Saturday, September 07, 2013

மனைவி மக்களை அடைந்தார் மந்தபாலர்! - ஆதிபர்வம் பகுதி 235

Mandapala went to his wife and children! | Adi Parva - Section 235 | Mahabharata In Tamil

(மய தரிசன பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : தனது பிள்ளைகளை நினைத்து மந்தபாலர் வருந்துவது; லபிதை பொறாமையால் அவரை ஒதுக்கிப் பேசுவது; நெருப்பு அடங்கியதும் ஜரிதை தனது பிள்ளைகளைக் காண விரைந்தது; பிள்ளைகள் பத்திரமாக இருப்பது; அதே நேரத்தில் மந்தபாலரும் அங்கே வருவது...

வைசம்பாயனர் சொன்னார், "ஓ குருகுலத்தைச் சேர்ந்தவனே {ஜனமேஜயா}, முனிவர் மந்தபாலர், தான் கொடுங்கதிர்கள் கொண்ட தேவனிடம் {அக்னியிடம்} பேசிவிட்டாலும், தனது பிள்ளைகள் குறித்து எண்ணி மிகுந்த பதற்றமடைந்தார். உண்மையில், அவர் மனமே அமைதியில் நிலைக்கவில்லை.(1)

தனது மகன்களைக் குறித்த துயருற்று, (தனது இரண்டாவது மனைவியான) லபிதையிடம், "ஓ லபிதா, எனது பிள்ளைகளுக்கு நகரும் சக்தி கிடையாது. அவர்கள் எப்படி இருக்கிறார்களோ? காற்றுக் கடுமையாக வீசி, நெருப்புப் பலமாக வளரும்போது, எனது பிள்ளைகளால் தங்களைக் காத்துக் கொள்ள முடியாதே.(2,3) அவர்களது தாயால் {ஜரிதையால்} அவர்களை எப்படிக் காப்பாற்றி மீட்க முடியும்? அந்த அப்பாவிப் பெண், தன்னால் தனது சந்ததியைக் காக்க முடியவில்லை என்று அறியவரும் போது, துக்கம் தாளமாட்டாளே.(4) என் மகன்களால் பறக்கவோ, காற்றில் எழவோ முடியாது என்பதால் அவள் பல்வேறு வகையில் கதறிக் கொண்டு அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பாள்.(5) ஐயோ, எனது மகன்கள், ஜரிதாரி, சாரிசிரிகன், ஸ்தம்பமித்ரன், மற்றும் துரோணன் ஆகியோர் எப்படி இருக்கிறார்களோ? அவர்களது ஆதரவற்ற தாய் {ஜரிதை} எப்படி இருக்கிறாளோ?" என்று துயரத்துடன் பேசினார் {மந்தபாலர்}.(6)

ஓ பாரதா {ஜனமேஜயா}, அப்படிச் சொல்லி அழுது கொண்டிருந்த முனிவர் மந்தபாலரிடம், சக்காளத்தியின் மேல் இருந்த பொறாமையால் லபிதை,(7) "உமது பிள்ளைகள் அனைவரும் பெரும் சக்தியும், ஆற்றலும் கொண்ட முனிவர்கள் என்று நீர் எனனிடம் உறுதியாகச் சொன்னீர். எனவே அவர்களைக் குறித்து நீர் வருந்தாதீர். அவர்களுக்கு நெருப்பிடமிருந்து அச்சமில்லை.(8) அக்னியிடம் அவர்கள் சார்பாக என் முன்னிலையில்தானே பேசினீர்? அந்தச் சிறப்பு மிகுந்த தேவன் அவர்களைக் காப்பதாகச் சொன்னாரல்லவா?(9) அண்டத்தின் பிரதிநிதிகளில் ஒருவனான {லோகபாலனான} அக்னி தனது பேச்சை பொய்த்துக்கொள்ள மாட்டான். உமக்குக் கவலையும் இல்லை, நண்பர்களின் நன்மை குறித்து உமது இதயம் நினைக்கவும் இல்லை.(10) எனது எதிரியை (ஜரிதையை) நினைத்து நீர் கவலைகொள்வதால் தான் இவ்வாறு தடுமாறுகிறீர். என் மீது நீர் வைத்திருக்கும் அன்பு, முதலில் நீர் அவளிடம் வைத்ததற்குச் சமமாக இல்லை என்பது நிச்சயம்.(11) தனது கவனத்தை இரு தரப்பிடம் சிதறவிடும் ஒருவன், அதில் ஒரு தரப்பு துன்பப்படுவதைக் காணலாம்; ஆனால் அவன் தனது இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும் மற்றொரு தரப்பை அலட்சியம் செய்யக் கூடாது.(12) நீர் யாருக்காக வருத்தப்படுகிறீரோ, அந்த ஜரிதையிடமே செல்வீராக. என்னைப் பொறுத்தவரை, உம்மைப் போன்ற தீய மனிதனுடன் நெருக்கமாக இருந்ததற்குப் பலனாக இனிமேல் தனிமையில் திரியப் போகிறேன்" என்றாள் {லபிதை}.(13)

