Monday, September 23, 2013

ஜராசந்தனை இரண்டாக உடைத்த பீமன் - சபாபர்வம் பகுதி 24

Jarasandha was broke into two! | Sabha Parva - Section 24 | Mahabharata In Tamil

(ஜராசந்த வத பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : பீமன் ஜராசந்தனைக் கொன்றது; கிருஷ்ணன் மலைக்கோட்டையில் அடைபட்டிருந்த மன்னர்களை விடுவித்தது; ஜராசந்தனின் தெய்வீகத் தேரை எடுத்துக் கொண்டது; ஜராசந்தனின் மகனை அரியணையில் அமர்த்தியது; மன்னர்களின் பரிசையும், சகாதேவனின் {ஜராசந்தன் மகன்} பரிசையும் கிருஷ்ணன் ஏற்றுக் கொண்டது. கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன் ஆகியோர் இந்திரப்பிரஸ்தம் திரும்பியது; யுதிஷ்டிரன் மகிழ்ச்சி அடைந்தது; அந்தத் தெய்வீக தேரை கிருஷ்ணனுக்கு யுதிஷ்டிரன் கொடுப்பது; கிருஷ்ணன் துவராகைக்கு மனோவேகத்தில் திரும்பியது...

Wrestling between Jarasandha and Bhima
வைசம்பாயனர் சொன்னார், "இப்படிச் சொல்லப்பட்ட பீமன் ஜராசந்தனைக் கொல்வதில் உறுதி பூண்டு, யது குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணனிடம், "ஓ யது குலத்தின் புலியே, ஓ கிருஷ்ணா, போதிய பலத்துடன் என்னுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பாவியை நான் மன்னிக்க மாட்டேன்" என்றான்.(1,2) பீமனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மனிதர்களில் புலியான கிருஷ்ணன், தாமதமில்லாமல் ஜராசந்தனைக் கொல்வதற்கு அந்த வீரனை {பீமனை} ஊக்குவிக்கும் வகையில், "ஓ பீமரே, நற்பேற்றின் காரணமாக (உமது தந்தையான) தேவன் மருத்தனிடம் {வாயுத்தேவனிடம்) நீர் அடைந்த பெரும் பலத்தை, ஜராசந்தனிடம் பயன்படுத்துவீராக" என்றான்.(3,4) இப்படி கிருஷ்ணனால் சொல்லப்பட்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான பீமன், பெரும் பலம் வாய்ந்த ஜராசந்தனைக் காற்றில் உயரமாகத் தூக்கி சுழற்றத் தொடங்கினான்.(5) ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, இப்படியே காற்றில் அவனை {ஜராசந்தனை} நூறு முறை சுழற்றி, ஜராசந்தனின் முதுகெலும்பில் தன் கால் முட்டியை வைத்த பீமன், அவனது உடலை இருகூறுகளாக உடைத்துப் போட்டான். இப்படி அவனை {ஜராசந்தனைக்} கொன்ற அந்தப் பெரும்பலம் வாய்ந்த விருகோதரன் பயங்கர முழக்கம் செய்தான்.(6) பீமன் அப்படி ஜராசந்தனை உடைத்துப்போட்டு பிறகு, அந்தப் பாண்டவனின் {பீமனின்} முழக்கம், ஜராசந்தனின் மரண ஓலம், பேரொலியாக எழுந்து அனைத்து உயிர்களின் இதயத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியது.(7) மகதத்தின் குடிமக்கள் அனைவரும் இதைக் கண்ட பயங்கரத்தால் ஊமைகளாகினர். இதைக் கண்ட பல பெண்கள் தகுந்தகாலத்திற்கு முன்பே கருக்களை ஈன்றெடுத்துவிட்டனர்.(8) இந்த முழக்கங்களைக் கேட்ட மகத மக்கள், இமயம் பிளந்து பூமியில் விழுந்து இரண்டாகக் கிடக்கிறதோ என்று நினைத்தனர்.(9) பிறகு அந்த எதிரிகளை ஒடுக்குபவர்கள், உறங்குவது போல கிடந்த மன்னனின் உயிரற்ற உடலை அரண்மனை வாயிலில் விட்டுவிட்டு அந்த நகரத்தை விட்டு வெளியே சென்றனர்.(10)

