Saturday, September 21, 2013

ஜராசந்தனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பகை - சபாபர்வம் பகுதி 19

The enmity between Jarasanda and Krishna! | Sabha Parva - Section 19 | Mahabharata In Tamil

(ராஜசூய ஆரம்ப பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : சந்தகௌசிகர் ஜராசந்தனின் வருநலமுரைத்தல்; அதே போல ஜராசந்தன் பெரும் பலத்துடன் வளர்தல்; கம்சன் மரணத்தால் ஜராசந்தனுக்கு கிருஷ்ணனுடன் ஏற்பட்ட பகை; யாதவர்கள் ஜராசந்தனுடன் மோதுவது இல்லை என்று தீர்மானத்துடன் இருந்தது…

கிருஷ்ணன் தொடர்ந்தான், "இது நடந்த சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் பெரும் துறவியான அந்த மேன்மைமிகு சண்டகௌசிகர் மகத நாட்டுக்கு வந்தார்.(1) அந்த முனிவரின் {சண்டகௌசிகரின்} வருகையால் மிகவும் மகிழ்ந்த மன்னன் பிருஹத்ரதன், தனது அமைச்சர்கள், புரோகிதர், மனைவியர், மகன் {ஜராசந்தன்} ஆகியோருடன் அவரை வரவேற்கச் சென்றான்.(2) ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, அந்த முனிவருக்குக் கால் மற்றும் முகம் கழுவ நீர் கொடுத்து, அர்க்கியம் கொடுத்து, பிறகு அந்த மன்னன் {பிருஹத்ரதன்}, அவருக்கு {சண்டகௌசிகருக்குத்} தனது மகனுடன் {ஜராசந்தனுடன்} சேர்ந்த நாட்டையே கொடுக்க முன் வந்தான்.(3)

அந்த முனிவர் {சண்டகௌசிகர்} மன்னன் வழங்கிய அந்த வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு அந்த மகத நாட்டு ஆட்சியாளனிடம் {பிருஹத்ரதனிடம்} இதயத் திருப்தியுடன்,(4) "ஓ மன்னா {பிருஹத்ரதா}, நான் அனைத்தையும் என் ஞானப் பார்வையால் அறிவேன். ஆனால், ஓ மன்னர்களுக்கு மன்னா, இதையும் கேள்,(5) உனது மகன் {ஜராசந்தன்} எதிர்காலத்தில் மிகுந்த அழகுடனும், பலத்துடனும், அற்புதமான திறன்களுடனும் பராக்கிரமத்துடனும் இருப்பான். உனது மகன் {ஜராசந்தன்} சந்தேகமற, செழிப்பில் வளர்ந்து, பேராற்றலால் அனைத்தையும் அடைவான்.(6,7) எப்படி வினதையின் மகனுடைய (கருடனின்) வேகத்தை மற்ற பறவைகளால் அடைய முடியாதோ அப்படி உனது மகனுடைய {ஜராசந்தனுடைய} சக்தியை இந்த உலகத்தில் எந்த ஏகாதிபதியாலும் அடைய முடியாது. அவன் {ஜராசந்தன்} மிகுந்த பராக்கிரமத்துடன் இருப்பான். அவன் வழியில் தடையாக எதிர்படும் அனைத்தும் அழிவுக்குள்ளாகும்.(8)

நீரோட்டத்தின் சக்தியால் எவ்வாறு மலைகளின் சாரலில் உள்ள பாறைகளை ஒன்றும் செய்ய முடிவதில்லையோ அப்படி தேவர்கள் வீசும் ஆயுதங்களால் இவனுக்கு சிறு துன்பமும் உண்டாகாது.(9) மணிமுடி தரித்தவர்களின் தலைகளை விட இவன் {ஜராசந்தன்} அதிகம் பிரகாசிப்பான். சூரியன் எப்படி மற்ற ஒளிரும் பொருட்களின் பிரகாசத்தை மங்கச் செய்யுமோ அப்படி அனைத்து ஏகாதிபதிகளின் பிரகாசங்களையும் இவன் {ஜராசந்தன்} களவாடி விடுவான்.(10) பெரும் பலம் மிக்க படைகளும், எண்ணிலடங்கா தேர்களும், விலங்குகளும் கொண்ட மன்னனால் கூட உன் மகனை அணுக முடியாது. அப்படி அணுகினால் அவர்கள் நெருப்பில் விழும் பூச்சிகள் என மடிந்து போவர்.(11) உனது மகனான இவன் {ஜராசந்தன்}, அனைத்து மன்னர்களின் வளமைகளை, சமுத்திரம் எப்படி பல நதிகளின் வெள்ளத்தை உள் வாங்கிக் கொள்ளுமோ அப்படி உள்வாங்கிக் கொள்வான்.(12) அனைத்து உற்பத்திகளையும் தாங்கும் பெரும் உலகம் போல, நல்ல மற்றும் தீயவை அனைத்தையும் தாங்கி, பெரும் பலம் கொண்டு நால் வகை மக்களையும் ஆள்வான்.(13) உடல் கொண்ட அனைத்து உயிரும் வாயுவை நம்பி இருப்பது போல, பூமியில் உள்ள அனைத்து மன்னர்களும் உனது மகனுக்கு {ஜராசந்தனுக்கு} கீழ்ப்படிந்து இருப்பார்கள்.(14) இந்த மகத இளவரசன் {ஜராசந்தன்}, தனது ஊனக்கண்களாலேயே ருத்திரன் என்றும் ஹரன் என்றும் அழைக்கப்படும், திரிபுரத்தை அழித்த தேவாதி தேவனைக் {சிவனைக்} காண்பான்" என்றார் {சண்டகௌசிகர்}.(15)

