Sunday, September 01, 2013

"சுபத்திரையைக் கடத்து!" என்றான் கிருஷ்ணன் - ஆதிபர்வம் பகுதி 221

"Kidnap Subhadra!" said Krishna ! | Adi Parva - Section 221 | Mahabharata In Tamil

(சுபத்திரா ஹரணப் பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : ரைவதக மலையில் பெரும் விழா நடப்பது; பலராமன், பிரத்யும்னன், சாம்பன் ஆகியோர் மது உண்டு போதையுடன் அங்கே சுற்றித் திரிவது; கிருஷ்ணனும், அர்ஜுனனும் தனித்து உலவுவது; சுபத்திரையைக் கண்டு அர்ஜுனன் மோகிப்பது; சுபத்திரையைக் கடத்திச் சொல்லுமாறு கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு வழி சொல்வது; யுதிஷ்டிரனுக்குச் செய்தி அனுப்புவது...

வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜனமேஜயா}, சில நாட்களில் ரைவதக மலையில், விருஷ்ணி மற்றும் அந்தகக் குலத்தவரின் பெரும் விழா ஒன்று வந்தது.(1) போஜர்கள், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அந்த மலைவிழாவில், அந்தக் குலங்களைச் சேர்ந்த வீரர்கள், பிராமணர்களுக்கு, ஆயிரக்கணக்கில் செல்வங்களைக் கொடுத்தனர்.(2) ஓ மன்னா {ஜனமேஜயா} அந்த மலைப்பகுதியில் இருந்த பல மாளிகைகள் ரத்தினங்களாலும், பகட்டான சாயல் கொண்ட செயற்கை மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(3) பாடகர்கள் பாடவும், நடனக்கலைஞர்கள் ஆடவும், இசைக்கலைஞர்கள் தங்கள் கச்சேரியை ஆரம்பித்தனர்.(4) அனைத்து ஆபரணங்களையும் பூண்டவர்களும், பெரும் சக்தி கொண்டவர்களும், தங்கத் தேர்களில் பவனி வந்தவர்களுமான விருஷ்ணி குல இளைஞர்கள் பார்க்க மிகவும் அழகாக இருந்தனர்.(5)

குடிமக்களில் சிலர் கால்நடையாகவும், சிலர் அற்புதமான ரதங்களிலும், தங்கள் மனைவியருடனும், பணியாட்களுடனும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் வந்தனர்.(6) அங்குப் பெருங்களிப்புடன் மது அருந்தி {மதுபானத்தினால் மயங்கிபடி}, தன் விருப்பப்படி உலவி கொண்டிருந்த தலைவன் ஹாலாதரன் (பலராமன்), தன்னுடன் இருந்த (தனது மனைவி) ரேவதியுடன் சேர்த்து, பல இசைக்கலைஞர்களாலும் மற்றும் பாடகர்களாலும் தொடரப்பட்டான்.(7) அங்கே விருஷ்ணி குலத்தின் பலம் பொருந்திய மன்னனான உக்ரசேனன், தனது ஆயிரம் மனைவியருடனும், பல இனிமையான பாடகர்களுடனும் வந்தான்.(8) போர்களத்தில் பயங்கரமான ருக்மினியனும் {பிரத்யும்னனும்}, சாம்பனும் மது உண்டு உற்சாக மிகுதியுடன் உலவிக் கொண்டிருந்தனர். அவர்கள் பூ வேலைப்பாடுகள் நிறைந்த விலை உயர்ந்த ஆடைகளை உடுத்தி மிகுந்த அழகுடன் இருந்தனர். அவர்களைப் பார்ப்பதற்குக் கேளிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தேவர்களைப் போல இருந்தனர்.(9) அக்ரூரர், சாரணன், கதன், பப்ரு, நிசதன், சாருதேஷ்ணன், பிருது, விப்ருது,(10) சத்யகன், சாத்யகி, பங்ககாரன், மகாரவன், ஹார்த்திக்யன், உத்தவன் ஆகியோரும், பெயர் சொல்லப்படாத இன்னும் பலரும் தங்கள் மனைவியருடனும், பாடகர்கள் குழுவுடனும் தொடரப்பட்டு, அந்த மலைவிழாவைச் சிறப்பித்தனர்.(11,12) அந்த மகத்தான, ஆடம்பரமான, மகிழ்ச்சிகரமான திருவிழா தொடங்கியபோது, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, பார்த்தனும் {அர்ஜுனனும்}, இவை அனைத்தையும் கண்ணுற்றுபடியே ஒன்றாகச் சென்றனர்.(13) அப்படி அவர்கள் உலவிக் கொண்டிருக்கையில், வசுதேவரின் {கிருஷ்ணனின் தந்தை} மகளாகிய அழகிய பத்திரை {கிருஷ்ணனின் தங்கை சுபத்திரை}, அனைத்து ஆபரணங்களும் பூண்டு மங்கையர் மத்தியில் இருப்பதைக் கண்டனர்.(14)

