Saturday, September 21, 2013

எதிரியை அழிக்கப் புறப்பட்ட மூன்று வீரர்கள் -சபாபர்வம் பகுதி 20

Three warriors set to destroy the enemy! | Sabha Parva - Section 20 | Mahabharata In Tamil

(ஜராசந்த வத பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : ஜராசந்தனுக்கான நேரம் வந்துவிட்டதை கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு எடுத்துரைத்தல்; அதற்கு ஒரு திட்டத்தை வகுத்தல்; யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணன் அர்ஜுனனையும் பீமனையும் அனுப்பி வைக்குமாறு கோரல்; யுதிஷ்டிரன் கிருஷ்ணனைப் புகழ்தல்; யுதிஷ்டிரனிடம் விடைபெற்று கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றும் பீமன் ஆகியோர் மகதத்தை நோக்கிக் கிளம்புதல்…

Yudhishthira talking to Krishna

"கிருஷ்ணன், "ஹம்சனும் டிம்பகனும் வீழ்ந்துவிட்டனர். தனது ஆதரவாளர்களுடன் கம்சனும் கொல்லப்பட்டான். எனவே, ஜராசந்தனின் அழிவுக்கு நேரம் வந்துவிட்டது.(1) தேவர்களாலோ அசுரர்களாலோ (அல்லது இருவரும் சேர்ந்தோ) அவனைப் போரில் வீழ்த்த முடியாது. இருப்பினும், வெறுங்கையால் நடக்கும் தனி மோதலில் {மற்போரில் / மல்யுத்தத்தில்} அவனை வீழ்த்தமுடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்.(2) என்னிடம் கொள்கையும், பீமரிடம் பலமும், அர்ஜுனனிடம் வெற்றியும் உள்ளன. எனவே, ராஜசூய வேள்வி நடத்துவதற்கு முன்னோடியாக மகத ஆட்சியாளனின் {ஜராசந்தனின்} அழிவை நாம் நிச்சயம் அடைய வேண்டும்.(3) நாங்கள் மூவரும் ரகசியமாக அந்த ஏகாதிபதியைச் சந்திக்கும்போது, அவன் நிச்சயமாக, எங்களில் ஒருவருடன் தனிப்போரில் ஈடுபடுவான்.(4) அவமானத்திற்கு அஞ்சியும், பேராசை மற்றும் செருக்கினாலும் அவன் நிச்சயமாக பீமரையே மோதலுக்கு அழைப்பான். செருக்கால் கொழுத்த மனிதனை மரணம் வீழ்த்துவதைப் போல, பெரும் கரமும் பலமும் கொண்ட பீமசேனர் அம்மன்னனுக்கு அழிவை ஏற்படுத்துவார்.(4,6) நீர் {யுதிஷ்டிரரே} என் இதயத்தை அறிந்தீரானால், என்னில் உமக்கு நம்பிக்கை இருக்குமானால், காலத்தைக் கடத்தாமல் அதற்கான உறுதிமொழியாக எனக்கு பீமரையும் அர்ஜுனனையும் கொடுப்பீராக" என்று கேட்டான் {கிருஷ்ணன்}.(7)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்த மேன்மையானவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்ட யுதிஷ்டிரன், மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் நிற்கும் பீமனையும் அர்ஜுனனையும் கண்டு,(8) "ஓ அச்யுதா {கிருஷ்ணா}, எதிரிகளை அழிப்பவனே, அப்படிச் சொல்லாதே. நீயே பாண்டவர்களின் தலைவன். நாங்கள் உன்னைச் சார்ந்தே இருக்கிறோம்.(9) ஓ கோவிந்தா {கிருஷ்ணா}, நீ சொல்வதெல்லாம் ஞானம் கொண்ட ஆலோசனைகளே. செல்வத்தால் முதுகு காட்டப்பட்ட ஒருவனை எப்போதும் நீ வழிநடத்த மாட்டாய்.(10) உனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நான், ஜராசந்தன் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டதாகக் கருதுகிறேன். அவனால் {ஜராசந்தனால்} அடைத்து வைக்கப் பட்டுள்ள மன்னர்கள் ஏற்கனவே விடுவிக்கப் பட்டதாகக் கருதுகிறேன். ராஜசூயம் என்னால் சாதிக்கப்பட்டதாகவே கருதுகிறேன்.(11,12) 

