Thursday, September 26, 2013

பீமனின் வெற்றிப்பயணம்! - சபாபர்வம் பகுதி 29

The victorious march of Bhima! | Sabha Parva - Section 29 | Mahabharata In Tamil

(திக்விஜய பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : பீமனின் கிழக்குத் திசைப் போர்ப்பயண விவரிப்பு; பீமசேனன் வெற்றியுடன் இந்திரப்ரஸ்தம் திரும்பியது…


வைசம்பாயனர் சொன்னார், "பிறகு, பகைவர்கள் அனைவரையும் தண்டிப்பவனானவன் {பீமன்}, குமார {குமாரவிஜயம் என்ற} நாட்டின் மன்னன் ஸ்ரீணிமத் {சிரேணிமான்}, கோசல நாட்டின் மன்னன் பிருஹத்பலன் ஆகியோரை வீழ்த்தினான்.(1) பிறகு பாண்டு மகன்களில் முதன்மையான பீமன் கடும் சாதனைகளைச் செய்து அனைவரையும் விஞ்சி, அறம்சார்ந்த பலம்வாய்ந்த மன்னனான அயோத்தி மன்னன் தீர்க்கயக்ஞனை வீழ்த்தினான்.(2) பிறகு, அந்த மேன்மைவாய்ந்த பீமன், கோபாலகக்ஷ நாடு, வட கோசலம் மற்றும் மல்லர்களின் மன்னன் ஆகியோரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(3) ஈரப்பதம் நிறைந்த பகுதியான இமயத்தின் அடிவாரத்துக்கு வந்த அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் {பீமன்}, அந்த முழு நாட்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(4)

இதே வழியில் அந்த பாரத குலத்தின் காளை {பீமன்} பல நாடுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். பலம் வாய்ந்த மனிதர்களில் முதன்மையான அந்த பெரும் சக்தி படைத்த பாண்டுவின் மகன் {பீமன்}, அடுத்து பல்லாட நாட்டையும், பல்லாடத்தின் அருகில் உள்ள சுக்திமந்தா {சக்திமான்} மலையையும் வெற்றி கொண்டான்.(5) பிறகு நீண்டு கரங்களுடைய பயங்கர ஆற்றலைக் கொண்ட பீமன், பின்வாங்காத காசி மன்னன் ஸுபாஹுவை வீழ்த்தி அவனை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(6)

பிறகு அந்தப் பாண்டு மகன்களில் முதன்மையானவன் {பீமன்}, தனது படைபலத்தால் ஸுபார்ச்வ நாட்டு பெரும் மன்னனான கிரதன் என்பவனைப் போரில் வீழ்த்தினான். பிறகு அந்தப் பெரும் சக்தி கொண்டவன் {பீமன்}, மத்ஸ்யர்களையும், பெரும் பலம் வாய்ந்த மலதர்களையும், எந்த அச்சமும் ஒடுக்குதலும் இல்லாத {அநக நாட்டையும், அபய நாட்டையும்} பசுபூமி என்ற நாட்டையும் வீழ்த்தினான். பிறகு, அந்த நீண்ட கரன் கொண்ட வீரன் {பீமன்}, அந்தப் பூமியை விட்டு மதஹரா, மஹிதரா {மததாரம்},(7-9) ஸோமதேயம் ஆகிய பகுதிகளை வெற்றி கொண்டு, தனது பாதச்சுவடுகளை வடக்கு திசை நோக்கித் திருப்பினான்.(10)

பிறகு, அந்தப் பெரும் பலம் வாய்ந்த குந்தியின் மகன் {பீமன்}, தனது படை பலத்தைக் கொண்டு வத்சபூமி என்ற நாட்டையும், பர்க்கர்களின் மன்னனையும், நிஷாத ஆட்சியாளனையும், மனிமத்தையும் {மணிமானையும்} எண்ணிலடங்கா பல மன்னர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(11) பிறகு, சிறிதும் களைப்பறியாதவனான அந்த பீமன், விரைவாக தென் மல்லர்களையும் {தக்ஷிணமல்லர்களையும்}, போகவான் மலைகளையும் வெற்றி கொண்டான்.(12) அடுத்ததாக அந்த வீரன் {பீமன்}, சர்மகர்கள் மற்றும் வர்மகர்கள் ஆகியோருடன் உடன்பாடு காண்பதில் வென்றான். பிறகு அந்த மனிதர்களில் புலி {பீமன்}, பூமியின் அதிபதியான விதேஹ மன்னன் ஜனகனை எளிதாக வீழ்த்தினான். பிறகு அந்த வீரன் {பீமன்}, தனது யுக்தியைக் கொண்டு சகர்கள், மற்றும் அந்தப் பகுதியின் நாடோடிகளை {பர்ப்பரர்களைத்} தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(13,14) பாண்டுவின் மகன் {பீமன்} விதேஹ நாட்டில் இருந்து கொண்டு தனது துருப்புகளை அனுப்பி, இந்திர மலையில் உள்ள கிராதர்களின் ஏழு மன்னர்களை வெற்றி கொண்டான்.(15) 

