Sunday, September 29, 2013

கண்ணன் வந்தான், அங்கே கண்ணன் வந்தான்! - சபாபர்வம் பகுதி 32

Krishna came to Indraprastha! | Sabha Parva - Section 32 | Mahabharata In Tamil

(ராஜசூயீக பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : நண்பர்களும், அதிகாரிகளும் யுதிஷ்டிரனை வேள்வியைத் தொடங்கச் சொல்வது; அதே நேரத்தில் வந்த கிருஷ்ணனிடம் யுதிஷ்டிரன் அனுமதி கேட்பது; கிருஷ்ணன் யுதிஷ்டிரனைப் புகழ்ந்து வேள்வியைத் தொடங்குமாறு அனுமதி அளித்தது; வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் பாண்டவர்கள் சேகரித்தல், சகாதேவனை அனுப்பி நாட்டிலுள்ளோரை அழைத்து வர ஏற்பாடு செய்தல்; பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகள்; நகுலனை அனுப்பி, ஹஸ்தினாபுரத்தில் இருந்து தனது உறவினர்களை அழைத்து வர ஏற்பாடு செய்தல்…


வைசம்பாயனர் சொன்னார், "நீதிமானான யுதிஷ்டிரன் வழங்கிய பாதுகாப்பாலும், அவன் {யுதிஷ்டிரன்} தனது நடத்தையில் பேணிய வாய்மையாலும், எதிரிகளைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மையாலும், அந்த அறம் சார்ந்த ஏகாதிபதியின் {யுதிஷ்டிரனின்} குடிமக்கள் தங்கள் தங்கள் தொழில்களில் ஈடுபட்டனர்.(1) நியாயமான வரிவிதிப்பாலும், அந்த ஏகாதிபதியின் {யுதிஷ்டிரனின்} அறம் சார்ந்த ஆட்சியாலும், அவனது நாட்டில் மக்கள் விரும்பியவாறே மேகங்கள் அதிக மழையைப் பொழிந்தன. அந்த நாட்டின் நகரங்களும் ஊர்களும் பெரும் செழிப்படைந்தன.(2) அந்த ஏகாதிபதியின் {யுதிஷ்டிரனின்} செயல்களால், அந்த நாட்டின் அனைத்து செயல்களும், குறிப்பாக கால்நடை வளர்த்தலும், உழவும், வணிகமும் பெரும் செழிப்படைந்தன.(3) ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த நாட்களில் கள்வர்களும் வஞ்சகர்களும் கூட தங்களுக்குள் பொய் பேசிக் கொள்வதில்லை.(4) அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்த யுதிஷ்டிரனின் அந்த நாட்களில் {ஆட்சி காலத்தில்}, எந்த ஒரு வறட்சியோ, பெருவெள்ளமோ, தொற்று நோய்களோ, நெருப்போ அல்லது அகால மரணங்களோ ஏற்படவில்லை.(5)

சில ஏற்புடைய தொண்டுகளுக்காகவோ, வழிபாடுகளுக்காகவோ, ஏழ்மையை உண்டாக்காத கப்பம் கட்டவோ மட்டுமே (போருக்காக அல்லாமல் மேற்கண்ட காரணங்களுக்காக மட்டுமே) மற்ற மன்னர்கள் யுதிஷ்டிரனை அணுகினர்.(6) அந்த மன்னனின் {யுதிஷ்டிரனின்} பெரிய கருவூலம் {பொக்கிஷ அறை} முழுவதும், அறம் சார்ந்து ஈட்டப்பட்ட செல்வங்கள் குவியலாக நிறைந்து கிடந்தன. நூறு வருடங்கள் தொடர்ச்சியாக அந்தச் செல்வங்களைப் பயன்படுத்தினாலும் அவை வற்றாத அளவுக்குக் குவிந்து கிடந்தன.(7)

கருவூல நிலையையும் மற்றும் தனது அனைத்து உடைமைகளையும் உறுதி செய்த அந்த குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, வேள்வியைச் செய்வதில் தனது இதயத்தை நிலைபெறச் செய்தான்.(8) அவனது {யுதிஷ்டிரனது} நண்பர்களும் அதிகாரிகளும், தனியாகவும், சேர்ந்தும் வந்து அவனை அணுகி, "ஓ மேன்மையானவனே, வேள்விக்கான நேரம் வந்துவிட்டது. எனவே காலம் கரைந்துபோகும் முன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வாயாக" என்றனர்.(9) 

அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது, எங்கும் எதிலும் இருப்பவனும், பழமையானவனும், வேதங்களின் ஆன்மாவும், ஞானம் உள்ளவர்களால் விவரிக்கப்படும்படியான ஒப்பற்றவனும், அண்டத்தில் நிலைத்து நிற்கும் இருப்புகளில் முதன்மையானவனும், அனைத்துப் பொருட்களின் ஆதி மூலமும், அனைத்துப் பொருட்களும் எதில் கடைசியாகக் கரையுமோ அத்தன்மை உடையவனும், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலங்களின் தலைவனும், கேசியைக் கொன்ற கேசவனுமான ஹரி (கிருஷ்ணன்) அங்கே வந்தான்.(10,11) விருஷ்ணி குலத்தோரின் {யாதவ குலத்தோரின்} அரணும், துயர் நிறைந்த காலத்தில் அச்சத்தை விரட்டுபவனும், அனைத்து எதிரிகளையும் தாக்குபவனுமான அவன், வசுதேவரை (யாதவ) படைக்குத் தலைவராக நியமித்து, மன்னன் யுதிஷ்டிரனுக்காக பெரும் செல்வத்தைத் தன்னுடன் கொண்டு வந்து, அந்த அற்புதமான நகரங்களின் நகரத்துக்குள் நுழைந்தான். அவனது {கிருஷ்ணனது} பெரும் படையில் இருந்த தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி அந்தக் காண்டவத்தின் சூழ்நிலையையே நிறைத்தது. மனிதர்களில் புலியான மாதவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களின் அளவற்ற செல்வத்தை மேலும் அதிகரிக்க,(12-14) வற்றாத கடல் போன்ற ரத்தினங்களைத் தன்னுடன் கொண்டு வந்தான், பாண்டவர்களின் எதிரிகளுக்கு இது துயரை அதிகரித்தது. இருண்ட பகுதி சூரியனால் மகிழ்ச்சியடைவதைப் போல, காற்றற்ற இடத்தில் தென்றலைப் போல கிருஷ்ணனின் இருப்பு அந்த பாரதர்களின் {பாண்டவர்களின்} தலைநகரை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.(15) மகிழ்ச்சியாக அவனை {கிருஷ்ணனை} அணுகிய யுதிஷ்டிரன் அவனுக்கு உரிய கௌரவத்தைக் கொடுத்து, அவனது நலனைக் குறித்து விசாரித்தான். கிருஷ்ணன் வசதியாக அமர்ந்த பிறகு,(16) அந்த மனிதர்களில் காளையான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தௌமியருடனும், துவைபாயனருடனும் {வியாசருடனும்}, மற்ற வேள்விப் புரோகிதர்களுடனும் பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்களுடனும் {நகுல,சகாதேவனுடனும்} கிருஷ்ணனிடம் பேசினான்.(17)

யுதிஷ்டிரன், "ஓ கிருஷ்ணா, உனக்காகவே இந்த உலகம் என் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. ஓ விருஷ்ணி {யாதவ} குலத்தவனே {கிருஷ்ணா}, உனது அருளாலேயே இந்த செல்வம் அனைத்தையும் நான் அடைந்தேன்.(18) ஓ தேவகியின் மகனே {கிருஷ்ணா}, ஓ மாதவா {கிருஷ்ணா}, இந்தச் செல்வங்களை விதிப்படி, மேன்மையான பிராமணர்களுக்கும், வேள்விப்படையல்களைச் சுமந்து செல்பவனுக்கு {அக்னிக்கும்} அர்ப்பணிக்க விரும்புகிறேன்.(19) ஓ தசார்ஹ குலத்தவனே {கிருஷ்ணா}, ஓ பலம் வய்ந்த கரங்களைக் கொண்டவனே, இந்த வேள்வியை உன்னுடனும் எனது தம்பிகளுடனும் கொண்டாட எனக்கு அனுமதி கொடுப்பாயாக.(20) ஓ கோவிந்தா, ஓ நீண்ட கரங்களைக் கொண்டவனே, ஓ தசார்ஹ குலத்தவனே, இவ்வேள்வியில் உன்னை நீ நிறுவிக் கொள்வாயாக. நீ இந்த வேள்வியைச் செய்தால் நான் பாவங்களில் இருந்து விடுபடுவேன்.(21) அல்லது, ஓ மேன்மையானவனே {கிருஷ்ணா}, உன்னால் அனுமதிக்கப்பட்டு, ஓ கிருஷ்ணா, நானும் எனது தம்பிகளும் வேள்வி மேடையில் அமர்ந்தால், நான் அந்த அற்புத வேள்வியின் மூலம் கிடைக்கும் கனியை அனுபவிக்க முடியும்", என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(22)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "யுதிஷ்டிரன் இவ்வாறு சொன்னதன் பிறகு, கிருஷ்ணன், தன் குணங்கள் பலவற்றைப் புகழடையச் செய்யும் வகையில்,(23) "ஓ மன்னர்களின் புலியே {யுதிஷ்டிரரே}, ஏகாதிபத்திய கௌரவத்தை அடைய உமக்குத் தகுதி இருக்கிறது. எனவே, நீரே அந்தப் பெரும் வேள்வி செய்வீராக.(24) நீர் அந்த வேள்வியைச் செய்து கனி கிட்டப்பெறும்போது நாங்கள் அனைவரும் வெற்றி மகுடம் தரித்தவர்களாக எங்களை நினைத்துக் கொள்வோம். நான் எப்போதும் உமது நன்மையையே நாடுகிறேன். நீர் விரும்பிய அந்த வேள்வியைச் செய்வீராக.(24) அந்தக் காரியத்திற்காக எனக்கும் ஏதாவது அலுவலை {வேலையைக்} கொடுப்பீராக. நான் உமது கட்டளைகள் அனைத்தையும் ஏற்க வேண்டும்", என்று சொன்னான்.(25) 

