Saturday, August 31, 2013

கிருஷ்ணன் அர்ஜுனன் சந்திப்பு! - ஆதிபர்வம் பகுதி 220

The meeting of Krishna and Arjuna! | Adi Parva - Section 220 | Mahabharata In Tamil

(அர்ஜுன வனவாச பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : மேற்கு கடற்கரை புனித இடங்களைக் கண்டு களித்த அர்ஜுனன் பிரபாசத்துக்கு வருவது; அங்கே கிருஷ்ணனைச் சந்திப்பது; கிருஷ்ணனும் அர்ஜுனனும் ரைவதக மலை செல்வது; பிறகு அங்கிருந்து துவாரகை செல்வது...

வைசம்பாயனர் சொன்னார், "[1]அளவிடமுடியா ஆற்றல் கொண்ட அர்ஜுனன், ஒன்றன் பின் ஒன்றாக மேற்குக் கடற்கரையில் இருந்து அனைத்துப் புனித நீர்நிலைகளையும், புண்ணிய இடங்களையும் கண்டான்.  அவை அனைத்தையும் கண்டு இறுதியாக பிரபாசையை அடைந்தான்.(1,2) வெல்லப்பட முடியாதவனான அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, பிரபாசம் என்ற புனிதமான இடத்தை அடைந்தான். யாராலும் வெல்லமுடியாத அர்ஜுனன் அந்தப் புனிதமான மகிழ்ச்சிகரமான இடத்தை அடைந்ததும், மதுசூதனன் (கிருஷ்ணன்) அதைக் கேள்விப்பட்டான்.(3) மாதவன் {கிருஷ்ணன்}, குந்தி மகனான தனது நண்பனைக் {அர்ஜுனனைக்} காண உடனே அங்குச் சென்றான். கிருஷ்ணன், அர்ஜுனன் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து அணைத்துக் கொண்டு, ஒருவர் நலனை மற்றவர் கேட்டனர். பழங்காலத்தின் முனிவர்களான நரனும் நாராயணனுமான அந்த இரு நண்பர்களும் கீழே அமர்ந்தனர்.(4,5)


[1] இந்த இடத்திற்கு முன்பே கும்பகோணம் பதிப்பில் மேலதிகத் தகவல்கள் இருக்கின்றன. அதன் சுருக்கம் பின்வருமாறு: அர்ஜுனன் பிரபாசத்தை அடைந்தான். கதன் எனும் யாதவன் மூலம் சுபத்திரை குறித்து அறிகிறான் அர்ஜுனன். அவளைக் கவர நினைக்கிறான். திரிதண்டம் தரித்து, தலையை மொட்டையடித்துக் கொண்டு, கமண்டலம் தரித்து சந்நியாச வேடமிட்டு கிருஷ்ணனைத் தியானித்தான். சத்தியபாமாவுடன் இருந்த கிருஷ்ணன், அர்ஜுனனின் எண்ணத்தை அறிந்து சிரித்தான். சிரிப்பின் காரணத்தைக் கேட்ட சத்தியபாமாவிடம் அர்ஜுனன் செய்ய இருக்கும் காரியத்தைக் குறித்துச் சொல்லி, தான் சிரித்தது மகிழ்ச்சியின் காரணமாக என்றும் சொன்னான். அர்ஜுனன் தீர்த்தங்கள் திரிந்து பிரபாசத்தை அடைந்திருப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்தான்." பிறகு கங்குலியில்வருவதைப் போலவே தொடர்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும், கங்குலியின் பதிப்பிலும் மேற்கண்ட தகவல்கள் இல்லை.

வாசுதேவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம் அவனது பயணங்களைக் குறித்து, "ஓ பாண்டவனே {அர்ஜுனா}, நீ ஏன் புனித நீர்நிலைகளையும் புண்ணிய இடங்களையும் தரிசித்துக் கொண்டு உலகத்தைச் சுற்றி வருகிறாய்?" என்று கேட்டான்.(6)

பிறகு அர்ஜுனன் நடந்தது அத்தனையும் சொன்னான். அனைத்தையும் கேட்ட விருஷ்ணி குலத்தின் வீரன் {கிருஷ்ணன்}, "இஃது எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருக்கிறது" என்றான்.(7)

