Monday, September 09, 2013

கம்பனுக்குக் கிடைத்த சடையப்ப வள்ளல்!


திரு.ஜெயவேலன்
நான் எனது அறையில் கணினியின் முன்பு அமர்ந்து கொண்டு, சபாபர்வம் முதல் பகுதியை பிளாகரில் பதிவேற்றிக் கொண்டிருந்தேன். அப்போது வாசலில் அமர்ந்திருந்த எனது தகப்பனார் {சி.செண்பகக்குட்டி M.A.,B.Ed.- தமிழாசிரியர் ஓய்வு}, என்னைத் தேடி யாரோ வந்திருப்பதாகக் குரல் கொடுத்தார்.

யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு அவசர அவசரமாக படத்தை இணைத்து பதிவையும் இட்டுவிட்டு, வாசலுக்கு வந்தேன். அங்கே எனது நண்பர் திரு.ஜெயவேலன் அவர்கள் எனது தந்தையுடன் உரையாடிக் கொண்டிருந்தார். எனது மனைவியைக் குறித்து விசாரித்தார். அவர் {எனது மனைவி} வெளியே கடைத்தெருவுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னேன். பதிவுகள் குறித்து விசாரித்தார். பேசிக்கொண்டே எனது கடைக்கு சென்றோம் {எனது வீட்டின் முன்பே இருக்கும் அரசன் வரைகலை மற்றும் ஒளியச்சுக்கோவை மையம்}. அவர் வீட்டில் இணைய இணைப்பு வேலை செய்ய வில்லை என்றும் கடைசி இரண்டு பதிவுகள் படிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.


கடைசி பதிவு படித்திருந்தால், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருப்பார் என்பது எனக்கு தெரியும். ஏனென்றால் அந்தப் பதிவில் பல இடங்களில் அவர் பெயரைச் சுட்டிக்காட்டியிருந்தேன். எப்படியெல்லாம் இந்த முழு மஹாபாரதம் வளர துணை புரிந்து வருகிறார் என்பதையும் அதில் சொல்லியிருந்தேன். அதைப் படித்திருந்தால், "என்னங்க இது, இப்படியெல்லாம் போடக்கூடாதுங்க, எடுங்க… பெயரை எடுங்க" என்று துளைத்திருப்பார். போன் வரவில்லை என்றதுமே இவர் படிக்க வில்லை என்ற சந்தேகத்துடன் தான் இருந்தேன். இணையத் தொடர்பு பழுதாக இருப்பதாகத் தெரிவித்ததும். எனது மையத்தியில் இருக்கும் கணினியில் பதிவைத் திறந்து காட்டினேன். அதற்குள் "உங்கள் மனைவி வந்துவிட்டாரா பாருங்கள்", என்று கேட்டார்.

நான் வீட்டினுள் சென்று பார்த்துவிட்டு, "இன்னும் வரவில்லை" என்று சொன்னேன். கணினியில் திறந்திருந்த பக்கத்தைப் படித்துக் கொண்டிருந்தார். "என்னங்க இது, இந்தப் போட்டோ எப்படிங்க உங்களுக்கு கிடைச்சது?" என்றார். நான் முகநூலில் இருந்து எடுத்ததாகச் சொன்னேன். "என்னங்க இப்படி பண்ணீட்டீங்க. இவ்வளவு வள வளனு எழுதக்கூடாதுங்க. இத எடுங்க.. அத எடுங்க.." என்றார். நான், எதை எடுக்க வேண்டும் அதை மொத்தமாகச் சொல்லுங்கள், நான் பிறகு எடுத்துக் கொள்கிறேன் என்று சமாளித்தேன்.

அதற்கு எனது மனைவி {திருமதி.லட்சுமி அரசன் M.A.}, மையத்தியின் வாசலில் வந்து நின்றார். வந்ததும், திரு.ஜெயவேலன் அவர்கள், "ஆதிபர்வம் 236 பகுதிகளும், முடிச்சுட்டாரு உங்க வீட்டக்காரரு. தெரியுமா?" என்று கேட்டுக் கொண்டே எழுந்தார். "ஆமாம். தெரியும் சார்" என்று என் மனைவி சொன்னார். உடனே அவர் தனது கையில் வைத்திருந்த ஒரு சிறு கவரை எடுத்து என் மனைவியிடம் கொடுத்தார். "என்ன சார் இது?" என்று என் மனைவி கேட்டார்.

அதற்கு, "இது ஒரு சிறு பரிசு. உங்கள் கணவர் இரவெல்லாம் மஹாபாரதம் எழுதுகிறேன் என்று உட்கார்ந்தாலும், உங்களது சிரமம் பாராமல் அவருக்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தமைக்கா இந்தப் பரிசு." என்று சொன்னார். என் மனைவி வாங்க மாட்டேன் என்று எவ்வளவு முயன்றும் வலுக்கட்டாயமாகக் கொடுத்துவிட்டார்.

நான் அருகில் நின்று கொண்டிருந்தேன். அந்தக் கவரைப் பார்த்ததும் அது பணம் என்று தெரிந்தது. "ஐயோ… என்னங்க இது, இதுவெல்லாம் கூடாது...", என்று சொன்னேன். அவர் கடைசி வரை கேட்கமாட்டேன் என்று நின்றுவிட்டார். சரி என்று எனது மனைவியை உள்ளே எடுத்துச் செல்ல சொன்னேன்.

