Friday, September 13, 2013

எனது சபைக்கு ஈடானவை உண்டா? - சபாபர்வம் பகுதி 6

Are there equals to my Sabha? | Sabha Parva - Section 6 | Mahabharata In Tamil

(லோகபால சபாகயானா பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : நாரதரின் கேள்விகளுக்கெல்லாம் சுருக்கமாகப் பதிலளித்த யுதிஷ்டிரன்; நாரதரிடம் தனது சபைக்கு சமமாக வேறு எங்கும் கண்டதுண்டா என்று கேட்டது; தேவர்களின் சபைகளையும், பிரம்மாவின் சபையையும் நாரதர் யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக் காட்டியது. அவற்றை விபரிக்கச் சொல்லி யுதிஷ்டிரன் நாரதரை வேண்டுவது…

வைசம்பாயனர் சொன்னார், "நாரதரின் வார்த்தைகளின் முடிவில் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் அவரை முறைப்படி வழிபட்டான்; அவரால் {நாரதரால்} உத்தரவிடப்பட்ட அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, அந்த முனிவர் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் சுருக்கமாக பதில் சொல்ல ஆரம்பித்தான்.(1)

யுதிஷ்டிரன், "ஓ தெய்வீகமானவரே {நாரதரே}, நீர் குறிப்பிட்டவாறு அறம் மற்றும் ஒழுக்கவிதிகளின் உண்மைகள் ஒன்றன்பின் ஒன்றாக நீதியுடனும் சரியான முறையிலும் செய்யப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரை, நான் அந்த விதிகளை முறையாக எனது சக்தியில் சிறந்தவாறு கடைப்பிடித்து வருகிறேன்.(2) உண்மையில், பழங்காலத்தின் ஏகாதிபதிகளால் சரியாகச் செய்யப்பட்டச் செயல்கள் எல்லாம், சந்தேகமற, சரியான கனியைக் {பலனைக்} கொடுக்கும் என்று கருதலாம். அப்படிக் கருதி, சரியான பொருட்களை அடைய திடமான காரணங்களுடன் அந்தச் செயல்களை மேற்கொள்ளலாம்.(3) ஓ தலைவா {நாரதரே}, நாங்கள், தங்கள் ஆன்மாவை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அந்த ஆட்சியாளர்கள் நடந்த அறம் சார்ந்த பாதையில் நடக்கவே விரும்புகிறோம்" என்றான் {யுதிஷ்டிரன்}.(4)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பாண்டுவின் மகனான பெரும் புகழ் கொண்ட யுதிஷ்டிரன், நாரதரின் வார்த்தைகளை மரியாதையுடன் ஏற்று, அந்த முனிவருக்குப் பதில் சொல்லிவிட்டு, சிறிது நேரம் யோசித்தான். அந்த முனிவரின் அருகில் அமர்ந்திருந்த அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, சரியான சந்தர்ப்பத்தைக் கண்டு கொண்டு, மன்னர்களின் கூட்டத்தில், வசதியாக அமர்ந்திருந்த, அனைத்து உலகத்திற்கும் தான் விரும்பிய படியே சென்று வரக்கூடிய சக்தி படைத்த அந்த நாரதரிடம்,(5,6)

{யுதிஷ்டிரன்} "பழங்காலத்தில் பிரம்மாவால் படைக்கப்பட்ட பலவகைப்பட்ட உலகங்களில் சுற்றி, அனைத்தையும் கண்டவர் நீர்.(7) ஓ பிராமணரே {நாரதரே}, நான் ஒன்றைக் கேட்கிறேன். இந்த எனது சபாமண்டபத்தைப் போன்றோ {இதற்குச் சமமாகவோ} அல்லது இதைவிட மேன்மையாகவோ ஒரு சபாமண்டபத்தை இதற்கு முன் நீர் எங்காவது கண்டிருந்தால் எனக்குச் சொல்லும்!" என்றான்.(8)

நீதிமானான யுதிஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட நாரதர், சிரித்துக் கொண்டே அந்தப் பாண்டுவின் மகனுக்கு இனிமையாகப் பதிலளித்தார்.(9)