பிறகு அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரன் {பீமன்}, அளவில்லா சக்தியுடன், ஸுமஹர்களையும், பரஸுமஹர்களையும் போரில் வீழ்த்தினான்., அவர்களைத் தனது பக்கம் வெற்றி கொண்ட குந்தியின் மகன் {பீமன்} பெரும் பலத்துடன் மகதத்தை எதிர்த்து படை நடத்தினான். அப்படியே தான் செல்லும் வழியில் தண்டன் மற்றும் தண்டதாரன் என்ற பெயர்களைக் கொண்ட ஏகாதிபதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். பிறகு அந்த ஏகாதிபதிகளையும் இணைத்துக் கொண்டு, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, கிரிவ்ரஜத்தை நோக்கி படை நடத்தினான்.(16,17) 

உடன்படிக்கையின் மூலம் ஜராசந்தனின் மகனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அந்த வீரன் {பீமன்}, அவனைத் தனக்குக் கப்பம் கட்ட வைத்து, அந்த ஏகாதிபதிகள் அனைவரையும் உடன் அழைத்துக் கொண்டு கர்ணனை[1]  எதிர்த்து படை நடத்தினான்.(18) பிறகு அந்தப் பாண்டவர்களில் முதன்மையானவன் {பீமன்}, பூமிகள் நடுங்க தனது நால்வகைப் படைகளையும் நடத்திச் சென்று எதிரிகளைக் கொல்லும் கர்ணனை எதிர்த்துப் போரிட்டான்.(19) ஓ பாரதா, அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரன் {பீமன்}, கர்ணனை அடக்கித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதன்பிறகு மலை பகுதிகளின் பலம்வாய்ந்த மன்னனை வீழ்த்தினான்.(20)

[1] இந்த இடத்தில் கங்குலியின் புத்தகத்தில் கர்ணன் என்று வர வேண்டியது, எழுத்தப்பிழையாக கம்சன் என்று வந்துவிட்டது என்று நினைக்கிறேன். மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் மற்றும் கும்பகோணம் பதிப்புகளில் இந்த இடத்தில் கர்ணன் என்றே வருகிறது. கங்குலியிலேயே கூட 18ம் ஸ்லோகத்தில் கம்சன் என்று வருவது, 19ம் ஸ்லோகத்தில் கர்ணன் என்றே இருக்கிறது. எனவே இந்த இடத்தில் நாமும் கர்ணன் என்றே கொள்கிறோம்.

கரத்தின் பலம் கொண்ட பாண்டுவின் மகன் {பீமன்}, ஒரு கடும் போரில் மோதாகிரியில் வசித்த பெரும் பலம்வாய்ந்த மன்னனை வீழ்த்தினான்.(21) பிறகு அந்தப் பாண்டவன் {பீமன்}, ஓ மன்னா {ஜனமேஜயா}, கடும் ஆற்றலும், பலமும் கொண்ட புண்ட்ர நாட்டு மன்னன் வாசுதேவன் மற்றும் கௌசிகக்கச்சத்தை ஆண்ட மன்னன் மஹௌஜஸன் ஆகியோரை வீழ்த்திய பிறகு வங்க நாட்டைத் தாக்கினான்[2].(22,23) பிறகு, ஸமுத்திரஸேனன், மன்னன் சந்திரஸேனன், தாம்ரலிப்தன், கர்வடர்களின் மன்னன்,(24) ஸும்ஹத்தின் {ஸும்ஹ நாட்டின்} ஆட்சியாளன், கடற்கரையில் வசித்த மிலேச்ச மன்னர்கள் ஆகியோரை வெற்றி கொண்டான் அந்த பாரதர்களில் காளை {பீமன்}.(25)

[2] கும்பகோணம் பதிப்பில், "அதன்பிறகு, புண்ட்ரதேசத்தரசனும், வீரனுமான அந்தப் பௌண்ட்ரக வாஸுதேவனென்னும் அரசன் கிருஷ்ணனுடைய கைகளின் பயத்தினால், "நான் இப்போது யாதவ வீரனான கிருஷ்ணனுடன் யுத்தஞ்செய்யேன்" என்று சொல்லிக் கப்பங்கொடுத்தான். கௌசிகி நதிக்கரையில் உள்ள மஹௌஜஸன் என்னும் அரசனையும் சந்தித்தான்" என்றிருக்கிறது.

இவ்வாறு காற்று தேவனின் {வாயு தேவனின்} பலம்பொருந்திய மகன் {பீமன்} இப்படி பல்வேறு நாடுகளை வென்று, அவர்களிடம் இருந்து கப்பம் பெற்று லௌஹித்யத்தை {லௌஹித்யமென்னும் நதத்தை} நோக்கி முன்னேறினான்.(26) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, கடற்கரையில் உள்ள சதுப்பு நிலப்பகுதிகளில் வசித்த மிலேச்ச மன்னர்களை கப்பம் கட்ட வைத்து, பல்வேறு செல்வங்களையும்,(27) சந்தனக்கட்டைகளையும், நறுமண கற்றாழைகளையும் {அகில்}, ஆடைகளையும், ரத்தினங்களையும், முத்துகளையும், சால்வைகளையும், பொன், வெள்ளி மற்றும் மதிப்புமிக்க பவழங்களையும் பெற்றுக் கொண்டான்.(28) மிலேச்ச மன்னர்கள் குந்தியின் சிறப்புவாய்ந்த மகனிடம் பொற்காசுகளையும், ரத்தினங்களையும் கோடிக்கணக்காகக் கொடுத்தனர்.(29) பிறகு, பயங்கர ஆற்றலைக் கொண்ட பீமன், இந்திரப்பிரஸ்தம் திரும்பி, மொத்த செல்வத்தையும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் கொடுத்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(30)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்