பிறகு கிருஷ்ணன் கொடிக்கம்பத்துடன் கூடிய ஜராசந்தனின் தேரை ஆயத்தமாக்கி, அதில் அந்தச் சகோதரர்களை பயணிக்கச் செய்து, (சிறையில் இருந்த) தனது உறவினர்களை விடுவித்தான்.(11) பெரும் அளவிலான தங்கத்தையும், செல்வங்களையும் கொண்ட அந்த மன்னர்கள், கொடூரமான விதியில் இருந்து காப்பாற்றப் பட்டதால், அவர்கள் கிருஷ்ணனை அணுகி பல பொன்னையும் ரத்தினங்களையும் அவனுக்குப் பரிசாக அளித்தனர்.(12) தன் எதிரியை வீழ்த்திய கிருஷ்ணன், ஆயுதங்களுடன் எந்தக் காயமும் இன்றி, (விடுவிக்கப்பட்ட) மன்னர்களையும் உடன் அழைத்துக் கொண்டு, (ஜராசந்தனின்) அந்தத் தெய்வீக தேரில் கிரிவ்ரஜத்தை விட்டு வெளியே வந்தான்.(13) இந்தப் பூமியில் எந்த ஏகாதிபதியாலும் வீழ்த்தப்பட முடியாதவனும், பேரழகனும், எதிரியைக் கொல்வதில் திறன் கொண்டவனும், தான் கொண்ட வில்லை இரு கைகளாலும் தாங்கக்கூடியவனும் (அர்ஜுனனும்), பெரும் பலங்கொண்டவனும் (பீமனும்), கிருஷ்ணன் தேரை ஓட்ட, பொல்லாங்கு நிறைந்த அந்த இடத்தில் இருந்து வெளியே வந்தனர்.(14)

வீரர்களான பீமனும் அர்ஜுனனும் பயணிக்க கிருஷ்ணனால் செலுத்தப்பட்ட, அந்த சிறந்த தேர் பேரழகு வாய்ந்ததாக இருந்தது.(15) பழங்காலத்தில் இந்த தேரில் நின்றே இந்திரனும் விஷ்ணுவும் (அசுரர்களுக்கு எதிராகப்) போரில் ஈடுபட்டனர். அந்தப் போருக்கு முக்கிய காரணமாகவும், பல கொலைகளுக்குக் காரணமாகவும் (பிருஹஸ்பதியின் மனைவி) தாரகை இருந்தாள். அந்த தேரை ஓட்டிக் கொண்டு வந்த கிருஷ்ணன் மலைக்கோட்டையை விட்டு வெளியே வந்தான்.(16) புடம்போட்ட பொன்னைப் போல பிரகாசித்து, வரிசையாக அலங்கரிக்கப்பட்ட மணிகள் குலுங்க, அதன் சக்கர ஒலி மேகத்தின் முழக்கத்தைப் போல இருக்க, போரில் வெற்றியை மட்டுமே தந்து, எவனுக்கு எதிராக செலுத்தப்படுகிறதோ அவனைக் கொல்லும் அந்த தேரில் இந்திரன், பழங்காலத்தில் தொண்ணூற்று ஒன்பது அசுரர்களைக் கொன்றிருக்கிறான். அந்த மனிதர்களில் காளைகள் (மூன்று மைத்துனர்களும்) அந்த தேரைப் பெற்றதால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.(17,18) இரண்டு சகோதரர்களுடன் கூடியவனும், நீண்ட கரத்தைக் கொண்டவனுமான கிருஷ்ணன், (ஜராசந்தனின்) அந்த தேரில் அமர்ந்திருப்பதைக் கண்ட மகத மக்கள் மிகவும் வியப்படைந்தனர்.(19) ஓ பாரதா {ஜனமேஜயா), காற்றின் வேகம் கொண்ட குதிரைகள் பூட்டப்பட்டிருந்த அந்த தேரில் அமர்ந்திருந்த கிருஷ்ணன் பேரழகுடன் காணப்பட்டான்.(20) 