கிருஷ்ணனும் அர்ஜுனனும் சிறிது நேரம் பிரபாசத்தில் தாங்கள் விரும்பியபடி உலவி, ரைவதக மலையில் சில நாட்களைக் கடத்தச் சென்றனர்.(8) அவர்கள் ரைவதகத்திற்கு வருவதற்கு முன்பே, கிருஷ்ணனின் உத்தரவின் பேரால் அந்த மலை பல கலைஞர்களால் அழகுபடுத்தப்பட்டிருந்தது. கிருஷ்ணனின் உத்தரவின் பேரில் நிறைய உணவு வகைகளும் சேகரித்து வரப்பட்டன.(9) சேகரிக்கப்பட்ட அனைத்தையும் அனுபவித்த {உண்ட} அர்ஜுனன், வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} அமர்ந்து நடிகர்கள் மற்றும் ஆடற்கலைஞர்களின் நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தான்.(10) அனைவருக்கும் உரிய மரியாதையைக் கொடுத்து அனுப்பி வைத்த அந்த உயர் ஆன்மப் பாண்டவன் {அர்ஜுனன்} நல்ல அழகான அலங்கரிக்கப்பட்ட படுக்கையில் தன்னைக் கிடத்திக் {படுத்துக்} கொண்டான்.(11)

அந்த அற்புதமான படுக்கையில் தன்னைக் கிடத்திக் கொண்ட பலம் வாய்ந்த கரம் கொண்டவன் {அர்ஜுனன்}, தான் சென்று புனித நீர்நிலைகள், ஏரிகள், மலைகள், ஆறுகள், கானகங்கள் ஆகியவற்றைப்பற்றிக் கிருஷ்ணனுக்குத் தெரிவித்தான்.(12) இதையெல்லாம் சொல்லிக் கொண்டே, தெய்வீகப் படுக்கையில் நீட்டிய அவனை {அர்ஜுனனை}, ஓ ஜனமேஜயா! தூக்கம் களவாடியது.(13) காலையில் இனிமையான பாடல்களுடனும், வீணையின் இன்னிசைச் சுரங்களுடனும், பாடகர்களின் துதி மற்றும் வாழ்த்துகளுடனும் {அர்ஜுனன்} எழுப்பப்பட்டான்.(14) அத்தியாவசியச் செயல்கள் மற்றும் சடங்குகளுக்குப் பிறகு, விருஷ்ணி குலத்தவனால் {கிருஷ்ணனால்} பாசத்தோடு அழைக்கப்பட்டான். தங்க தேரில் சென்ற அந்த வீரன் {அர்ஜுனன்}, யாதவர்களின் தலைநகரான துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(15)

ஓ ஜனமேஜயா! குந்தியின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு} மரியாதை செலுத்துவதற்காக, அந்தத் துவாரகை நகரம் மட்டுமல்லாது, அதிலிருந்த வீடுகளும், தோட்டங்களும் கூட நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தன.(16) குந்தியின் மகனைக் காண விரும்பிய துவாரகைவாழ் குடிமக்கள், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் வீதிவழிகளில் குவிந்தனர்.(17) பொது இடங்களிலும் பொது வழிகளிலும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலுமான பெண்கள், ஆண்களுடன் கலந்து நின்றது, போஜர்கள், விருஷ்ணிகள், அந்தகர்கள் ஆகியோரின் கூட்டத்தைப் பெருகச் செய்தது.(18) போஜர்கள், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் ஆகியோரின் மகன்கள் அனைவரும் அர்ஜுனனை மரியாதையுடன் வரவேற்றனர். பதிலுக்கு அவனும், வழிபடத் தகுந்தவர்களை வழிபட்டு, அவர்கள் அருளைப் பெற்றுக் கொண்டான்.(19) அந்த வீரன் {அர்ஜுனன்}, யாதவக் குல இளைஞர்களால் பாசத்துடன் வரவேற்கப்பட்டான். தன் வயதுக்கு நிகரானவர்கள் அனைவரையும் மறுபடி மறுபடி அணைத்தான்.(20) ரத்தினங்களாலும், இன்பநுகர் பொருட்கள் அனைத்தாலும் நிரம்பிய கிருஷ்ணனின் மகிழ்ச்சிகரமான மாளிகைக்குச் சென்றான். அங்கே கிருஷ்ணனுடன் பல காலம் தங்கியிருந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(21)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்