இந்த வார்த்தைகளைக் கேட்ட மந்தபாலர், "நீ சொல்வது போல எண்ணம் கொண்டு நான் உலகில் திரியவில்லை. பிள்ளைப்பேற்றுக்காகவே நான் இங்கே இருக்கிறேன். அப்படி நான் பெற்ற பிள்ளைகளே கூட இப்போது ஆபத்தில் இருக்கின்றனர்.(14) தான் பெறப் போகும் ஒன்றிற்காக, தன்னிடம் உள்ள ஒன்றைக் கைவிடும் மனிதன் தீயவனாவான். இந்த உலகம் அவனைப் புறக்கணித்து அவமானப்படுத்தும் (எனவே, நான் இங்கிருந்து செல்ல வேண்டும்).(15) உன்னைப் பொறுத்தவரை நீ எதைத் தேர்ந்தெடுக்கிறாயோ அதைச் செய்து கொள்வாயாக.(16) மரங்களை நக்கிச் செல்லும் இந்தச் சுடர்விட்டெரியும் நெருப்பு, துயர் கொண்ட எனது இதயத்தின் வேதனையை அதிகரிக்கிறது. அப்படி வேதனை அதிகரிப்பதால், தீய நிமித்தங்கள் எழுகின்றன" என்றார் {மந்தபாலர்}".(17)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அதே வேளையில், அந்தச் சாரங்கப் பறவைகள் வசித்த இடத்தில் நெருப்பு அடங்கியது. தனது பிள்ளைகளிடம் அதிகப் பிணைப்புள்ள ஜரிதை, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைக் காண துயரத்துடன் விரைவாக வந்தாள்.(17) அவர்கள் அனைவரும் நெருப்பிலிருந்து தப்பிப் பிழைத்து நலமுடன் இருப்பதைக் கண்டாள். அந்தக் குஞ்சுகள் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருந்தாலும் தங்கள் தாயைத் கண்டதும் கதறி அழத் தொடங்கின.(18) அவளும் அவர்களை உயிரோடு கண்டதால் ஆனந்தக் கண்ணீர் விட்டாள். அவள் {ஜரிதை}, அழுது கொண்டிருக்கும் தனது பிள்ளைகள் ஒவ்வொருவரையும் ஆரத்தழுவினாள்.(19) சரியாக அதே நேரத்தில், ஓ பாரதா {ஜனமேஜயா}, மந்தபால முனிவர் அங்கே வந்தார். ஆனால், அவரைக் கண்டு அவரது மகன்களில் ஒருவரும் மகிழவில்லை.(20) இருப்பினும், அந்த முனிவர் {மந்தபாலர்} அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒருவர் பின் ஒருவராகப் பேசினார். பிறகு ஜரிதையிடமும் பேசினார்.  திரும்பத் திரும்பப் பேசினார். ஆனால், ஒரு மகனோ, ஜரிதையோ அவரிடம் நல்லதாகவோ அல்லதாகவோ பதிலுக்கு ஏதும் பேசவில்லை.(21)