அந்தச் சிறந்த தேரில், பார்வைக்குப் புலப்படாத தெய்வீகக் கலை அம்சத்துடன் கொடிக்கம்பம் இணைக்கப்பட்டிருந்தது. வானவில்லின் பிரகாசம் கொண்ட அந்த அழகிய கொடிக்கம்பத்தை ஒரு யோஜனை தொலைவில் இருந்தும் காணலாம்.(21) கிருஷ்ணன் அதில் ஏறி வெளியே வரும்போது கருடனை நினைத்துக் கொண்டான். தன் தலைவனால் நினைக்கப்பட்ட கருடன், உடனே வந்து, கிராமங்களில் அனைவராலும் வழிபடப்படும் மரம் போல நின்றான்.(22) பாம்புகளை உண்டு வாழும் கனம் நிறைந்த உடல் கொண்ட கருடன், திறந்த வாயுடன் பயங்கரமாக முழங்கிக் கொண்டிருக்கும் எண்ணிலடங்கா உயிரினங்களைக் கொண்ட அந்த அற்புதத்தேரின் கொடிக்கம்பத்தில் அமர்ந்தான்.(23) அதன் பிறகு அந்த தேர் ஆயிரம் கதிர்களால் சூழப்பட்ட நடுப்பகல் சூரியன் போல பார்ப்பதற்கு கூசும்படி இருந்தது. ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த தெய்வீகக் கொடிக்கம்பம் எந்த மரத்தின் மீது மோதாதபடியும், மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாததாகவும், எந்த ஆயுதத்தாலும் தாக்கப்படாததாகவும் இருந்தது.(24,25) மனிதர்களின் புலியான அச்யுதன் {கிருஷ்ணன்}, மேக முழக்கம் புரியும் சக்கரங்களைக் கொண்ட அந்த தெய்வீக தேரில் பாண்டுவின் மகன்களுடன் {பீமன், அர்ஜுனனுடன்} பயணித்து, கிரிவ்ரஜத்தைவிட்டு வெளியே வந்தான்.(26)

கிருஷ்ணனால் செலுத்தப்பட்ட அந்தத் தேரானது வாசவனிடம் இருந்து மன்னன் வசுவால் பெறப்பட்டதும், வசுவிடம் இருந்து பிருஹத்ரதனால் பெறப்பட்டதும், பிறகு ஜராசந்தனிடம் வந்ததுமாக இருந்தது.(27) நீண்ட கரமும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களும், சிறப்புவாய்ந்த புகழும் கொண்டவன் {கிருஷ்ணன்}, கிரிவ்ரஜத்தைவிட்டு வெளியே வந்தும், நகருக்கு வெளியே ஒரு சம வெளியில் (சிறிது நேரம்) நின்றான்.(28) ஓ மன்னா {ஜனமேஜயா}, பிராமணர்களைத் தலைமையாகக் கொண்ட குடிமக்கள், அங்கே விரைந்து வந்து உரிய அறச்சடங்குகளுடன் வாழ்த்தினர்.(29) சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மன்னர்கள் அனைவரும் பெரும் மதிப்புடன் புகழும் வகையில் மதுசூதனனிடம் {கிருஷ்ணனிடம்},(30) "ஓ நீண்ட கரங்கொண்டவனே {கிருஷ்ணா}, ஜராசந்தனால் பீடிக்கப்பட்டு மிகுந்த துயரத்தில் இருந்த எங்களை இன்று நீ விடுவித்திருக்கிறாய். ஓ தேவகியின் மகனே {கிருஷ்ணா}, பீமன் மற்றும் அர்ஜுனனுடன் கூடி நீ சாதித்த இந்த அறச்செயல் இயல்புக்கு மீறிய சாதனையாகும்.(31,32) ஓ விஷ்ணுவே {கிருஷ்ணா}, ஜராசந்தனின் மலைக் கோட்டையில் அல்லலுற்ற எங்களை, நாங்கள் பெற்ற நற்பேற்றாலேயே விடுவித்தாய். இதனால், ஓ யது குலத்தின் மகனே {கிருஷ்ணா}, நீ செய்தற்கரிய செயலைச் செய்திருக்கிறாய்.(33) ஓ மனிதர்களில் புலியே, நாங்கள் உன்னை வணங்குகிறோம். நாங்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடு. அது எவ்வளவு கடினமாக இருந்தாலும், உனது கட்டளையை அறிந்த நாங்கள், ஓ தலைவா {கிருஷ்ணா}, நிச்சயம் அதைச் சாதிப்போம்", என்று சொன்னார்கள்.(34) 

