Sunday, September 29, 2013

வேள்விக்கு வந்த மன்னர்கள்! - சபாபர்வம் பகுதி 33

The kings who came to the sacrifice! | Sabha Parva - Section 33 | Mahabharata In Tamil

(ராஜசூயீக பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : ஹஸ்தினாபுரத்தில் இருந்து கௌரவர்கள் வேள்விக்கு வருவது; வேள்விக்கு வந்திருந்த மன்னர்கள் பட்டியல்; அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாளிகைகள்…


வைசம்பாயனர் சொன்னார், "பாண்டுவின் மகனும், எப்போதும் வெற்றிவாகைசூடுபவனுமான நகுலன், ஹஸ்தினாபுரத்தை அடைந்து, முறைப்படி பீஷ்மரையும், திருதராஷ்டிரனையும் அழைத்தான்.(1) அந்த குரு குலத்தின் மூத்தவன் {திருதராஷ்டிரன்}, ராஜகுருவை {கிருபரை} தலைமையாகக் கொண்டு, முறையான சடங்குகளுடன் அழைக்கப்பட்டு, மிகவும் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் வேள்விக்கு வந்தான்.(2)

ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரனின் வேள்வியைக் கேள்விப்பட்டு, வேள்வியின் இயல்பை அறிந்த நூற்றுக்கணக்கான பிற க்ஷத்திரியர்கள், பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்திரனின் வேள்வி மண்டபத்தைக் காண மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் பல்வேறு நாடுகளில் இருந்து பல விலையுயர்ந்த நகைகளுடன் வந்தனர்.(3,4) திருதராஷ்டிரன், பீஷ்மர், உயர்ந்த புத்திகூர்மையுடைய விதுரன், துரியோதனனைத் தலைமையாகக் கொண்ட கௌரவச் சகோதரர்கள், காந்தார மன்னன் சுபலனும் பெரும் பலம் படைத்த சகுனியும்,(5,6) அசலன், விருஷகன், தேர்வீரர்களில் முதன்மையான கர்ணன், பெரும் பலம் வாய்ந்த சல்லியன், பலம் நிறைந்த பாஹ்லீகன்,(7) ஸோமதத்தன், குரு குலத்தின் பூரி, பூரிஸ்ரவஸ் {பூரிச்ரவன்}, சலன், அச்வத்தாமன், கிருபர், துரோணர், சிந்துவின் ஆட்சியாளன் ஜெயத்ரதன்,(8) தனது மகன்களுடன் கூடிய யக்ஞசேனன் {துருபதன்}, பூமியின் அதிபதியான சல்லியன் {சால்வனாக இருக்க வேண்டும்}, கடல்சார் நிலங்களின் மிலேச்ச இனக்குழுக்களுடன் கூடிய பெரும் தேர்வீரரனான பிராக்ஜோதிஷ நாட்டின் பகதத்தன்,(9) கடற்கரையின் சதுப்புநிலங்களில் வாழும் மிலேச்சர்கள், மலை சார் நிலங்களைச் சார்ந்த பல மன்னர்கள், மன்னன் பிருஹத்பலன்,(10) பௌண்ட்ரர்களின் மன்னன் வாசுதேவன் {கிருஷ்ணன் அல்ல}, வங்க மற்றும் கலிங்க நாட்டு மன்னன், ஆகர்ஷன், குந்தலன், மால்வ மன்னர்கள், ஆந்திரகர்கள்,(11) திராவிடர்கள் {த்ரமிடர்கள்}, சிங்களர்கள், மன்னன் காஷ்மீரன், பெரும் சக்தி கொண்ட மன்னன் குந்திபோஜன், மன்னன் கௌரவாஹனன்,(12) பாஹ்லீக வீரர்களான பிற மன்னர்கள், தனது இரு மகன்களுடன் கூடிய விராடன், பெரும் பலம் கொண்ட மாவேல்லன் ஆகியோரும்,(13) பல நாடுகளில் இருந்து பல்வேறு மன்னர்களும், இளவரசர்களும் அங்கே வந்தனர். 