அதற்கு யுதிஷ்டிரன், "ஓ கிருஷ்ணா, எனது தீர்மானம் ஏற்கனவே நிறைவேறிவிட்டது. ஓ ரிஷிகேசா {கிருஷ்ணா} எனது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு நீ இங்கு இருக்கும் போது வெற்றி நிச்சயம் எனதே ஆகும்" என்றான் {யுதிஷ்டிரன்}.(26)


வைசம்பாயனர் சொன்னார், "கிருஷ்ணனால் கட்டளையிடப்பட்ட பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} தனது தம்பிகளுடன் சேர்ந்து ராஜசூய வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் திரட்டுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.(27) எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, வீரர்களில் முதன்மையான சகாதேவனிடமும், அனைத்து அமைச்சர்களிடமும்,(28) "பிராமணர்களால் வழிகாட்டப்பட்டு, நேரத்தைக் கடத்தாமல் வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தீரட்டுவீராக. தௌமியர் சொல்லும் அனைத்தையும் அவர் குறிப்பிடும் காலத்திற்குள் ஒன்றன்பின் ஒன்றாக சரியான வரிசையில் முடித்துக் கொடுங்கள்.(29,30) இந்திரசேனனும், விசோகனும், அர்ஜுனனின் தேரோட்டியான பூருவும் என்னை நிறைவடையச் செய்யும் பொருட்டு வேள்விக்குத் தேவையான உணவைத் திரட்டட்டும்.(31) குருக்களில் முதன்மையானோர் அனைவரும், பிராமணர்களின் இதயத்தைக் கவரும் ஏற்புடைய ருசியும் மணமும் கொண்ட அனைத்துப் பொருட்களையும் திரட்டுவீராக" என்றான் {யுதிஷ்டிரன்}.(32)

நீதிமானான யுதிஷ்டிரனால் இச்சொற்கள் சொல்லப்பட்டதும், வீரர்களில் முதன்மையான சகாதேவன் அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றித் தன் மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} அவற்றைத் தெரிவித்தான்.(33) 

ஓ மன்னா, துவைபாயனர் {வியாசர்}, வடிவம் கொண்டு வந்த வேதங்களைப் போன்ற மேன்மையான பிராமணர்களை வேள்விப் புரோகிதர்களாக நியமித்தார்.(34) அந்த சத்தியவதியின் மகன் {வியாசர்}, தானே அந்த வேள்வியின் பிரம்மாவாக அமர்ந்தார். தனஞ்சய குலத்தின் காளையான ஸுஸாமர், சாம வேத மந்திரங்களை உரைப்பவராகவும்,(35) பிரம்மனுக்குத் தன்னை அர்ப்பணித்த யாஜ்ஞவல்கியர் அதர்யுவாகவும், வசுவின் மகனான பைலரும், தௌமியரும் ஹோத்ரிகளாகவும் {ஹோதாவாக} ஆனார்கள்.(36) ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, வேதங்களையும் அதன் அங்கங்களையும் அறிந்த இவர்களின் சீடர்களும் மகன்களும், ஹோத்ரக்தர்கள் ஆனார்கள்.(37) அனைவரும் நல்வாழ்த்துகளைச் சொல்லி, வேள்வியின் பொருளை உரைத்து, அந்தப் பெரிய வேள்வி மண்டபத்தை முறைப்படி வழிபட்டனர்.(38) 

