Friday, September 20, 2013

எண்பத்தாறு மன்னர்கள் சிறையில்! - சபாபர்வம் பகுதி 15

Eighty six kings in Jail! | Sabha Parva - Section 15 | Mahabharata In Tamil

(ராஜசூய ஆரம்ப பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் கிருஷ்ணனை மெச்சுவது; கிருஷ்ணன் யுதிஷ்டிரனையும் ஜராசந்தனையும் ஒப்பிடுதல்; எண்பத்தாறு மன்னர்கள் சிறைப்பட்டிருப்பதை உரைத்தல்; ஜராசந்தன் நூறு மன்னர்களைப் பிடித்து சிவனுக்குப் பலி கொடுப்போவதை யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணன் உரைத்தல்; ஜராசந்தனை வீழ்த்தினால் தான் ஒருவன் மாமன்னனாக முடியும் என்பதை யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணன் உரைத்தல்...

யுதிஷ்டிரன், {கிருஷ்ணனிடம்}" நீ புத்திசாலி, யாரும் சொல்ல முடியாததைச் சொல்லிவிட்டாய். இந்த உலகத்தில் வேறு யாருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் தகுதி இல்லை.(1) தங்கள் நன்மையைக் கருதும் மன்னர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் யாருக்கும் மாட்சிமைமிக்க தகுதி கிடையாது. உண்மையில், மாமன்னன் {சக்கரவர்த்தி} என்ற பட்டத்தை அடைவதற்கரியதாகும்.(2) மற்றவர்களின் ஆற்றலையும், பலத்தையும் அறிந்தவர்கள் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதில்லை. உண்மையில் புகழத்தகுந்தவன், எதிரிகளுடன் போரில் ஈடுபட்டு, பாராட்டுகளைத் தானே தாங்கிக் கொண்டிருப்பவன் ஆவான்.(3) விருஷ்ணி குலத்தின் மேன்மையைத் தாங்கும் நீ, இந்த விரிந்த உலகம் போல் இருக்கும் மனிதர்களின் ஆசைகளும் மனப்பாங்குகளும், பல்வேறு வகையாகவும் விரிவானவையாகவும் இருக்கின்றன என்பதை அறிந்தவனாவாய். தன் இல்லத்தைவிட்டுப் பல பகுதிகளுக்கும் பயணிப்பதால் உண்டாகும் அனுபவத்தினாலும், உயர்ந்த கொள்கைகளாலும், முக்தி அடையப்படுகிறதே ஒழிய, சாதாரண ஆசைகளாலும் மனப்பாங்குங்களாலும் அடையப்படுவதில்லை. மன அமைதியே உயர்ந்த தகுதி என நான் கருதுகிறேன். அந்த உயர்ந்த தகுதியில் இருந்தே செழிப்புண்டாகிறது. நான் இந்த வேள்வியைச் செய்தால், உயர்ந்த வெகுமதியை அடையமாட்டேன்.(5)



ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பெரும் சக்தியும் புத்திகூர்மையும் கொண்ட இந்தக் {குரு} குலத்தில் பிறந்தவர்கள், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தங்களில் ஒருவன் க்ஷத்திரியர்களில் முதன்மையானவனாக வருவான் என்று கருதுகின்றனர்.(6) ஆனால், ஓ மேன்மை மிக்கவனே, ஓ பாவமற்றவனே {கிருஷ்ணா}, அந்த ஏகாதிபதியின் {ஜராசந்தனின்} தீய குணத்தால் நாங்களும் அவனுக்குப் பயந்தே இருந்தோம். ஓ போர்க்களத்தில் ஒப்பற்றவனே {கிருஷ்ணா}, உனது பலம் வாய்ந்த கரமே எனக்குப் பாதுகாப்பு. நீயே ஜராசந்தனின் பலத்துக்கு அஞ்சினால், நான் எவ்வாறு என்னை அவனுடன் ஒப்பிட்டுக் கொள்ள முடியும்?(7,8) ஓ மாதவா {கிருஷ்ணா}, ஓ விருஷ்ணி குலத்தவனே, ஜராசந்தன் உன்னாலோ, ராமனாலோ {பலராமனாலோ}, பீமசேனனாலோ, அர்ஜுனனாலோ கொல்லப்படக்கூடியவனா? இல்லையா? என்று நினைக்கும்போதே நான் மிகுந்த துயர் கொள்கிறேன். ஆனால், நான் என்ன சொல்வேன், ஓ கேசவா {கிருஷ்ணா}? அனைத்திலும் நீயே எனது உயர்ந்த அதிகாரம்" என்றான் {யுதிஷ்டிரன்}.(9,10)

இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், பேச்சில் வல்லவனுமான பீமன், "கடும் முயற்சியற்ற ஓர் அரசனோ, ஆதரவற்ற பலவீனமான மன்னனோ, ஒரு பலசாலியுடன் பகைமை கொண்டானெனில், மலைபோன்ற எறும்புப்புற்று அழிவடைவது போல அழிவான்.(11) இருப்பினும், தனது விழிப்புணர்வாலும், கொள்கைகளைச் சரியாகப் பயன்படுத்துவதாலும் பலவீனமான மன்னன், பலமான மன்னை வீழ்த்தி, தனது ஆசைகளின் கனிகளை {பலன்களை} அடைவதையும் நாம் காணத்தான் செய்கிறோம்.(12) கிருஷ்ணனிடம் கொள்கையும் {வியூகமும்}, என்னிடம் {பீமனிடம்} பலமும், அர்ஜுனனிடம் வெற்றியும் இருக்கிறது. எனவே, வேள்வியில் சாதிக்கப்படும் மூன்று நெருப்பைப் போல, நாம் மகத மன்னனுக்கு {ஜராசந்தனுக்கு} மரணத்தை ஏற்படுத்தலாம்" என்றான் {பீமன்}.(13)

அப்போது கிருஷ்ணன், "புத்திமுதிராதொருவன், பிற்காலத்தில் தனக்கு என்ன நடக்கும் என்பதைக் கருதாமல், தனக்கு வேண்டிய ஆசையின் கனிகளை எதிர்பார்க்கிறான். தனது நலனில் அக்கறையுள்ள யாரும், ஒரு புத்தி முதிரா எதிரியை நினைத்து விட்டுக்கொடுப்பதில்லை.(14) கிருத யுகத்தில், யுவனாஸ்வனின் வரிகளை விலக்கியும், பகீரதன் தனது குடிகளிடம் அன்பாக இருந்தும், கார்த்தவீரியன் தனது தவ சக்தியாலும், தலைவன் பரதன் தனது பலம் மற்றும் ஆற்றலாலும், மருத்தன் செழிப்பாலும் என இந்த ஐவரும் முழு உலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மாமன்னர்கள் {சக்கரவர்த்திகள்} ஆனார்கள் என்று கேள்விப்படுகிறோம். ஆனால், ஓ யுதிஷ்டிரரே, மாட்சிமையில் விருப்பம் கொண்டு அதை ஏற்கும் தகுதி கொண்ட நீர், வெற்றி, மக்களைக் காத்தல், அறம், வளமை, கொள்கை ஆகிய அனைத்துக் குணங்களிலும் ஒன்றிலும் குறையில்லாமல் இருக்கிறீர்.(15-17)

ஓ குரு குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, பிருஹத்ரதன் மகனான ஜராசந்தனும் அதே {உம்மைப் போன்ற} குணங்களுடனே இருக்கிறான். நூறு குலங்களைச் சேர்ந்த அரசர்களும் ஜராசந்தனை எதிர்க்கத் திராணியற்று இருக்கின்றனர்.(18) எனவே, அவன் {ஜராசந்தன்}, தனது பலத்தால் மாமன்னாக மதிக்கப்படத் தகுதியானவனே. நகைகளை அணிந்த மன்னர்கள் ஜராசந்தனை (நகைகளைப் பரிசாகக் கொடுத்து) வழிபடுகிறார்கள். ஆனால் குழந்தைப் பருவத்திலிருந்து தீயவனாக இருக்கும் அவன் {ஜராசந்தன்} அந்த வழிபாடுகளால் நிறைவடையவில்லை.(19,20) அனைவருக்கும் முதன்மையானவன் ஆனதால், தலையில் மகுடன் {கிரீடம்} கொண்ட அனைத்து மன்னர்களையும் அவன் தாக்குகிறான். அவனுக்கு {ஜராசந்தனுக்குக்} கப்பம் கட்டாத எந்த மன்னனையும் நாம் காண முடியவில்லை.(21)

இப்படியே கிட்டத்தட்ட நூறு மன்னர்களைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து விட்டான். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, பலவீனமான ஏகாதிபதிகள் அவனுடன் பகைமை கொள்ள எப்படித் துணிவார்கள்?(22) ஓ பாரத குலத்தவரே {யுதிஷ்டிரரே}, சிவனின் ஆலயத்துக்குள் பலியாகும் வேறு விலங்குகள் பலவற்றைப் போல அவனுக்காக {ஜராசந்தனுக்காக} அத்தேவனுக்கே பலியாகப் போகும் அந்த ஏகாதிபதிகளின் மனவேதனையைத் தூண்டும் பெருந்துயரம் எவ்வாறு இருக்கும்?(23) போரில் இறக்கும் க்ஷத்திரியன் எப்போதும் மதிப்பு மிக்கவனாக கருதப்படுகிறான். எனவே, ஏன் நாம் அனைவரும் சேர்ந்து ஜராசந்தனைப் போரில் சந்திக்கக்கூடாது?(24) அவன் ஏற்கனவே எண்பத்தாறு மன்னர்களைக் கொண்டு வந்து, நூறு எண்ணிக்கையை நிறைவு செய்ய பதினான்கு பேருக்காகக் காத்திருக்கிறான். அந்தப் பதினான்கு பேரை அவன் {ஜராசந்தன்} அடைந்ததும், அவனது தீய செயலைத் தொடங்குவான்.(25) அத்தீயச்செயலைத் தடுப்பவன் எவனும் பெரும் புகழை அடைவான். ஜராசந்தனை வீழ்த்தும் எவனும், நிச்சயமாக அனைத்து க்ஷத்திரியர்களுக்கும் மாமன்னனாக {சக்கரவர்த்தியாக} ஆவான்" {என்றான் கிருஷ்ணன்}.(26)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்