இப்படி அந்த ஏகாதிபதிகளால் சொல்லப்பட்ட ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, அவர்களுக்கு {விடுவிக்கப்பட்ட மன்னர்களுக்கு} அனைத்து உறுதிகளையும் கொடுத்துவிட்டு, அவர்களிடம் {விடுவிக்கப்பட்ட மன்னர்களிடம்}, "யுதிஷ்டிரர் ராஜசூய வேள்வி செய்ய நினைத்திருக்கிறார்.(35) அறத்தால் வழிநடத்தப்படும் அந்த ஏகாதிபதி, உயர்ந்த அதிகாரமுள்ள உண்மையான மதிப்பை அடைய விரும்புகிறார். என் மூலமாக இதை அறிந்து கொண்டு அவருக்கு அவரது காரியங்களில் உதவி செய்யுங்கள்" என்றான்.(36) 

ஓ மன்னா {ஜனமேஜயா}, இதயத்தில் மகிழ்ச்சி நிறைந்த அந்த ஏகாதிபதிகள் கிருஷ்ணனின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, "அப்படியே ஆகட்டும்!" என்றனர்.(37) இதைச் சொன்ன பூமியின் அந்தத் தலைவர்கள், பல நகைகளை தாசார்ஹ குலத்தவனுக்கு {கிருஷ்ணனுக்கு) பரிசாக அளித்தனர். பிறகு கோவிந்தன் {கிருஷ்ணன்}, அவர்களிடம் கொண்ட அன்பால், அவர்கள் கொடுத்த பரிசுகளில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டான்.(38)

பிறகு ஜராசந்தனின் மகனும், உயர்ந்த ஆன்மாவுமான சகதேவன், தனது உறவினர்களுடனும், தனது நாட்டின் முக்கிய அதிகாரிகளுடனும், புரோகிதரை தன் முன் கொண்டு அங்கே வந்தான்.(39) அந்த இளவரசன் {சகதேவன்}, பணிந்து வணங்கி, பெரும் பொற்குவியலையும், விலையுயர்ந்த கற்களையும் பரிசாகக் கொடுத்து, மனிதர்களில் தேவனான வாசுதேவனை {கிருஷ்ணனை} வழிபட்டான்.(40) பிறகு மனிதர்களில் சிறந்த கிருஷ்ணன் பயத்தில் இருந்த அந்த இளவரசனுக்கு {சகாதேவனுக்கு} அனைத்து உறுதிகளையும் கொடுத்து, பெருமதிப்பிலான அந்தப் பரிசுகளை ஏற்றுக் கொண்டான்.(41) மகிழ்ச்சியுடன் இருந்த கிருஷ்ணன் அந்த இளவரசனுக்கு மகதத்தின் ஆட்சியுரிமையைக் கொடுத்தான். அந்த மேன்மையான, மனிதர்களில் பலம் வாய்ந்த கரங்கள் கொண்ட, ஜராசந்தனின் சிறப்புவாய்ந்த மகன் {சகதேவன்}, அந்த நாட்டின் அரியணையில் அமர்த்தப்பட்டு, கிருஷ்ணனின் நட்பைப் பெற்று, பிருதையின் {குந்தியின்} மகன்களால் மதிப்புடன் நடத்தப்பட்டு, தனது தந்தையின் {ஜராசந்தனின்} நகருக்குள் மீண்டும் நுழைந்தான்.(42,43) பிருதையின் {குந்தியின்} மகன்களுடன் இருந்த பெரும் நற்பேறு பெற்ற மனிதர்களில் காளையான கிருஷ்ணன், எண்ணிலடங்கா நகைகளுடன் மகத நகரை விட்டு வெளியேறினான்.(44) பாண்டுவின் இரு மகன்களுடன் {பீமன், அர்ஜுனனுடன்} அச்யுதன் (கிருஷ்ணன்) இந்திரப்பிரஸ்தத்தை அடைந்தான். யுதிஷ்டிரனை மகிழ்ச்சியுடன் அணுகி, அந்த ஏகாதிபதியிடம்,(45) "ஓ மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, நற்பேற்றின் நிமித்தமாக, பெரும் பலம் வாய்ந்த ஜராசந்தன் பீமரால் கொல்லப்பட்டான். (கிரிவ்ரஜ) சிறையில் அடைபட்டிருந்த மன்னர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.(46) மேலும் நற்பேற்றினால் பீமரும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்) அந்த நகரத்தில் காயமடையாமல் நலமுடன் தங்கள் சொந்த நகரத்திற்குத் திரும்பியிருக்கின்றனர்" என்றான்.(47) 