அடுத்து கணினியில் திறந்திருந்த அப்பதிவை சிறிது எடிட் செய்தோம். {அவர் பெயர் வரும் இடங்களில் நீக்கச் சொன்னதை, நான் அதைப் பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்று சமாளித்துவிட்டேன்}. பிறகு கடைசிப் பதிவாக, அவர் வந்த போது அவசர அவசரமாக இட்ட சபா பர்வம் பதிவையும் காண்பித்தேன். அவர் பிறகு வீட்டிற்கு சென்று படித்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பத் தயாரானார். பிறகு வீட்டில் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டார்.

அவர் போன பிறகு எனது மனைவியிடம் இருந்த கவரை வாங்கிப் பிரித்தேன். அதிர்ந்துவிட்டேன்… ரூ.23,600/- (ரூபாய் இருபத்து மூவாயிரத்து அறுநூறு) அதில் இருந்தது. {மஹாபாரதத்தின் ஆதிபர்வம் பகுதிகள் மொத்தம் 236Xரூ.100=23600 ரூபாய் என்பது அவரது கணக்கு என்று பின்பு அறிந்தேன்}. ஏதோ நான் சாதாரணமாகத் தான் எதிர்பார்த்திருந்தேன். திடீரென இவ்வளவு தொகையைப் பார்த்ததும் ஆடிப் போய்விட்டேன். அவர் சென்று ஒரு 15 நிமிடம் தான் இருக்கும். உடனே அவரை தொலைபேசியில் அழைத்தேன். "என்னங்க இது, நான் சாதாரணமா எதிர்பார்த்தேன். இவ்வளவு தொகையெல்லாம் கொடுக்கலாமா? இப்படித் தெரிஞ்சிருந்தா வாங்கியிருக்க மாட்டேனே!" என்றேன்.

அவர், "ஏங்க, இது உங்களுக்கு இல்லீங்க. நீங்க இரவெல்லாம் உக்காந்து பதிவு எழுதுன போது உங்களுக்கு தொல்லை குடுக்காம கஷ்டப்பட்டாங்க பாருங்க உங்க மனைவி, அவங்களுக்கு நம்ம புருஷன் வெட்டியா வேலை பாக்கிறாரே என்ற நினைப்பு வந்துடக்கூடாது. உங்களுக்கும் நாம ஏதோ தர்மத்துக்குத்தானே எழுதுறோம். எப்ப எழுதினா என்ன என்று ஒரு சோம்பல் வந்துவிடக்கூடாது. அடுத்து சபா பர்வத்துக்கு இதவிட வேகமாக வேலை நடக்கணுங்க. மையத்தில் வேலை இல்லாத போது, நீங்க வேற வேலை செய்றதுக்குப் பதில், ஒரு பதிவை மொழிபெயர்த்துடலாம். அதுக்கு இது ஒரு ஊக்கமாக இருக்கும். இப்ப என்னிடம் இருக்குது. அதனால கொடுத்தேன். அத தப்பா நினைக்காதீங்க", என்றார்.

அவர் தொலைபேசியில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவதாக அறிந்தேன். சரி நீங்கள் வீட்டுக்கு சென்றதும் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு தொலைபேசி தொடர்பைத் துண்டித்தேன். என் வாழ்வில் பெற்ற முதல் நன்கொடை இது.

இந்தக் கலிகாலத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். இவ்வளவுக்கும், திரு.ஜெயவேலன் அவர்கள் ஒரு பகுத்தறிவுவாதி {போலிப் பகுத்தறிவுவாதி அல்ல}. முதல் பதிவு முதல் கடைசி பதிவு வரை திருத்தியும், புதிய படங்களை இணைத்தும், இந்த வலைப்பூவிற்குப் பெரிய சேவை செய்திருக்கிறார். இந்த வலைப்பூவில் தொடர்பு எண்களில் இரண்டாவதாக அவரது எண்ணும் கொடுக்கப்பட்டிருப்பதால், வலைப்பூ குறித்த தொலைபேசிகளை அவரே கேட்டு {முதல் எண் எனதாக இருந்தாலும்,  நான் மேற்கொண்டிருக்கும் பணியால் தெரியாத எண்களை நான் பெரும்பாலும் எடுப்பதில்லை.} திருத்தங்களையும் அவரே செய்து வருகிறார்.

கம்பனுக்குக் கிடைத்த சடையப்ப வள்ளலைவிட மேலாக எனக்குத் தெரிகிறார் திரு.ஜெயவேலன் அவர்கள். ஒரு உதாரணத்திற்குத் தான் சொன்னேன். அதற்காக கம்பனுக்கு நிகராக என்னை ஒப்பிட்டுக் கொண்டதாக யாரும் நினைக்க வேண்டாம்.

அவர் நம்பாத தெய்வங்கள் அவருக்கு பேரருளை அருள வேண்டும் என்று பரமனைத் தியானிக்கிறேன்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
9.9.2013, திருவொற்றியூர்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்