Thursday, August 29, 2013

உலூபியின் காமமும், அர்ஜுனன் பெற்ற வரமும்! - ஆதிபர்வம் பகுதி 216

The lust of Ulupi and Arjuna's boon! | Adi Parva - Section 216 | Mahabharata In Tamil

(அர்ஜுன வனவாச பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : குளிப்பதற்காக கங்கையில் இறங்கிய அர்ஜுனன் உலூபி என்ற நாக கன்னிகையால் நீருக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்டது; நீருக்கு அடியில் வேள்விச் சடங்கு செய்தது; இரவு தங்கி காலை கங்கைக் கரை வந்தது; வரம் பெற்றது...

வைசம்பாயனர் சொன்னார், "குருகுலத்தின் புகழைப் பரப்பும் பெரும் பலம் வாய்ந்த கரம் கொண்ட அர்ஜுனன் (கானகத்திற்கு) கிளம்பியபோது, வேதங்கள் அறிந்த பிராமணர்கள் அந்தச் சிறப்பு மிகுந்த வீரனுக்குப் பின்னால் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நடந்து சென்றனர்.(1) பரமாத்மாவுக்குத் தங்களை அர்ப்பணித்து, வேதங்களையும், அதன் கிளைகளையும் நன்கறிந்த பிராமணர்களும், இசை நிபுணத்துவம் கொண்டவர்களும், கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்த துறவிகளும், புராணங்களை உரைப்போரும்,(2) புனிதமான கதைகளைப் பக்தர்களுக்கு உரைத்துப் பிரம்மச்சரியம் பூண்டவர்களும், வானப்பிரஸ்தர்களும் {காட்டில் துறவு எண்ணத்துடன் வாழும் தம்பதியரும்}, தெய்வீக வரலாறுகளை இனிமையாக உரைக்கும் பிராமணர்களும்,(3) மேலும் பல்வேறு வகையில் இனிமையாகப் பேசும் மனிதர்களும், இந்திரனைத் தொடரும் மருத்துகளைப் போல, அர்ஜுனனுடன் பயணித்தனர்.(4)

ஓ பாரதக் குலத்தோனே {ஜனமேஜயா}, அந்தப் பாரதர்களில் காளையானவன், தனது பயணத்தில் பல மகிழ்ச்சிகரமான, காணுதற்கினிய காட்சிகள் கொண்ட கானகங்களையும், ஏரிகளையும், நதிகளையும், கடல்களையும், மாநிலங்களையும், நீரையும் கண்டான், ஒரே நீளத்தில் கங்கை உற்பத்தியாகும் இடத்திற்கே சென்ற அந்த வீரன் அங்கேயே வசிக்க நினைத்தான்.(5,6) ஓ ஜனமேஜயா! பாண்டு மகன்களில் முதன்மையான அந்த உயர் ஆன்மா கொண்டவன் அங்கு வாழும்போது ஏற்பட்ட அற்புத நிகழ்ச்சியை இப்போது கேட்பாயாக.(7)

ஓ பாரதா {ஜனமேஜயா}, குந்தியின் மகனைத் தொடர்ந்து சென்ற பிராமணர்களும், தங்கள் வசிப்பிடத்தை அந்தப் பகுதியிலேயே ஏற்படுத்திக் கொண்டு, எண்ணற்ற அக்னி ஹோத்திரங்களைச் (நெருப்பை மூட்டி புனித சடங்குகளைச்) செய்தனர்.(8) ஓ மன்னா {ஜனமேஜயா}, சரியான பாதையில் இருந்து நழுவாத, நோன்பு நோற்கும் கற்ற பிராமணர்கள் தினமும் அந்தப் புனித நீரோடையின் அருகில் மந்திரங்களைச் சொல்லி, நெருப்பை மூட்டி, அந்த நெருப்பில் தெளிந்த நெய்யை அவிர்ப்பாகமாக ஊற்றி மலர்களால் வழிபட்டு வந்ததால், அந்த இடமே மிகுந்த அழகாகக் காட்சி அளித்தது.(9,10)

ஒரு நாள், அந்தப் பகுதியில் பிராமணர்களுக்கு மத்தியில் தங்கியிருந்த பாண்டவர்களில் காளையானவன் {அர்ஜுனன்}, தனது சுத்திகரிப்புச் சடங்குகளைச் செய்ய கங்கைக்குள் இறங்கினான்.(11) சுத்திகரிப்புச் சடங்குகள் முடிந்ததும், தனது முன்னோர்களை நினைத்து நீரால் அர்ச்சனை செய்தான். செய்து முடித்ததும் நெருப்பின் முன் வேள்வி செய்வதற்காக நீரில் இருந்து எழுந்த போது,(12) அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரன் {அர்ஜுனன்}, காம தேவனால் உந்தப்பட்ட நாக மன்னனின் மகளான உலூபியால் நீருக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்டான்.(13)

பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, நாக மன்னன் கௌரவ்யனின் அழகிய மாளிகைக்குத் தூக்கிச் செல்லப்பட்டான். அவனுக்காகவே அங்கே வேள்வி நெருப்பு எரிவதை அர்ஜுனன் கண்டான். நெருப்பைக் கண்ட குந்தியின் மகனான அர்ஜுனன் வேள்விச்சடங்குகளை அர்ப்பணிப்புடன் செய்தான். அச்சமற்ற அர்ஜுனன், உருவற்ற நெருப்பில் தெளிந்த நெய்யை விடுவதைக் கண்ட அக்னி அவன் {அர்ஜுனன்} மீது பெரும் மனநிறைவு கொண்டான். (14,15)

இப்படித் தனது சடங்குகளை நெருப்பின் முன் செய்த குந்தியின் மகன் {அர்ஜுனன்}, நாக மன்னன் மகளைக் {உலூபியைக்} கண்டு அவளிடம் சிரித்துக் கொண்டே,(16) "ஓ அழகானவளே, உனது துடுக்குத் தனத்தால் என்ன காரியத்தைச் செய்தாய்? ஓ மருண்டவளே! இந்த அழகான பகுதி யாருக்குச் சொந்தமானது? நீ யார்? யாருடைய மகள்?" என்று கேட்டான்.(17)

அர்ஜுனனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட உலூபி, "ஐராவதனின் குலத்தில் பிறந்த கௌரவ்யன் என்றொரு நாகன் இருக்கிறான். ஓ இளவரசரே, நான் அந்தக் கௌரவ்யனின் மகளே. எனது பெயர் உலூபி ஆகும்.(18) ஓ மனிதர்களில் புலியே, சுத்திகரிப்பு காரியங்களுக்காக நீரோடையில் இறங்கிய உம்மைக் கண்ட நான் காம தேவனால் மதியையிழந்தேன்.(19) ஓ பாவமற்றவரே, நான் திருமணமாகாதவள். நான் உமது நிமித்தமாகக் காம தேவனால் துன்புறுகிறேன். ஓ குரு குலத்தவரே, உம்மைக் கொடுத்து என்னை இன்று மன நிறைவு கொள்ளச் செய்வீராக" என்றாள் {நாகக் கன்னி உலூபி}[1].(20)


[1] பீஷ்ம பர்வம் பகுதி 91ல் உலூபி ஒரு விதவை என்ற குறிப்பு இருக்கிறது. இங்கே திருமணமாகாதவள் என்று உலூபி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். கும்பகோணம் பதிப்பில், "கௌரவபுத்திரனே, குற்றமற்றவனே, உன்னிமித்தமாக அனங்கனாற்பீடிக்கப்பட்டவளும், விவாகமில்லாதவளுமாகிய எனக்கு நீ இப்போது ஆத்மதானஞ்செய்தால் ஆனந்தத்தையுண்டாக்குவாய்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓ கௌரவக் குலத்தோன்றலே, காதல் தேவன் என்னைத் துன்புறுத்துகிறான். நான் இன்னும் கன்னியாக இருக்கிறேன். இன்று உம்மை எனக்குக் கொடுத்து என்னை நிறைவுகொள்ளச் செய்வீராக" என்றிருக்கிறது.

அர்ஜுனன், "மன்னன் யுதிஷ்டிரனின் கட்டளையால், ஓ இனிமையானவளே {உலூபியே}, நான் பனிரெண்டு வருட பிரம்மச்சரிய விரதம் நோற்றிருக்கிறேன். நான் நினைத்தவாறு செயல்பட எனக்கு அதிகாரம் இல்லை.(21) ஆனால், நீர் அதிகாரியே, நான் (என்னால் முடிந்தால்) உனக்கு இன்பம் கொடுக்க விரும்புகிறேன். நான் எனது வாழ்வில் பொய்ம்மை பேசியதில்லை. (22) எனவே, ஓ நாகக் கன்னிகையே, நான் உனக்கு இன்பம் அளிக்கும் அதே வேளையில், பொய்ம்மையிலிருந்தும், கடமையைத் தவறும் குற்றத்தில் இருந்தும் நான் எப்படித் தப்பிப்பேன் என்பதையும் சொல்" என்றான் {அர்ஜுனன்}.(23)