பிறகு மந்தபாலர், "இவர்களில் எவன் உனது மூத்த மகன்? எவன் அவனுக்கு அடுத்தவன்? எவன் மூன்றாமவன்? எவன் அனைவரிலும் இளையவன்?(22) நான் துயரத்துடன் பேசிக்கொண்டிருக்கிறேன். நீ ஏன் எனக்குப் பதில் சொல்ல மறுக்கிறாய்? நான் உன்னை விட்டுச் சென்றது உண்மைதான், ஆனால், நான் இருந்த இடத்தில் நான் மகிழ்ச்சியாக இல்லை" என்றார்.(23)

பிறகு ஜரிதை, "மூத்தவனிடமும், அடுத்தவனிடமும், மூன்றாமவனிடமும், இளையவனிடமும் உமக்கு என்ன வேலை இருக்கிறது?(24) இனிய புன்னகையும், இளமையும் கொண்டவளான லபிதையிடம் செல்வீராக. என்னை ஒன்றுமில்லாமல் விட்டுவிட்டு முன்பு நீர் அவளிடம் சென்றீர்!" என்றாள்.(25)

அதற்கு மந்தபாலர், "பெண்களைப் பொறுத்தவரை, சக்காளத்தியையோ, கமுக்கக் {இரகசியக்} காதலியையோ விடத் தங்கள் மகிழ்ச்சியைத் தொலைக்க இந்த உலகத்திலும் சரி, வேறு உலகத்திலும் சரி வேறு காரணம் தேவையில்லை.(26) இந்த இரண்டைத் தவிர வேறு எதுவும், நெருப்பைப் போன்று எரியும் பகையைக் கொள்ளச்செய்யாது. பெரும் வேதனையையும் உருவாக்காது. நன்கு அருளப்பட்டவளும், அனைத்து உயிரிலும் கொண்டாடப்பட்டவளுமான அருந்ததியும்கூட, தனது மனைவியின் நன்மையில் அர்ப்பணிப்புடன் இருந்த சிறப்பு மிகுந்த வசிஷ்டரிடம் பொறாமையுடன் நடந்து கொண்டாள்.(27,28) மேலும் அருந்ததி எழுவரில் {சப்தரிஷிகளில்} ஒருவரான அந்த ஞானமுள்ள முனிவரை {வசிஷ்டரை} அவமதித்தாள். அந்த அவமதிக்கும் சிந்தனையாலேயே அவள் சிறிய நட்சத்திரமாக, நெருப்புடன் புகை கலந்தது போல, நல்லதைச் செய்யாத சகுனங்களாக, சில நேரங்களில் தெரிந்தும், சில நேரங்களில் மறைந்தும் இருக்கிறாள்.(29) நான் உன்னை உனது பிள்ளைகளுக்காகவே கருத்தில் கொள்கிறேன். வசிஷ்டர் எப்படித் தனது மனைவிக்குக் குற்றமிழைக்கவில்லையோ அப்படி நானும் உனக்குக் குற்றம் இழைக்கவில்லை. எனவே, பொறாமை கொண்டு அருந்ததி வசிஷ்டரிடம் நடந்து கொண்டதைப் போல நீ என்னிடம் நடந்து கொள்கிறாய்.(30) மனிதர்கள், பெண்களை அவர்கள் தங்கள் மனைவிகளாகவே இருப்பினும் நம்பக்கூடாது. பெண்கள், தாயாகிவிட்டால், தனது கணவனுக்குச் சேவை செய்யக் கருதுவதில்லை" என்றார் {மந்தபாலர்}".(31)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அதன்பிறகு, அவரது {மந்தபாலரது} பிள்ளைகள் அனைவரும் வந்து அவரை வழிபட்டனர். அவர் அவர்களிடம் அன்புடன் பேசி, அவர்களுக்கு அனைத்து உறுதிகளையும் கொடுத்தார்".(32)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்