Showing posts with label மய தரிசன பர்வம். Show all posts
Showing posts with label மய தரிசன பர்வம். Show all posts

Sunday, September 08, 2013

வன எரிப்பு முடிவுக்கு வந்தது! - ஆதிபர்வம் பகுதி 236

Forest conflagration extinguished! | Adi Parva - Section 236 | Mahabharata In Tamil

(மய தரிசன பர்வம் - 07)

பதிவின் சுருக்கம் :மந்தபாலர் தன் பிள்ளைகளிடம் உரையாடி அவர்களையும் ஜரிதையையும் அழைத்துக் கொண்டு வேறு நாட்டிற்குச் சென்றது; அர்ஜுனன் இந்திரனிடம் அனைத்து ஆயுதங்களையும் கேட்டது; இந்திரன் அதற்கு கால நிர்ணயம் செய்தது; கிருஷ்ணன் அர்ஜுனனின் நிலைத்த நட்பை இந்திரனிடம் வரமாகக் கேட்டது; கிருஷ்ணன், அர்ஜுனன், மயன் ஆகிய மூவரும் மகிழ்ச்சியாக நதிக்கரையில் வந்து அமர்ந்தது...

வைசம்பாயனர் சொன்னார், "மந்தபாலர் தனது பிள்ளைகளிடம், "உங்கள் பாதுகாப்புக்காக நான் அக்னியிடம் பேசினேன். அந்தச் சிறப்புமிகுந்த தேவன் {அக்னி} எனது விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தான்.(1) அக்னியின் அந்த வார்த்தையாலும், உங்கள் தாயின் {ஜரிதையின்} அறத்தாலும், நீங்களே பெற்றிருக்கும் பெரும் சக்தியாலும் தான் நான் முன்னமே வரவில்லை.(2) எனவே எனது மக்களே {மகன்களே}, என்னைக்குறித்து உங்கள் இதயங்களில் மனக்கசப்பை நிலைக்கச் செய்யாதீர். நீங்கள் அனைவரும் வேதங்களை அறிந்த முனிவர்கள். அக்னி கூட உங்கள் அனைவரையும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறான்" என்றார்".(3)

Saturday, September 07, 2013

மனைவி மக்களை அடைந்தார் மந்தபாலர்! - ஆதிபர்வம் பகுதி 235

Mandapala went to his wife and children! | Adi Parva - Section 235 | Mahabharata In Tamil

(மய தரிசன பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : தனது பிள்ளைகளை நினைத்து மந்தபாலர் வருந்துவது; லபிதை பொறாமையால் அவரை ஒதுக்கிப் பேசுவது; நெருப்பு அடங்கியதும் ஜரிதை தனது பிள்ளைகளைக் காண விரைந்தது; பிள்ளைகள் பத்திரமாக இருப்பது; அதே நேரத்தில் மந்தபாலரும் அங்கே வருவது...

வைசம்பாயனர் சொன்னார், "ஓ குருகுலத்தைச் சேர்ந்தவனே {ஜனமேஜயா}, முனிவர் மந்தபாலர், தான் கொடுங்கதிர்கள் கொண்ட தேவனிடம் {அக்னியிடம்} பேசிவிட்டாலும், தனது பிள்ளைகள் குறித்து எண்ணி மிகுந்த பதற்றமடைந்தார். உண்மையில், அவர் மனமே அமைதியில் நிலைக்கவில்லை.(1)

குஞ்சுகளிடம் இருந்து விலகிய அக்னி! - ஆதிபர்வம் பகுதி 234

Agni; deviated from the young birds! | Adi Parva - Section 234 | Mahabharata In Tamil

(மய தரிசன பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : சாரங்கப் பறவைக் குஞ்சுகள் அக்னியிடம் வேண்டுவது; அதில் இளையவனான துரோணனின் பாடலில் அக்னி மயங்குவது; அப்பறவைகளை எரிக்காமல் விடுவது…

ஜரிதாரி, "ஞானமுள்ள மனிதன் மரணத்தைக் குறித்த விழிப்புடன் இருப்பான். எனவே, அவன் மரணத்தைச் சந்திக்கும் அந்த நேரத்தில் எந்தத் துயரமும் கொள்ளமாட்டான்.(1) ஆனால் குழம்பிய ஆன்மா, விழிப்புடன் இருப்பதில்லை. எனவே அவன் மரணத்தைச் சந்திக்கும்போது, வலியையும், துயரத்தையும் உணர்ந்து, முக்தி பெறுவதில்லை" என்றான்.(2)

தாயின் பேச்சை ஏற்க மறுத்த குஞ்சுகள்! - ஆதிபர்வம் பகுதி 233

The young ones not accepting the mother's speech! | Adi Parva - Section 233 | Mahabharata In Tamil

(மய தரிசன பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : ஜரிதை தனது மகன்களை எலி வளைக்குள் புகச் சொன்னது; குஞ்சுகள் அதை ஏற்க மறுத்தது; எலியை ஒரு பருந்து பிடித்து சென்றதாக ஜரிதை சொன்னது; அதை ஏற்காத குஞ்சுகள் தங்கள் தாயை வேறிடம் போகச் சொன்னது; எரியும் காட்டில் தனது குஞ்சுகளை விட்டுவிட்டு ஜரிதை நெருப்பில்லாத பாதுகாப்பான இடத்திற்கு சென்றது...

