Saturday, September 14, 2013

புஷ்கரமாலினி என்ற இந்திர சபை! - சபாபர்வம் பகுதி 7

Indrasabha known as Pushkaramalini! | Sabha Parva - Section 7 | Mahabharata In Tamil

(லோகபால சபாகயானா பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : இந்திரனின் தேவலோக சபா மண்டபம் எப்படி இருக்கும் என்பதை நாரதர் விவரிப்பது…

நாரதர் சொன்னார், "சக்ரனின் {இந்திரனின்} தேவலோக சபாமண்டபம் பிரகாசம் நிறைந்தாக இருக்கிறது. அவன் தனது சொந்தச் செயல்களின் கனியாக {பலனாக} அஃதை அடைந்தான். ஓ குரு குலக் கொழுந்தே {யுதிஷ்டிரனே}, அது {இந்திரனின் சபா மண்டபம்} சூரியனின் பிரகாசத்தைக் கொண்டு, சக்ரனாலேயே {இந்திரனாலேயே} கட்டப்பட்டது.(1) விரும்பிய இடங்களுக்கெல்லாம் கொண்டு செல்லும் வகையில் உள்ள அந்த தேவலோக சபா மண்டபம், நூற்று ஐம்பது யோஜனை {1 யோஜனை = 8 மைல் = 12.8 கி.மீ.,} {150யோஜனை என்றால் 1920கி.மீ} நீளமும், நூறு யோஜனைகள் அகலமும் {1280 கி.மீ. அகலமும்}, ஐந்து யோஜனைகள் {64 கி.மீ} உயரமும் கொண்டது.(2) வயதால் ஏற்படும் பலவீனத்தையும், துன்பம், களைப்பு, அச்சம் ஆகியவற்றையும் விலக்கி, நன்மைகளையும், நற்பேற்றையும் அருளும் அந்த மண்டபம், தெய்வீக மரங்களால் அலங்கரிக்கப்பட்ட அறைகளும், இருக்கைகளும் கொண்டு, மிதமிஞ்சிய மகழ்ச்சியைக் கொடுக்க வல்லதாக இருக்கிறது.(3)

அந்தச் சபா மண்டபத்தில், ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரனே}, ஒரு அற்புதமான இருக்கையில், அழகும் செல்வமும் கொண்ட தனது மனைவி சச்சியுடன் தேவர்களின் தலைவன் {இந்திரன்} அமர்ந்திருக்கிறான்.(4) பல வண்ணங்களுடன் கூடிய மலர் வளையங்களைத் தரித்துக் கொண்டு, தூய வெள்ளுடை உடுத்தி, தலையில் கிரீடம் தரித்து, பிரகாசமான வளையங்களைத் தனது தோளில் அணிந்து கொண்டு, விவரிக்க இயலாத ஒரு வடிவைக் கொண்டு, அழகுடனும், புகழுடனும் அமர்ந்திருக்கிறான்.(5)

நூறு வேள்விகளைச் செய்த அந்த சிறப்புமிகுந்த தேவன் {இந்திரன்}, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த சபையில் உள்ளவர்களும், இல்லற வாழ்வைப் பின்பற்றுபவர்களுமான மருத்துகளால் தினமும் காக்கப்படுகிறான் {மருத்துகளின் பணிவிடையை ஏற்கிறான்}.(6) சித்தியர்களும் {Siddhyas}, தேவலோக முனிவர்களும், சத்யஸ்களும் {Sadhyas}, தேவர்களும், பிரகாசமான நிறம் கொண்ட மருதர்களும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தேவ வடிவம் கொண்டு, அனைத்து ஆபரணங்களையும் பூண்டு, எதிரிகளை நொறுக்கும், இறவாதவர்களின் தலைவனுக்கு {இந்திரனுக்குப்} பணிவிடை கொண்டிருக்கிறார்கள்.(7,8)

ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, தூய ஆன்மாவுடன், பாவங்கள் சுத்தமாகக் கழுவப்பட்டவர்களும், நெருப்பைப் போன்று பிரகாசித்து கொண்டிருப்பவர்களும், சக்தி கொண்டவர்களும், எந்தவிதமான துயரமும் இல்லாதவர்களும், கவலை என்ற நோயில் இருந்து விடுபட்டவர்களும், சோம வேள்வியைச் செய்பவர்களான தேவலோக முனிவர்கள் அனைவரும் இருக்கும் அந்த சோம வேள்வியைச் செய்யும் அனைவரும் இந்திரனை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். பராசரர், பர்வதர், சாவர்ணி, காலவர், {ஏகதர், த்விதர், த்ரிதர்}, சங்கர், {லிகிதர், கௌரசிரர், துர்வாசர், ச்யேனர், தீர்க்கதமஷ், பவித்ரபாணி, ஸாவர்ணி,} யாஜ்ஞவல்கியர், பாலுகி, உத்தாலகர், ஸ்வேதகேது, தாண்டியர், பாண்டாயினி, ஹவிஷ்மான், கரிஷ்டர், மன்னன் ஹரிச்சந்திரன்; ஹிருத்யர், உதரசாண்டில்யர், பராசரியர், கிருஷீவலர், வாதஸ்கந்தர், விசாகர், விதாதா, காலா, காராலதந்தர், தஷ்டிரி, விஸ்வகர்மா, தும்புரு,(11-14) மேலும் பிற முனிவர்கள், அவர்களில் சிலர் பெண்கள் மூலம் பிறந்தவர்கள், மற்றவர்கள் காற்றின் மூலம் வாழ்பவர்கள், நெருப்பின் மூலம் வாழ்பவர்கள் ஆகியோர் இடியைத் தாங்கும் உலகங்களின் தலைவனான இந்திரனை வழிபடத் தயாராக நிற்கின்றனர்.