அர்ஜுனன் அவளைக் கண்டது முதல் காம தேவன் வசம் ஆனான். ஓ பாரதா {ஜனமேஜயா}, மனிதர்களில் புலியான கிருஷ்ணன், ஆழ்ந்த கவனத்துடன் அவளைக் {சுபத்திரையைக்} குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்த அர்ஜுனனைக் கண்டு புன்னகைத்து, "இஃது எப்படி இருக்கிறது? கானகத்தில் உலவித் திரியும் ஒருவனது இதயம் காமதேவனால் கலங்கலாமா?(15,16) இவள் என் தங்கை, ஓ பார்த்தா {அர்ஜுனா}, இவள் சாரணருடன் {பலராமருடன்} பிறந்த தங்கையாவாள். இவளது பெயர் பத்திரை {சுபத்திரை}. இவள் என் தந்தைக்குப் பிடித்தமான மகளாவாள். நீ அருளப்பட்டிருப்பாயாக. உனது இதயம் அவளிடம் நிலைத்திருந்தால், அஃதை என்னிடம் சொல். நான் இது குறித்து நேரடியாக என் தந்தையிடம் பேசுகிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.(17)

அர்ஜுனன், "இவ்வளவு அழகுடையவள், வசுதேவரின் {கிருஷ்ணனின் தந்தை} மகளாகவும், வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தங்கையாகவும் இருப்பதால், அவளால் யாரைத்தான் வசீகரிக்க முடியாது?(18) விருஷ்ணி குல மங்கையான உனது தங்கை {சுபத்திரை} எனக்கு மனைவியானால், நான் அனைத்திலும் வளமையடைவேன் என்பது உண்மையாகும்.(19) ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எந்த வழியில் நான் இவளை {சுபத்திரையை} அடைய முடியும் என்பதைச் சொல்வாயாக. இவளைப் பெறுவதற்காக, மனிதனால் சாதிக்க முடிந்த அனைத்தையும் நான் சாதிப்பேன்" என்று பதிலுரைத்தான் {அர்ஜுனன}.(20)

அதற்கு வாசுதேவன் {கிருஷ்ணன்}, "ஓ மனிதர்களில் காளையே, சுயம்வரம் என்பதே க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்பட்ட முறை. ஆனால், ஓ பார்த்தா {அர்ஜுனா}, இந்த மங்கையின் உணர்வு மற்றும் மனநிலையை நாம் அறியாததால், {சுயம்வரத்தில்} என்ன நடக்கும் என்பது ஐயத்திற்கிடமானதுதான்.(21) ஆற்றல் நிறைந்த க்ஷத்திரியர்களுக்கு, விரும்பிய பெண்ணை அபகரித்துச் செல்லும் செயலும் மெச்சப்படுகிறது என்று கற்றவர்கள் சொல்கிறார்கள்.(22) எனவே, ஓ அர்ஜுனா, அவள் சுயம்வரத்தில் என்ன செய்வாள் என்பது நமக்கு நிச்சயமாகத் தெரியாததால், அழகான என் தங்கையைப் {சுபத்திரையைப்} பலவந்தமாக அபகரித்துச் செல்வாயாக" என்றான் {கிருஷ்ணன்}.(23)