வைசம்பாயனர் சொன்னார், "தனது மகன்களின் வார்த்தைகளைக் கேட்ட ஜரிதை, "பொந்துக்குள் இருந்த அந்தச் சிறு எலியை ஒரு பருந்து தனது கூரிய நகத்தில் பற்றி எடுத்துச் சென்றது. எனவே, நீங்கள் அந்தப் பொந்துக்குள் சென்று அச்சமற்று இருக்கலாம்" என்றாள்.(1)

நெருப்பால் சூழப்பட்ட பறவைக் குஞ்சுகள்! - ஆதிபர்வம் பகுதி 232

Fire surrounded the infant birds! | Adi Parva - Section 232 | Mahabharata In Tamil

(மய தரிசன பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : ஜரிதையின் ஒப்பாரி; குஞ்சுகள் தங்கள் தாயைத் தப்பிக்கச் சொன்னது; ஜரிதை குஞ்சுகளை பொந்துக்குள் நுழையச் சொன்னது; பொந்துக்குள் நுழைய மறுத்த குஞ்சுகள்...

வைசம்பாயனர் சொன்னார், "காண்டவ வனத்தில் நெருப்புச் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த போது, அந்தப் பறவை குஞ்சுகள் மிகவும் கலங்கிப் போய்த் துயரத்தில் இருந்தன.  கவலை நிறைந்த அவர்கள் {பறவைகள்} தப்பிக்க எந்த வழியும் காணவில்லை.(1) தப்ப இயலாத குஞ்சுகள் அவை என்பதை அறிந்த அவற்றின் தாயான ஆதரவற்ற ஜரிதை, மிகுந்த துயர் கொண்டு பேரொலியுடன் கதறி அழுதாள்.(2)

Friday, September 06, 2013

மந்தபாலர் - ஜரிதை, லபிதை! - ஆதிபர்வம் பகுதி 231

Mandapala - Jarita and Labita! | Adi Parva - Section 231 | Mahabharata In Tamil

(மய தரிசன பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : மந்தபாலர் எனும் முனிவர் கடும் தவம் இருந்து, மேலுலகம் செல்வது; அவருக்கு சந்ததி இல்லாததால், சில இடங்களில் அவருக்கு அனுமதி இல்லாதிருப்பது; சந்ததியைப் பெருக்க அவர் சாரங்கப் பறவையாக மாறி ஜரிதையுடன் கூடுவது; பிறகு லபிதை என்பவளுடன் ஊர்சுற்றுவது; அக்னி காண்டவ வனத்தை எரிக்கப்போகிறான் என்பதை அறிந்து, தனது பிள்ளைகளை ஒன்றும் செய்யக்கூடாது என்று வேண்டுவது...

ஜனமேஜயன், "ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, அப்படி அந்தக் கானகம் எரிக்கப்பட்ட போது, சாரங்கம் என்று அழைக்கப்பட்ட பறவைகளை ஏன் அக்னி உட்கொள்ளவில்லை?(1) இது கானகத்தில் எப்போது நடந்தது? ஓ பிராமணரே! மய தானவனும், அசுவசேனனும் கொல்லப்படாதது எதற்காக என்று நீர் சொல்லிவிட்டீர்.  ஆனால், சாரங்கங்கள் தப்புவதற்கு என்ன காரணம் என்பதை நீர் சொல்லவில்லை.(2) ஓ பிராமணரே, அந்தப் பறவைகள் தப்பியது எனக்கு அற்புதமாகத் தோன்றுகிறது. அந்தக் கொடுமையான காட்டுத்தீயில் அவை ஏன் அழியவில்லை என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.(3)

"அர்ஜுனா! என்னைக் காப்பாற்று," என்றான் மயன்! - ஆதிபர்வம் பகுதி 230

"Arjuna! Save me," said Maya! | Adi Parva - Section 230 | Mahabharata In Tamil

(மய தரிசன பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் பல உயிரினங்களைக் கொன்றது; தேவர்கள் பின்வாங்கியது; இந்திரனுக்கு ஒரு அரூபக் குரல் எச்சரித்தது; மயன் தப்புவதை கிருஷ்ணன் கண்டது; மயனை அர்ஜுனன் காத்தது; அர்ஜுனன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அக்னியும் அவனை விட்டுவைத்தது...

வைசம்பாயனர் சொன்னார், "அந்தக் காண்டவ வன வாசிகளான, தானவர்கள், ராட்சசர்கள், நாகர்கள், ஓநாய்கள், கரடிகள் மற்றும் மற்ற காட்டு விலங்குகள், மதம் கொண்ட யானைகள், புலிகள், பிடரி மயிர் கொண்ட சிங்கங்கள், மான்கள், நூற்றுக்கணக்கான எருமைகள், பறவைகள், பல்வேறு மற்ற உயிரினங்கள் அனைத்தும் விழுந்து கொண்டிருக்கும் கற்களால் பயந்து, மிகுந்த துயரத்துக்கு உள்ளாகி திசைகள் அனைத்திலும் தப்பி ஓடத் தொடங்கின.(1,2) அவை (திசையெங்கும் பற்றி எரியும்} கானகத்தையும், ஆயுதத்துடன் ஆயத்தமாக நிற்கும் கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் கண்டன. தெளிவாகக் கேட்கும் பயங்கரமான சத்தங்களால் பயம் கொண்ட அந்த உயிரினங்கள் தங்கள் நகரும் சக்தியை இழந்தன.(3) பல இடங்களில் கானகம் பற்றி எரிவதையும், தனது ஆயுதங்களுடன் தங்களைத் தாக்கத் தயாராக நிற்கும் கிருஷ்ணனையும் கண்ட அவை, அச்சத்துடன் கதறின.(4) அந்தப் பயங்கர ஆரவாரத்தாலும், நெருப்பின் சீற்றத்தாலும், மொத்தச் சுற்றுப்புறமே எச்சரிக்கும் மேகங்களைப் போலப் பேரொலி நிறைந்ததாக இருந்தது.(5)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்