Sunday, September 15, 2013

யம சபை! - சபாபர்வம் பகுதி 8

The Sabha of Yama! | Sabha Parva - Section 8 | Mahabharata In Tamil

(லோகபால சபாகயானா பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : யமனின் {தர்மதேவனின்} சபா மண்டபம் எப்படி இருக்கும் என்பதை யுதிஷ்டிரனுக்கு நாரதர் விவரிப்பது…

நாரதர் சொன்னார், "ஓ யுதிஷ்டிரா, நான் இப்போது விஸ்வகர்மாவால் கட்டப்பட்ட விவஸ்வத்தின் மகனான யமனின் சபா மண்டபத்தைப் பற்றிச் சொல்கிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(1)

ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, அந்தச் சபா மண்டபம், நூறு யோஜனை பரப்பளவில் புடம் போட்ட தங்கமெனப் பிரகாசித்துக்  கொண்டுள்ளது. சூரியனைப் போன்றப் பிரகாசமுடைய அது {யமசபை}, விரும்பியவற்றைக் கொடுக்கவல்லது. அது மிகக் குளிராகவும், மிக வெப்பமாகவும் இல்லாமல், இதயத்தை மகிழ்ச்சியில் வைக்கிறது.(2,3) அந்தச் சபா மண்டபத்தில், துக்கமோ, வயதால் ஏற்படும் பலவீனமோ, தாகமோ பசியோ ஏற்படாது. ஏற்றுக் கொள்ள முடியாத எந்தப் பொருளுக்கும் அங்கே இடம் கிடையாது. எந்த வகையான தீய உணர்வுகளும் அங்கே எழாது.(4) தேவர்களாலும் மனிதர்களாலும் விரும்பப்படும் அனைத்துப் பொருட்களும் அந்த மாளிகையில் உள்ளன. ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {யுதிஷ்டிரனே}, இனிப்பான, நீர்த்தன்மையுள்ள, ஏற்புடைய, நக்கி, உறிஞ்சி, குடிக்கக்கூடிய ருசியான உணவு வகைகளும் சுவை மிகுந்த இன்பத்துக்குகந்த அனைத்துப் பொருட்களும் அபரிமிதமாக அங்கே இருக்கின்றன. அந்த மாளிகையை அலங்கரிக்கும் மலர் மாலைகளின் நறுமணம் அலாதியானது. அங்கே அந்த மண்டபத்தைச் சுற்றி நிற்கும் மரங்கள் விரும்பும் கனியைக் கொடுக்கவல்லவை.(5,6) அங்கே இனிமையான மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க குளிர்ந்த மற்றும் வெப்ப நீர்நிலைகள் உள்ளன. அந்த மாளிகையில் களங்கமற்ற அரச முனிகளும், தூய்மை மிகுந்த பிரம்ம முனிவர்களும் மகிழ்ச்சியுடன் காத்திருந்து, விவஸ்வத்தின் மகனான யமனை வழிபடுகின்றனர்.

யயாதி, நகுஷன், புரு, மாந்தாத்ரி, சோமகன், நிரிகன்,(7,8) அரசமுனி திரசதஸ்யு, கிருதவீரியன், சௌதஸ்வஸ், அரிஷ்டநேமி, சித்தன், கிருதவேகன், கிரீடி, நிமி, பிரதார்த்தனன், சிபி, மத்ஸ்யன், பிரிதுலாக்ஷன், பிரஹத்ரதன், பர்தான், மருதன், குசிகன், சங்கஸ்யன், சங்கிரிதி, துருவன், சதுராஸ்வன், சதஸ்வொர்மி, மன்னன் கார்த்தவீரியன், பரதன், சுரதன், சுனிதா, நிசதன், நளன், திவோதாசன், சுமணஸ், அம்பரீசன், பகீரதன், வியாஸ்வன், வதரஸ்வன், பிரிதுவேகன், பிரிஷதஸ்வன், வசுமனஸ், க்ஷூபன், சுமஹவளன், பிரிஷத்கு, பிருஷசேனன், புருகுத்சன், த்வைஜன், ரதின், அர்ஷ்டிசேனன், துவிலீபன், உயர்ந்த ஆன்மா கொண்ட உசீநரன்; அவுசிநரி, புண்டரிகன், சர்யதி, சரவன், சுச்சி; அங்கன், ரிஷ்டன், வேணன், துஷ்மந்தன் {துஷ்யந்தன்}, ஸ்ரீன்ஜெயா, ஜெயா, பாங்கசூரி, சுனிதா, நிஷாதா, பஹிநரா, கரந்தாமன், பால்ஹிகன், சுத்யும்னன், பலம்வாய்ந்த மது, ஐலன், பூமியின் பலம் பொருந்திய மன்னன் மருதன்; கபோடன், திரிநகன், சகாதேவன், அர்ஜுனன் ஆகியோரும்.