அதற்கு உலூபி "ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனனே}, நீர் ஏன் இந்த உலகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறீர்? நீர் ஏன் உமது அண்ணனால் பிரம்மச்சரிய வாழ்வு வாழ கட்டளையிடப்பட்டிருக்கிறீர்? என்பதை நான் அறிவேன்.(24) உங்கள் அனைவரின் பொது மனைவியான துருபதன் மகளுடன் {திரௌபதியுடன்} உங்களில் யாராவது தனிமையில் அமர்ந்திருந்தால், அதைக் காணும் உங்களில் மற்றவர் பனிரெண்டு வருடங்களுக்குப் பிரம்மச்சாரியாகக் கானகத்தில் வாழ்வது என்பது நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட உறுதியில் ஏற்பட்ட புரிந்துணர்வு {ஒப்பந்தம்} ஆகும். எனவே, உங்களில் யாராவது நாடு கடத்தப்பட்டால் அது திரௌபதியின் நிமித்தமாகவே இருக்க வேண்டும்.(25,26) அந்த உறுதியில் இருந்தே நீர் இந்தக் கடமையைச் செய்கிறீர். (எனது வேண்டுகோளை நீர் ஏற்றுக் கொள்வதால்) உமது அறம் எந்தத் தாழ்வையும் அடைந்துவிடாது. மேலும், ஓ அகன்ற கண் கொண்டவரே {அர்ஜுனரே}, துயரத்தில் இருப்பவரை மீட்பது உமது கடமையாகும்.(27)

என்னை விடுவிப்பதால் உமது அறம் தாழ்ந்துவிடாது. ஓ அர்ஜுனரே உமது அறத்திற்குச் சிறு தாழ்வு ஏற்பட்டாலும், எனது உயிரைக் காப்பாற்றியதால் உமக்குப் பெரும் புண்ணியம் கிடைக்கும். உம்மை வழிபடுபவளாக என்னை அறிந்து கொள்ளும். எனவே, ஓ பார்த்தரே {அர்ஜுனரே}! உம்மை எனக்குக் கொடும்! ஓ தலைவா, இதுவும் (கெஞ்சி அன்பை வேண்டும் பெண்ணை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும்) ஞானமுள்ளோர் கருத்துதான்.(28,29) இந்த வழியில் நீர் செயல்படவில்லை என்றால், நான் என்னை அழித்துக் கொள்வேன், என்பதை அறிந்து கொள்ளும். பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவரே {அர்ஜுனரே}, எனது உயிரைக் காப்பாற்றி, பெரும் புண்ணியத்தைப் பெற்றுக் கொள்ளும்.(30) ஓ மனிதர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, நான் உமது பாதுகாப்பை வேண்டுகிறேன். ஓ குந்தியின் மகனே {அர்ஜுனனே}, நீர் துயரத்தில் இருப்பவரையும், தலைவர் இல்லாதவர்களையும் எப்போதும் காப்பவர். அழுது கொண்டிருக்கும் நான் உமது பாதுகாப்பை வேண்டுகிறேன்.(31) ஆசை நிரம்பிய நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். எனவே எனக்கு ஏற்புடைய செயலைச் செய்யும். உம்மை எனக்குக் கொடுத்து எனது விருப்பத்தை மனநிறைவுப்படுத்துவதே உமக்குத் தகும்" என்றாள் {நாகக் கன்னி உலூபி}.(32)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "நாக மன்னனின் மகளால் {உலூபியால்} இப்படிச் சொல்லப்பட்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, அறத்தைத் தனது குறிக்கோளாகக் கொண்டு அவள் விரும்பிய அனைத்தையும் செய்தான்.(33) அந்தப் பெரும்பலசாலியான அர்ஜுனன் இரவு முழுவதும் நாக மாளிகையில் கழித்து, சூரியனுடன் தானும் எழுந்தான்.(34) கௌரவ்யனின் அரண்மனையிலிருந்து தான் கங்கையில் இறங்கிய அதே இடத்திற்கு, உலூபியுடன் மீண்டும் வந்தான். கற்புடைய உலூபி அவனிடம் விடைபெற்றுக் கொண்டு தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினாள்.(35) ஓ பாரதா {ஜனமேஜயா}, யாராலும் அர்ஜுனனை நீரில் வெல்ல முடியாத படி "நீரிலும், நிலத்திலும் வாழும் எந்த உயிரினத்தையும் உம்மால் வெற்றி கொள்ள இயலும்" என்று வரம் கொடுத்தாள் அவள் {உலூபி}".(36)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்