பிறகு யுதிஷ்டிரன், கிருஷ்ணனை அவனது தகுதிக்கேற்ப வழிபட்டு, பீமனையும் அர்ஜுனனையும் மகிழ்ச்சியுடன் வாரி அணைத்துக் கொண்டான்.(48) எதிரிகளற்ற அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, தனது தம்பிகளின் வெற்றியாலும், ஜராசந்தனின் மரணத்தாலும் மிகவும் மகிழ்ந்து, தனது தம்பிகளுடன் அந்தச் சூழ்நிலையைக் கொண்டாடினான்.(49) பாண்டுவின் மகன்களில் மூத்தவன் (யுதிஷ்டிரன்), தனது தம்பிகளுடன் சேர்ந்து இந்திரப்பிரஸ்த்ததிற்கு வந்திருந்த மன்னர்களை, அவர்களது வயதுக்குத் தகுந்தபடி உற்சாகப்படுத்தி வழிபட்டு விடை கொடுத்து அனுப்பினான்.(50) யுதிஷ்டிரனால் கட்டளையிடப்பட்ட அந்த மன்னர்கள் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் நேரந்தாழ்த்தாமல் தங்கள் வாகனங்களில் தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர்.(51) 

இப்படியே, ஓ மன்னா {ஜனமேஜயா}, மனிதர்களின் புலியும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் எதிரியான ஜராசந்தனின் மரணத்துக்குக் காரணமாக இருந்து, யுதிஷ்டிரனிடமும், பிருதையிடமும் {குந்தியிடமும்}, திரௌபதியிடமும், சுபத்திரையிடமும், பீமசேனனிடமும், அர்ஜுனன் மற்றும் நகுல சகாதேவர்களிடமும் விடைபெற்றான். தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இருந்தும் விடைபெற்று, யுதிஷ்டிரனால் தனக்குக் கொடுக்கப்பட்ட அந்த தெய்வீகத் தேரில் தனது நகரத்திற்கு (துவாரகைக்கு) மனோ வேகத்துடன் சுற்றுச்சூழலின் பத்து புள்ளிகளை அந்தத் தேரின் சக்கர ஒலியால் கலங்கச் செய்து சென்றான்.(52,55) ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, கிருஷ்ணன் புறப்படத் தயாராக இருந்த போது, யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட பாண்டவர்கள், அந்தக் களைப்பறியா முயற்சியுடைய மனிதர்களில் புலியை {கிருஷ்ணனை} வலம் வந்தனர்.(56)
தேவகியின் மகனான அந்தச் சிறப்பு வாய்ந்த கிருஷ்ணன், (இந்திரப்பிரஸ்தத்தை விட்டு) சென்ற பிறகு, பெரும் வெற்றியை அடைந்து, மன்னர்களின் பயத்தை விலக்கிய காரியம் செய்த அந்தப் பாண்டவர்கள் புகழுடன் இருந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்தப் பாண்டவர்கள் தங்கள் நாட்களை கடத்தி, திரௌபதியை மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் வைத்திருந்தனர். அந்த நேரத்தில் அறம், இன்பம், பொருள், ஆகியவற்றுக்குச் சரியாக மன்னன் யுதிஷ்டிரன் தனது குடிமக்களைக் காத்து வந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(57-59)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்