பிறகு கிருஷ்ணனும், அர்ஜுனனும், என்ன செய்ய வேண்டும் என்பதை நிச்சயித்துக் கொண்டனர். வேகமான தூதுவர்களை இந்திரப்பிரஸ்தத்தில் இருக்கும் யுதிஷ்டிரனிடம் அனுப்பி அனைத்தையும் தெரிவித்தனர். வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரன் அதைக் கேட்டவுடன், அதற்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்தான்" {என்றார் வைசம்பாயனர்}[1].(24)


[1] கும்பகோணம் பதிப்பில், "அதன்பிறகு, அர்ஜுனனும், கிருஷ்ணனும் செய்ய வேண்டிய உபாயத்தை நிச்சயம் செய்து கொண்டு சீக்கிரம் செல்பவர்களாகிய சில தூதர்களை இந்திரப் பிரஸ்தத்தில் வஸிக்கும் தர்மராஜருக்கு அதையெல்லாம் தெரிவிப்பதற்காக அப்போது அனுப்பினர். மஹாவீரரான தர்மபுத்திரர் அதைக் கேட்டதும் குந்தியோடு கூட அனுமதி கொடுத்தார். பீமஸேனனும, அதைக்கேட்டுத் தங்கள் காரியம் நிறைவேறினதாக நினைத்தான். இவற்றையெல்லாம் தூதர் வந்து சொல்லக்கேட்டு, சிறந்த புத்தியுள்ள கிருஷ்ணபகவான், அர்ஜுனனுக்கு அனுமதி கொடுத்துவிட்டுக் காரியம் இவ்விதம் செய்ய வேண்டுமென்று மனத்திற்குள் வைத்துக் கொண்டு தூதர்களுடன் கூடவே துவாரகைக்குச் சென்றார்" என்றிருக்கிறது.

மேலும், கும்பகோணம் பதிப்பில் இதற்குப் பிறகு வரும் அடுத்தடுத்த மூன்று அத்யாயங்களில்: துவாரகையின் வெளித்தோட்டத்தில் வசித்த அர்ஜுன ஸந்யாஸியை யாதவர்கள் கண்டதும், அவனை ஸுபத்ரையின் கன்யாந்தப்புரத்தில் வஸிக்கும்படி பலராமர் சொன்னதும், தான் முன்கேட்டிருந்த லக்ஷணங்களினால் அர்ஜுனனென்று சந்தேகித்த ஸுபத்ரை பாண்டவர்களுடைய க்ஷேமத்தை விசாரித்ததும், அர்ஜுனன் உண்மை சொன்னதால் காதல் கொண்ட அவளைப் பற்றி, ருக்மிணி தேவகிக்குத் தெரிவித்த்தும், ஸுபத்ரா விவாஹத்தை நடத்துவதற்காகச் சிவோத்ஸவம் என்ற காரணத்தைக் கொண்டு கிருஷ்ணன் யாதவர்களோடு கடலிலுள்ள தீவிற்குச் சென்றதும்; காந்தர்வ விவாஹம் செய்து கொள்ளலாம் என ஸுபத்ரையிடம் அர்ஜுனன் சொன்னதும்; இந்திரனை நினைத்து அர்ஜுனன் தியானம் செய்ததும்; குசஸ்தலி நகரை இந்திரனும் பரிவாரங்களும் அடைந்தது; இரவில் கிருஷ்ணன் துவாரகை வந்தடைந்தது; இந்திரன் தலைமையில் அர்ஜுனன், சுபத்ரை திருமணம் நடந்தது; இருபத்திரண்டு தினங்கள் ருக்மிணியின் இல்லத்திலேயே அர்ஜுனன் வசித்திருந்தது; அர்ஜுனன் ஸுபத்ரையுடன் கிருஷ்ணனுடைய தேரிலேறிக் காண்டவப் பிரஸ்தம் செல்ல ஆரம்பித்தது; விப்ருதுவுடன் ஏற்பட்ட போர்; அர்ஜுனனுக்குச் சாரதியாக ஸுபத்திரை செயல்பட்டது ஆகிய நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன.

எனினும் கங்குலி, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் மேற்கண்ட சம்பவங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்