Monday, August 26, 2013

அசுரர் பிடியில் மூவுலகம்! - ஆதிபர்வம் பகுதி 212

Three worlds in clutch of Asuras! | Adi Parva - Section 212 | Mahabharata In Tamil

(ராஜ்யலாப பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : சுந்தனும், உபசுந்தனும் மூவுலகங்களையும் வென்றது; வேள்விகளும், பிதுர்காரியங்களும், இறைவணக்கமும் நின்றுபோனது; அசுரர்கள் கேளிக்கை விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது; குருக்ஷேத்திரத்தைத் தங்கள் வசிப்பிடமாக்கிக் கொண்டது…

நாரதர் தொடர்ந்தார், "கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்த பிறகு சகோதரர்களான சுந்தனும், உபசுந்தனும், மூன்று உலகங்களின் ஆட்சி உரிமையை விரும்பி, ஆலோசனை செய்து, தங்கள் படைகளை அணிதிரட்டக் கட்டளையிட்டனர்.(1) தங்கள் நாட்டின் அமைச்சர்கள், தைத்திய குல பெரியோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் ஒப்புதலைப் பெற்றுப் புறப்படுவதற்கு முன்னர்ச் செய்ய வேண்டிய சில முதற்படியான சடங்குகளைச் செய்து, மகம் நட்சத்திரம் உச்சத்தில் {கிழக்கின் அடிவானில்} இருக்கும் அன்று இரவில் புறப்பட்டனர்.(2) அந்தச் சகோதரர்கள் கவசம்பூண்டு, கைகளில் கதைகளும், போர்க்கோடரிகளும், ஈட்டிகளும், கம்புகளும் கொண்ட பெரும் தைத்தியப் படையுடன் சென்றனர்.(3) அந்தத் தைத்தியப் படையினர் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன், சாரணர்களைக் {பாடகர்களைக்} கொண்டு தங்களது எதிர்கால வெற்றி குறித்தும், நற்பேறு குறித்தும் புகழ்ச்சிப் பாடல்களைப் பாடிக்கொண்டு சென்றனர்.(4) நினைத்த மாத்திரத்தில் விரும்பிய இடத்திற்குச் செல்லும் சக்தி பெற்ற அந்தத் தைத்திய சகோதரர்கள் மிகக் கடுமையாகப் போர் புரிந்து, வானத்திற்கு உயர்ந்து, தேவர்கள் இருக்கும் பகுதிக்குச் சென்றனர்.(5)

அவர்கள் வருவதை அறிந்த தேவர்கள், உயர்ந்த தேவனின் வரம் அருளப்பட்டதையும் அறிந்துகொண்டு, தேவலோகத்தைவிட்டுப் பிரம்ம லோகத்திற்குப் பாதுகாப்புக் கோரிச் சென்றனர்.(6) கடும் ஆற்றலைக் கொண்ட அந்தத் தைத்திய வீரர்கள், விரைவில் இந்திரலோகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, விதவிதமான யக்ஷ, ராட்சச இனங்களையும், விண்ணை அதிகாரம் செய்யும் அனைத்து உயிர்களையும் வென்று திரும்பினர்.(7) அடுத்ததாக, அந்தப் பெரும் தேர் வீரர்கள், பாதாள லோகத்தில் உள்ள நாகர்கள் உலகத்தையும், கடலில் வசிக்கும் உயிரினங்களையும், அனைத்து மிலேச்ச வகைகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.(8)

அடுத்ததாக அவர்கள், முழு உலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் தங்கள் படைவீரர்களுக்கும் கடும் கட்டளைகளை இட்டனர்.(9)  "பிராமணர்களும், அரச முனிகளும், தங்கள் படையல்களாலும், பெரும் வேள்விகளில் கொடுக்கப்படும் உணவு வகைகளாலும், தேவர்களுக்குச் சக்தியையும், பலத்தையும், வளத்தையும் அளிக்கின்றனர்.(10) அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் அசுரர்களின் எதிரிகள் ஆவர். எனவே, நாம் அனைவரும் சேர்ந்து, அவர்கள் அனைவரையும் இந்த நிலத்தின் முகத்தில் கொன்று போட வேண்டும்" என்றனர்.(11)

இப்படியே அந்த அசுரச் சகோதரர்கள் {சுந்தனும், உபசுந்தனும்}, இந்தத் தீய முடிவைச் சூளுரைத்து, தங்கள் படை வீரர்களுக்குக் கட்டளையிட்டுப் பெருங்கடல் இருக்கும் கிழக்குக் கடற்கரைக்கும், திசைகள் அனைத்திற்கும் சென்றனர்.(12) வேள்விகள் செய்தவரையும், வேள்விகளுக்குத் துணை புரிந்த பிராமணர்களையும், அந்தச் சகோதரர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} உடனடியாகக் கொன்றனர். அவர்களை அப்படிப் பயங்கரமாகக் கொன்று விட்டு, அந்த இடத்தை விட்டு வேறு இடத்திறகுச் சென்றனர்.(13) அந்தப் படை வீரர்கள், தங்கள் ஆன்மாவைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முனிவர்களின் ஆசிரமங்களில் எரியும் வேள்வி நெருப்புகளை எடுத்து நீரில் தூக்கி வீசினார்கள்.(14) கோபத்தால் சபித்த அந்தச் சிறப்பு மிகுந்த முனிவர்களின் சாபங்கள், அந்தச் சகோதரர்கள் (பிரம்மனிடம்) பெற்ற வரங்களால் செயலிழந்தன.(15)