மேலும், வியுசவன், சஸ்வன், கிரிஷ்வன் மன்னன் சசவிந்து, தசரதனின் மகன் ராமன், லக்ஷ்மணன், பிரதார்த்தனன், அலர்கன், காக்ஷசேனன், கயன், கௌரஸ்வன், ஜமதக்னியின் மகன் ராமன் {பரசுராமன்}, நபாகன், சகரன்; பூரிதியும்னா, மஹஸ்வன், பிரதாஸ்வன், ஜனகன், மன்னன் வைன்யன், வரிசேனன், புருஜித், ஜனமேஜயன், பிரம்மதத்தன், திரிகார்த்தன், மன்னன் உபரிசரன், இந்திரத்யும்னன், பீமாஜனு, கௌரபிரிஷ்டன், நளன், கயன், பத்மன், மச்சுகுந்தன், பூரிதியும்னன், பிரசேனஜித்; அரிஷ்டநேமி, சுத்யும்னன், பிரிதுலௌஸ்வன், அஷ்டகன், மேலும், மத்ஸ்ய குலத்தின் நூறு மன்னர்களும், விபன் குலத்தில் இருந்து நூறு மன்னர்களும், ஹய குலத்தில் இருந்து நூறு மன்னர்களும்,(9-22) திருதராஷ்டிரன் என்ற பெயர் கொண்ட நூறு மன்னர்களும், ஜனமேஜயன் என்ற பெயர் கொண்ட எண்பது மன்னர்களும், பிரம்மதத்தன் என்ற பெயர் கொண்ட நூறு மன்னர்களும், ஐரி என்ற பெயர் கொண்ட நூறு மன்னர்களும்,(23) பீஷ்மன் என்ற பெயர் கொண்ட இருநூறுக்கும் அதிகமானவர்களும், பீமன் என்ற பெயர் கொண்ட நூற்றுக்கும் அதிகமானவர்களும், நூற்றுக்கணக்கான பிரதிவிந்தியர்களும், நூற்றுக்கணக்கான நாகர்களும்,(24) நூற்றுக் கணக்கான பலாசர்களும், நூற்றுக்கணக்கான கசன் மற்றும் குசன்களும், மன்னர்களுக்கு மன்னனான ஸ்தாணு, உனது தந்தை பாண்டு,(25) உசங்கவன், சதரதன், தேவராஜன், ஜெயத்ரதன், தனது அமைச்சர்களுடன் கூடிய புத்திசாலி அரசமுனி விருஷதர்வன்,(26) சசவிந்து என்ற பெயர்கொண்ட ஆயிரம் பிற மன்னர்களும், பல குதிரை வேள்விகளைச் செய்து பிராமணர்களுக்கு கொடைகளை அளித்தவர்களும், இறந்த பின்பு அங்கே வந்து, ஓ மன்னா, விவஸ்வத்தின் மகனுக்காக {யமனுக்காக} அந்தச் சபா மண்டபத்தில் காத்திருந்தனர்.(27,28)