நீ இல்லாமல், அறம், பொருள், இன்பம் ஆகியவை பறிக்கப்பட்டு, நோயால் பீடிக்கப்பட்ட துயர் நிறைந்த மனிதன் போல நான் வாழத்துணிய மாட்டேன்.(13) பார்த்தனால் {அர்ஜுனனால்} சௌரி {கிருஷ்ணன்} இல்லாமல் வாழ முடியாது. அதே போல சௌரியாலும் பார்த்தன் இல்லாமல் வாழ முடியாது. கிருஷ்ணனாலும் அர்ஜுனனாலும் அடைய முடியாத பொருட்கள் உலகத்தில் எதுவும் இல்லை.(14) அழகிய பீமன், பெரும் பலம் கொண்ட மனிதர்களில் முதன்மையானவன் ஆவான். நீங்கள் இருவரும் {கிருஷ்ணனும் அர்ஜுனனும்} அவனுடன் இருக்கும்போது, பெரும் புகழ் பெற்ற அவனால் {பீமனால்}, எதைத்தான் சாதிக்க முடியாது?(15) சரியாக வழிநடத்தப்பட்ட துருப்புகள் எப்போதும் அருமையான பணியையே செய்யும். தலைவன் இல்லாத படை மந்தமானது என்று ஞானமுள்ளோரால் சொல்லப்படுகிறது. எனவே படைகள் எப்போதும் அனுபவம் வாய்ந்த தளபதிகளாலேயே வழிநடத்தப்பட வேண்டும்.(16) தாழ்வாக இருக்கும் இடங்களுக்கே, ஞானமுள்ளோர் நீரை {தண்ணீர்} வழிநடத்துவர். மீனவர்கள் கூட (குளத்தில் உள்ள) நீரைத் துளைகள் மூலம் வெளியேற்றுகின்றனர். (அனுபவம் வாய்ந்த தலைவர்கள், எதிரியின் திட்டத்தில் உள்ள ஓட்டைகளையும், தாக்கக்கூடிய பகுதிகளையும் எப்போதும் கண்டுபிடித்து தங்கள் படைகளை நடத்துவர்).(17) 

எனவே நாங்கள் அரசியல் அறிவியலை அறிந்த உலகப் புகழ் கொண்ட கோவிந்தனின் தலைமையை ஏற்கவே அனைத்துவகையிலும் முயற்சிப்போம்.(18) ஒருவரின் காரிய சாதனையை வெற்றிகரமாக முடிக்க, ஞானத்தையும் கொள்கையையும் பலமாகக் கொண்டும், காரண காரியங்களில் உள்ள அறிவோடும் நம்மை வழிநடத்தும் கிருஷ்ணனை தேரில் அமர்த்த வேண்டும்.(19) எனவே இந்தக் காரிய சாதனைக்கு, பிருதையின் {குந்தியின்} மகனான அர்ஜுனன், யாதவர்களில் முதன்மையான கிருஷ்ணனைத் தொடரட்டும், பீமன் அர்ஜுனனைத் தொடரட்டும். கொள்கை, நற்பேறு, மற்றும் பலம் ஆகியவையே, பராக்கிரமத்துடன் கூடிய வெற்றியைக் கொண்டு வரும்" என்றான் {யுதிஷ்டிரன்}".(20)

வைசம்பாயனர் சொன்னார், "இப்படி யுதிஷ்டிரனால் சொல்லப்பட்டதும், பெரும் சக்தி வாய்ந்த கிருஷ்ணன், அர்ஜுனன், பீமன் ஆகிய மூவரும், ஏற்கும் சொல் கொண்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் ஆசி பெற்று, ஸ்நாதக பிராமணர்களைப் போல உடையணிந்து பிராகசித்தபடி மகத நாட்டை நோக்கிச் செல்ல ஆயத்தமானார்கள்.(21) சூரியனையும், சந்திரனையும், நெருப்பையும் போன்ற மேன்மையான சக்தியையும், உடலையும் கொண்டு, சிறைபட்டிருக்கும் தங்கள் உறவு மன்னர்களின் நிலையை நினைத்துக் கோபம் கொண்ட நெருப்பைப் போல அவர்கள் சென்றனர். போரில் தோல்வி காணாத கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றும் பீமனை தேர்களில் கண்ட மக்கள், அவர்கள் ஏற்கனவே காரியத்தைச் சாதித்து விட்டதாகவும், ஜராசந்தன் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டதாகவும் நினைத்தார்கள்.(22-24) 

சிறப்பு மிக்க அந்த இணை (கிருஷ்ணனும் அர்ஜுனனும்), (அண்டத்தின்) அனைத்து செயல்களையும், அனைத்து உயிரினங்களிலும் உள்ள அறம், பொருள், இன்பம் ஆகியவற்றையும் இயக்குவதில் நிபுணர்களாவர்.(25) குரு நாட்டில் இருந்து கிளம்பி, குருஜாங்கலத்தைக் கடந்து, அழகான தாமரைத் தடாகம் ஒன்றை அடைந்தார்கள். பிறகு காலகூட மலைகளைக் கடந்து,(26) தங்கள் பெயரையே கொண்ட மலைகளில் உற்பத்தியாகும் கண்டகி, சதாநீரை (காரடோயா), சர்கரவர்தை ஆகிய ஆறுகளைக் கடந்தனர்.(27) பிறகு அவர்கள் சரயூ ஆற்றைக் கடந்து, கிழக்கு கோசலத்துக்கு வந்தனர். அந்த நாட்டையும் கடந்து மிதிலைக்குச் சென்று, அங்கிருந்து, மாலை, சர்மண்வதி,(28) கங்கை, சோணம் ஆகிய ஆறுகளையும் கடந்து அந்த மூன்று வீரர்களும் மேலும் கிழக்கு நோக்கி சென்றனர். இறுதியாக, மங்காப்புகழ் கொண்ட அந்த வீரர்கள் குசம்பத்தின் (குசம்ப நாட்டின்) இதயமான மகதத்தை அடைந்தனர்.(29) பிறகு கோரத மலைகளை அடைந்து, எப்போதும் பசுக்களாலும், செல்வங்களாலும், நீராலும் நிறைந்த, பல எண்ணிலடங்கா மரங்கள் நிற்கும் மகத நகரைக் கண்டனர்" {என்றார் வைசம்பாயனர்}.(30)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்