தங்கள் சாபங்கள், கல்லின் மேல் அடிக்கப்பட்ட கணை போல ஒரு சிறு அசைவையும் ஏற்படுத்தாதைக் கண்டு, தங்கள் சடங்குகளையும் உறுதிகளையும் கைவிட்டு எல்லாத் திசைகளிலும் சிதறி ஓடினர்.(16) தங்கள் ஆன்மாவைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ஆன்ம வெற்றி பெற்ற முனிவர்கள் கூட அந்த அசுரச் சகோதரர்கள் மீதிருக்கும் பயத்தால், வினதையின் மகனைக் (பாம்புண்ணியான கருடனைக்) கண்ட பாம்புகள் போலப் பறந்து ஓடினர்.(17) அவர்களது புனிதமான ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. புனிதமான கமண்டலங்களும், பாத்திரங்களும் உடைக்கப்பட்டன. அதில் இருந்த புனிதமானவைகள் தரையில் சிதறிக் கொட்டப்பட்டன.(18) உயிரினங்கள் எல்லாம் பேரழிவில் அழிந்தது போல, இந்த முழு அண்டமும் வெறுமையானது. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, முனிவர்கள் எல்லாம் மறைந்து போய், அரூபமாக மாறிய பிறகு, இரு பெரும் அசுரர்களும் அவர்களை அழிக்க எண்ணி பல்வேறு உருவங்களை எடுத்தனர்.(19) குகைகளில் ஒளிந்திருந்த முனிவர்களை நோக்கி மதங்கொண்ட யானையாக மாறிச் சென்று யமனின் உலகுக்கு அனுப்பி வைத்தனர்.(20)

சில நேரங்களில் சிங்கங்களாகவும், சில நேரங்களில் புலிகளாகவும், அடுத்த நொடியே மறைந்தும், கொடுமையான வழிகளைக் கையாண்டும் கண்ட முனிவர்களையெல்லாம் கொன்றனர்.(21) கல்வியும், வேள்விகளும் நிறுத்தப்பட்டு; மன்னர்களும், பிராமணர்களும் கொல்லப்பட்டனர். முழு உலகமும் விழாக்களும், கோலாகலங்களும் அற்றுப் போயின.(22) அச்சமடைந்த மனிதர்களின் "ஓ", "ஐயோ", "அம்மா” என்ற ஓலமே எங்கும் கேட்டுக் கொண்டிருந்தது. வாங்குவதும், விற்பதுமான வணிகம் நின்று போனது. அனைத்து அறச் சடங்குகளும் நின்று போயின; இந்த உலகத்தில் புனிதமான விழாக்களும், திருமணங்களும் இல்லாமல் போயிற்று.(23) உழவு {விவசாயம்} ஒதுக்கப்பட்டது {நிறுத்தப்பட்டது}, விலங்குகள் {கால்நடைகள்} வளர்க்கப்படவில்லை. நகரங்களும், ஆசிரமங்களும் மனிதர்கள் அற்றுப் போயின. எங்கு பார்த்தாலும் எலும்புகளும், எலும்புக்கூடுகளும், சிதறிப் பூமியைப் பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.(24)

பித்ருக்களுக்கு {முன்னோர்களுக்கு} மரியாதை செய்யும் விழாக்களெல்லாம் நின்று போயின. 'வஷத்' என்ற புனிதமான ஒலியும், நற்பேறுகளுக்கான அனைத்துச் சடங்குகளும் நின்று போயின. காண்பதற்குப் பூமி பயங்கரமானதாக ஆனது.(25) சுந்தன் மற்றும் உபசுந்தனின் இந்தச் செயல்களையெல்லாம் சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்மீன் கூட்டங்கள், மற்றும் வானில் இருக்கும் அனைத்தும் சாட்சிகளாக நின்று பார்த்து, ஆழ்ந்த கவலையை அடைந்தன.(26) தேவலோகத்தின் எல்லா மூலைகளையும் தங்கள் கொடுமையான நடவடிக்கைகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அந்த அசுரச் சகோதரர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} எதிரி என்று சொல்ல ஒருவனும் இல்லாமல், குருக்ஷேத்திரத்தைத் தங்கள் வசிப்பிடமாக்கினர்”.(27)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்