சகாதேவர், சுநீதர், பெரும் ஆன்மத் தகுதியுடைய வால்மீகி, பொய்யா மொழி கொண்ட சமீகர், வாய்மை தவறாத பிரசேதஸ், மேதாதிதி, வாமதேவர், புலஸ்தியர், புலஹர், கிரது, மருத்தர், மரீச்சி, பெரும் ஆன்மத்தகுதியுடைய ஸ்தாணு, கக்ஷீவத் {கக்ஷீவான்}, கௌதமர், தார்க்ஷ்யர், வைச்வானரர், காலகவ்ருக்ஷீய முனிவர், ஆச்ராவ்யர், ஹிரண்மயர், சம்வர்த்தர், தேவஹவ்யர், பெரும் சக்தி கொண்ட விஸ்வஸேனர், கன்வர், கத்யாயணர், ஆகியோரும் ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கர்க்கர், கௌசிகர் ஆகியோர் அனைவரும், தெய்வீக நீர்நிலைகள் மற்றும் தாவரங்கள், நம்பிக்கைகள், மேதைமைகள், கல்வி தேவி {சரஸ்வதி}, செல்வம், அறம், இன்பம், மின்னல் ஆகியவற்றுக்கு அதிபதிகளும் அங்கே இருந்தனர். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே} மழையைத் தனக்குள் அடக்கியுள்ள மேகங்கள், காற்றுகள், சத்தமாக ஒலியெழுப்பும் தெய்வீக சக்திகள்,(15-20) கிழக்கு புள்ளி {திசை}, வேள்விகளில் தெளிந்த நெய்யை அனுப்பும் இருபத்தியேழு நெருப்புகள்[1], அக்னி, சந்திரன், இந்திரனின் நெருப்பு {இந்திராக்னிகள்}, மித்ரன், சாவித்ரி {ஸவிதா}, அர்யமான்,(21) பகன், விஸ்வசத்யஸ்யர்கள் {விச்வேதேவர்கள்}, {ஸாத்யர்கள்}, குரு {பிருஹஸ்பதி}, சுக்ரன், விஸ்வாவசு, சித்திரசேனன், சுமணன், தருணன்,(22) வேள்விகள் {யஜ்ஞபுருஷர்கள்}, பிராமணர்களுக்கான கொடைகள் {தக்ஷிணைகள்}, கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியன ஓ பாரதா {யுதிஷ்டிரா}, வேள்விகளில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் ஆகியன அங்கே காத்துக் கிடந்தன.(23) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அங்கே பல அப்சரஸ்களும், கந்தர்வர்களும், பலவகை நடனங்களையும், கருவி மற்றும் குரலால் எழுப்பப்படும் இசையையும் நற்பேற்றைக் கொண்டுவரும் சடங்குகளையும் செய்து பல திறன்களையும் வெளிக்காட்டிக் கொண்டு பலனையும், விருத்திரனையும் கொன்றவனும், சதக்ரதுவும், ஒப்பற்றவனுமான இந்திரனை வழிபட்டனர்.(24-26)


[1] 1. கார்ஹபத்யம், 2. ஆஹவநீயம், 3. தக்ஷிணம், 4. நர்மந்த்யம், 5. வைத்யும், 6. சூரம், 7. ஸம்வர்த்தம், 8. லௌகிகம், 9. ஜாடரம், 10. விஷகம், 11. க்ரவ்யாத், 12. க்ஷேமவான், 13. வைஷ்ணவம், 14. தஸ்யுமான், 15. பலதம், 16. சாந்தம், 17. புஷ்டம், 18. விபாஸு, 19. ஜ்யோதிஷ்மான், 20. பதேர், 21. பத்ரம், 22. ஸ்விஷ்டக்ருத், 23. வஸுமான், 24. க்ரது, 25. ஸோமம், 26. பித்ருமான், 27. அங்கிரஸ் என்று கும்பகோணம் பதிப்பில் உள்ளது

இவையெல்லாவற்றையும் தவிர்த்து, மற்றும் பல பிராமணர்களும், அரச மற்றும் தெய்வீக முனிவர்களும், நெருப்புக்கு ஒப்பாகப் பிரகாசித்து, மலர் அலங்காரங்களாலும் ஆபரணங்களாலும் நிரம்பி, பல்வேறு வகைகளிலான தெய்வீகத் தேர்களில் அந்த சபைக்கு வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கின்றனர்.(27) அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பிருஹஸ்பதியும் சுக்ரனும் அங்கே இருக்கின்றனர். இவர்களும் இன்னும் பல கடும் தவங்களை இயற்றிய ஒப்பற்ற துறவிகளும்,(28) பிருகுவும், பிரம்மாவுக்கு சமமான ஏழு முனிவர்களும், சோமனின் {சந்திரனின்} தேர் போன்ற தங்கள் தெய்வீகத் தேர்களில்  பயணித்து, அங்கே வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தனர்.(29) ஓ பெரும் கரம் கொண்ட ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, புஷ்கரமாலினி என்று அழைக்கப்பட்ட அந்த நூறு வேள்விகளைச் செய்த இந்திரனின் சபா மண்டபத்தை நான் கண்டிருக்கிறேன். யமனின் சபா மண்டபம் எப்படி இருக்கும் என்பதை இனி கேட்பாயாக" {என்றார் நாரதர்}.(30)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்