ஓ எதிரிகளை அழிப்பவனே, இவை யாவும் சொன்ன அந்த முனிவர் {சண்டகௌசிகர்}, தமது சொந்த அலுவல்களை நினைத்துக் கொண்டு மன்னன் பிருஹத்ரதனுக்கு விடை கொடுத்தார்.(16) பிறகு அந்த மகதத்தின் தலைவன் {பிருஹத்ரதன்}, தனது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தலைநகருக்குள் நுழைந்து, ஜராசந்தனை அரியணையில் அமர்த்தினான்.(17) தனது மகன் ஜராசந்தனை அரியணையில் அமர்த்திய மன்னன் பிருஹத்ரதன் பிறகு உலக இன்பங்களை வெறுத்து, தனது மனைவியரையும் அழைத்துக் கொண்டு கானகத்திற்குச் சென்று ஒரு தவசியின் வாழ்வுமுறையை நோற்றான்.(18) ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, தனது தந்தையும் தாயும் கானகத்திற்கு ஓய்ந்து சென்ற பிறகு, பராக்கிரமமிக்க ஜராசந்தன் எண்ணிலடங்க மன்னர்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்” {என்றான் கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}.(19)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "மன்னன் பிருஹத்ரதன் சிறிது காலம் கானகத்தில் தங்கியிருந்து, தவம் பயின்று, தனது மனைவியருடன் சேர்ந்து விண்ணுலகம் ஏகினான்.(20) கௌசிகரால் சொல்லப்பட்டது போல மன்னன் ஜராசந்தன், எண்ணிலடங்கா வரங்களைப் பெற்று, தனது தந்தையைப் போலவே நாட்டை ஆண்டு வந்தான்.(21) சில காலம் கழித்து மன்னன் கம்சன் வாசுதவேனால் {கிருஷ்ணனால்} கொல்லப்பட்டான். அப்போது கிருஷ்ணனுக்கும் அவனுக்கும் {ஜராசந்தனுக்கும்} பகை வளரத் தொடங்கியது.(22) பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, மகதத்தின் பலம் வாய்ந்த மன்னன் தனது நகரான கிரிவ்ரஜத்திலிருந்து ஒரு கதாயுதத்தை தொண்ணூற்று ஒன்பது முறை சுழற்றி, மதுராவை நோக்கி எறிந்தான்.(23) அந்த நேரத்தில் அற்புதச் செயல்களைச் செய்யும் கிருஷ்ணன் மதுராவில் தங்கியிருந்தான். ஜராசந்தனால் வீசப்பட்ட அழகிய கதாயுதம் மதுராவுக்கு அருகில், கிரிவ்ராஜாவில் இருந்து தொண்ணூற்று ஒன்பது யோஜனைகள் தொலைவில் விழுந்து கிடந்தது.(24)

சூழ்நிலையை நன்கு உணர்ந்த குடிமக்கள் கிருஷ்ணனிடம் சென்று கதாயுதம் விழுந்த செய்தியைச் சொன்னார்கள். கதாயுதம் விழுந்த இடம் மதுராவுக்கு அருகிலேயே இருந்தது. அந்த இடம் கதாவஸானம் என்று அழைக்கப்படுகிறது.(25) ஜராசந்தனுக்கு ஹம்சன் என்றும் டிம்பகன் என்று அழைக்கப்பட்ட இரு ஆதரவாளர்கள் இருந்தனர். அவர்களை எந்த ஆயுதத்தாலும் வீழ்த்த {கொல்ல} முடியாது. அரசியலிலும் நீதி அறிவியலிலும் நன்கு தேர்ச்சி பெற்ற அவர்கள் ஆலோசனைகள் வழங்கும் புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவர்களாக இருந்தார்கள்.(26) இந்த அற்புதமான இருவரைப் பற்றி நான் முன்னமே சொல்லியிருக்கிறேன். அந்த இருவரும் ஜராசந்தனும் சேர்ந்து மூவுலகங்களிலும் ஒப்பற்றவர்களாக இருந்தனர்.(27) ஓ வீர மன்னா {ஜனமேஜயா}, இந்தக் காரணத்தாலேயே குக்குர, அந்தக மற்றும் விருஷ்ணி குலத்தவர், கொள்கை நோக்கங்களுடன் செயல்பட்டு, அவனுடன் மோதுவது சரியல்ல என்று தீர்மானித்திருந்தனர்." என்றார் {வைசம்பாயனர்}.(28)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்