்மன்}, "இப்பொழுது நீங்கள் கேட்ட விருப்பத்தை நான் உங்களுக்கு அருள்கிறேன். உங்கள் மரணம் உங்கள் விருப்பப்படியே நிர்ணயிக்கப்படுகிறது" என்று சொல்லி வரத்தைக் கொடுத்து, அவர்களின் தவத்தைக் கைவிட வைத்து, தனக்கு உரிய பகுதிக்குச் சென்றுவிட்டான்.(25,26)

பலம் வாய்ந்த சகோதரர்களான அந்தத் தைத்தியர்கள் {சுந்தனும், உபசுந்தனும்}, பல வரங்களைப் பெற்று, அண்டத்தில் யாராலும் கொல்லப்பட முடியாதவர்களாக ஆனார்கள். அவர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் திரும்பினார்கள்.(27) பெரும் நுண்ணறிவைக் அந்தத் தைத்தியர்களின் உறவினர்களும், நண்பர்களும், வெற்றி மகுடம் சூடிப் பல வரங்களைப் பெற்றுத் திரும்பியிருக்கும் அவர்களைக் கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.(28) சுந்தனும், உபசுந்தனும் தங்கள் சடா முடிகளைக் களைந்து தலையில் மகுடம் சூடினர். விலை உயர்ந்த ஆடைகளையும், அணிகலன்களையும் அணிந்து மிகுந்த அழகுடன் காட்சியளித்தனர்.(29) அவர்கள் தகுந்த நேரமாக இல்லாதிருந்தாலும், தங்கள் நகரத்தில் ஒவ்வொரு இரவும் சந்திரனை உதிக்க வைத்தனர். அவர்களது நண்பர்களும், உறவினர்களும் இதயத்தில் ஆனந்தம் அடைந்து, மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி, இன்பத்துக்குத் தங்களை அர்ப்பணித்தார்கள்.(30)

"உண்பாயாக", "ஊட்டுவாயாக", "கொடுப்பாயாக", "மகிழ்விப்பாயாக", "பாடுவாயாக", "குடிப்பாயாக" போன்ற உற்சாகக் குரல்களே அனைத்து வீடுகளிலும் தினம் தினம் கேட்டன.(31) ஆங்காங்கே சத்தமான குரல்களுடன், கைதட்டல்களும் சேர்ந்து அந்தத் தைத்தியர்களின் நகரத்தையே நிறைத்தது.(32) நினைத்த உருவை அடையும் அந்தத் தைத்தியர்கள் எல்லாவகையான இன்ப விளையாட்டுகளிலும் ஈடுபட்டும், ஒரு முழு வருடத்தையே ஒரு நாளாகக் கருதிக் காலம் கடப்பதையே அறியாது இருந்தார்கள்" என்றார் {நாரதர்}."(33)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்