Thursday, August 29, 2013

வாய்மையே என் ஆயுதம்! - ஆதிபர்வம் பகுதி 215

Truth is my weapon! | Adi Parva - Section 215 | Mahabharata In Tamil

(அர்ஜுன வனவாச பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : ஒரு பிராமணனிடம் பசுக்களைத் திருடியவர்களிடம் இருந்து அதை மீட்டுக் கொடுக்க எண்ணி, தனது ஆயுதத்தை எடுக்க அறைக்குச் சென்ற அர்ஜுனன், யுதிஷ்டிரனும் திரௌபதியும் தனித்திருப்பதைக் காண்பது; அவர்களுக்குள் ஏற்பட்ட விதி மீறப்பட்டதால் அவன் பனிரெண்டு வருட வனவாசம் மேற்கொள்வது...

வைசம்பாயனர் சொன்னார், "இப்படிப்பட்ட ஒரு விதியைத் தங்களுக்குள் அமைத்துக் கொண்ட பாண்டவர்கள், தொடர்ந்து அங்கே {காண்டவ பிரஸ்தத்தில்} வசித்தனர். தங்கள் வீரத்தால் அவர்கள் பலநாட்டு மன்னர்களைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர்.(1) பிருதையின் {குந்தியின்} ஐந்து மகன்களான அளவிடமுடியா சக்தி கொண்டவர்கள் அவர்கள் அனைவருக்கும் கிருஷ்ணை {திரௌபதி} கீழ்ப்படிந்து நடந்தாள்.(2) யானைகளால் நிறைந்த சரஸ்வதி நதி, ஐந்து நீரோட்டங்களாகப் பிரிந்து இன்பமடைந்ததைப் போல, திரௌபதி தனது ஐந்து வீரக் கணவர்களைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தாள். அவர்களும் அவளைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.(3) அந்தச் சிறப்புவாய்ந்த பாண்டவர்கள் தங்கள் செயல்களில் அறத்தன்மையுடன் இருந்ததால், மொத்த குரு குலமும், பாவங்களில் இருந்து விடுபட்டு, மகிழ்ச்சியாக வளமையில் வளர்ந்தனர்.(4)

ஓ மன்னா {ஜனமேஜயா}, சில காலம் கழித்து, ஒரு சம்பவம் நடந்தது. குறிப்பிட்ட சில கள்வர்கள் தங்கள் கொள்ளையைச் சுமந்து செல்கையில், ஒரு பிராமணனின் கால்நடைகளையும் திருடிச் சென்றுவிட்டனர்.(5) கோபத்தால் தனது உணர்வை இழந்த அந்த பிராமணன், காண்டவப் பிரஸ்தத்துக்கு வந்து, துன்ப மிகுதியால் பாண்டவர்களைக் கடிந்து கொண்டான்.(6)

அந்த பிராமணன், "பாண்டவர்களே, உங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து, வெறுக்கத்தக்க தீய பாவிகளால் எனது பசுக்கள் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. அந்தக் கள்வர்களைத் துரத்திச் செல்லுங்கள்.(7) ஐயோ, ஓர் அமைதியான பிராமணனிடம் இருந்த புனிதமான நெய், காகங்களால் கொண்டு செல்லப்பட்டதே. ஐயோ, காலியான சிங்கத்தின் குகைக்குள் தீய நரி படையெடுக்கிறதே!(8) நிலத்தின் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு எடுத்துக் கொள்ளும் மன்னன், அவனது குடிகளைக் காக்கவில்லையென்றால், அவனை உலகத்திலேயே அதிகப் பாவங்களைச் செய்த பாவி என ஞானமுள்ளோர் அழைக்கின்றனர்.(9) ஒரு பிராமணனின் செல்வம் கள்வர்களால் கொண்டு செல்லப்படுகிறது. அறமே சிறுமையைத் தாங்குகிறதே! துயரத்தில் மூழ்கியிருக்கும் எனது கரங்களைப் பற்றித் தூக்குங்கள் பாண்டவர்களே!" என்றான் {பிராமணன்}.(10)

வைசம்பாயணர் தொடர்ந்தார், "குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} கசப்பான துயரத்தில் அழுது கொண்டு சொன்ன பிராமணர்களின் வார்த்தைகளைக் கேட்டு "அஞ்சாதே!" என்று உரத்த குரலில் அந்த பிராமணனுக்கு உறுதியளித்தான்.(11) ஆனால், அப்பொழுது அந்தச் சிறப்பு மிகுந்த பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை வைக்கும் அறையில் நீதிமானான யுதிஷ்டிரனும், கிருஷ்ணையும் {திரௌபதியும்} இருந்தார்கள். அழுது கொண்டே இருந்த பிராமணனின் வார்த்தைகள் அவனை {அர்ஜுனனை} உந்தினாலும், அர்ஜுனனால் அந்த அறைக்குள்ளும் நுழைய முடியவில்லை. ஆயுதங்கள் இல்லாமல் பிராமணனுடன் செல்லவும் முடியவில்லை.(12,13)