நாரதர், "ஓ குழந்தாய், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்களுக்கு மத்தியில் இதைப் போன்று, ரத்தினங்களாலும், விலையுயர்ந்த கற்களாலும் கட்டப்பட்ட இந்த உனது சபாமண்டபத்தைப் போல நான் கண்டதோ கேட்டதோ கிடையாது.(10) ஓ பாரதா, இருப்பினும், இறந்தவர்களின் மன்னன் (யமன்), பெரும் புத்திகூர்மை கொண்ட வருணன் (Neptune) {நெப்டியூன் கிரகம் என்கிறார் கங்குலி}, தேவர்களின் மன்னன் இந்திரன், கைலாசத்தில் தனது வீட்டினை வைத்திருப்பவன் (குபேரன்) ஆகியோரது சபா மண்டபங்களைப் பற்றி நான் உனக்குச் சொல்கிறேன்.(11) அனைத்து களைப்புகளையும் {அசௌகரியங்களையும்} விரட்டும் பிரம்மனின் தெய்வீக சபையையும் உனக்கு விளக்கிச் சொல்கிறேன். இந்த அனைத்து சபாமண்டபங்களும், பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு வடிவங்களையும் தங்களுக்குள் கொண்டு, மனித மற்றும் தெய்வீக வடிமைப்புகள் கொண்டதாக இருக்கின்றன. அவை எப்போதும் தேவர்களாலும், பித்ருக்களாலும், சத்யஸ்யர்களாலும், கணங்கள் என்று அழைக்கப்பட்ட சிறுதெய்வங்களாலும், தங்கள் ஆன்மாக்களை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்து, இடைவிடாது அமைதியான முனிவர்களைக் கொண்டு வேள்விகளைச் செய்து பிராமணர்களுக்கு பரிசுகள் வழங்கி, வேள்விகளைக் காணிக்கையாக அளிக்கும் துறவிகளாலும் வணங்கப்பட்டு வருகின்றன. ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நீ நான் சொல்வதைக் கேட்க விரும்பினால், இவை எல்லாவற்றையும் நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன்", என்றார் {நாரதர்}.(12,13)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "நாரதரால் இப்படிச் சொல்லப்பட்ட, உயர்ந்த ஆன்மா கொண்ட நீதிமானான யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடனும், (தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கும்) பிராமணர்களில் முதன்மையானவர்களுடனும் (வேண்டுதல் செய்யும் வகையில்) கரங்கள் கூப்பினான்.(14)

அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, நாரதரிடம், "அந்தச் சபாமண்டபங்களக் குறித்து எங்கள் அனைவருக்கும் விளக்குவீராக. நாங்கள் நீர் சொல்வதைக் கேட்க விரும்புகிறோம்.(15) ஓ பிராமணரே {நாரதரே}, எந்தப் பொருட்களைக் கொண்டு அந்த சபைகள் கட்டப்பட்டிருக்கின்றன? ஒவ்வொன்றின் பரப்பளவு என்ன? அவை ஒவ்வொன்றின் நீளங்களும் அகலங்களும் எவ்வளவு? பெருந்தகப்பனுக்காக {பிரம்மனுக்காக} அவரது சபாமண்டபத்தில் யார் காத்திருக்கிறார்கள்? {அவருக்கு சேவை செய்பவர்கள் யார்?}(16) தேவர்களின் தலைவனான வாசவனுக்காகவும் {இந்திரனுக்காகவும்}, விவஸ்வானாவின் {சூரியனின்} மகன் யமனுக்காகவும் யார் காத்திருக்கிறார்கள்? வருணன் மற்றும் குபேரனுக்காக அவரவர் சபா மண்டபங்களில் யார் காத்திருக்கிறார்கள்?(17) ஓ பிராமண முனிவரே {நாரதரே}, இவை எல்லாவற்றையும் எங்களுக்குச் சொல்லுங்கள். நாங்கள் அனைவரும் சேர்ந்து நீர் விவரிப்பதைக் கேட்க விரும்புகிறோம். உண்மையில் எங்களது ஆவல் அதிகமாக இருக்கிறது", என்றான் {யுதிஷ்டிரன்}.(18)

பாண்டுவின் மகனால் இப்படிச் சொல்லப்பட்ட நாரதர் அவனுக்கு மறுமொழியாக, "ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தெய்வீக சபா மண்டபங்களைப் பற்றி ஒன்றன் பின் ஒன்றாக சொல்கிறேன். அனைவரும் கேளுங்கள்" என்றார் {நாரதர்}.(19)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்