பிராமணர்களால் உத்தரவிடப்பட்ட கட்டுமானக் கலைஞர்களும் பிற கலைஞர்களும் தேவர்களின் கோவில்களைப் போல நல்ல நறுமணமிக்க பெரும் இடம் கொண்ட எண்ணிலடங்கா அறைகளைக் கட்டினர்.(39) இவையெல்லாம் முடிந்த பிறகு, அந்த மன்னர்களில் சிறந்தவன் {யுதிஷ்டிரன்}, மனிதர்களில் காளை யுதிஷ்டிரன், தனது தலைமை ஆலோசகனான {அமைச்சனான} சகாதவனை அழைத்து,(40) "நேரங்கடத்தாமல், அனைவரையும் வேள்விக்கு அழைத்து தூதுவர்களை அனுப்புவாயாக", என்றான். மன்னனின் {யுதிஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சகாதேவன், தனது தூதுவர்களிடம், "நாட்டில் உள்ள பிராமணர்கள் அனைவரையும், நில உடைமையாளர்கள் (க்ஷத்திரியர்கள்) அனைவரையும்,(41) வைசியர்கள் அனைவரையும், மரியாதைக்குரிய அனைத்து சூத்திரர்களையும் இங்கே விரைவாக அழைத்து வாருங்கள்", என்று சொல்லி அவர்களை {தூதுவர்களை} விரைவாக அனுப்பினான்.(42)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பெரும் வேகம் கொண்ட அந்த தூதுவர்கள் இப்படிக் கட்டளையிடப்பட்டு அனைவரையும் அந்த பாண்டவனின் உத்தரவுப்படி நேரத்தைக் கடத்தாமல் அழைத்தனர். பிறகு பல நண்பர்களையும் அந்நியர்களையும் அவர்களுடன் அழைத்துவந்தனர்.(43) ஓ பாரதா {ஜனமேஜயா}, பிராமணர்கள் சரியான நேரத்தில் குந்தியின் மகனான யுதிஷ்டிரனை ராஜசூய வேள்வியில் நிறுவ அமர்த்தினார்கள்.(44) அவனை {யுதிஷ்டிரனை} வேள்வியில் நிறுவும் சடங்கு முடிந்ததும், அந்த தர்ம தேவனே மனித வடிவம் கொண்டு வந்தது போல இருந்தவனும், மனிதர்களில் சிறந்தவனும், நீதிமானுமான அறம் சார்ந்த மன்னன் யுதிஷ்டிரன், அந்த மனிதர்களில் சிறந்தவன், ஆயிரக்கணக்கான பிராமணர்களும், தனது தம்பிகளும் நண்பர்களும் உறவினர்களும் ஆலோசகர்களும் {அமைச்சர்களும்}, பெரும் எண்ணிக்கையிலான பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த க்ஷத்திரிய மன்னர்களும் சூழ வேள்வி மண்டபத்துக்குள் நுழைந்தான்.(45,46) 

ஞானத்தில் திறம் கொண்டவர்களும், வேதங்களிலும் வேறு பல கிளைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுமான பல பிராமணர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து வரத் தொடங்கினர். ஆயிரக்கணக்கான கைவினைக் கலைஞர்களும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் கட்டளையின் பேரில், அந்த பிராமணர்களுக்கும் அவர்களது பணியாட்களுக்கும் தனித்தனியே வாழ்விடங்களை {தங்குமிடங்களைக்} கட்டிக் கொடுத்தனர். அந்த வாழ்விடங்கள் உணவும், ஆடைகளும், கனிகளும், அனைத்து பருவங்களுக்கும் ஏற்ற மலர்களாலும் நிரம்பியிருந்தன.(47-49)

ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதியால் முறையாக வணங்கப்பட்ட அந்த பிராமணர்கள் தொடர்ந்து அங்கே வசித்து பல தலைப்புகளில் பேசியும், ஆடற்கலைஞர்கள் மற்றும் நடனக்கலைஞர்களின் நிகழ்ச்சிகளைக் கண்டும் தங்கள் பொழுதை கழித்தனர்.(50) அந்த உயரான்ம பிராமணர்கள் மகிழ்வுடன் உண்டு கொண்டிருக்கும் ஒலி இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது.(51) "கொடுங்கள்", "உண்ணுங்கள்" போன்ற வார்த்தைகள் அங்கே அனுதினமும் கேட்டுக் கொண்டே இருந்தன.(52) ஓ பாரதா {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரன் அந்த பிராமணர்களுக்கு ஆயிரம் பசுக்களையும், படுக்கைகளையும், பொற்காசுகளையும், மங்கையரையும் அளித்தான்.(53) இப்படியே பாண்டுவின் மகனான அந்த ஒப்பற்ற வீரனின் {யுதிஷ்டிரனின்} வேள்வி, விண்ணுலகில் செய்யப்படும் சக்ரனின் {இந்திரனின்} வேள்வியைப் போல நடத்தப்பட்டது.(54) பிறகு அந்த மனிதர்களில் காளையான மன்னன் யுதிஷ்டிரன், பாண்டுவின் மகனான நகுலனை, பீஷ்மர், துரோணர், திருதராஷ்டிரன், விதுரன், கிருபர், தனது பங்காளிகள் ஆகியோரை நல்ல முறையில் ஹஸ்தினாபுரத்தில் இருந்து அழைத்து வர அனுப்பினான்" {என்றார் வைசம்பாயனர்}.(55,56)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்