பிராமணனால் அழைக்கப்பட்ட அந்த அர்ஜுனன் சோகம் நிறைந்த இதயத்துடன் சிறிது நேரம் சிந்தித்தான்.(14) "ஐயோ, இந்த பிராமணனின் செல்வம் களவாடப்பட்டிருக்கிறதே! நான் அவனது கண்ணீரை வற்றச் செய்ய வேண்டும்.(15) இப்போதும் அழுது கொண்டே இருக்கும் அவன், துயரத்துடன் நமது வாசலுக்கு வந்திருக்கிறான். இப்போது நான் இவனைக் காக்கவில்லை என்றால், இந்த அலட்சியத்தால் மன்னனுக்குப் {யுதிஷ்டிரனுக்குப்} பாவம் ஏற்படும்.(16) நமது இந்த அறமற்ற தன்மை {அதர்மம்} நாடு முழுவதும் அறியப்படும். அதனால் நமக்குப் பெரும் பாவம் ஏற்படும்.(17) மன்னனை {யுதிஷ்டிரனை} மதிக்காமலே அறைக்குள் சென்றாலோ, எதிரிகளற்ற அந்த மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} உண்மையற்று நான் நடந்து கொண்டதாக ஆகும்.(18) அந்த அறைக்குள் நுழைவதன் மூலம், நான் வனவாசத் தண்டனை பெற்று அங்கேயே சாகக்கூட நேரிடும். உடலை விட அறமே மேலானாது. எனவேதான் உடல் அழிந்த பிறகும் அது நீடிக்கிறது" என்று நினைத்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஒரு தீர்மானத்திற்கு வந்து, அந்த அறைக்குள் நுழைந்து யுதிஷ்டிரனிடம் பேசினான்.(19,21)

வில்லுடன் வெளியே வந்த அவன், அந்த பிராமணனிடம் மகிழ்ச்சியுடன், "ஓ பிராமணரே! அந்தப் பாவித் திருடர்கள் நம்மை விட்டு வெகுதூரத்திற்குச் செல்லாதவாறு விரைந்து செல்வோம். நான் உம்முடன் வந்து, உமது செல்வத்தைத் திருடர்கள் கையில் இருந்து மீட்டுத் தருகிறேன்" என்றான் {அர்ஜுனன்}.(22,23)

பிறகு இருகரங்களையும் சம நிபுணத்துவத்துடன் பயன்படுத்தும் தனஞ்சயன் {அர்ஜுனன்}, கையில் வில்லேந்தி, கவசம் பூண்டு, மேற்கூடு கொண்ட தேரில் ஏறி கள்வர்களைத் தொடர்ந்தான். அத்திருடர்களைத் தனது கணைகளின் மூலம் துளைத்து, தங்கள் கொள்ளையைத் திரும்பத் தர நிர்ப்பந்தித்தான்.(24) அந்த பிராமணனுக்குப் பசுக்களை மீட்டுக் கொடுத்து, பெரும் புகழை வென்று, தலைநகருக்குத் திரும்பினான். மூத்தவர்களை வணங்கி, அனைவராலும் பாராட்டப்பட்ட அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்} கடைசியாக யுதிஷ்டிரனை அணுகி,(25,26) "ஓ தலைவா, எனக்கு விடை கொடுப்பீராக. நான் எனது சபதத்தை நிறைவேற்ற வேண்டும். நீர் திரௌபதியுடன் அமர்ந்திருப்பதைக் கண்டதால், நமக்குள் விதிக்கப்பட்ட விதியை மீறியவன் ஆகிறேன். எனவே, நான் கானகத்திற்குச் செல்கிறேன். இதுவே நமக்குள் நாம் தீர்மானித்துக் கொண்டது" என்றான்.(26,27)

அந்த வலிநிறைந்த சொற்களைத் திடீரெனக் கேட்ட யுதிஷ்டிரன் மிகுந்த துன்பம் கொண்டு கலக்கமடைந்த குரலில் "ஏன்!" என்று கேட்டான்.(28) பிறகு சிறிது நேரம் கழித்து, மன்னன் யுதிஷ்டிரன், சபதங்களைத் துறக்காத, சுருண்ட முடி கொண்ட தனது தம்பி தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} துயரத்துடன்,(29) "ஓ பாவம் அற்றவனே, நான் உனக்கு மரியாதைக்குரியவன் என்றால், நான் சொல்வதைக் கேட்பாயாக.(30) ஓ வீரனே, நன்மைக்காகவே நீ அந்த அறைக்குள் நுழைந்தாய் என்பது எனக்குத் தெரியும். நீ எனக்குப் பிடிக்காதது எதையும் செய்தாயா? ஆனால் எனது மனம் நிறைவு கொள்ளவில்லையே.(31) ஒரு தம்பி, தனது அண்ணனும் அண்ணனின் மனைவியும் உட்கார்ந்திருக்கும் அறைக்குள் நுழைவது குற்றமாகாது. ஓர் அண்ணன், தம்பியும் தம்பியின் மனைவியும் உட்கார்ந்திருக்கும் அறைக்குள் நுழைவதே குற்றமாகும்.(32) எனவே, ஓ பலம் பொருந்திய கரம் கொண்டவனே, நீ சொல்லும் காரணத்திலிருந்து விலகு. நான் சொல்வதைச் செய்வாயாக. உனது அறம் தாழவில்லை. நீ என்னை அவமானப்படுத்தவில்லை" என்றான் {யுதிஷ்டிரன்}.(33)

இதைக் கேட்ட அர்ஜுனன், "ஒருவன் தனது கடமையைச் செய்யும்போது இரட்டுற மொழிதல் {உண்மையை மழுப்பிச் சிலேடையாகப் பேசுதல் - quiblling} அனுமதிக்கப்படுவதில்லை என்று நீர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். நான் உண்மையிலிருந்து நழுவ முடியாது. உண்மையே எனது ஆயுதம்" என்றான் {அர்ஜுனன்}.(34)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "மன்னனின் அனுமதியைப் பெற்று, அர்ஜுனன் தன்னைக் கானக வாழ்வுக்குத் தயார் செய்து கொண்டான்; பிறகு அவன் பனிரெண்டு {12} வருடங்கள் கானகத்தில் வாழச் சென்றான் {அர்ஜுனன்}.(35)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்