அகத்தியர், மதங்கர், கலா, மிரித்யு (மரணம்), வேள்விகளை நடத்துபவர்கள், சித்தர்கள், யோகிகள், (அக்னிஸ்வத, பெனாப, உஷாம்ப, ஸ்வதவத், வேர்ஹிஷதா வகை சார்ந்த) பித்ருக்கள்,(29,30) வடிவம் உள்ள மற்றவர்கள், காலச்சக்கரம், வேள்வி நெய்யைச் சுமப்பவன் {அக்னி}, மனிதப் பிறப்பில் பாவம் செய்தவர்கள், குளிர்கால சங்கராந்தியில் {தக்ஷிணாயனம் = ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் வரையில்} இறந்தவர்கள்,(31) ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை எண்ணுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள யமனின் அதிகாரிகள், சிங்சபம், பலாசம், கசம், குச மரங்களும் செடிகளும் உடலெடுத்து அங்கே வந்து, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நீதி தேவனுக்காக {யமனுக்காக}, அவனது அந்தச் சபாமண்டபத்தில் காத்திருந்து வழிபட்டனர். பித்ருக்களுடைய மன்னனின் {யமனின்} சபையில் இவர்களையும் தவிர்த்து பலரும் இருந்தனர்.(32,33) அவர்களது பெயர்களையும், செயல்களையும் குறித்து என்னால் விவரிக்க முடியாத அளவுக்கு அவர்கள் எண்ணற்றவர்களாக இருக்கின்றனர். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரனே}, அந்த மகிழ்ச்சிகரமான சபா மண்டபம், அதன் உரிமையாளரின் விருப்பப்படி எங்கும் நகரும் தன்மை கொண்டு அகன்று விரிந்து இருந்தது. அது நீண்ட காலம் தவம் செய்து விஸ்வகர்மனால் கட்டப்பட்டது.(34)

ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அவனது {விஸ்வகர்மனின்} ஒளியால் பிரகாசித்துக் கொண்டிருக்கும், அது தனது அழகுக்காகப் புகழப்படுகிறது. தீவிர நோன்பு நோற்று, அற்புதமான உறுதிகள் ஏற்று, உண்மை பேசி, அமைதியாக தூய புனிதமான செயல்களைச் செய்யும் சந்நியாசிகள், கறைகள் அற்ற உடை உடுத்தி, தன்னொளியில் பிரகாசித்து, வளையங்களாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு, தங்கம் பளபளக்கும் காது குண்டலங்களுடன் அந்த சபைக்கு வந்து போயிருந்தனர்.(35-37) சிறப்பு மிகுந்த கந்தர்வர்களும், அப்சரஸ்களும் ஆடிக்கொண்டு அந்த அறை முழுவதையும். தங்கள் சிரிப்புச் சத்தத்துடன் சேர்த்து தங்கள் கருவிகளாலும் குரலாலும் இசையால் நிறைத்தனர்.(38) ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, அற்புதமான நறுமணமும், இனிமையான சத்தங்களும், தெய்வீக மலர்களால் ஆன மாலைகளும் அந்த மாளிகையை அருளப்பட்டதாக ஆக்கின.(39) நூறாயிரக்கணக்கான தெய்வீக அழகும், பெரும் ஞானமும் கொண்ட அறம் சார்ந்த மனிதர்கள், படைக்கப்பட்டவர்களின் தலைவனான அந்தச் சிறப்பு மிகுந்த யமனுக்காக அந்த சபா மண்டபத்தில் காத்திருந்து வழிபடுகின்றனர்.(40) ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, சிறப்பு மிகுந்த பித்ருக்களின் மன்னனின் அந்த சபை இப்படியே இருக்கிறது. நான் இனி புஷ்கரமாலினி என்றே அழைக்கப்பட்ட வருணனின் சபா மண்டபத்தைக் குறித்துச் சொல்கிறேன்.(41)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்