ஓ பாரதா {ஜனமேஜயா}, பெரும் சக்தி கொண்டு போர்க்களத்தில் ஒப்பற்றவனாக இருக்கும் மன்னன் சிசுபாலன் தனது மகனுடன் பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} வேள்விக்கு வந்திருந்தான். ராமன் {பலராமன்}, அனிருத்தன், கனகன் {கங்கன்}, சாரணன்,(14,15) கதன், பிரத்யும்னன், சாம்பன், பெரும் சக்தி படைத்த சாருதேஷ்ணன், உல்முகன், நிஷாதன் {நிசடன்}, ஆற்றல்மிகுந்த அங்கவாஹன் ஆகியோரும்,(16) மேலும் தேர் வீரர்களான விருஷ்ணிகள் பலரும் அங்கே வந்திருந்தனர். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவர்களும், மத்திய நாடுகளிலிருந்த பல மன்னர்களும் பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} ராஜசூய வேள்விக்கு வந்தனர்.(17) 

ஓ மன்னா {ஜனமேஜயா}, யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில், அந்த ஏகாதிபதிகள் அனைவருக்கும், மாளிகைகள் ஒதுக்கப்பட்டன.(18) அந்த மாளிகைகளில் பல்வேறு பொருட்களும், குளங்களும், பெரும் மரங்களும் இருந்தன. தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, அனைத்து ஏகாதிபதிகளையும் அவர்களது தகுதிகளுக்கு ஏற்ப வழிபட்டான்.(19) மன்னனால் {யுதிஷ்டிரனால்} வழிபடப்பட்ட அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாளிகைகளில் ஓய்ந்திருக்கச் சென்றனர். அந்த மாளிகைகள், காண்பதற்கு இனியனவாகும், அனைத்து அறைகலன்களுடனும், {வெள்ளையாக உயர்ந்து இருக்கும்} கைலாச மலைப்பாறைகள் போல இருந்தன.(20) 

அவை {மாளிகைகள்} அனைத்துப் புறங்களிலும், நன்கு கட்டப்பட்ட உயர்ந்த வெண்சுண்ணம் பூசப்பட்ட சுவர்களுடனும், தங்க வலை பின்னப்பட்ட ஜன்னல்களுடனும், அறையின் உள்கட்டுகள் வரிசையான முத்துகளால் அலங்கரிக்கப்பட்டும்,(21) எளிதாக ஏறும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டும், விலையுயர்ந்த தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டும் அழகாக இருந்தன. அவை {மாளிகைகள்} அனைத்தும் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், அற்புதமான நறுமணப்பொருட்களால் மணமாக்கப்பட்டும் இருந்தன.(22) அவற்றின் {மாளிகைகளின்} வாயில்களும் கதவுகளும் ஒன்று போல அமைக்கப்பட்டு, ஒரு யோஜனை தொலைவில் இருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் இருந்தன. அவை மக்கள் கூட்டமாக வர ஏதுவாக அகன்று இருந்தன.(23) பல விலையுயர்ந்த பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு, பல உலோகங்களால் கட்டப்பட்டு, அவை {மாளிகை} இமயமலைச் சிகரங்களைப் போல இருந்தன. சிறிது காலம் அந்த மாளிகையில் ஓய்ந்திருந்த அந்த ஏகாதிபதிகள், பல சதஸ்யர்களால் (வேள்விப் புரோகிதர்களால்) சூழப்பட்டு, பிரமாணர்களுக்கு பெரும் பரிசுகளை வழங்கிய வேள்வியைக் கண்டனர். மன்னர்களும், பிராமணர்களும், முனிவர்களும் இருப்பதைக் கண்ட போது, ஓ மன்னா {ஜனமேஜயா}, தேவர்களால் நிறைந்த விண்ணுலகம் போல அந்த வேள்வி மண்டபம் காட்சியளித்தது" {என்றார் வைசம்பாயனர்}.(24,25)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்